நல்வினை தீவினை வரமாய் ஆக்கினார் !













 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்  ….. அவுஸ்திரேலியா 




செய்த வினையும் செய்கின்ற வினையும்
எய்த அம்பாய் எமைநோக்கி வந்துவிடும்
நல்ல வினைகளை நாமாற்றி நின்றால்
எந்த அம்பும் எமையணுகா நின்றுடுமே

நல்வினையும் பிறவிதரும் தீவினையும் பிறவிதரும்
பிறவிதரும் பெரும்பேறு அனைவர்க்கும் வரமாகும்
வரமாகும் பெரும்பேற்றை சாபமாய் ஆக்குவதும்
வரமாக ஆக்குவதும் மண்பிறந்தார் வாழ்வாகும்

மனிதராய் பிறந்தார்கள் புனிதராய் மலர்ந்தார்கள்
புத்தராய் யேசுவாய் நபிகளாய் எழுந்தார்கள்
நால்வராய் எழுந்தார்கள் நல்லவழி தேர்ந்தார்கள்
பக்குவமாய் வாழ்ந்தார்கள் பற்றற்று இருந்தார்கள்

பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

 












 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண்  … அவுஸ்திரேலியா



பாரதி வந்தார் பற்பல பாடினார்
பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
கன்னித் தமிழின் காவலன் ஆனார்

பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார் 
நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
நாடே அவரின் உயிராய் இருந்தது

பாரதி காலம் கவிமணி இருந்தார்
நாமக் கல்லின் நற்கவி இருந்தார் 
எட்டய புரத்து பாரதி மூச்சை
சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்

கவிதை..."என்னில் என்னைத் தேடுகிறேன்"... மெல்போர்ன் அறவேந்தன்

 




















சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 4…..சங்கர சுப்பிரமணியன்.


முன்பே ஏற்பாடு செய்த வாகனத்தை ரத்து செய்து விமான நிலையத்தில் வாடகை வாகனத்தை பிடித்ததால் பத்தாயிரம் யென் அதிகம் கொடுக்க வேண்டியிருந்தது. விமான நிலயத்திலிருந்து ஐம்பது நிமிடப் பயணத்துக்குப் பின் தங்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். பன்னிரண்டாவது மாடியில் நாங்கள் தங்கும் அறை இருந்தது. மாலை ஆறு மணி இருக்கும்.

ஓட்டலின் அருகிலேயே சாகாய்சூஸி ஹொன்மாச்சி சுரங்கப்பாதை ரயில் நிலையமும் பத்துநிமிட நடை தூரத்தில் ஹொம்மாச்சி ரயில் நிலையமும் இருப்பதை ஓட்டலை பதிவு செய்யுமுன்பே தெரிந்து வைத்திருந்தேன். தவிர அருகிலேயே செவன்-லெவன் மற்றும் பேமிலி மார்ட் இருப்பதையும் உறுதி செய்தபடியே ஒட்டலுக்கு திரும்பினோம்.

ஜப்பானியர்கள் அதிகமாக தொடர் வண்டியைத்தான் பயன் படுத்துகிறார்கள. ஒரு தொடர்வண்டியை விட்டால் அடுத்தது என்று தொடர்ந்து வண்டிகள் வந்து கொண்டிருப்பதாலும் நேரம் தவறாமையும் காரணம் என்று நினைக்கிறது. உச்ச நேரங்களில் தொடர்வண்டிகள் நிரம்பி வழிவதுடன் அடுத்தடுத்து வந்தகொண்டே இருக்கின்றன.

ரயில் வரும் நேரத்தை வைத்து கடிகார முள்ளை  ஜப்பானில் திருப்பி

வைத்துக் கொள்ளலாம் என்பதை கேள்விப்பட்டிருந்த
நான் நேரில் உணர்ந்தேன். மறுநாள் கியோட்டோ போக முடிவெடுத்திருந்தோம். கியோட்டோ நகரம் ஒருகாலத்தில் ஜப்பானின் தலைநகராக இருந்திருக்கிறது. ஜப்பான் நகரங்களில் கியோட்டோ ஒன்பதாவது பெரிய நகரமாகும்.

