தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும் !
சமநிலை வாழ்வின் ஆணிவேர் ஆகும்
சமநிலை அற்றார் துணிவினை இழப்பார்
சமநிலை பேணுவோம் சகலதும் சிறக்கும்
சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர்- 12…..சங்கர சுப்பிரமணியன்.
இப்படி ஆன்மீக குளியலிலே இவ்வளவு சந்தேகங்கள் இருக்கும்படி
நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படும் முட்டை சாப்பிடுவதால் ஆயுள் கூடுமென்று வயிற்றுப் பிரச்சனைகளையும் வென்னீரில் குளித்து தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் வாங்க வேண்டுமா? வயதுபோன காலத்தில் சொந்தச் செலவில் சூனியம் வைக்க வேண்டுமா?
அல்லது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சிப் பெட்டியில் சருகண்டி சருகண்டி என்ற தொந்தரவு இல்லலாமல் பக்கோடா சாப்பிட்டபடியும் பார்க்கலாம். பக்கோடா சாப்பிட்டபடி பகவானை பார்த்தால் கோபப்படுவரா? அல்லது சொர்கத்தில் நமக்காக முன்பதிவு செய்திருந்த இடத்தை கான்சல் பண்ணிவிடுவாரா?
நீ ஒரு மகாராணி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
கருணாநிதியின் நெருங்கிய உறவினராகவும் , எம் ஜி ஆரின்
அபிமானத்துக்கு உரியவராகவும் விளங்கியவர் கதை வசனகர்த்தா கே. சொர்ணம். 1976ம் வருடம் இவர் படம் ஒன்றை டைரக்ட் செய்தார். அந்த படம்தான் நீ ஒரு மகாராணி.
வசனகர்த்தாவாக இவர் செயல் படும் போது தான் எம் ஜி ஆர் தி மு கவில் இருந்து வெளியேற்றப் பட்ட செய்தி பரவியது. அப்போது சத்யா ஸ்டுடியோவில் இருந்த சொர்ணத்தை எம் ஜி ஆர் பாதுகாப்பாக வெளியேற்றினார். நீங்கள் என்னுடன் பணியாற்றுவதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை , ஆனால் அவர் (கருணாநிதி) அதை விரும்ப மாட்டார் என்று கூறி எம் ஜி ஆர் அவரை அனுப்பி வைத்தார். அதன் பின் சொர்ணம் எம் ஜி ஆரின் படஙளுக்கு எழுதும் வாய்ப்பை இழந்தார். ஆனால் விரைவில் பட இயக்குனரானார் .
இலங்கைச் செய்திகள்
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார் நாமல் ராஜபக்ஷ
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரைச் சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிக்கப்படக் கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார் நாமல் ராஜபக்ஷ
21 Aug, 2026 | 10:34 AM
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளார்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமையவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார். நன்றி வீரகேசரி
உலகச் செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வைத்தியசாலையில் அனுமதி
மீண்டும் பிரித்தானியா திரும்புகின்றனர் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி
கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிர்மாய்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வைத்தியசாலையில் அனுமதி
Published By: Digital Desk 3
21 Aug, 2026 | 11:04 AM
உடல்நலக் குறைவினால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான இம்ரான் கான் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவின் பேரிலேயே அதியுயர் பாதுகாப்பு நிறைந்த 'அடியாலா' சிறைச்சாலையில் இருந்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் சிறைச்சாலையில் இருக்கும் இம்ரான் கானுக்குப் பார்வைத் திறன் குறைபாடு உட்படப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உள்ளதாகவும், சிறைச்சாலையில் அவருக்கு முறையான மருத்துவ உதவி கிடைக்கவில்லை எனவும் அவரது சட்டதரணிகள் குற்றம் சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக அவரது வலது கண்ணில் 15 சதவீதம் மாத்திரமே பார்வைத் திறன் எஞ்சியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 61 " அண்மைக்கால சிங்களப் புனைகதைகள்"
நாள்: சனிக்கிழமை 29-08-2026
நேரம்:
இந்திய நேரம் - மாலை 6.30
இலங்கை நேரம் - மாலை 6.30
கனடா நேரம் - காலை 9.00
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
சிறப்புப் பேச்சாளர்கள்:
லறீனா அப்துல் ஹக்
ஜெப்ரி தங்கராஜ்
இரா. கனகேஸ்வரி
ஒருங்கிணைப்பு: அகில்
மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316
திருக்குறள் மனனப் போட்டிகள் - 2026
போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்
|
பிரிவுகள் |
பிறந்த திகதி விபரம் |
|
பாலர் ஆரம்ப பிரிவு |
01.08.2021 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள் |
|
பாலர் பிரிவு |
01.08.2019 க்கும் 31.07.2021 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
|
கீழ்ப்பிரிவு |
01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
|
மத்தியபிரிவு |
01.08.2014 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
|
மேற்பிரிவு |
01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
|
அதிமேற்பிரிவு |
01.08.2007 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026
தயவுசெய்து 2026 செப்டம்பர் மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
போட்டிக்கான விதிமுறைகள், கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளின் வயதை கவனத்தில் கொண்டு, அவர்கள் சரியான பிரிவுகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.
மேலும் தகவல்களுக்கு கருணாசலதேவாவை 0418442674 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.
போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்
|
பிரிவுகள் |
பிறந்த திகதி விபரம் |
போட்டிகள் |
|
பாலர் ஆரம்ப பிரிவு |
01.08.2021 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி வர்ணம் தீட்டும் போட்டி |
|
பாலர் பிரிவு |
01.08.2019 க்கும் 31.07.2021 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி வர்ணம் தீட்டும் போட்டி |
|
கீழ்ப்பிரிவு |
01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
|
மத்தியபிரிவு |
01.08.2014 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
|
மேற்பிரிவு |
01.08.2011
க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
|
அதிமேற்பிரிவு |
01.08.2007
க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
கீழே விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு உள்ளது.
