அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்




பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.

தமிழக அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள் தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால் 'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது. 

நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும் தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன. ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால் இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும் மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும் ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச் சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச் செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும், குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப் பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த நூல். 

ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின் தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது. விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில் தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார். பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி. பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும் ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற கதாநாயகியாகவும் வலம் வந்தவர். 

Rama Setu (Adam's Bridge) Scientific explanation with proof

.

நாடுகடத்தப்பட்ட 29 பேர் இலங்கையில்


14/12/2017 சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்களை அந்நாட்டு அரசு இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களும் விசேட விமானம் மூலம் இன்று காலை நாடு திரும்பினர்.
இவர்கள் அனைவரும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.   நன்றி வீரகேசரி




அனுஷ்காவின் திருமண மோதிரம் மட்டும் எவ்வளவு விலை தெரியுமா?



 .
நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.
அனுஷ்காவிற்கு கோலி அணிவித்த வைர மோதிரத்தின் விலை மட்டும் 1 கோடி ரூபாய்க்கும் மேல் என கூறப்படுகிறது. ஆஸ்திரியாவில் உள்ள ஒரு டிசைனர் இந்த வைர மோதிரத்தை செய்துள்ளார்.
இத்தாலியில் திருமணம் நடைபெற்ற இடத்தின் ஒரு நாள் வாடகை மட்டும் 14 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்திகள்


சங்கர் கொலைக்கு சரியான தீர்ப்பு (காணொளி)

 "லிங்க்ட் இன்" மூலம் ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி

வட கொரி­யாவின் முன்னாள் உயர்­மட்ட இரா­ணுவ அதி­கா­ரிக்கு மர­ண­தண்­டனை

 இளவரசர் வீட்டில் இருந்து இனிய செய்தி!




சங்கர் கொலைக்கு சரியான தீர்ப்பு

 
12/12/2017 கௌரவக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கு சென்னை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 
பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு தலித் மாணவர் சங்கர். தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா. இருவரும் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். 
திருப்பூரில் வாழ்ந்து வந்த இவர்கள் மீது, கடந்த வருடம் மார்ச் மாதம் பட்டப் பகலில், மக்கள் நிறைந்த சந்தைப் பகுதியில் கத்தி மற்றும் வாள்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கர் உயிரிழக்க, நீண்டகால சிகிச்சையின் பின் கௌசல்யா உயிர் பிழைத்தார்.
இதில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட கௌசல்யாவின் தந்தை உட்பட கூலிப்படையினர் ஐந்து பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள கௌசல்யாவின் தாய் மற்றும் தாய்மாமன் இருவர் மீதுமான தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்றுவருகின்றன.
திருமணமாகி எட்டே மாதத்தில் கணவனைப் பறிகொடுத்த கௌசல்யா தற்போது தனது கணவரின் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கௌசல்யா, தனது தந்தைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார். எனினும் தலைமறைவாகியுள்ள தனது தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோரால் தனக்கோ, கொல்லப்பட்ட தன் கணவரின் பெற்றோருக்கோ ஆபத்து ஏற்படலாம் என்று அச்சப்படுவதாகவும் அவர்கள் கைதாகும்வரை தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 


இலங்கைச் செய்திகள்


அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.!

கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம்

வவுனியாவில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதி

நத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும்

கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை : மோடி அறிவிப்பு

இலங்கையை வந்தடைந்தார் மலே­சிய பிர­த­மர்




அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.!

