மரண அறிவித்தல்

 ஆழ்ந்த துயரத்துடன்,  திருமதி புவனேஸ்வரி பொன்மைலைநாதன் அவர்கள் 2026 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில், தனது 89 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்த செய்தியை அறிவிக்கின்றோம்.




































இந்த கடினமான நேரத்தில், திருமதி புவனேஸ்வரி பொன்மைலைநாதன் அவர்களின் இறுதி விருப்பங்களை மதித்து, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிப்பட்ட இறுதிச்சடங்கை நடத்துவதற்கு உங்கள் புரிதலையும் ஒத்துழைப்பையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து !


 










மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்… அவுஸ்திரேலியா 



நல்லூரான் திருவடியில் நாளும்பல அதிசயங்கள்
நாடிவரும் அனைவருக்கும் நன்மைபல வருகிறது
நல்லூரின் மண்நடந்தால் நம்வினைகள் பறந்தோடும்
என்றெண்ணிப் பலபேரும் நாளுமங்கே வருகின்றார் 

தேரடியில் தெய்வவருள் செறிந்தங்கே இருக்கிறது
தேரடியில் வில்வமரம் யாவருக்கும் தெரிந்ததுவே
மரத்தடியில் பலரமர்வார் மனமெல்லாம் பலநினைப்பில்
மால்மருகன் காத்திடுவான் என்பதவர் நினைப்பாகும்

பற்றற்று வந்தமர்வார் பக்குவத்தைத் தேடிடுவார்
பக்குவத்தை நாடிடுவார் பைத்தியமாய் தெரிந்திடுவார்
பார்ப்பவர்கள் விசரென்பார் பரிகசித்து நின்றிடுவார்
ஆனாலும் அம்மனிதர் விசராகத் திரிந்திடுவார்

விசாகத் திருநாள் வேலவன் திருநாள் !





மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



வரம்பெற்ற வல்லரக்கன் வழிதவறி நடந்தான்
வானவரை வதைப்பதிலே குறியாகி நின்றான்
வரமீந்த சிவனாரோ கொதித்துமே நின்றார்
வல்லரக்கன் வழிமாற வழிவகுத்தார் சிவனார்

வல்லரக்கன் எண்ணாத வழியொன்று கண்டார்
வரத்துக்கு ஏற்றதாய் வழிசமைத்தார் சிவனும்
தன்சக்தி கனற்பொறியாய் எழுந்துவிடச் செய்தார்
கனற்பொறியும் கந்தனாய் உருப்பெற்று வந்தது

அருவமும் உருவமாகி அறுமுகக் கடவுளாகி
பெருவுருப் பெற்றுவந்து பேரருள் புரிந்தநாளே
வைகாசி விசாகமாகி மாசினையகற்றும் நாளாய்
மாநிலம் மலர்ந்தாக மனமதில் எண்ணுவோமே 

பேதை மனிதா கலங்க லாமோ?


 

இயற்றியவர் - கலாநிதி  பாரதி இளமுருகனார்.

 

 

 




 

பேதை மனிதா வாதை ஏனோ?;!

மேதை நீயும் கலங்க லாமோ?

கோதை தந்தது துயரந் தானோ?

மாதை நம்பிப் பெற்ற பரிசோ?

 









சூது வாது சோலி களவு

ஏதும் அறியாப் பிள்ளை அலவோ?

சோத னைக்குப் பலியா கினையோ?

ஆதர வுனக்கு ஆர்தரு வாரோ?

 

 

கணத்திற் பிறந்த  காத லாலே 

சுணக்க மின்றி மணமுடித் தாயே!

பணத்தி னாலோ இணக்க மின்றிப்

பிணக்கப் பட்டுப் பிரிந் தேனோ?

கவிதை..."பூமகள் ஊர்வலம்…!"... மெல்போர்ன் அறவேந்தன்



கண்ணம்மா திரைப்பட பாடலான "கண்ணம்மா உன்குரல் காற்றிலே " பாடகர் s. Nirojan

 .

இலங்கை தயாரிப்பான "கண்ணம்மா" திரைப்படம் சிட்னியில் ஜூன் மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக் கிழமை, மாலை 3 மணிக்கு Auburn reading Cinima வில் திரையிடப்படவுள்ளது . யூட் சுகி அவர்களின் கமரா,எழுத்து, இயக்கத்திலும், பிரசாந்த் கிரிஷ்ணபிள்ளையின் இசையிலும், காரை சிவநேசனின் படத்தொகுப்பிலும், மகேந்திரசிங்கம், சபேசன், நிந்துஜா, ஜீவேஸ்வரன், சிவநேசன், ஜஸ்மின், கிளிநொச்சி கண்ணம்மா போன்றோரின் சிறந்த நடிப்பிலும் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியில் உருவான முழு நீள திரைப்படம் கண்ணம்மா. ஜூன் மாதம் 14ம் திகதி Auburn சினிமாவில் வெளியிட உள்ளோம். இத் திரைப்படத்தை பார்க்கத் தவறாதீர்கள்.




