நல்லூரான் கொடியேற்றம் பார்த்திடுவோம் வாருங்கள் !
இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார் !
வாகரைவாணன் விண்ணேகினார்
கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளி வாகரைவாணன் (சந்தியாப்பிள்ளை அரியரத்தினம்) தனது 85 ஆவது வயதில் ஆகஸ்ட் 10 ஆம் திகதி விண்ணேகினார்.
டிசெம்பர் 22, 1941 ஆம் ஆண்டில் பிறந்த இவர் புனித பத்திரிசியார் கல்லூரியில் (1982 – 1996) ஆசிரியராகச் சேவை அளித்தவர்.
தன்னுடைய 15 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியவர் 42 நூல்களை ஆக்கியளித்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர்.
கவிதை, நாடகம், ஆய்வுக் கட்டுரை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என்று தன் இலக்கியப் பணியை விசாலமாக்கிக் கொண்டவர்.
இலங்கை அரசின் இலக்கிய விருது (சின்னச் சின்னப் பூக்கள்), யாழ் இலக்கியப் பேரவையின் விருதுகள் இரண்டு (அருளாளர் அந்தோனியார் மற்றும் பாலர் தமிழ்ப்பாட்டு ) எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மட்டக்களப்பு (கிழக்கிலங்கைத் தமிழகம்) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
தெய்வமும் மெய்வருத்தமும்: -சங்கர சுப்பிரமணியன்.
ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தின் கீழ் ஒன்பதாவது குறளாக,
"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்"
என்ற குறளை வழங்கியிருக்கிறார் திருவள்ளுவப் பெருமகனார். இப்போது இக்குறள் பற்றி சற்று விரிவாகக் காண்போம். முதலில் இக் குறளில் சொல்லப் பட்டிருக்கும் தெய்வம் என்ற சொல் பற்றி ஆய்வோம். நமக்கும் மேலாக எல்லவற்றையும் இயக்கும் ஒரு ஆற்றல் இருப்பதை எவராலும் மறுக்க இயலாது. இப்போது அந்த ஆற்றல் என்ன என்பதுதான் கேள்வி. அந்ந ஆற்றலால் தான் பிறப்பும் இறப்பும் இரவும் பகலும் பயிர் வளர்வதும் பருவங்கள் மாறுவதும் என இப்படி எல்லாம் நிகழ்கிறது.
இந்த ஆற்றல் வேறு எதுவுமல்ல. அதுவே இயற்கை என்னும் மாபெரும் ஆற்றலாகும். இந்த ஆற்றலானது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. தெய்வம் என்ற சொல்லைப் பாருங்கள். இச்சொல் ஆண் பால் சொல்லாகவோ பெண் பால் சொல்லாகவோ இல்லாமல் தெய்வம் என்ற பொதுவின் பால் சொல்லாக இருந்து உண்மையை உணர்த்துகிறது அல்லவா? அதேபோல் தான் கடவுள் என்ற சொல்லும் பொதுவின் பாலாக நிற்பதை யாராலும் இல்லை என்று சொல்லி மறுக்க இயலாது.
இப்போது உங்களுக்கு நிச்சயமாக ஒரு சந்தேகம் வரக்கூடும். அப்படி என்றால் இறைவன், இறைவி என்றெல்லாம் சொல்கிறோமே அது என்ன தவறா? என்பதே அச்சந்தேகம். நீங்கள் நினைப்பது முற்றிலும் சரியே. இந்த இறைவன் இறைவி என்பதெல்லாம் மனிதன் கண்டுபிடிப்பு . எப்படி தெய்வம், கடவுள் என்று சொல்கிறோமோ அதேபோல் இதையும் இறை என்றே சொல்ல வேண்டும்.