14/12/2017 அமெ­ரிக்­காவில் நியூ­ஜெர்சி மாநி­லத்தில் தற்­பொ­ழுது வசித்­து­வரும் யாழ்ப்­பாணம் அள­வெட்­டியைச் சேர்ந்த ஈழத் தமி­ழர்கள் நிர்­மலா, செல்­லையா ஞான­ சே­கரனின்   மகன்   மகிஷன் ஞான­சே­கரன்   சமூ­க­நல  செயற்­பா­டு­களில் மிக ஆர்வம் கொண்­டவர். இலங்­கையில் பிறந்து அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும்   மகிஷன் ஞான­சே­கரன்  தமிழ் மொழியில் சர­ள­மாகப் பேசக்­கூ­டியவர். ஸ்பானிஷ் மொழி­யையும் ஆர்­வ­மாக கற்று வரு­கின்றார்.
2016 ஆகஸ்ட் மாதம்  அமெ­ரிக்க மாநி­ல­மான நியூ­ஜெர்­சியின் உயர்­நிலைக்  கல்விப் பிரிவில் பயிலும் மாண­வர்­களில் கல்வி, சமூ­க­சேவை, மாணவ தலை­மைத்­துவம் ஆகிய துறை­களில் முதல் நிலை  மாண­வ­ராக  விசேட  தேர்வு  மூலம் தெரிவு  செய்­யப்­பட்டு அம்­மா­நி­லத்தின் பிர­தி­நி­தி­யாக அமெ­ரிக்க தலை­நகர்  வாஷிங்டன்   D.C  யில் அமைந்­துள்ள வெள்ளை மாளி­கைக்கு அழைக்­கப்­பட்டு அங்கு ஒரு­வார காலம் தங்­கி­யி­ருந்த மகிஷன் முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி   பராக் ஒபாமா, உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள், சட்ட சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோரை நேர­டி­யாக சந்­தித்து மாணவ தலை­மைத்­துவம், சமூ­க­நல செயற்­பா­டு­களில் மாண­வர்­களின் பங்­க­ளிப்பு போன்ற பல முக்­கிய விட­யங்­க­ளைப்­பற்றி கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.  சமூ­கப்­பணி  தொடர்­பான செயல்­முறைப் பயிற்சி  மற்றும் பொது­வாழ்வில் ஈடு­பட்டு சமூ­கப்­ப­ணி­யாற்ற விரும்பும் இளை­ஞர்கள் இந்த வாய்ப்­பினைப் பெறு­வது மிகவும் பெரு­மைக்­கு­ரிய சாத­னை­யாகும். அமெ­ரிக்க நாட்டின் எதிர்­காலத் தலை­வர்கள் என்ற அளவில் இந்த இளை­ஞர்கள் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.  இந் நிகழ்­வுக்கு தமிழ் மாணவன் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்­டது இதுவே முதல் தட­வை­யாகும். இந்­நி­கழ்­வா­னது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்த பெரு­மையும்  அங்­கீ­கா­ரமும்  ஆகும். 
இத்­த­கு­தியை மகிஷன் அடை­வ­தற்குக் காரணம்  நடு­நிலை கல்வி நாட்­களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்­டிய சமூ­க­நல அக்­கறை கொண்ட பல செயல்­களும் பணி­க­ளு­மாகும். இவை­யாவும் படிப்­ப­டி­யாக  இவரை உயர்த்தி வந்­துள்­ளது. பத்து வயதில் வானியல் வல்­லு­ந­ராகப் பணி­யாற்­று­வதில் ஆர்வம் கொண்ட மகி­ஷனின் நோக்கம் பிற்­கா­லத்தில் ஒரு கோளையோ, விண்­கற்­க­ளையோ கண்­டு­பி­டிக்க வேண்டும் என்று துவங்­கி­யது.  நூலகம் ஒன்று நடத்­திய வாசிப்பு போட்­டியில் பங்­கு­பற்றி,   மூன்று மாத காலத்­தினுள் நூல­கத்தின் 1,000 புத்­த­கங்­களைப்  படித்­த­மைக்­காக நகர ஆட்­சி­யா­ள­ரிடம் இருந்து பரிசும், சிறந்த கவிதை  ஒப்­பு­வித்­த­மைக்­காக தங்­கப்­ப­தக்­கமும்   மற்றும்   மூன்று “உச்­ச­ரிப்புத் தேனீ” (Spelling Bee) போட்­டி­களில் பரி­சுகள் என்று கல்­விக்­கான தகு­தி­களை வளர்த்துக் கொண்டு பல போட்­டி­களில் வெற்­றி­களை தன­தாக்கிக் கொண்டார்.
சிறு வய­தி­லி­ருந்து தனக்கு  உத­விய  பொது  நூலகம் பொரு­ளா­தாரப் பற்­றாக்­கு­றையால் நிதி­யின்றி மூடப்­பட்ட பொழுது அது ‘மனி­த ­கு­லத்­திற்கு எதி­ரான குற்றம்’ என மிகவும் இள­வ­ய­தி­லேயே தனது கருத்தைத் தயக்­க­மின்றிப் பதிவு செய்­தவர் மகிஷன்.  நன்றி வீரகேசரி


தமிழ் சினிமா

மாயவன்

மாயவன் திரைவிமர்சனம்புதிய நடிகர்களின் படங்களுக்கு எதிர்பார்ப்பு சூழ்வது என்பது சினிமா இப்போதிருக்கும் நிலையில் அரிதான செயல். அப்படியாக நீண்ட நாளாக எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் மாயவன். சி.வி.குமார் அட்டகத்தி முதல் அதே கண்கள் என சில நல்ல படங்களை தயாரித்தவர். இப்போது மாயவன் மூலம் இயக்குனராகியிருக்கிறார். மாயவன் அவரின் பேர் சொல்லுமா? கதைக்குள் போகலாம்.