குரங்கு கையில் பூமாலைருந்தால்!


குரங்கு கையில் பூமாலை கிடைக்க
அதை வைத்து அது என்ன செய்யும்
கழுத்தில் போட்டு அழகு பார்க்குமா
கண்டபடி அதனை பிய்த்து எரியுமா

ஓவியன் கையில் தூரிகை கிடைக்க
காவியமாக கருத்தினை கூறுவானா
எண்ணங்களை வண்ணங்கள் செய்து
கண்கவரும் ஓவியத்தை படைப்பானா

வானரம் தன் இயல்பு நிலையை மாற்றி
மந்தியொடு கொஞ்ச வேண்டுமெனில்
மலையில் மாமரங்கள் கனிய வேண்டும்
வற்றாமல் காதலும் அங்கே கனிந்திடும்

மாறாக மனதில் வேறொன்று தோன்றின்
சீறுகொண்டே சிந்தை தடுமாறி நிற்கும்
வீறுகொண்டு எழும் கூறுகெட்ட மாந்தராய்
ஊறாகவே உற்றதல்லா செய்து  மகிழுமாம்

'பாடல் வரிகளுக்கு உரிமை கோர முடியாது': நீதிமன்ற உத்தரவால் இளையராஜாவுக்கு பின்னடைவா?

 .

    • பதவி,செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'காப்புரிமை சட்டத்தின்படி, இசைப் படைப்பு என்பது பாடலில் இசை மற்றும் மெட்டுகளைக் குறிக்கும். அதில் வரும் வரிகளையோ ஒலிப்பதிவையோ இசையமைப்பாளர் உரிமை கோர முடியாது'

- சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மே 21 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

'பாடலின் உரிமைகள் திரைப்படத் தயாரிப்பாளருக்கு சொந்தமானவை. அவை சட்டப்பூர்வமாக சரிகம நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன' எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

'நீதிமன்ற உத்தரவு மூலம் நீண்டகால போராட்டத்துக்கு சிறு வெளிச்சம் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் சென்றால் முழுமையான தீர்வு கிடைக்கும்' என திரை விமர்சகர்கள் கூறுகின்றனர்.


வழக்கின் பின்னணி

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு 'அகத்தியா' என்ற படம் வெளியானது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

படத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான 'மூடுபனி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'என் இனிய பொன் நிலாவே' பாடலை ரீமிக்ஸ் செய்து யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தியிருந்தார்.

'மூடுபனி' படத்தின் இசை உரிமையைப் பெற்றுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், தங்கள் அனுமதியின்றி பாடலுக்கான உரிமையை இளையராஜா வழங்கிவிட்டதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

1980ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் மூலம் 'மூடுபனி' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் உரிமைகள் சரிகம நிறுவனத்துக்கு சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டுவிட்டதாக, நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இறைவன் இருக்கின்றானா!…..சங்கர சுப்பிரமணியன்

என்றோ கேட்டபாடல் இன்று அவன் காதில் ஒலிக்கின்றது. இறைவன் இருக்கின்றானா, மனிதன் கேட்கிறான். அவன் இருந்தால் இந்த உலகத்திலே எவ்கே வாழ்கிறான்? அடுத்த வரிதான் வாடிப்பட்டி  வடுகநாதனை சிந்ததிக்க வைத்தது. சிந்தித்தபடியே நண்பன் ராஜனுடன் அங்கிருந்த புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வடைமாலை சாத்தி சாமி கும்பிட்டுவிட்டு அங்கு கொடுத்த பிரசாதத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு கோவிலின் வெளிப்புறத்தில் அமர்ந்தான்.


நான் ஆத்திகன் ஆனேன் அவன் அகப்படவில்லை, நான் நாத்திகன் ஆனேன் அவன் பயப்படவில்லை என்பவைதான் அவனை சிந்திக்க வைத்த வரிகள். அகப்படவும் இல்லை பயப்படவும் இல்லை என்பதுதான் இருக்கு ஆனா இல்லை என்ற தொணியை ஏற்படுத்துகிறது.

இரவு நேரத்தில் பாதையில் கிடந்து காற்றில் வளைந்து நெளியும்போது

பாம்பு என்று நினைப்பவனுக்கு அது பாம்பு. பாம்பு என்பதற்கு எப்படியெல்லாம் சொல்லி நம்பவைக்க முடியுமோ அப்படியெல்லாம் சொல்லி நம்பவைப்பான். இல்லை என்பவனும் அவனுக்கு என்ன சொல்லவேண்டுமோ அப்படியெல்லாம் சொல்லி தன் கருத்தை நிலைநாட்டுவான்.

