தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

Published By: Digital Desk 1

10 May, 2026 | 08:23 AM

( இணையத்தள செய்திப் பிரிவு )

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனடபோது பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட கவர்னர், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசாங்கம் பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

அவள்பாதம் பணிந்திடுவோம் அன்னை தினநாளில் !


 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 





ஐயிரண்டு திங்கள் சுமப்பவள் அன்னை
மெய்வருந்தி எம்மை வளப்பவள் அன்னை
கண்ணிமையா எம்மைக் காப்பவள் அன்னை
கருணையின் வடிவா யானவளும் அன்னை 

பொய்மையிலா அன்பை பொழிபவள் அன்னை
வாய்மையினை மனதில் நிறைப்பவள் அன்னை
தாய்மையெனும் பெருமை பெறுபவளும் அன்னை 
தரணியிலே தெய்வ வடிவானவளும் அன்னை 

கருவுற்றால் மகிழ்வை காட்டுபவள் அன்னை
கருவளர்ந்தால் அதனைக் காப்பவளும் அன்னை
கருகலைந்தால் உள்ளம் கலங்குபவளும் அன்னை 
கருவுருவாய் மலர கடவுளையே நினைப்பாள்

கவிதை..."யார் இவள்?"... மெல்போர்ன் அறவேந்தன்


 















கடவுளுமே கருணையுடன் கையணைத்து நிற்பார் !


 












 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்… அவுஸ்திரேலியா 



சாகா வரம்வேண்டித் தவமிருந்தார் பலரும்
நீண்டநாள் வாழவே வேண்டினார் பலரும்
வேண்டாத அத்தனையும் விரும்பி நின்றார்
வேண்டினார் வேண்டியதை வீணாக்கி விட்டார்

பொய்யென்றும் புழுகென்றும் எண்ணியே நிற்காதீர்
புராணத்தில் வந்த கதையென்று நினைக்காதீர்
அத்தனையும் எங்களுக்கு அமைந்த நல்லபாடம்
அனைவருமே அகத்தினிலே இருத்தி விடவேண்டும்

ஆண்டவனை ஏமாற்ற எண்ணி விடவேண்டாம்
ஆணவத்தை அகத்திலே அமர்த்தி விடவேண்டாம்
அகந்தையை ஆளுமையாய் ஆக்கிவிட வேண்டாம்
அழிவுவரும் என்பதை அகமிருத்த வேண்டும்

படித்தோம் சொல்கின்றோம்: ஒரு விதையின் இருமலர்கள் – Two Blooms of One Seed முருகபூபதி

 

சுயசரிதை பாங்கில் அமைந்த ஒரு விதையின் இருமலர்கள் – Two Blooms of One Seed என்ற நூல் எனக்கு அண்மையில் படிக்கக் கிடைத்தது.  

நண்பர் ஶ்ரீபாலன் இதனை எனக்குத்தந்தார். இந்நூலை எழுதியிருப்பவர் எனது மற்றும் ஒரு நண்பர் திரு. கந்தசாமி சரநாதன்.

 கவிதைத்துறையில் ஈடுபாடுமிக்கவரான சரநாதன், தனது கதையையும் கவிதையாகவே புனைந்துள்ளார். அதனால்,  இலக்கிய நயத்தையும் நாம் உணர்கின்றோம். தமிழிலும் ஆங்கிலத்திலும்  இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்நூலுக்கு சிட்னியில் வதியும் கவிஞர் த. நந்திவர்மன் அணிந்துரை வழங்கியிருக்கிறார். சரநாதன்,  தனது இளமைக்காலம் முதல் தீவிர வாசகராகவும், கலை இலக்கியங்களில்  ஆர்வம் மிக்கவராகவும் விளங்கியவர். பாடசாலைக்காலத்தில் மட்டுமன்றி, கல்லூரியில் பிரவேசித்த பின்னரும், அதன்பிறகு இலங்கை பல்கலைக்கழகத்திற்கு                      ( பேராதனை பல்கலைக்கழகம் ) பிரவேசித்த பின்னரும் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டவர்.

பல்கலைக்கழகத்தில் இவர் பயின்ற வேளையில் சமகால தத்துவ சாஸ்திர  விரிவுரையாளர், தற்போது மெல்பனில் வதியும், கலாநிதி எஸ்.வி. காசிநாதனுடன் யுகம் என்ற பல்கலை பதிப்பு நூலில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவரே இந்நூலுக்கு ஆங்கிலத்தில் முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.