கதைக்களம்

இன்ஸ்பெக்டர் குமரனாக சந்தீப் கிஷன் மீண்டும் இறங்கியுள்ளார். ஆரம்பத்திலே ஒரு பிக்பாக்கெட் குற்றவாளியை மடக்கி பிடிக்க போகும் போது எதிர்பாராத விதமாக சாய் தீனாவால் கொடூர கொலை சம்பவம் அரங்கேறுகிறது.
அதை நோக்கி கவனம் திரும்ப பெரும் ஆபத்து இவருக்கு வந்து மரண வாசல் வரை சென்று மீண்டும் வருகிறார். அதன் பின் வழக்கமாக தன் பணிகளை தொடங்க செல்லும் போது மனநல டெஸ்ட்க்கு போகிறார்.
அங்கே ஹீரோயினான மருத்துவர் ரம்யாவுடன் சிறு வாக்குவாதம் நிகழ்கிறது. பின் சந்தீப் எப்படியோ வேலைக்குள் மீண்டும் செல்ல ஒருநாள் மீண்டும் நடிகை ஒருவரின் கொலை சம்பவம் நடக்கிறது.
சோதனையில் இருக்கும்போது சந்தீப் உடலில் திடீர் மாற்றம். தன்னிலை அறியாமல் அவருக்குள் என்னவோ நடக்கிறது. பின் அதிலிருந்து மீண்டு பின் அதே குற்றவழக்கை கையில் எடுக்கிறார்.
இதற்கிடையில் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் தீடீரென மரண மடைகிறார். வழக்கு துப்பு துலங்காமல் இருக்கிறது. மிகவும் கைதேர்ந்து அறிவுள்ள ஒருவன் செய்தது போல் இருப்பதால் காவல் துறை தீவிரமாய் இறங்க ஏதோதோ புதியதொரு அறிவியல் அதிர்ச்சி தகவல் சிக்கிறது.
சந்தீப் குற்றவாளியை பிடித்தாரா, அவர் மனநிலை திடீரென மாறிப்போக காரணம் என்ன, அப்படி என்ன அதிர்ச்சி தகவல் சொல்லும் மர்மம், கொலையின் பின்னணி என்பது தான் மாயவன்.

படத்தை பற்றிய அலசல்

மாநகரம் படத்திற்கு பிறகு சந்தீப் கிஷனுக்கு இப்படம் சொல்லும் படியாக இருக்கும். நெஞ்சில் துணிவிருந்தால் அவருக்கு வைத்த குறையை இப்படம் போக்கும் என நம்பலாம்.
குமரன் இன்ஸ்பெக்டராக அவர் கதைக்குள் போராடுகிறார். ஆனால் போலிஸ்க்கான அந்த ஒரு மிரட்டல் தொனி வரவில்லையோ என கேள்வி எழுகிறது. ஆனாலும் ஓகே தான்.
மனநல டாக்டராக லாவண்யா அமைதியாக வந்து சந்தீப்க்கு வழக்கு விசயத்தில் பெரும் உதவியாக இருக்கிறார். ஒரு மாடர்ன் பெண் போல இருந்தாலு பொறுமையான அணுகுமுறையால் ஸ்கோர் செய்கிறார்.
முதல் கொலை, இரண்டாம் கொலை, மூன்றாம் கொலை என அடுத்தடுத்து வித்தியாசமாக சம்பவங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொன்றையும் கதையுடன் பொருந்தும் விதமாக அமைத்திருக்கிறார்கள்.
சாய்தீனா, மைம் கோபி, டேனியல் பாலாஜி என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விசயத்தில் ஒன்றுபடுகிறார்கள். இவர்களின் பின்னணி சிறியதாய் இருக்க இவர்களுக்கே தெரியாமல் ஏதோ ஒரு சம்பவம் நடக்கிறது.
நவீன அறிவியல் ஆராய்ச்சியின் தாக்கங்களும், மனநலம் சார்ந்த விசயங்களும் இந்த வளர்ந்த மருத்துவ உலகில் எப்படி மனித வாழ்க்கையில் பின்னப்படுகிறது என மெதுவாய் கதை நகர்த்துகிறார் இயக்குனர்.
ஒரு காட்சி நடக்கும் போது அடுத்து இதுதான் நடக்கும் என பட பிரியர்களால் ஊகிக்க முடியும். ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் அது மிஸ் ஆகலாம். நமக்குமே ட்விஸ்ட் தான்.

கிளாப்ஸ்

இயக்குனராக முதல் படத்தை முறையாக வடிவமைத்ததில் தயாரிப்பு அனுபவமும் வெளிப்படுகிறது.
முன்பாதி பின்பாதி கதையோடு பொருந்துகிறது. சொல்ல வந்த விசயத்தில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்.
சந்தீப் கதையை அணுகுவதில் எதார்த்தம். கதை அவருக்கு கைகொடுக்கும்.
அறம், தீரன் படத்தை தொடர்ந்து ஜிப்ரான் இப்படத்திலும் பின்னணி இசை, பாடல் என நிறைவாக்கியிருக்கிறார்.

பல்ப்ஸ்

ஆரம்பத்திலிருந்து ஒரே மாதிரியான வேகம் தான் நகர்வது போல தோன்றும்.
சின்ன சின்ன லாஜிக் இருப்பது உற்று பார்க்கும் போது உடனே கண்ணில் சிக்குகிறது.
ஹீரோ ஹீரோயின் லவ், ரொமான்ஸ் எல்லாம் டேக் டைவர்சன் போல ஆகிவிட்டது.
கிளைமாக்ஸ் ட்விஸ்ட் முழுமையாக எல்லோருக்கும் புரியும் என்றால் கேள்விக்குறி தான்.
மொத்தத்தில் மாயவன் வித்தியாசமாக மனம் ஈர்க்கிறான். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி CineUlagam






மழலை மொழி ! - எம் . ஜெயராமசர்மா

     குழலினிது யாழினிது என்பர்  ஆனால்
image1.JPG     குழந்தைகள் மொழியோ அதனினும் இனிது
      மழலைகள் நிறைந்திடும் போது அங்கு
      மகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் !

      கோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்
      குழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை
      கூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்
      குதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் ! 

       ஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு
       ஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து
       நாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது
       நாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் ! 

      கோபங்கள் வந்திடும் வேளை வீட்டில் 
      குழந்தைகள் அங்கு வந்துமே நின்றால் 
      கோபங்கள் ஓடியே போகும் அவர்
      குறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் ! 

இரண்டாம் வாய்ப்பு !




ன்றொரு நாள்
எனக்கு அறிமுகமானவன் நீ
என் ஒவ்வொரு அசைவுகளையும்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னிடம் !
நினைத்து பார்க்கையில்
வலிக்கிறது.
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிதுளியும்
நான் உன்னுடன் இருந்திருக்கிறேன்.
எவ்வளவு நெருக்கமாக
உணர்ந்தேன்
ஏதோ ஒன்று
வெகு ஆழமாக
நீ - என்னில் பாதியாக……
என் உயிரில் பாதியாக……
என் இதயத்தின் பாதியாக…..
ஒவ்வொரு விடியலும்
உன்னாலே….
காண முடியாத
ஒவ்வொரு நாளும்
கடினமாகவே……
வருந்துகிறேன்


ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள் முருகபூபதி


-->
" கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு.
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு.
நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு."
-- இந்த வரிகளுடன் தொடங்கும் கிணற்றில் விழுந்த நிலவு கவிதையுடன் 1960 ஆம் ஆண்டிலும்  அதற்கு முன்னரே முத்தாரம் என்னும் சிறுகதையுடன் 1957 இலேயே  இலக்கிய உலகிற்கு அறிமுகமானவருமான  தமிழக கவிஞர் எஸ். வைதீஸ்வரனுக்கு தற்பொழுது 82 வயது.
உடலுக்குத்தான் இந்த வயது. ஆனால், இன்றும் அவரது கவிதைகளும் கதைகளும்  புதிதாக பிறந்திருப்பதுபோன்ற தோற்றம்கொள்வன. திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தேவமகள் விருது, சிற்பி அறக்கட்டளை விருது, அமெரிக்கத்தமிழர்கள் வழங்கும் புகழ்பெற்ற ' புதுமைப்பித்தன் விளக்கு' விருது முதலானவற்றைப்பெற்றவர்.
தமிழ்த்திரையுலகிலும் நாடகத்துறையிலும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர்,  மூத்த கலைஞர் சகஸ்ரநாமம் அவர்களின் மருமகன். தி. ஜானகிராமன், சி.சு. செல்லப்பா,  க. நா. சு. , பி.எஸ்.ராமையா, கு. அழகிரிசாமி ஆகியோருடன்  நேரடித்தொடர்பும் இலக்கியப்பரிச்சியமும் கொண்டிருந்தவர்.
சகஸ்ரநாமம் நடத்திய சேவாஸ்டேஜ் நாடகக்குழுவில் இணைந்திருந்தவர், பி. எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் , கோமல் சுவாமிநாதனின் புதிய பாதை முதலானவற்றிலும் நடித்திருப்பவர்.
ஜானகிராமன் எழுதிய நாலுவேலி நிலம் கதை திரைப்படமானபோது அதில் மட்டுமன்றி வேறும் சில திரைப்படங்களிலும் தோன்றியிருப்பவர்.
தமது 22 வயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்த வைதீஸ்வரன் பிறந்தது கோயம்புத்தூரில். சேலத்தில் படித்துவிட்டு, 1948 முதல் சென்னை வாசியானவர்.
சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து இதழில் இவரது முதல்கவிதை வெளியானது. அதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான சிற்றிதழ்களிலெல்லாம் எழுதியிருப்பவர்.
உதயநிழல், நகரச்சுவர்கள், விரல் மீட்டிய மழை, வைதீஸ்வரன் கவிதைகள், கால - மனிதன் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம், மனக்குருவி  முதலான கவிதைத்தொகுப்புகள், கால் முளைத்த மனம், திசைகாட்டி, வைதீஸ்வரன் கதைகள், ஆகிய கதைத்தொகுப்புகளையும், தேவனின் எழுத்துலகம் என்ற ஆய்வு நூலையும் வரவாக்கியிருப்பவர். அண்மையில் அவர் எழுதிய அனைத்துக்கவிதைகளும் செம்பதிப்பாக மனக்குருவி என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
சென்னை ஏயர் இந்தியா   நிறுவனத்தில் பல வருடங்கள் நிருவாகியாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றிருப்பவர். கவிஞர், சிறுகதைப்படைப்பாளி, ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், அத்துடன் ஓவியர். இவரது நூல்களின் முகப்போவியங்களும் இவருடையதுதான். இவ்வாறு பன்முக ஆற்றலும் மிக்க வைதீஸ்வரன் எமது அவுஸ்திரேலியத்தமிழ்  இலக்கியகலைச்சங்கத்தினதும் நெருக்கமான நண்பர்தான்.
2010 இல் நாம் மெல்பனில் நடத்திய பத்தாவது எழுத்தாளர் விழாவின் கருத்தரங்கில் " இலக்கியப்படைப்பு படைப்பாளியின் பிம்பத்தை உணர்த்துமா?" என்ற தலைப்பில் கருத்துச்செறிவுள்ள உரையை நிகழ்த்தினார். அந்தவுரை பின்னர் வீரகேசரியிலும் வெளியானது. கொழும்பில் 2011 இல்  நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலரிலும் இடம்பெற்றது.
இப்பொழுது அதனைப்படித்தாலும் புதிதாக படிக்கும் உணர்வையே தரக்கூடியது. வைதீஸ்வரனின் கதைகள், கவிதைகள் அனைத்திற்கும் இந்தத்தன்மை இருப்பது வியப்பானது.  வைதீஸ்வரனின் குறிப்பிட்ட அந்தக்கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது:
" எழுத்தாளன் என்பவன் மனிதகுலத்தின் மனசாட்சி என்ற பொன்மொழி மாறி,  அவன் தன் சமுதாயத்தின் பிணசாட்சியாக எல்லாவற்றையும் தயக்கமான குரலில் முணுமுணுத்துக்கொண்டிருப்பவனாக  இன்று செயல்படவேண்டியிருக்கிறது.
பொதுவாக நமக்கு எழுத்தாளர்களைப்பற்றிய அறிமுகம் என்பது அவர்களுடைய புத்தகங்கள்தான். நாம் வாசிக்கும் புத்தகங்கள் மூலம் விவரிக்கப்படும் கதா பாத்திரங்களின் சாயல்களில் ஏதாவது ஒன்றை அந்த எழுத்தாளருடைய ஆளுமையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், நடைமுறையில் அது வேறாக இருக்கிறது.
இந்த சமயம் எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. 1971 என்று நினைக்கிறேன். திருச்சியில் ஒரு கவிதைக்கூட்டத்துக்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். ரயிலில் இருந்து இறங்கியவுடன் வரவேற்க வந்திருந்தவர்களில் ஒருவர் " ஏன் வைதீஸ்வரன் வரவில்லையா? " என்று என்னைப்பார்த்துக்கேட்டார். " நான்தான் அது" என்றேன். எனக்கு அப்போது 35 வயது இருக்கும். " என்ன ஸார்... நீங்களா...வைதீஸ்வரன்?" உங்கள் கவிதைகளைப்படித்தபோது வயதான முதியவராக  நீண்ட  தாடியும் காவி ஜிப்பாவும் போட்டுக்கொண்டு கைத்தடியுடன் நிற்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.  நீங்கள், உங்கள் கவிதையின் முதிர்ச்சிக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லாத ஆளாக இருக்கிறீர்களே?" என்று சொல்லிச்சிரித்தார்.