இடையில் ஒருவன் வந்து அதைத் தூக்கி உறுதி செய்யவருவான். தூக்கியவன் அலறி அடித்து தூக்கியும் எறியலாம். ஏன் எறிந்தான் என்றால் அதை பிடிக்கும்போது தொடுஉணர்ச்சியால் உணர்ந்ததுதான். அல்லது அதை தூக்கியவன் கையில் பிடித்து சுழற்றியபடி சிரிக்கவும் செய்யலாம். அதையும் அவன் தொடுஉணர்ச்சி உணர்த்தியதுதான்.

கீழே கிடப்பது பாம்பா கயிறா என்பதைப் பொருத்துத்தான் அது அமையும் என்று நினைத்தபடி அப்போது அர்ச்சனை செய்து



கொடுத்த வடைகளில் ஒன்றை பிட்டவன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த குரங்கை விரட்டியபடி,

“இந்த ஆஞ்சநேயர் அருளே அருள். கடவுள் இல்லை என்ற உன்னை எல்லாம் இங்கு வரவழைத்து விட்டான் அல்லவா?” என்றான் வடுகநாதன்.

“அட போடா. கடவுள் இல்லையென்று நான் என்று சொன்னேன். அவன் இயற்கையாய் நிற்கிறான் என்றேன். கொஞ்சம் விட்டால் என்னை இறைவன் இல்லை என்று சொல்பவன் என்று சொல்வாய்போல் இருக்கே” என்றான் ராஜன்.

சாது மிரண்டால் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

அறுபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் உச்ச இயக்குநராகத் திகழ்ந்தவர் ஏ. பீம்சிங். எம் ஜி ஆர் தவிர்த்து இவர் இயக்கத்தில் எல்லா நடிகர்களும் நடித்திருப்பார்கள் எனலாம். குடும்பக் கதைகளை அடிப்படையாக கொண்டு உணர்ச்சிகரமான காட்சிகளை கொண்டு இவர் இயக்கிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன . 


 இந்த பீம்சிங் அறுபதாம் ஆண்டின் நடுப் பகுதியில் தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஹிந்திப் பட இயக்கத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஆனாலும் இவரை நம்பி பல நடிகர்களும் , தொழில் நுட்ப கலைஞர்களும் தமிழ் சினி உலகில் தங்கி இருந்தார்கள். அவர்களுக்கு தொடர்ந்து தொழில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சன்பீம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சிறிய பஜெட்டில் படங்களை தயாரிக்கத் தொடங்கினார். அப்படி அவர் தயாரித்த முதல் படம் தான் சாது மிரண்டால்.

 பலருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு

கதையை தேர்ந்தெடுத்து அதற்கு திரைக் கதையையும் எழுதினார் பீம்சிங். படத்தின் கதை நாயகனாக டி . ஆர். ராமச்சந்திரன் நடிக்க , படத்தின் ஹீரோவாக நாகேஷ் நடித்தார். 

 ஓய்வு ஒழிவின்றி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷை எப்படியோ இதில் ஹீரோவாக்கினார் பீம்சிங். அகில இந்திய நடிகையான வைஜெயந்திமாலாவின் முதல் திரைப்பட ஜோடியான டி .ஆர் . ராமச்சந்திரன் இதில் நகைச்சுவை நடிகராக அல்லாது சீரியஸ் பாத்திரத்தில் நடித்திருந்தார். 

 சிறு வயது முதலே நண்பர்களான பசுபதியும் , நரசிம்மனும் வாழ்க்கை ஓட்டத்தில் பிரிந்து பல காலம் கழித்து மீண்டும் சந்திக்கிறார்கள். மனைவியை இழந்து இரு குழந்தைகளுடன் வங்கியில் தொழில் புரிந்து வாழும் பசுபதி தன் நண்பனுக்கு தனது இல்லத்தில் தங்க இடம் கொடுக்கிறான். நண்பனோ பசுபதியை ஏமாற்றி அவன் பணி புரியும் வங்கியை கொள்ளையடித்து விடுகிறான். இதன் பொருட்டு உருவாகும் தகராறில் பசுபதி நரசிம்மனை சுட்டு கொன்று விடுகிறான். அவனின் பிணம் கபாலியின் டாக்சியின் பின் சீட்டில் சரிந்து கிடக்கிறது. அது தெரியாமல் கபாலி டாக்சியில் சவாரி ஏற்றுகிறான். டாக்சியில் ஏறுபவர்கள் பிணத்தைப் பார்த்து மிரண்டு தலை தெறிக்க ஓடுகிறார்கள். கபாலியோ விபரம் தெரியாமல் பிணத்துடன் டாக்சியில் சுற்றுகிறான்! 