சற்று யோசித்துப் பாருங்கள் நான் சொல்வது சரி என்று உணர்வீர்கள். கடவுளன், கடவுளி(னி) என்றோ தெய்வன் தெய்வி என்றோ சொல்கின்றோமா? இல்லையே. அப்படியிருக்க இறை என்பதை மட்டும் இறைவன் இறைவி என்று நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டு இயற்கை என்னும் மாபெரும் ஆற்றலை ஆணாகவும் பெண்ணாகவும் சொல்வது எப்படி என்று சற்றே யோசியுங்கள். இப்போது தெய்வம் என்று குறளில் சொல்லப் பட்டிருப்பது இயற்கையே என்பது நன்கு புலப்படும்.
கரிகால தேசத்துக் காதலி (கவிதைத் தொகுப்பு) ✍️ பிரபா அன்பு 📚 நூல் நயப்பு - கானா பிரபா
"வாய் இருந்தால்
பதுங்கு குழிகளும்தறப்பாள் கொட்டில்களும்
ஓலமிட்டுக் கதறியிருக்கும்”
ஈழத்துப் படைப்பாளிகள் புனைவுகளை எழுத வேண்டிய தேவை இருக்காது. தாம் வாழ்ந்த வாழ்க்கையின் படிமங்களை அப்படியே கொடுத்தாலே போதும் அதுவொரு கனத்த இலக்கியமாக அமைந்து விடும்.
அங்கே இன்னொரு அம்சமும் தொக்கி நிக்கின்றது. அந்த வாழ்வின் இருப்பு குறித்த பகிர்வுகள் கதைகளாகவோ, கட்டுரைகளாக மட்டுமல்ல, கவிதைகளில் கூடக் கையாளப்படும் சூழலில் அங்கே வரலாறு தேக்கப்படுகிறது. ஒரு சிறு கவிதைக்குள் மிகப் பெரிய அநர்த்தத்தையோ, அந்த இன்னலில் அகப்பட்ட மனிதர்களையோ அடையாளப்படுத்த முடிகிறது.
“கரிகால தேசத்துக் காதலி” என்ற பிரபா அன்பு பகிர்ந்த கவிதைத் தொகுதியும் முன் சொன்ன “வரலாற்றைக் கடத்தி” ஆகவே விளங்கி நின்ற்கின்றது.
இந்தக் கவிதைகளில் இரண்டு பரிமாணங்களில் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
“நானும் காதலித்தேன்
ஆனால் எனக்குள்
பட்டாம்பூச்சி பறக்கவில்லை
எனக்கு முன்பாக
தோட்டாக்களே பறந்தன”
இவ்விதம், தன்னவன் பிரிவின் ஆற்றாமையால் எழுந்த அக உணர்வுப் பகிர்வுகள்.
இரண்டு, தன்னோடு உயிருக்குயிராய் வாழ்ந்திருந்து மடிந்த, களத்தில் நின்ற அந்த வீர மங்கையரின் இழப்பில் முகிழ்த்தவை.
பிரபா அன்பு தான் எடுத்துக் கொள்ளும் களம் குறித்த அச்சொட்டான கவிதைப் படிமம், அந்தச் சூழலின் முரண் நிலை எப்படியிருக்கும் என்பதைப் புரட்டிப் போட்டுப் பார்க்கும் பண்பு இவற்றோடு கவிதைகளைப் படைத்திருக்கிறார்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி அந்தக் களத்தில் நின்ற உறவுகளின் குணாம்சங்களை வைத்தே அவர்களை அடையாளப்படுத்தும் பாங்கில் தான் ஒரு பெரும் வலியை நம்முள் கடத்துகிறார். அந்த நாலைந்து வரிகளாலேயே முகம் தெரியாத அந்த வீர மங்கையருக்கான முகவரியைக் காட்டுகிறார்.