ஒரு படைப்பு நம் மனதிற்குள் அதன் ஆசிரியரின் பிம்பத்தை உருவாக்கிவிடுகிறது. ஒரு படைப்பை வாசிக்கும்போது அதை எழுதிய ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று  தீர்மானத்திற்கு வந்துவிடுகின்றோம்."
வைதீஸ்வரனின் இந்தக்கூற்றிலிருக்கும் உண்மை,  அனுபவித்துப்பார்த்தவர்களுக்கு புரியும். அகிலனின் பாவைவிளக்கு திரைப்படமாகிய வேளையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்த அகிலனைப்பார்த்துவிட்டு சிவாஜி கணேசனும் அவ்வாறு ஏமாற்றமடைந்தவர்தான்.
வைதீஸ்வரன் முதல் முதலில் எனக்கு தொலைபேசி ஊடாகவே 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமானார். அவர் சிட்னியில் தமது பிள்ளைகளிடம் வந்திருந்தசமயம் தொடர்புகொண்டார்.  நண்பர் இந்திரா பார்த்தசாரதியிடத்திலேயே எனது தொலைபேசி இலக்கம் பெற்றிருக்கிறார். ஒருநாள்  தொடர்புகொண்டு " வைதீஸ்வரன் பேசுகின்றேன்" என்றார். அன்றிலிருந்து  இற்றைவரையில்  கடிதங்கள், தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக  என்னோடு பேசிக்கொண்டிருப்பவர்.
இவருடனும் நேர்காணல் நடத்தி, பிரான்ஸிலிருந்து வெளியான நண்பர் குகநாதன் நடத்திய ஈழநாடு இதழில் எழுதியிருக்கின்றேன். 1998 இல் வெளியான எனது சந்திப்பு நேர்காணல் தொகுப்பிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

பயணியின் பார்வையில் --- அங்கம் 25 தமிழர்களுக்கு கண்ணகி அம்மன் ! சிங்களவர்களுக்கு பத்தினி தெய்யோ !! முருகபூபதி