இலங்கைச் செய்திகள்

யாழ். பொது நூலகம் எரிப்பு : 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன? - வீரகேசரி நாளிதழ் குறிப்புகள்

அமைச்சர் விஜித்த ஹேரத் - நியூஸிலாந்து அமைச்சர் டாட் மெக்லே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவான பேச்சு!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் போராட்டம்


யாழ். பொது நூலகம் எரிப்பு : 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன? - வீரகேசரி நாளிதழ் குறிப்புகள்

Published By: Nanthini

31 May, 2026 | 11:05 AM

வரலாற்றில் இன்று... 

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவம் 1981ஆம் ஆண்டு இதே திகதி (31) இதே கிழமை (ஞாயிற்றுக்கிழமை), நள்ளிரவில் நடந்தது. இது, காலத்தால் மறையாதது, மறக்கமுடியாதது!

உலகச் செய்திகள்

உக்ரைனில் பாய்ந்தது ரஷ்யாவின் அதி நவீன ஒரேஷ்னிக் ஏவுகணை! - 4 பேர் பலி ; 100 பேர் காயம்

தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியது

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 12 பேர் பலி 


உக்ரைனில் பாய்ந்தது ரஷ்யாவின் அதி நவீன ஒரேஷ்னிக் ஏவுகணை! - 4 பேர் பலி ; 100 பேர் காயம் 

25 May, 2026 | 12:05 PM

உக்ரைன் நாட்டில் ரஷ்யா நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கீவ் தலைநகரின் வான்பரப்பில் ஏவப்பட்ட ரஷ்யாவின் அதி நவீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் (Oreshnik hypersonic) ஏவுகணை அப்பகுதியில் பாரியளவில் தாக்கியுள்ளது. இது, கடந்த நான்கு வருடப் போரிலேயே மிகக் கடுமையான தாக்குதலாக கருதப்படுகிறது. 

இந்த ஒரேஷ்னிக் ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் பாய்ந்து அழிக்கக்கூடிய திறன் கொண்டது என்றும் விண்கல் போல மிக அதிக வேகத்தில் பயணிப்பதால் எந்தவொரு வான்பாதுகாப்பு அமைப்பாலும் இதை தடுத்து அழிக்க முடியாது என்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் குறிப்பிட்டுள்ளார். 

அக்கினிக்குஞ்சு பத்திரிக்கை 16 ஆவது ஆண்டு விழா Jun 06 சனிக்கிழமை

 .


அக்கினிக்குஞ்சு பத்திரிக்கையின் 16 ஆவது ஆண்டு விழா மாபெரும் இசை நிகழ்வோடு ஜூன் மதம் 6ம் திகதி சனிக்கிழமை 2026 அன்று தாண்டினோங் மெல்பேர்னில் இடம் பெறுகின்றது. இதில் படைப்பாளிகள், கலைஞர்கள், வாழ்நாள் சாதனையாளர்கள் என்பவர்கள் கௌரவிக்கப் படுகின்றார்கள்.



திருஞானசம்பந்தர் குருபூஜை விழா 07/06/2026

 


சிட்னி இசை விழா 2026 - ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதி

 சிட்னி இசை விழா ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் பார்ரமட்டா ரிவர்சைட் தியேட்டரில் நடைபெறும்.  


நீங்கள் பிரபல கலைஞர்களிடமிருந்து இசையின் உச்ச  அனுபவத்தை பெறுவீர்கள்.   டிக்கெட்டுகள் பார்ரமட்டா ரிவர்சைட் இணையதளத்தின் மூலம் மட்டுமே விற்கப்படுகின்றன.   நீங்கள் விரும்பும் வசதியான இருக்கையைத் தேர்வு செய்ய முன்கூட்டியே உங்கள் டிக்கெட்டுகளைப் பெறுங்கள்.

இதற்கு கீழே மேலும் விவரங்களுடன் விளம்பரத் தாள் வழங்கப்பட்டுள்ளது.




இன்பத் துன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்ம நிலை

 இவ்வுலகில் புலனின்பப் பொருட்களால் சூழப்பட்ட வாழ்க்கையில், துன்பம் வரும்போது துயருற்றும், இன்பம் வரும்போது அளவுகடந்து மகிழ்ச்சியடைந்தும் வாழ்பவரை இரும்புத் துண்டுடன் ஒப்பிடலாம். இரும்பை நெருப்பில் வைத்தால் அது சிவந்து மென்மையாகி, தன்னுடைய இயல்பை இழக்கிறது. நெருப்பிலிருந்து வெளியே எடுத்தவுடன் மீண்டும் கருமையாகவும் கடினமாகவும் மாறி தனது பழைய நிலைக்குத் திரும்புகிறது. இவ்வாறானவர்களே மனிதர்களில் கீழ்மட்ட நிலையைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

மறுபுறம், துன்பத்தின் மத்தியிலும் மகிழ்ச்சியைக் கண்டடைவோர் தங்கத்துடன் ஒப்பிடப்படுகிறார்கள். தங்கத்தை நெருப்பில் இட்டால் அதிலுள்ள அசுத்தங்கள் நீங்கி அது மேலும் தூய்மையடைகிறது. அதுபோல, துன்பம் வந்தபோதும் தன்னுள்ளே ஆனந்தத்தை உணரக்கூடியவர் தங்கத்தைப் போன்ற உயர்ந்தவர்.