உழைக்கும் கரங்கள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
தி மு கவில் இருந்து எம் ஜி ஆர் நீக்கப் பட்ட பின் அவருடன் சேர்ந்து
பலர் கழகத்தில் இருந்து விலகி எம் ஜி ஆரின் அண்ணா தி மு கவில் இணைந்தார்கள் . அவர்களில் நாஞ்சில் மனோகரன், கோவை செழியன் போன்றோர் குறிப்பிடக் கூடியவர்கள். இவர்களில் ஒருவர் படம் தயாரிக்க மற்றுமொருவர் படத்தின் கதை வசனம் எழுத அவர்களின் தலைவர் கதாநாயகனாக நடிக்க 1976ம் வருடம் உருவான படம் உழைக்கும் கரங்கள்.
நாகலிங்கம் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பது அவரிடம் ஊழியம் செய்யும் ரங்கனுக்கு காலம் கடந்தே தெரிய வருகிறது . ஆனாலும் அவரின் ஊழலை அஞ்சாமல் தட்டிக் கேட்கிறான், அநியாயம் செய்வதை நிறுத்தும் படி எச்சரிக்கிறான் .
இலங்கைச் செய்திகள்
புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ். அரசாங்க அதிபரை சந்தித்தார்
நாடு முழுவதும் 2,500 மில்லியன் ரூபா செலவில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள் ஆரம்பம்
மும்பையில் இருந்து 862 சுற்றுலாப் பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்த சொகுசு கப்பல்!
யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்
மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கின் பங்கை 10 சதவீதமாக உயர்த்த நிர்ணயித்துள்ளோம் - வடக்கு ஆளுநர்!
திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்
புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ். அரசாங்க அதிபரை சந்தித்தார்
14 Aug, 2026 | 06:28 PM
(எம்.நியூட்டன்)
புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சலியா டயஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வெள்ளிக்கிழமை (14) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி மற்றும் 52ஆவது படைப்பிரிவின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
உலகச் செய்திகள்
புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ; “இது மிகுந்த வலியுடையது” - மகன் ஹன்டர் பைடன் கவலை
ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியன்மார்
ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச வணிகப் சேவையை ஆரம்பித்தது
இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலம்!
புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ; “இது மிகுந்த வலியுடையது” - மகன் ஹன்டர் பைடன் கவலை
10 Aug, 2026 | 04:26 PM
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிர நிலைமையில் இருப்பதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் வலி மிகுந்தது. இந்தப் புற்றுநோய் எனது தந்தையை முடக்கிவிட்டிருக்கிறது” என ஜோ பைடனின் மகன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி வகித்தபோதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் விதைப்பையில் பரவிய புற்றுநோய் காரணமாக அவர் அப்போதும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள்
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
06 - 09 -2026 Sun: முற்பகல் 10 மணி: திருக்குறள் மனனப் போட்டிகள் - 2026
சிட்னி
06 - 09 -2026 Sun: பிற்பகல் 1 மணி: துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி 2026
சிட்னி
06 - 12 -2026 Sun: ஆஸ்திரேலிய மருத்துவ உதவி அறக்கட்டளை. (AMAF)🌺 முத்தமிழ் மாலை – 2026 🌺
பாரதத்தின் பெருமையும் தேசிய ஒற்றுமையும்
பலர் தங்களது செயல்களால் பாரதத்தின் நற்பெயரையும் புகழையும் குலைத்து வருகின்றனர். இது நாட்டிற்குச் செய்யப்படும் துரோகத்திற்குச் சமமானதாகும். தனது தாய்நாட்டைப் பற்றியும் அதன் நற்பெயரைப் பற்றியும் பெருமை கொள்ளாதவன், உயிரற்ற உடலுக்குச் சமமானவன். எனவே, ஒவ்வொருவரும் நாட்டின் மானத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டும்.
அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இதுவே வேதங்கள் நமக்குக் கூறும் உயர்ந்த செய்தியாகும்: “நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ்வோம்; இணைந்து செயல்படுவோம்.”
இந்த ஒற்றுமை உணர்வு பாரத மக்களிடையே நிலைத்திருந்தால், நமது நாடு தனது முழுப் பெருமையுடனும் மகிமையுடனும் உலகில் ஒளிரும். பாரதத்தின் மகத்துவத்தையும் அதன் உயர்ந்த பண்பாட்டையும் மக்கள் மறந்துவிட்டதால்தான், இன்று நமது நாடு பல்வேறு பிரச்சினைகளையும் சிரமங்களையும் எதிர்கொண்டு வருகிறது.