-->
மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது.
இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும்  அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும்   வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர்.
இலங்கையில் திரெளபதை  அம்மன்,   கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டதை காணமுடிகிறது.
சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)
கண்ணகி வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு என்பன கிழக்கிலங்கையில் மிகவும் முக்கியத்துவமாகியிருக்கிறது.
இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்தமையால் அங்கு சிங்கள மக்களால்  சீதாஎலிய என்னுமிடத்தில் சீதை அம்மனும், வடமேற்கு  இலங்கையில்  உடப்பு மற்றும்  கிழக்கிலங்கை  பாண்டிருப்பில்  தமிழர்களினால்  திரௌபதை அம்மனும், கன்னன் குடாவில்  ஶ்ரீகண்ணகி அம்மனும் குடியிருக்கிறார்கள்.
பாரத நாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களில் குறிப்பாக பெண்களுக்காக  இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வழிபாட்டு மரபை தோற்றுவித்திருப்பதின் பின்னணி விரிவான ஆய்வுக்குரியது.
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின்  கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், கன்னன்குடா நோக்கி பயணமானோம். அப்பொழுது நண்பர் 'செங்கதிரோன்' கோபாலகிருஷ்ணன்  எனக்குத்தந்த 'கூடல்'  சிறப்பு மலர் பல தகவல்களைச்  சொன்னது.  இந்தப்பயணத்தில் நண்பர் பேராசிரியர் செ. யோகராசாவும் எம்முடன் இணைந்துகொண்டார்.
மட்டக்களப்பு  வாவியைக்கடந்து  படுவான்கரையை நோக்கி நண்பரின் கார் பயணித்தது. கன்னன்குடா ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடையும்போது இரவு பத்துமணியும் கடந்துவிட்டது.
பக்தர்கள் நிறைந்திருந்தனர். பறவைக்காவடியில் சிலர் வந்தனர். அந்தக்காட்சி  அங்கிருந்த  பக்தர்களை மெய்சிலிர்க்கச்செய்திருக்கலாம்.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அக்காட்சியை பார்த்து மனதிற்குள் வருந்தினேன். தம்மை வருத்தி இப்படியும் நேர்த்திக்கடனா..?
திரௌபதை அம்மன் கோயில் முன்றல்களில் தீமிதிப்பு. உடப்பு பிரதேசத்தில் அதனை பூமிதிப்பு என்பார்கள். இரண்டு நேர்த்திக்கடன்களுமே தம்மை வருத்திக்கொள்ளும் செயல்கள்தான்.

பெண்தெய்வங்கள் இப்படியும் ஆண்களை பழிவாங்குகின்றனவா...?
சீதையை இராமன்  தீக்குளிக்கவைத்தான்.
பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தான்.
கண்ணகியின் கணவனை பாண்டியன் சிரச்சேதம் செய்வித்தான்.
  பெண்களின் சோகங்களும் சாபங்களும்  நிரம்பிய ஐதீகக்கதைகளை   காவியங்களாக   எழுதிவிட்டுச் சென்றிருப்பவர்களும் ஆண்கள்தான்.  இன்று காலம்காலமாக ஆண்கள் தீமிதித்தும்,  வேல் குத்தி பறவைக்காவடி எடுத்தும் முன்னோர்கள் செய்த பாவங்களை கழுவிக்கொண்டிருக்கிறார்களோ என்றும் அந்த ஆலய முன்றலில்  நின்று  யோசித்தேன்.  எனினும் எனது யோசனைளை வெளியே பகிர்ந்துகொள்வதற்கு தயக்கமிருந்தது.
 மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏன் கண்ணகி விழா கொண்டாடப்படுகிறது ? என்பதற்கு "கூடல்" முதலாவது மலர் ( பரல்: 1) கூறும் செய்தியை பார்ப்போம்.
" தமிழ் மண்ணோடும் தமிழ் மரபோடும் இணைந்த கதை கண்ணகி கதை. அவளின் திண்மையும், தீரமும் நிறைந்த வாழ்வும் மக்கள் நலன் நாட்டமும் அவளை மக்களின் தெய்வமாக்கின.
சோழநாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டிலே வழக்குரைத்து, சேரநாட்டில் தெய்வீகமான கண்ணகி, ஈழநாட்டில் சிங்கள தமிழ் மக்களின் மத்தியில் வழிபாட்டிற்குரிய தெய்வமானாள்.