இன்பத்திலும் துன்பத்திலும் சமநிலையுடன் இருப்பவரை வைரத்துடன் ஒப்பிடலாம். எந்தத் துயரமோ, எந்தக் கஷ்டமோ, எந்தச் சோதனையோ வந்தாலும், மனச்சமநிலையையும் ஆனந்த நிலையையும் பேணுவது தன் கடமை என்று கருதுபவரே இத்தகையவர். வைரத்தை பலவிதமாக வெட்டினாலும், ஒவ்வொரு வெட்டுதலின் பின்னரும் அதன் மதிப்பு மேலும் உயர்கிறது. அதுபோல, வாழ்க்கையின் சோதனைகள் அவரை மேலும் மேன்மைப்படுத்துகின்றன.

நான்காவது வகையைச் சேர்ந்தவர் இன்பத்தையும் துன்பத்தையும் முற்றிலும் கடந்து, முக்குணங்களின் (சத்துவம், ரஜஸ், தமஸ்) தாக்கத்திற்கும் அப்பாற்பட்டு, பிரம்மானந்தத்தைத் தன் இயல்பாகவே அனுபவிக்கிறார்.

இந்த நான்கு வகைகளில், ஆத்ம இயல்பே உண்மையானதும் நித்தியமானதும் ஆகும். மற்ற மூன்று நிலைகளும் உலகத்துடன் தொடர்புடையவை; அவை மாற்றத்திற்கும் நிலையற்ற தன்மைக்கும் உட்பட்டவை.

ஆத்மாவின் இந்த உயர்ந்த இயல்பை அனுபவிக்க விரும்புகிறவர் உலகப் பயங்களாலும் பற்றுகளாலும் கட்டுண்டு இருக்கக் கூடாது. உலக ஆசைகளையும் அச்சங்களையும் கடந்து, மனச்சமநிலையுடன் வாழும்போதுதான் ஆத்மானுபவம் சாத்தியமாகும்.

ஆன்மீகப் பாதையில் அசைக்க முடியாத நம்பிக்கை

 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயங்களுக்கு நீண்ட வரிசையாக மக்கள் செல்வதை நான் காணும்போது மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், நீங்கள் கோவில்களுக்கும் மகான்களிடமும் சென்று வந்ததை வெட்கத்துடனோ தயக்கத்துடனோ கூறும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் ஒரு கோவிலுக்கோ அல்லது ஒரு ஞானியிடமோ சென்று வந்திருந்தால், அதைத் தலையை நிமிர்த்திக் கொண்டு தைரியமாகச் சொல்லக் கூடாதா?

நீங்கள் கடவுளை நம்புகிறவர்கள் என்று கூறிக்கொண்டே இருக்கும்போது, ஏன் கவலைக்கும் துயரத்திற்கும் அடிமையாகிறீர்கள்? வேகமாகச் செல்லும் ஒரு பேருந்தின் பின்னால் தூசிப் படலம் எழுவது போல, வாழ்க்கையின் பயணத்திலும் பல சிரமங்களும் குழப்பங்களும் தொடர்கின்றன. பேருந்து நின்றுவிட்டால், அந்தத் தூசி பயணிகள்மீது படிகிறது. ஆனால், எவ்வளவு தூரம் பயணித்தாலும் பேருந்து ஒருநாள் நின்றே தீர வேண்டும் அல்லவா?

இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், நீங்கள் எப்போதும் சேறும் சகதியுமான பாதையிலேயே பயணிக்க வேண்டியதில்லை. அதைவிட மேம்பட்ட பாதைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. முதலில் வரும் மண் பாதை கிராமப் பஞ்சாயத்தால் பராமரிக்கப்படும் சாலையைப் போன்றது. அதன் பின் வரும் ஜல்லி சாலை மாவட்ட நிர்வாக சாலையைப் போன்றது. இறுதியில், நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட தார் சாலையை அடைகிறோம். அந்தச் சாலையில் பேருந்து செல்லும்போது அதன் பின்னால் தூசி எழாது.