மக்கள் ஒருமித்த மனதுடன் செயல்பட்டால், பாரதத்தில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. அதற்குத் தேவையானவை உறுதியும் ஒற்றுமையும் ஆகும். சாதி, சமயம் அல்லது மொழி போன்ற வேறுபாடுகளுக்கு பாரத மக்கள் இடமளிக்கக் கூடாது. மாறாக, மனிதகுலம் அனைத்தும் ஒரே குடும்பம் என்பதை உணர வேண்டும்.
எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய உயரிய கருத்து:
“மனிதகுலமே ஒரே சாதி; அன்பே ஒரே மதம்; இதயத்தின் மொழியே உண்மையான மொழி.”
இந்த மூன்று உயர்ந்த கொள்கைகளின் அடிப்படையில் நமது செயல்களை அமைத்துக் கொண்டால், நாடு அளவற்ற முன்னேற்றத்தை அடைய முடியும். எனவே, இந்த உயரிய இலட்சியங்களை நம் இதயங்களில் நிலைநிறுத்தி, ஒவ்வொருவரும் தமது கடமைகளை உணர்வுடனும் பொறுப்புடனும் நிறைவேற்றுவோம்.
அனைவரிலும் ஒளிரும் ஆத்மாவை உணர்வோம்
மனிதன் மரணத்திற்கு உட்பட்டவன். அவன் மண்ணிலிருந்து தோன்றியவன்; இறுதியில் மீண்டும் மண்ணோடு கலந்துவிடுகிறான். ஆனால், அவனுள் அழிவற்ற தெய்வீக ஜோதியின் ஒரு சிறு பொறியாக ஆத்மா ஒளிர்கிறது.
இது வேதாந்திகள் மனிதனைப் புகழ்வதற்காக உருவாக்கிய ஒரு கருத்தோ அல்லது வெறும் சொல்லாடலோ அல்ல. ஆத்மாவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரே ஆதாரமாகவும், அவற்றைத் தாங்கி நிலைநிறுத்தும் சக்தியாகவும் உள்ளது. ஆத்மாவே இறைவன். தனிப்பட்டதாகத் தோன்றுவது கூட அந்தப் பரம்பொருளின் வெளிப்பாடே ஆகும்.
எனவே, ஒவ்வொரு உயிரினத்திலும், ஒவ்வொரு மனிதனிலும், உங்கள் சகோதரனையும் இறைவனின் குழந்தையையும் காண வேண்டும். சமூக அந்தஸ்து, நிறம், வர்க்கம், பிறப்பிடம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் உருவாகும் அனைத்து குறுகிய எண்ணங்களையும் பாரபட்சங்களையும் விட்டொழிக்க வேண்டும்.
அன்பின் மனப்பான்மையுடன் சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சாய் எப்போதும் எச்சரித்தும் வழிகாட்டியும் வருகிறார்.
இயற்கையிலிருந்து மனிதன் பெறும் வளங்களையும் செல்வங்களையும் சமமாகவோ அல்லது சமமற்ற முறையிலோ பிரித்துக் கொள்வதற்கான திட்டங்களை மட்டும் அமைத்துக்கொள்வதால் ஒரு சமுதாயம் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முடியாது. சமூகத்தின் உண்மையான உயர்ந்த நோக்கம், அதன் ஒவ்வொரு செயல், தீர்மானம் மற்றும் நடைமுறையிலும் அனைத்திலும் நிறைந்திருக்கும் ஒரே உலகளாவிய ஆத்மாவைப் பற்றிய ஞானத்தை நிலைநிறுத்துவதும் வளர்ப்பதுமாக இருக்க வேண்டும். அந்த ஞானம் அளிக்கும் ஆனந்தமே சமூக வாழ்வின் உண்மையான நிறைவு ஆகும்.