நாங்கள் தங்கிய ஒசாகா ஜப்பானின் மூன்றாவது பெரிய நகரமாகும். கியோட்டோ செல்லக் காரணம் ப்யூசிமி இனாரி டய்ஷா என்ற புகழ்பெற்ற கோவில்தான். இக்கோவில்
நெல் அறுவடை, வியாபாரம் மற்றும் வளமான வாழ்க்கை போன்றவற்றில் முன்னேற்றம் காண வேண்டிக் கொள்ளும் இடமாகும். இருப்பினும்
இக்கோவில் நெல் அறுவடைக்கே முன்னுரிமை கொடுத்து வணங்கப்பட்டது.

பின் தொழில் மற்றும் வாழ்வின் முன்னேற்றத்துக்காகவும் வேண்டும் இடமாக மாறியது. இவ்வாறு வேண்டியவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் தங்களது காணிக்கையை கொடுக்கிறார்கள். நாம் இங்கு வைரக்கிரீடம், தங்கவேல், வைரவாள், எடைக்கு எடை பொருள் கொடுப்பதுபோல் அவர்களும் கொடுக்கிறார்கள். என்ன மாதிரி காணிக்கை தெரியுமா?

Michael திரைப் பார்வை – கானா பிரபா

 பொப் இசையின் மன்னன் என்று கோலோச்சிய மைக்கேல்


ஜாக்சனின் சுயவரலாற்றுத் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.


ஒவ்வொரு மனிதனும் வாழும் உலகம் வேறு, தான் வாழும் உலகம் வேறு. மைக்கேல் ஜாக்சனின் வாழ்வும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதைக் காட்டுகிறது அவரது சுயவரலாறு தாங்கிய Michael வெளி வந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் ஒரு இசைக் கலைஞன் தன் முன் எதிர்ப்படும் சவால்களை எல்லாம் முட்டி மோதிக் கடந்து சாதிப்பது போல ஏராளம் படங்களைக் கண்டிருப்போம்.
இங்கே நம் முன்னே வாழ்ந்து மடிந்த, இசையுலக சாம்ராஜ்யத்தில் கோலோச்சிய நாயகனின் கதையாக அது விரிகின்றது.

இந்திய சினிமாவுக்கே உரித்தான நாயக அறிமுகம் கூட இங்கே நிகழ்த்தப்படுகிறது, மெல்ல மெல்ல அது அவனின் பால்யகாலம் நோக்கி நகர்த்தப்படுகிறது,

மைக்கேல் ஜாக்சன் என்ற இசைக் கலைஞனைத் தெரிந்த அளவுக்கு,

அவர் வாழத்தலைப்பட்ட உலகம், தான் வரித்துக் கொண்ட உலகம் எவ்வளவு குழந்தைத்தனமானது என்பதை ஆரம்பக் காட்சியில் இருந்து அவரின் புகழ் நிலை தொட்ட பருவம் வரை காட்டப்படுகிறது.

சார்லி சாப்ளின் படங்கள், Peter Pan கதைப் புத்தகங்கள் என்று சின்னச் சின்ன ஆசைகளோடு வாழும் அந்த இசைப் பேரரசனுக்கு செல்லப் பிராணிகளாக, குரங்குக் குட்டி, மலைப்பாம்பு, ஒட்டகச் சிவிங்கி, ஒட்டகம் என்று காட்டப்படும் போது நெகிழ்வும், சிரிப்பும் எழுகிறது. அதே சமயம் புகழ் என்ற மாய உலகில் அந்தக் கலைஞனின் அவதியை இன்னொரு பக்கம் காட்ட முனைகிறது திரைப்படம்.


மைக்கேல் ஜாக்சனின் இன்னொரு முகம் மனித நேயம், அது படத்தில் சில காட்சிகளின் வழியே வெளிப்படுகின்றது.

இந்த இடத்தில் இன்னொரு பக்கம் போய் விட்டு வருவோம்.

செல்வம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகர்களுக்குள் வி .கே .


ராமசாமியும் ஒருவர். 1926ம் வருடம் பிறந்த அவருக்கு இவ்வாண்டு நூற்றாண்டாகும். பால வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, தனது பத்தொன்பதாவது வயதிலேயே அறுபது வயதுக்காரராக நாம் இருவர் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர். நடிப்பதோடு நின்று விடாது படங்களையும் தயாரித்த வி .கே .ஆர் .1966ம் ஆண்டு செல்வம் தேடும் நோக்கோடு செல்வம் படத்தை தயாரித்தார் . 