மெல்போர்ன் நீதிமன்றத்தில் இலங்கை பயணிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை


08/12/2017 இலங்கை பயணி ஒருவருக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தினால் குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பறந்து கொண்டிருந்த மலேசிய விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி சக பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இலங்கை பயணிக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய ஏர்வேஸ் ஆர்128 என்ற விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
அதற்கமைய இலங்கையை சேர்ந்த மனோத் மார்க்ஸ் என்ற 25 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.
விமானம் பறந்து உயர்ந்ததும் கையில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருளை வைத்திருந்த இலங்கை பயணி அத்துமீறி விமானியின் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார். இதை கண்ட சக பயணிகள் அச்சமடைந்தனர். எனினும் சாதுரியமாக செயல்பட்ட பயணிகள் அந்த நபரை பிடித்து விமான இருக்கையில் கட்டி வைத்தனர். சம்பவத்தை அடுத்து விமானம் மீண்டும் மெல்போர்னுக்கு திருப்பப்பட்டது.
அங்கு விமான நிலையத்தில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் அவர் மனநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றவர் என தெரியவந்துள்ளது.
அவர் கையில் வைத்திருந்தது ப்ளுடூத் என தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவத்தில் தீவிரவாத நோக்கம் எதுவும்  இல்லை என குறிப்பிட்டுள்ளனர். மெல்போர்னுக்கு திரும்ப கொண்டு வரப்பட்ட பயணிகள் உரிய ஓய்வுக்கு பின்னர் வேறு விமானத்தில் கோலாலம்பூர் புறப்பட்டனர்.
எனினும் இந்த விமானத்தை திசை திருப்பி, பயணிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மெல்போர்னில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக மெல்போர்ன் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
எனினும் இவரது குற்றச்சாட்டுகள் மீளப்பெறலாம் என கூறப்படுகின்றது. நன்றி வீரகேசரி



உலகச் செய்திகள்


ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் : முறியடித்த பொலிஸார்

ஏமன் அதிபர் அப்துல்லா ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்

ட்ரம்பை ரத்தத்தில் குளிக்க வைப்போம் : எச்சரிக்கும் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள்

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய லெபனானின் கோரிக்கை.!





ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதோடு முழு வீச்சில் அதை செயல்படுத்தவும் ஆதரவு அளித்திருக்கிறது.
சாடு, ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கும் ட்ரம்பின் கொள்கைக்கு எதிரான சில சட்டரீதியான தலையீடுகளால் அக் கொள்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அமெரிக்க அதிபர் அலுவலகம் அந்தத் தடையை நீக்குபடி அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 9 நீதிபதிகளில் 7 பேர் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ட்ரம்பின் இக் கொள்கை தொடர்பாக  நீதிமன்றங்களில் தற்போது  விவாதிக்கப்பட்டு வந்தாலும் கூட சர்ச்சைக்குரிய இந்த கொள்கையை இனி முழுமையாக செயற் படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.  நன்றி வீரகேசரி 


இலங்கைச் செய்திகள்


இலங்கையின் இயற்கை அழிவிற்கு காரணம் இதுவா.?

வெலிக்கடை படுகொலைகள்: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க சட்ட மா அதிபருக்கு அவகாசம்

சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை

அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்



இலங்கையின் இயற்கை அழிவிற்கு காரணம் இதுவா.?

06/12/2017 இலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டின் காபன் துகள்கள்  அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும். நிலக்கரி, மசகு எண்ணெய் என்பவற்றின் பாவனையே சூழலை பாதித்துள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 
உலகம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றது. சூழலியல் பிரச்சினை காரணமாக  உலகில் பல்வேறு நாடுகளில் அழிவுகள் அதிகரித்து வருகின்றது. இலங்கையிலும் அண்மைக் காலமாக பாரிய அனர்த்தங்கள், அழிவுகள் ஏற்பட்டு வருகின்றது நாம் அறிவோம்.  நாட்டின் ஒருபுறம் நீண்டகால  வறட்சி, மறுபுறம் வெள்ளப்பெருக்கு, கடல் மட்ட நீர் அதிகரிப்பு, சூறாவளி, அதிகரித்த மழை, கனமான காற்று  என்று பாரிய நெருக்கடிகளுக்கு நாம் முகங்கொடுத்து வருகின்றோம். இதற்கு பூலோக உஷ்ண உயர்வே காரணமாகும். மக்களின் செயற்பாடுகளே  இதற்கு  பிரதான காரணமாகும். இதை நாம் யாரும் ஏற்றுகொள்ள மறுக்கின்றோம். ஆனால் உண்மை இதுதான். இதன் காரணமாக இயற்கை அழிந்து வருகின்றது.
ஆகவே இதற்கான மாற்று வழியினை நாம் தெரிவு செய்யாவிடின் நிலைமைகள் மேலும் பாரதூரமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி 


தமிழ் சினிமா

சத்யா


சத்யா திரை விமர்சனம்சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகே ஒரு ஹிட் கொடுப்பதற்காக தடுமாறி வருகின்றார். எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வரும் இவருக்கு இந்த சத்யா அப்படி ஒரு இடத்தை கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

சிபிராஜ் ஆஸ்திரேலியாவில் பெரிய சாப்ட்ஃவேர் கம்பெனி ஒன்றில் வேலைப்பார்த்து வருகின்றார். திடிரென்று ஒரு கால் அவருடைய வாழ்க்கையை திருப்பி போடுகின்றது, அது தான் இப்படத்தின் ஒன் லைன்.
ரம்யா நம்பீசன் சிபிராஜின் முன்னாள் காதலி, ஒரு நாள் சிபிக்கு போன் செய்து என் மகளை கடத்திவிட்டார்கள், உன்னை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியவில்லை, ஏதாவது செய் என்று அழுகிறார்.
அதை தொடர்ந்து சிபி சென்னை வந்து இதை கண்டுப்பிடிக்க முயற்சி செய்ய, பிறகு தான் தெரிகின்றது, அப்படி ஒரு குழந்தையே இல்லை, ரம்யா நம்பீசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று.
ஆனால், ரம்யா கடைசி வரை தனக்கு குழந்தை இருப்பதாக சொல்ல, அந்த குழந்தை உண்மையாகவே உள்ளதா? இல்லை ரம்யாவிற்கு தான் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை மிக சுவாரஸ்யமாக கூறியுள்ளார் ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி.