“ஆத்மாவுக்கு மரணம் இல்லை; எனவே உடல்களை அழித்துவிடுங்கள்” என்று சாய் கூறுவதில்லை. சாய் போர்களை ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை. மாறாக, ஆத்மாவையே உங்களுக்கு மிக நெருக்கமான உறவாக உணரும்படி அவர் வழிகாட்டுகிறார். அது உங்கள் குடும்ப உறுப்பினர்களையும், இரத்த உறவுகளையும், உங்களுக்கு மிகவும் प्रियமான சந்ததியினரையும் விட நெருக்கமான உறவாகும்.
இந்த உண்மையை நாம் உணர்ந்துவிட்டால், அந்த ஆத்ம உறவைப் பாதுகாத்து நிலைநிறுத்தும் நேர்மையான மற்றும் தர்மமான பாதையிலிருந்து நாம் ஒருபோதும் விலகமாட்டோம்.
அனைவரும் ஒரே ஆத்மாவின் வெளிப்பாடுகள்
ஆகவே, மனிதர்களுக்கிடையே வேறுபாடுகளைக் காணாமல், ஒவ்வொருவரிலும் உறையும் தெய்வீக ஆத்மாவை உணர்ந்து, அனைவரிடமும் அன்பு, கருணை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் நடந்து கொள்வோம். அனைவரும் ஒரே பரம்பொருளின் பிள்ளைகள் என்ற உணர்வே உண்மையான மனிதநேயத்திற்கும் நிலையான சமூக ஒற்றுமைக்கும் அடித்தளமாகும்.
மனித வாழ்வின் நான்கு இலக்குகளும் “நான்கு F” வழிகாட்டுதல்களும்
மனிதன் தனது கவனத்தில் உறுதியாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய நான்கு “F” வழிகாட்டுதல்கள் உள்ளன:
- Follow the Master – குருவைப் பின்பற்று
- Face the Devil – தீயதை எதிர்கொள்
- Fight to the End – இறுதிவரை போராடு
- Finish at the Goal – இலக்கை அடைந்து நிறைவு செய்
1. குருவைப் பின்பற்று – தர்மத்தைப் பின்பற்று
“Follow the Master” என்பதன் பொருள், தர்மத்தைப் பின்பற்றி வாழ்வது ஆகும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நீதி, நேர்மை, கடமை மற்றும் நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
2. தீயதை எதிர்கொள் – பொருளாதார வாழ்வில் வரும் சோதனைகளை வெல்
“Face the Devil” என்பதன் பொருள், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தையும் வசதிகளையும் ஈட்ட முயற்சிக்கும்போது ஏற்படும் ஆசைகள், சோதனைகள் மற்றும் தவறான கவர்ச்சிகளை எதிர்கொண்டு வெல்வதாகும். அர்த்தத்தை ஈட்டுவதிலும் தர்ம நெறியை விட்டு விலகாமல் இருக்க வேண்டும்.
3. இறுதிவரை போராடு – உள்ளார்ந்த பகைவர்களை வெல்
“Fight to the End” என்பதன் பொருள், இடைவிடாமல் முயற்சி செய்து இறுதிவரை போராடுவதாகும். குறிப்பாக காமம் முதலான மனிதனின் ஆறு உட்பகைவர்களான காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாட்சரியம் ஆகியவற்றை வெல்ல தொடர்ந்து போராட வேண்டும்.
4. இலக்கை அடைந்து நிறைவு செய் – மோட்சத்தை அடை
“Finish at the Goal” என்பதன் பொருள், இறுதி இலக்கான மோட்சத்தை அடையும் வரை பயணத்தை நிறுத்தக்கூடாது என்பதாகும். அறியாமை மற்றும் மாயையிலிருந்து விடுதலை பெற்று, பரம உண்மையை உணர்வதே மனித வாழ்வின் உயர்ந்த இலக்காகும்.