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026
தயவுசெய்து
2026 செப்டம்பர் மாதம் 4ம் ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை
சமர்ப்பிக்கவும்.
போட்டிக்கான விதிமுறைகள், கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள்
குழந்தைகளின் வயதை கவனத்தில் கொண்டு, அவர்கள் சரியான பிரிவுகளில் பங்கேற்பதை
உறுதிப்படுத்துங்கள்.
மேலும்
தகவல்களுக்கு கருணாசலதேவாவை 0418442674 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளவும்.
நிபந்தனையற்ற அன்பே உண்மையான பக்தி
அன்பில் இறைவனைக் காண்போம்
நிபந்தனையற்ற அன்பு எவ்வாறு அனைத்து இதயங்களிலும் இறைவனின் இருப்பை வெளிப்படுத்துகிறது என்பதைப் பகவான் இன்று நமக்கு அழகாக விளக்குகிறார். மனித வாழ்க்கையின் அடிப்படையே அன்பாகும். அந்த அன்பு எந்தவிதமான வேறுபாடுகளுக்கும் உட்பட்டதாக இல்லாமல், அனைவரிடமும் சமமாகப் பொழிய வேண்டும்.
அன்பை சாதி, மதம், பொருளாதார நிலை, கல்வி அல்லது அறிவாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் அளந்து வழங்கக்கூடாது. உண்மையான அன்பு பலனை எதிர்பார்க்காது; அது முழுமையாகவும், தடையின்றியும், தாராளமாகவும் பாய்ந்தோடும்.
அன்பின் இயல்பு
அன்பு செலுத்துவதே மனிதனின் இயல்பு. வறண்டு கிடக்கும் இதயங்களைத் தேடிச் சென்று, அவற்றை அன்பால் நனைத்து வளப்படுத்துவதிலேயே அன்பு மகிழ்ச்சி கொள்கிறது.
எந்த இதயத்திலும் வெறுமை காணப்பட்டாலும், அங்கே அன்பு பாய்ந்து சென்று அந்த வெறுமையை நிரப்புகிறது. உண்மையான அன்பு தன்னை ஒருபோதும் அடக்கிக் கொள்ளாது. அது வஞ்சகமோ, கபடமோ இன்றி தன்னைத் தாராளமாக வழங்குகிறது.
உண்மையான அன்பிற்கு பொய்மை, முகஸ்துதி, அச்சம் போன்றவை தேவையில்லை. அன்பு எந்த முகமூடியையும் அணிவதில்லை. அது உள்ளத்தில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு இதயத்திலும் இறைவன்
அன்பின் கொடி இறைவனின் திருவடிகளைப் பற்றிப் படரவே விரும்புகிறது. ஏனெனில், இறைவன் தனது எல்லையற்ற மகிமையுடன் ஒவ்வொரு இதயத்திலும் வீற்றிருக்கிறான் என்பதை உண்மையான அன்பு உணர்கிறது.
எனவே, நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அன்புடனும் அமைதியுடனும் அணுக வேண்டும். அவர்களின் வெளிப்புறத் தோற்றம், நிலை, பதவி அல்லது வசதி ஆகியவற்றைப் பார்க்காமல், அவர்களின் உள்ளத்தில் உறையும் இறைவனைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவரிடம் அன்பு செலுத்தும்போது, உண்மையில் நாம் அவருக்குள் உறையும் இறைவனுக்கே அன்பு செலுத்துகிறோம் என்ற உணர்வு நமக்குள் மலர வேண்டும். இதுவே அன்பின் உயர்ந்த நிலையாகும்.
பக்தியா? புக்தியா?
அன்பின் கொடி இறைவனை நோக்கிப் படரும்போது அது பக்தியாகிறது. ஆனால் அதே அன்பு உலகியலான பொருள்கள், செல்வம், பதவி, புகழ் மற்றும் புலனின்பங்களை நோக்கிப் படரும்போது அது பக்தி அல்ல; அது ‘புக்தி’, அதாவது உலகியலான இன்பத்தை நாடும் மனநிலையாகும்.
எனவே, அன்பின் அளவைவிட அது எந்தத் திசையில் செலுத்தப்படுகிறது என்பதே மிகவும் முக்கியமானது.
நமது அன்பு உலகப் பொருள்களிலேயே சிக்கிக்கொள்ளாமல், அவற்றைக் கடந்து இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும். அன்பு இறைவனை நோக்கிச் செல்லும்போது அது நம்மையும் உயர்த்துகிறது; நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அன்பாலும் அமைதியாலும் வளப்படுத்துகிறது.
அன்பே இறைவனின் வெளிப்பாடு
நிபந்தனையற்ற அன்பு இருக்கும் இடத்தில் இறைவனின் இருப்பு வெளிப்படுகிறது. எனவே, ஒவ்வொருவரிடமும் வேறுபாடின்றி அன்பு செலுத்துவோம். வறண்ட இதயங்களுக்கு அன்பை வழங்குவோம். துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக இருப்போம். நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதரிலும் இறைவனைக் காண முயல்வோம்.
அன்பு செலுத்துவதே மனிதனின் இயல்பு; அன்பில் இறைவனைக் காண்பதே உண்மையான பக்தி.
நமது அன்பின் கொடியை உலகியலான ஆசைகளை நோக்கி அல்ல, இறைவனின் திருவடிகளை நோக்கிப் படரவிடுவோம். அப்போது நமது இதயமும் இறைவனின் அன்பால் மலரும்; நமது வாழ்க்கையும் உண்மையான பக்தியின் பாதையில் உயர்வடையும்.
.jpeg)





.png)
.png)