இதேபோல் ஆன்மீக வாழ்க்கையிலும் மூன்று பாதைகள் உள்ளன. மண் பாதை கர்ம மார்க்கம் – செயல்களின் பாதை. ஜல்லி சாலை உபாசனை மார்க்கம் – வழிபாடு மற்றும் தியானத்தின் பாதை. தார் சாலை ஞான மார்க்கம் – தெய்வீக ஞானமும் பேரறிவும் தரும் பாதை. ஆகையால் விரைவில் ஞான மார்க்கத்தில் நுழையுங்கள்; அப்போது வாழ்க்கையின் தூசிகளும் குழப்பங்களும் உங்களைத் தொடராது.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவையானது நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையை மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். உங்களுடைய பெற்றோரைவிடவும் உங்களுடன் நெருக்கமாக இருப்பவர் இறைவன். ஆகையால் அவரிடமே முழுமையாக சரணாகதி அடையுங்கள்; வேறு எவரிடமும் அல்ல.

வீசும் ஒவ்வொரு காற்றினாலும் அசைந்தாடும் விளக்குச் சுடரைப் போல உங்கள் நம்பிக்கை தளர அனுமதிக்காதீர்கள். உறுதியான நம்பிக்கையுடனும் இறைவன் மீதான முழு சரணாகதியுடனும் வாழ்ந்தால், ஆன்மீகப் பயணம் உங்களை ஞானத்தின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஆசையைத் துறப்பதே உண்மையான தியாகம்

 மனம் உலகியல் விஷயங்களில் மூழ்கிக் கிடந்தால், அது ஆத்மாவின் ஒளியிலிருந்து விலகிவிடுகிறது. இந்தப் பிரிவினையே மனக் கலக்கத்திற்கும் அமைதியின்மைக்கும் காரணமாகிறது. இறைவனை உணரவும் அவரது தரிசனத்தைப் பெறவும், மனிதன் தனது உள்ளக் கருவிகளான மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி, நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும்.

நமது புத்தி உலகியல் ஆசைகளிலும் பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது. உடல் மற்றும் மன ஆசைகளை நிறைவேற்றுவதற்கான கருவியாக புத்தியைப் பயன்படுத்தக்கூடாது. அதற்கு மாறாக, ஆத்ம தத்துவத்தை உணர்வதற்கும் அதன் உண்மையை வெளிப்படுத்துவதற்கும் புத்தி பயன்பட வேண்டும். புத்தி ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து, வெளிப்புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிலையே நிவிருத்தி மார்க்கம் எனப்படுகிறது.

இந்தச் சூழலில், "வேலையைத் துறப்பது" நிவிருத்தியுடன் தொடர்புடையதாக இருக்க முடியாது. உண்மையில், துறக்கப்பட வேண்டியது செயல் அல்ல; ஆசைகளே. நிவிருத்தி என்பது ஆசைகளைத் துறப்பதைக் குறிக்கிறது.

சிலர் கர்மபல தியாகம் பற்றி பேசும்போது, ஒருவர் செய்யும் செயல்களின் பலன்களைத் துறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு, எந்த வேலையும் செய்யத் தேவையில்லை என்றும், இதுவே பகவத் கீதை போதிக்கும் கருத்து என்றும் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இது உண்மைக்கு முற்றிலும் மாறான கருத்தாகும்.

எந்த மனிதனாலும் அனைத்து செயல்களையும் முற்றிலும் கைவிட்டு வாழ முடியாது. இந்த உடலே செயல்களைச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொருவரும் தமது கடமைகளையும் செயல்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஆனால் அந்தச் செயல்களைச் செய்யும் போது, மனம் தூய்மையாகவும் எண்ணங்கள் புனிதமாகவும் இருந்தால், ஒருவர் நல்ல செயல்களைச் செய்வார்; அதே சமயம் அவற்றின் பலன்களை எதிர்பார்க்கமாட்டார். இதுவே கர்மபல தியாகத்தின் உண்மையான பொருள். செயலைத் துறப்பது அல்ல, செயலில் பற்றற்ற மனநிலையுடன் இருப்பதே ஆன்மீக முன்னேற்றத்திற்கான உயர்ந்த வழியாகும்.

ஆசைகளையும் பற்றுகளையும் விட்டொழித்து, கடமைகளை இறைவனுக்கான அர்ப்பணிப்பாகச் செய்தால், மனம் அமைதியடையும்; புத்தி தெளிவடையும்; ஆத்மாவின் ஒளி மனித வாழ்வில் முழுமையாக வெளிப்படும்.

சேவையே உயர்ந்த ஆன்மீக சாதனை

 தெருக்களைச் சுத்தம் செய்தல், நோயாளிகளுக்கு உதவி செய்தல், பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்தல், ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்தல் போன்ற பணிகளை பலர் தாழ்வான செயல்களாகக் கருதுகின்றனர். இது மிகப் பெரிய தவறாகும்.