இந்த நான்கு “F” வழிகாட்டுதல்களும் மனித வாழ்வின் நான்கு முக்கிய இலக்குகளான புருஷார்த்தங்கள் — தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் — ஆகியவற்றை அடைவதற்கான அடிப்படை வழிமுறைகளாகும்.
“நீங்கள் எங்கு இருந்தாலும், நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்களைப் பாதுகாத்து வழிநடத்துவேன். முன்னேறிச் செல்லுங்கள்; அஞ்சாதீர்கள்!”
என்ற இந்த அருள்வாக்கை மனதில் கொண்டு, தர்மத்தின் பாதையில் உறுதியுடன் முன்னேறி, வாழ்க்கையின் உயர்ந்த இலக்கை நோக்கிப் பயணிப்போம்.
மனிதனின் சந்தேகங்களும் தன்னறிவின் அவசியமும்
குளிர்ச்சி என்பது நீரின் இயல்பான பண்பாகும். நீரில் குளிர்ச்சி இல்லையெனில், அதில் ஏதோ அசாதாரணம் இருப்பதாக நாம் கருதுகிறோம். பலர் பத்ரிநாத் போன்ற புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றிருக்கலாம். அங்கு பிரம்மகுண்டத்திற்கு அருகில் ஒரு வெந்நீர் ஊற்று இருப்பதை அவர்கள் நினைவுகூரலாம். அலகாநந்தா நதியில் பெருமளவு குளிர்ந்த நீர் ஓடிக்கொண்டிருந்தாலும், அந்த நீர் ஏன் குளிர்ச்சியாக இருக்கிறது என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், ஒரு இடத்தில் வெந்நீர் ஊற்று இருப்பதைக் கண்டால், “இங்கு எப்படி வெந்நீர் வருகிறது?” என்று ஆச்சரியத்துடன் கேள்வி கேட்கிறோம்.
எப்போது ஏதாவது ஒன்று இயல்பான நிலைக்கு மாறாகவோ அல்லது அசாதாரணமாகவோ தோன்றுகிறதோ, அப்போது நமது மனதில் பலவிதமான சந்தேகங்கள் எழுகின்றன. அதுபோலவே, மனிதன் ஏன் இவ்வளவு சந்தேகங்களின் தொகுப்பாக மாறுகிறான்? இதற்கான முக்கியக் காரணம், மனிதன் இயற்கையாகவும் உண்மையாகவும் எவ்வாறு வாழ வேண்டுமோ, அவ்வாறு தனது வாழ்க்கையை நடத்தாமல் இருப்பதுதான்.
ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ, அவ்வாறு அவன் நடந்து கொள்வதில்லை. தனக்குள் இருக்கும் உண்மையான ஆத்மாவின் பொருளையும் இயல்பையும் அவன் அறிந்துகொள்ளாததால், மனிதனாக வாழ வேண்டிய முறையில் அவனால் வாழ முடியவில்லை. இதுவே அவனுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
எனவே, மனிதன் தன்னுள் இருக்கும் உண்மையை ஆராய்ந்து அறிய வேண்டும். பிரம்மத்தின் தத்துவத்தைப் பற்றி விசாரித்து, அதன் உண்மையான தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உண்மையான உறவிற்கும், ஒற்றுமைக்கும், பரஸ்பரப் புரிதலுக்கும் அடிப்படையான காரணம் இந்தப் பிரம்மத் தத்துவத்தை உணர்வதே ஆகும்.
ஆகவே, வெளியில் காணப்படும் விஷயங்களைப் பற்றி மட்டுமே சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புவதற்குப் பதிலாக, மனிதன் முதலில் தன்னையே ஆராய்ந்து அறிய வேண்டும். தன்னுள் உறையும் ஆத்மாவையும், அனைத்திலும் நிறைந்திருக்கும் பிரம்மத்தையும் உணரும்போது, சந்தேகங்கள் விலகி, வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தெளிவாகும்.