படத்தை பற்றிய அலசல்

சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து ஒரு தரமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். காதலியை பிரியும் இடத்திலும் சரி, தன் முன்னாள் காதலி மகள் கடத்தப்பட்டாள் என்று தெரிந்து அவருக்காக அலையும் இடத்திலும் சரி சிபி நடிப்பில் பல மடங்கு முன்னேறிவிட்டார்.
சிபியை தாண்டி படத்தில் சதீஷ், ஆனந்த்ராஜ் மிகவும் கவர்கின்றனர். அதிலும் சதீஷ் காமெடியை விட குணச்சித்திர கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். இனி இதுபோன்ற கதாபாத்திரங்கள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை, அதை விட ஆனந்த்ராஜ் ஒவ்வொரு படங்களிலும் சிக்ஸர் அடிக்கின்றார்.
இசை வெளியீட்டு விழாவில் ஆனந்த்ராஜ் சொன்னது போலவே சத்யராஜை மனதில் வைத்தே தான் வசனம் எழுதியிருப்பார்கள் போல. அத்தனை நக்கல் அவர் பேசும் வசனங்களில், வரலட்சுமி சில காட்சிகள் வந்தாலும் சர்ப்ரைஸ் கொடுக்கின்றார்.
படம் முழுவதும் ஒரு குழந்தையை தேடும் கதை, அதை விட குழந்தை இருக்கின்றதா? என்ற சந்தேகத்தையும் கடைசியில் ஒவ்வொரு முடிச்சுக்களையும் அவிழ்க்கும் போதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லை என்றாலும், கிளைமேக்ஸ் கொஞ்சம் யதார்த்தம் விலகியே உள்ளது. சிபியும் ஏதோ இண்டர்நேஷ்னல் போலிஸ் போல் அசால்ட்டாக எல்லாத்தையும் செய்து முடிப்பது, அதைவிட போலிஸிற்கே இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என சொல்வது கொஞ்சம் ஓவர்.
படத்தின் மிகப்பெரும் பலம் பின்னணி இசை, சைமனின் இசையில் படத்தின் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கின்றது. கூடவே அருண்மணி பழனியின் ஒளிப்பதிவும் அதற்கு உதவுகின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, கடைசி வரை சுவாரஸ்யம் குறையாமல் எடுத்துள்ளனர்.
ஆனந்த்ராஜ், சிபிராஜ், சதீஷ் ஆகியோரின் நடிப்பு.
கடைசி வரை டுவிஸ்ட்டை கொண்டு சென்ற விதம்.

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் நல்ல டுவிஸ்ட் என்றாலும், கொஞ்சம் யதார்த்தம் விலகியே உள்ளது.
மொத்தத்தில் குழந்தையை சத்யா கண்டுப்பிடித்தாரா என்பதை விட வெற்றியை கண்டுப்பிடித்துவிட்டார்.

நன்றி  CineUlagam




உதவிடுமா ! - எம் . ஜெயராமசர்மா


.image1.JPG


           பிறந்திடும் போது இறப்பினைப் பற்றி 
                நினைந்திடும் மனிதர் உலகினி லுண்டா 
          பிறப்புக்கும் இறப்புக்கும் இடையினில் தானே
                  பெரும் போராட்டம் நடக்குது இங்கே 
           சொத்துக்கள் சேர்ப்பதும் சொகுசெலாம் காண்பதும் 
                    நித்தியம் என்று நினைக்கிறார் மனிதர்
            எத்தனை இடர்கள் வருமென நினையா
                     இருப்பதைப் பெருக்க நினைக்கிறார் நாளும் !

           வாழும்வரை வாழுங்கள் வகைவகையாய் சுவையுங்கள்
                    நாளைபற்றி நினைக்காமல் நன்றாக மகிழுங்கள் 
           ஊணுறக்கம் தனைமறந்து உழையுங்கள் உழையுங்கள்
                    உங்களுக்குப் பின்னாலே உங்கள்சொத்து யாருக்கு 
           உயிருடம்பில் இருக்கும்வரை உங்கள்சொத்து உங்களுக்கே
                     உயிர்பிருந்து போனபின்னால் உங்கள்சொத்து என்னவாகும்
             பிள்ளைகளும் பேரர்களும் பிய்த்தெடுத்து நிற்பார்கள்
                      அவர்களுக்குள் போராட்டம் ஆரம்பம் ஆகிவிடும் !