மூவுலகங்களின் பரமாதிபதியான ஸ்ரீ கிருஷ்ணர், மனிதனின் தெய்வீக விதியை உலகிற்கு எடுத்துரைப்பதற்காக அவதரித்தபோது, மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் அன்புடன் சேவை செய்தார். குதிரைகளையும் பசுக்களையும் பராமரித்தார். மகாபாரதத்தின் மகத்தான குருக்ஷேத்திரப் போரில், ஆயுதம் ஏந்திப் போரிட விரும்பாமல், ஒரு சாதாரண தேரோட்டியாக இருப்பதையே அவர் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் தன்னலமற்ற சேவையின் உயர்ந்த இலட்சியத்தை உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

கர்மயோகத்தின் அடிப்படை உண்மை என்னவென்றால், இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பல்வேறு வேறுபாடுகளின் பின்னணியில் உள்ள ஒற்றுமையை உணர்த்துவதாகும். நிஷ்காம கர்மம் அல்லது பலனற்ற செயல், அன்பின் தத்துவத்தை வெளிப்படுத்தி வளர்க்கிறது.

சேவையை விட உயர்ந்த ஆன்மீக சாதனை வேறு எதுவும் இல்லை. ஆன்மீகப் பாதை, சேவைப் பாதை மற்றும் ஞானப் பாதை என்று மூன்றையும் தனித்தனியாகப் பிரித்து எண்ணுவது தவறாகும். அவை மூன்றும் வேறுபட்டவை அல்ல; ஒன்றே.

சேவையே ஆன்மீக ஞானமாகும். சேவையே தெய்வ அருளைப் பெறுவதற்கான முதன்மையான வழியாகும். ஒரு நல்ல தொண்டனாக இல்லாமல் ஒருவர் சிறந்த தலைவராக முடியாது. எந்தப் பணியையும் செய்யத் தயாராக இருக்கும் கிங்கரன் ஆகாமல், சங்கரன் என்ற தெய்வீக நிலையை அடைய முடியாது.

இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சமுதாயத்திற்கு செய்யப்படும் சேவையே மிக உயர்ந்த நன்மையாகும். தன்னலமற்ற சேவையின் மூலம் மனிதன் தனது உள்ளார்ந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தி, அன்பு, கருணை மற்றும் ஒற்றுமை நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும்.

சேவை என்பது வெறும் சமூகப் பொறுப்பு அல்ல; அது ஆன்மீக முன்னேற்றத்திற்கான நேரடி பாதையாகும். பிறருக்காக வாழும் வாழ்க்கையே உண்மையில் அர்த்தமுள்ள வாழ்க்கையாகும்.

அகங்காரத்தை வென்று பணிவை வளர்த்திடுங்கள்

 அகங்காரம் (“நான்” என்ற உணர்வு) நிறைந்த மனிதன் எப்போதும் பிறர்மீது அதிகாரம் செலுத்த விரும்புவான். அவனுக்கு மற்றவர்களின் கருத்துகளைக் கேட்பது பிடிக்காது. பிறர் வழங்கும் அறிவுரைகள் அவனுக்கு நன்மை பயப்பதாக இருந்தாலும், தனது பிடிவாதத்தினால் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டான்.

இத்தகையவர்கள் உலகில் உள்ள அனைத்தையும் “காமாலை கண்” கொண்டு பார்ப்பவர்களைப் போன்றவர்கள். தன்னம்பிக்கை அல்ல, தன்னடக்கம் இல்லாத தற்பெருமையின் புகை அவர்களின் பார்வையை மறைத்துவிடுகிறது. “நான் சொல்வதுதான் உண்மை”, “என்னுடைய கருத்தே சரி”, “நான் செய்வதெல்லாம் முறையானதே” என்று எண்ணிக்கொண்டு அவர்கள் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள்.

இத்தகைய மனப்பான்மை ஆன்மீக சாதகர்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஒரு சாதகர் எவரிடமிருந்தும் வரும் நல்ல விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

தான் தவறு செய்தால் அதை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது. தவறை மறைக்க முயல்வது தேவையற்ற வாதங்களுக்குத் தள்ளும். அந்த வாதங்களில் வெற்றி பெற முடியாவிட்டால் அது பகைமைக்கும் சண்டைக்கும் வழிவகுக்கும்.

உலகத்தின் பாராட்டைப் பெறுவதற்காக போராட வேண்டாம். உலகம் உங்களை அல்லது உங்கள் திறமைகளை அங்கீகரிக்கவில்லை என்ற காரணத்தால் அவமானப்படவோ கோபப்படவோ வேண்டாம். ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் ஒருவர் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இவையே. அவற்றை வெறும் கருத்துகளாக அல்லாமல், வாழ்க்கையில் நடைமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

அதேபோல், பிறர் உங்களைப் புகழும்போது அளவுகடந்து மகிழ்ச்சியடையவும் கூடாது. அதில் ஒரு மறைமுகமான ஆபத்து உள்ளது. புகழ்ச்சியின் வலையில் சிக்கினால், அது உங்கள் ஆன்மீகப் பயணத்தைத் திசைதிருப்பி முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடும்.