இறைநெறியின் உண்மையான பொருளும் இயற்கையில் இறைவனின் பிரதிபலிப்பும்
இந்த நாட்டில் வாழ்ந்து பயணிப்பவர்கள், கோயில்களில் பெருமளவில் கூடும் மக்களையும், இறைவனின் மகிமையை மிகுந்த உற்சாகத்துடன் பாடும் பஜனை மற்றும் நாமசங்கீர்த்தனங்களில் கலந்துகொள்பவர்களையும், இறைவனின் வழிகளைப் போதித்து வழிகாட்டும் மதிப்பிற்குரிய ஆன்மிகப் பெருமக்களைச் சூழ்ந்து நிற்கும் பக்தர்களையும் காண்கிறார்கள். இதைக் கண்டு, இது இறைவனை அடையும் புனிதப் பாதையில் நடக்கும் நல்லொழுக்கம் மிக்க மக்களால் நிறைந்த ஒரு புனிதமான நாடு என்று அவர்கள் எண்ணலாம்.
ஆனால், இவற்றில் பல வெறும் வெளிப்புறச் சடங்குகளாகவும், உள்ளார்ந்த உணர்வற்ற செயல்களாகவும், பக்தியை வெளிக்காட்டும் நிகழ்வுகளாகவும் மட்டுமே அமைந்துவிடுகின்றன. சிலருக்கு யாத்திரைகள் கூட ஆன்மிகப் பயணமாக இல்லாமல், சுற்றுலா அல்லது பொழுதுபோக்குப் பயணமாக மாறிவிடுகின்றன. அவர்கள் தங்களுடன் ஒட்டிக்கொண்டுள்ள இறைநெறிக்கு முரணான பழக்கங்களை விட்டொழிப்பதைவிட, கோயில்களிலும் சந்தைகளிலும் பொருட்களை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இறைவனைப் பற்றிய அடிப்படை உண்மையை அவர்கள் உணராமல் இருக்கலாம். மேலும், கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் சுயபயிற்சி நிறைந்த கடினமான பாதையின் மூலம் அந்த உணர்வைப் பெறுவதற்கும் அவர்கள் போதிய முயற்சி மேற்கொள்வதில்லை. தெய்வீகத் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ளாமல் மேற்கொள்ளப்படும் விரதங்கள், உபவாசங்கள் மற்றும் இரவு விழிப்புகள் அனைத்தும் வெறும் பின்பற்றுதலாகவும், வழக்கமான இயந்திரத்தனமான செயல்களாகவும் மாறிவிடுகின்றன. அவை காலத்தையும் சக்தியையும் வீணாக்கும் செயல்களாக அமைந்துவிடும்.
எனவே, இயற்கையே இறைவனின் பிரதிபலிப்பு என்பதை உங்கள் மனதில் ஆழமாகப் பதித்துக்கொள்ள வேண்டும். இறைவனே உயிராக இருப்பதால் இயற்கை உயிர்ப்புடன் காணப்படுகிறது. இறைவன் நித்தியமானவர் என்பதால் இயற்கையும் நிலைத்திருப்பதாகத் தோன்றுகிறது. உண்மையில், இயற்கை என்பது இறைவனின் பிரதிபிம்பமே ஆகும்.
செயலற்ற இயற்கைக்கு ஒழுங்கையும், நோக்கத்தையும், செயலாற்றும் சக்தியையும் அளிப்பவர் இறைவனே. அந்த உந்துசக்தியான இறைவன் இல்லையெனில், இயற்கை உதவியற்றதாகவும் சக்தியற்றதாகவும் இருக்கும். ஆகவே, வெளிப்புறச் சடங்குகளில் மட்டும் ஈடுபடாமல், இறைவனின் தத்துவத்தை உணர்ந்து, ஒழுக்கம் மற்றும் உண்மையான பக்தியுடன் வாழ்வதே மனித வாழ்வின் உயர்ந்த நோக்கமாகும்.


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

.png)
.png)