 சிவாஜியுடன் நெருக்கமாக இருந்த வி கே ஆர் சொந்த படங்கள் எடுத்து அதனால் கையை சுட்டுக் கொண்ட நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார். இதனை தன் நண்பன் சிவாஜியிடம் அவர் சொல்லாத போதும் அவர் நிலை அறிந்த சிவாஜி அவருக்கு பொருளாதார மீட்சி கொடுக்கும் விதமாக துரித கதியில் ஒரு படம் நடித்து கொடுக்க முன் வந்தார். அந்தப் படம் தான் செல்வம். 

 பிரபல கதாசிரியராக பி .எஸ் . ராமையா எழுதிய கதை செல்வம்

என்று படமானது. சோதிடத்தில் தீவிரமான நம்பிக்கை வைத்திருக்கும் பணக்காரத் தாய் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று சோதிடர்கள் சொன்ன காரணத்தால் சிறு வயது முதல் காதலில் மூழ்கியிருந்த மகன் செல்வத்தின் காதலை நிராகரிக்கிறாள். ஆனால் விடாப் பிடியாக செல்வம் காதலியை திருமணம் செய்து கொள்கிறான். திருமணம் நடக்கும் வரை துணிந்து செயற்பட்டவன் அதன் பின் எங்கே தான் ஜாதகப் பலன் காரணமாக இறந்து விடுவேனோ என்று அஞ்சுகிறான். சோதிடம் பலித்ததா அல்லது காதல் ஜெயித்ததா என்பதே படத்தின் மீதி பகுதி. 

 சீரியஸான கதையை ஒரளவு நகைச்சுவை கலந்து படமாக்கியிருந்தார்கள். இவ்வளவுக்கும் படத்தில் முழு நேர காமெடியன் என்று யாருமில்லை. நாகேஷ் கூட ஒரு காட்சியில் மட்டும் வருகிறார். இதனால் தானோ என்னவோ சீரியஸ் நடிகர்களான சிவாஜி, ரங்காராவ் . நாகையா , சகஸ்ரநாமம் ஆகியோர் போகிற போக்கில் காமெடி செய்கிறார்கள். 

மனதை சுத்தப்படுத்துங்கள்

 பிறப்பு பிறப்பாக உருவாகி வந்த அனைத்து மிருகத்தனமான மற்றும் மூலவாசனையான உந்துதல்களிலிருந்து உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். இல்லையெனில், மோர் வைத்த பாத்திரத்தில் பாலை ஊற்றினால் அது விரைவில் புளிப்பதுபோல், சத்தியம், அழகு மற்றும் நன்மை போன்ற உயர்ந்த அனுபவங்கள் அனைத்தும் அறிய முடியாத அளவுக்கு கெடிந்து விடும்.

இந்த கடமையை உங்களிடமே தள்ளிப்போடாதீர்கள், குறிப்பாக இப்போது, என்னுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கும் இந்த நேரத்தில். நான் எதிர்பார்ப்பதை நீங்கள் எனக்கு வழங்குவதில்லை; அதற்குப் பதிலாக தகுதியற்ற மற்றும் அசுத்தமானவற்றை கொண்டு வருகிறீர்கள். உங்களுக்கு அருகிலேயே தீர்வு இருக்கும்போதும், நீங்கள் இவ்வாறு கலங்கியதும் கவலையுடனும் இருப்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் காண்கிறேன்.

உங்கள் தேவைகளை குறைக்குங்கள்; உங்கள் ஆசைகளைச் சுருக்குங்கள். இவை போன்ற பொருளாதாரச் சிறுபொருட்கள் எல்லாம் நிலையற்றவை. மரணம் உங்களிடமிருந்து எதிர்ப்புத் திறனைப் பறித்தபோது, உங்கள் உறவினர்கள் உங்கள் மூக்குத்தியை எடுத்துவிடுவார்கள்; அவசரத்தில் அதை எடுக்கும்போது மூக்கையே வெட்டிவிடக்கூடும்!

நீங்கள் ஆசை மீது ஆசையைச் சேர்த்துக் கொண்டே சென்றால், அழைப்பு வரும் வேளையில் மகிழ்ச்சியுடன் பிரிவது சாத்தியமில்லை. அதற்கு பதிலாக, நற்குணங்களில் செழிக்கவும், சேவை உணர்வில் வளமாகவும், உயர்ந்த சக்திக்கான பக்தியில் ஆழமாகவும் இருங்கள். அதுவே என்னை மகிழ்விக்கிறது; அதுவே உங்களை காக்கிறது!