பிறர் வழங்கும் அறிவுரைகளில் உங்களுக்கு நன்மை பயப்பவற்றைத் தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளுங்கள். அவற்றை உள்ளத்தில் பதித்து அதன்படி வாழ முயலுங்கள்.

அவமதிப்புகளையும் விமர்சனங்களையும் வாழ்க்கைப் பாதையில் தோன்றும் தற்காலிக தடங்கல்களாகக் கருதும் மனப்பயிற்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்கள் உண்மையான இலக்கிலிருந்து உங்களை விலக்காதபடி கவனமாக இருங்கள்.

பணிவு, பொறுமை, சுயபரிசோதனை மற்றும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவை ஆன்மீக சாதகரின் உண்மையான ஆபரணங்களாகும். அகங்காரத்தை வென்று பணிவை வளர்த்துக் கொண்டால், மன அமைதியும் ஆன்மீக முன்னேற்றமும் இயல்பாகவே கிடைக்கும்.

தியானத்தில் ஒழுக்கமும் திருப்தியும்

 தியானம் செய்வதில் ஒழுக்கம் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். உண்மையில், தியானத்திற்கு மிக முக்கியமானதும் அத்தியாவசியமானதும் ஒழுக்கமே ஆகும். ஆன்மிக சாதகர் ஒழுக்கத்தை முறையாகக் கடைப்பிடித்தால், அவர் விரைவில் வெற்றியை அடைய முடியும்.

தியானம் என்பது பவ ரோகம் (சம்சார வாழ்க்கை எனும் நோய்) என்பதற்கான முதன்மையான மருந்தாகும். அதனுடன் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான குணம் “திருப்தி” ஆகும். மனதில் திருப்தி இருந்தால், வாழ்க்கை முடிவற்ற ஆனந்த விழாவாக மாறும்.

ஆசைகள் மனதை அலைபாயச் செய்கின்றன. ஆசை என்பது உடலினுள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் போன்றது; அது மனிதனை மெதுவாகவும் உறுதியாகவும் அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லும். ஆசைக்கு எதிரான மருந்து திருப்தியே ஆகும். திருப்தியால் கிடைக்கும் ஆனந்தமே தியானத்திற்கான அரசபாதையாகும்.

எவ்வாறு வெயிலின் கடும் வெப்பத்தில் பல மைல்கள் நடந்து களைத்துப் போன ஒரு பயணி, குளிர்ச்சியும் நிழலும் நிறைந்த தெளிந்த நீருள்ள ஏரியில் நீராடும்போது அமைதியையும் புத்துணர்ச்சியையும் பெறுகிறானோ, அதுபோல ஆசைகளின் கொதிக்கும் வெப்பத்தில் வாடித் தவிக்கும் மனிதனும், திருப்தி என்னும் ஏரியில் மூழ்கி நீராடும்போது முழுமையான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடைகிறான்.

அன்பே உலகை ஒன்றிணைக்கும் சக்தி

 ஒரு மதத்தை மற்றொரு மதத்திற்கு எதிராகத் தூண்டும் எந்தவிதமான பிரசாரத்திற்கும் இடமளிக்கக் கூடாது. ஒரு நாட்டில் வாழும் பல்வேறு சமூகங்களும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ வேண்டும். மனிதகுலம் ஒரே குடும்பமாக மாற வேண்டும். அப்போதுதான் உலகம் ஒரு சொர்க்கபூமியாக விளங்கும்.

வேறுபாடுகள் வளர அனுமதிக்கப்பட்டால், நாடு சிதைவடையும். அணுகுண்டுகள் உலகத்தை சாம்பலாக்கிவிடும் என்று கூறப்படுகிறது. ஆனால் மத வெறியையும் பகையையும் பரப்புபவர்கள், அணுகுண்டுகளைவிட மோசமான தீமையைச் செய்கிறார்கள். அவர்கள் மனித இதயங்களில் உள்ள அன்பையும் கருணையையும் அழிக்கிறார்கள். மனிதகுலத்தைப் பல துண்டுகளாகப் பிரிக்கிறார்கள். இதைவிடப் பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை.

இன்றைய உலகிற்கு மிகவும் தேவைப்படுவது அன்பின் மீட்பும் ஒன்றிணைக்கும் சக்தியுமே ஆகும். அந்த அன்பு தொடர்ந்து விரிவடைந்து, மேலும் மேலும் பலரைத் தழுவிக் கொள்ள வேண்டும்.

தனது மதம், நாடு அல்லது சாதி பற்றிய குறுகிய மனப்பான்மையை விட்டொழித்து, பரந்த நோக்கை வளர்த்துக் கொண்டு, நல்லோரின் நட்பை நாடுவதன் மூலம், ஒருவர் தனது வாழ்க்கையை உயர்ந்ததாக்கவும், அர்த்தமுள்ளதாக்கவும், நிறைவானதாக்கவும் முடியும்.