இறைவனை அணையும் மூன்று அணுகுமுறைகள்

 இறைவனை அணையும் வழிகளில் மூன்று விதமான அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று கழுகைப் போன்றது. அது பேராசையுடனும் திடீரெனவும் இலக்கை நோக்கி பாய்கிறது; ஆனால் அதன் அதீத வேகமும் தாக்கமும் காரணமாக, அது விரும்பிய பொருளை அடையத் தவறுகிறது.

இரண்டாவது குரங்கைப் போன்றது. அது இங்கும் அங்கும் தாவி, ஒரு பழத்திலிருந்து மற்றொரு பழத்துக்கு மாறிக்கொண்டே இருக்கும்; எந்தப் பழம் இனிமையானது என்று முடிவு செய்ய இயலாமல் திணறுகிறது.

மூன்றாவது எறும்பைப் போன்றது. அது மெதுவாக இருந்தாலும் உறுதியுடன், தன்னால் விரும்பத்தக்கது என்று தீர்மானித்த இலக்கை நோக்கி நகர்கிறது. எறும்பு பழத்தை கடுமையாகத் தாக்கி அதை கீழே விழச் செய்யாது; அது காணும் எல்லா பழங்களையும் பறிக்க முயலாது; தன்னால் எடுத்துக் கொண்டு உட்கொள்ள முடிந்த அளவையே எடுத்துக் கொள்கிறது, அதற்கு மேல் அல்ல.

இந்த பூமியில் வாழ்வதற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட காலத்தை, வீண் ஆடம்பரங்களிலும் கற்பனையான ஆசைகளிலும் வீணாக்க வேண்டாம்; அவை எப்போதும் உங்களை வெளிப்புற உலகிலேயே வைத்திருக்கின்றன. நீங்கள் எப்போது உங்களுடைய உள்ளத்தின் அமைதிக்கும் சாந்தத்திற்கும் உள்ளே செல்வீர்கள்?

சில நேரங்களில் தனிமையிலும் மௌனத்திலும் தங்குங்கள்; அவற்றிலிருந்து மட்டுமே கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவிக்குங்கள்.

இலங்கைச் செய்திகள்

 திறைசேரி நிதி மோசடி: உண்மையை மறைக்கின்றதா நிதி அமைச்சு? - ஹர்ஷ டி சில்வா கடும் கண்டனம்

திறைசேரியின் கொடுக்கல் வாங்கலில் இணையத்திருட்டு; விசாரணைகளை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவு - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

கடன் கொடுப்பனவு மோசடி குறித்து எமது அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அதிகாரிகள் விசாரணை - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தாம் தயாரிக்கும் ஆவணத்தின் அடிப்படையிலேயே அரசுடன் பேச்சுவார்த்தை - தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை

வடக்கு, கிழக்கு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது - இளங்குமரன் 


 திறைசேரி நிதி மோசடி: உண்மையை மறைக்கின்றதா நிதி அமைச்சு? - ஹர்ஷ டி சில்வா கடும் கண்டனம்

23 Apr, 2026 | 07:13 PM

(எம்.மனோசித்ரா)

இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணம் இணையவழி ஊடுருவல் மூலம் திருடப்பட்டுள்ளமை மற்றும் அது குறித்து நிதி அமைச்சு மௌனம் காப்பது நாட்டின் நிதிப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடன் வழங்கியவர்களுக்கு ஐந்து முறை பணம் அனுப்பியும் அது போய்ச் சேராத நிலையில், நாடு 'தொழில்நுட்பக் கடன் மீறல்' நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள அவர், மார்ச் மாதமே இந்த மோசடி குறித்து குழு நியமிக்கப்பட்டிருந்தும், இவ்வளவு காலம் இந்த விவகாரம் பாராளுமன்றத்திற்கு மறைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகச் செய்திகள்

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

அமெரிக்க கடற்படைச் செயலாளர் திடீர் பதவி விலகல்

விமானக் கட்டணங்கள் 24 சதவீதம் அதிகரிப்பு

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 08 பெண்களை விடுவிக்குமாறு ஈரானுக்கு ட்ரம்ப் வலியுறுத்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் : வாக்குப்பதிவில் புதிய சாதனை

அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் விருத்தில் துப்பாக்கிச் சூடு ; ட்ரம்ப் பாதுகாப்பாக வெளியேற்றம் 


இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

Published By: Vishnu

24 Apr, 2026 | 05:41 AM

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

வியாழக்கிழமை (23) அன்று அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும் அமெரிக்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு நூல்களின் வெளயீட்டுவிழா 03.05.2026 மாலை 4 மணி


 



பாண்டவர்கள் – இறைவன் மீதான நம்பிக்கையின் மகிமை

 பாண்டவர்கள் தங்களுடைய அனைத்து சோதனைகளையும் துன்பங்களையும் இறைவன் மீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையால் வெற்றிகரமாக கடந்து வந்தார்கள். பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜா, தனது மனதை எப்போதும் கிருஷ்ணரின் திருவடிகளில் நிலைநிறுத்தியிருந்தார். அவர் கிருஷ்ணரிடம் கொண்டிருந்த ஒருமைப்பாட்டு, எளிமையான பக்திக்காக அறியப்பட்டார்.

வனவாசத்தில் பலவிதமான துன்பங்களை அனுபவித்தபோதும், அவர் எப்போதும் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன்களான உபபாண்டவர்கள் அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டபோதும் கூட, கிருஷ்ணர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவர் துக்கத்தில் மூழ்கவில்லை.

பின்னர் ஒரு சக்திவாய்ந்த அரசராக ஆட்சி செய்தபோதும், அவர் அதனால் அதிக மகிழ்ச்சியடையவில்லை; அதேபோல் கடுமையான துன்பங்களாலும் மனமுடைந்து போகவில்லை. பாண்டவர்களுக்கு, இறைவன் முதலில், உலகம் அடுத்ததாக, தனிப்பட்ட நலன் கடைசியாக இருந்தது. “முதல் இறைவன், அடுத்து உலகம், கடைசியில் ‘நான்’” என்பதே அவர்களின் வாழ்வியல் கொள்கை.

ஆனால் கௌரவர்கள் முற்றிலும் மாறுபட்ட முன்னுரிமைகளை கொண்டிருந்தனர். “முதல் ‘நான்’, அடுத்து உலகம், கடைசியில் இறைவன்” என்ற எண்ணத்தால் அவர்கள் அனைத்தையும் இழந்தார்கள்.

பாண்டவர்கள் எப்போதும் இறைவனை முன்னிலையில் வைத்திருந்ததால், அவர்கள் தங்கள் அனைத்து முயற்சிகளிலும் இறுதியில் வெற்றி பெற்றனர்.

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி 2026

 👉 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, வியாழக்கிழமை அன்று ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி வருகிறது

🛕 முக்கியத்துவம் (Significance)

  • இது பெருமாள் (விஷ்ணு) அவர்களின் நரசிம்ம அவதாரம் எடுத்த தினம்
  • பக்தன் பிரஹ்லாதனை காப்பாற்றி, அசுரன் ஹிரண்யகசிபுவை அழித்த தினம்
  • தீமையின் மீது நன்மை வென்ற தினம்
  • பகவான் விஷ்ணு உலகில் தீமையை அழித்து தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக தசாவதாரங்களில் (பத்து அவதாரங்கள்) அவதரித்தவர் என அறியப்படுகிறார். அவற்றில் நரசிம்ம அவதாரம் நான்காவது அவதாரமாகும். இந்த அவதாரத்தில், பகவான் விஷ்ணு அரை மனிதன் – அரை சிங்கம் ஆகிய உருவில் தோன்றி, தனது பரம பக்தனான பிரஹ்லாதனை காப்பாற்றியும், அசுரனான ஹிரண்யகசிபுவின் கொடுமையிலிருந்து உலகத்தை விடுவித்தும் அருளினார்.

    ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி 2026, ஏப்ரல் 30, வியாழக்கிழமை அன்று SVT இல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காலை 10.00 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.

    ஓம் ஸ்ரீ நரசிம்ஹாய நமஹ!
    ஓம் ஸ்ரீ பகவதே வாசுதேவாய நமஹ!







சிட்னியில் சித்திரைத் திருவிழா 03.05.2026

 .