ஒருவரது சுயசரிதையின் மூலம், அவரது வாழ்க்கையை மாத்திரமின்றி,  வாழ்வியல் அனுபவங்களையும் ,  அவர் கடந்து வந்த பாதையையும் நாம் தெரிந்துகொள்கின்றோம்.  அத்துடன் அகவயமான - புறவயமான பக்கங்களையும் தரிசிக்க முடியும்.

ஒரு  வறிய குடும்பத்தில் பிறந்திருக்கும் சரநாதன், தமது பெற்றோர் குறித்தும், உறவினர்கள் பற்றியும் அவர்களின் குணவியல்புகள் தொடர்பாகவும், எழுதியிருக்கிறார்.

இவரது அருமைத்தாயார் பூமணி தையல்முத்து அவர்கள் அண்ணல் காந்தி அடிகள் பற்றியெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார்.  வாழ்வியல் விழுமியங்களை காந்தி அடிகளின் சரிதைகளிலிருந்து எடுத்துக்காண்பித்துள்ளார்.

அவ்வாறு நல்ல போதனைகளை கேட்டு வளர்ந்த சரநாதன், தனது எதிர்காலம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை தனக்குள்ளாகவே தீர்மானித்திருக்கிறார்.

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 6…..சங்கர சுப்பிரமணியன்.

புத்த பிக்குகள் குடும்பத் தொழிலாக ஏற்று கோவில்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் வாழ்க்கையிலும் ஈடுபடலாம் என்ற வழக்கும் நடை முறையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு தனிப்பட்ட நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி ஜப்பானில் மத நம்பிக்கையடையோர் 48 சதமும் மத நம்பிக்கையற்றோர் 42 சதமும் ஏனையோர் 10 சதமும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக ஜப்பானியர்களின் சடங்கு சம்பிரதாயங்கள் மிகவும்

தேர்ந்தெடுக்கப் பட்டதாகவே உள்ளது. அவர்கள் நல்ல வளமான வாழ்வுக்காகவும் தொழில் முன்னேற்றத்திற்காக வேண்டுவதற்காக மட்டுமே கோவிலுக்கு செல்கிறார்கள். மத கோட்பாடுகளும் மதம் சார்ந்த நம்பிக்கைகளும் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன.

ஜப்பானில் மட்டும் அல்ல அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மத நம்மிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. உழைப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். மதநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் நாடுகளில் கோவில்களை கார்ப்பரேட் கம்பெனி போலவே நடத்துகிறார்கள். ஒரு நாளில் ஒரு கோவிலில் எவ்வளவு பக்தர்கள் குவிகிறார்கள் என்ற கணக்கையே பெருமையாக காட்டுகிறார்கள்.

அடுத்த வேளை உணவுக்கு அல்லல்படும் மக்களைப் பற்றிக் கணக்கு காட்டுவதில் அக்கறை காட்டமாட்டார்கள். எங்கள் நாட்டில் பஞ்சம் பட்டினியில் மக்கள் இல்லை என்பதில் பெருமை இருக்கிறதா? எங்கள் நாட்டில் இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு இத்தனைபேர் வருகிறார்கள் என்பதில் பெருமை உள்ளதா? இது பொய்யல்ல. உண்மைதான். இந்த உண்மையைச் சொன்னால் மாடசாமி அண்ணாச்சிக்கு கோபம் வருகிறது. உண்மை சுடும் என்பதில் உண்மையுள்ளதல்லவா?

இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பயணத்துக்கு வருகிறேன். வாடகை வாகனத்தில் பயணிப்பதற்கும் தொடர்வண்டியில் பணிப்பதற்கும் பயணச்செலவில் பெரிய வேறுபாடு. 200 யென் தொடர்வண்டியில் ஆகும் என்றால் 1000ல் இருந்து 1200 யென் வாடகை வாகனத்தில் ஆகும்.

நான் ஆணையிட்டால் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

இந்தியாவின் மிகச் சிறந்த அகிம்சைவாதியும், பூமி தான இயக்கத்தின் முன்னோடியுமான வினோபாவின் கொள்கைகள் சென்ற நூற்றாண்டில் மக்களை பெரியளவில் ஈர்த்திருந்தது. அவரின் அகிம்சை கொள்கையை ஏற்று பல கொள்ளைக்காரர்கள், கொலைக்கைக்காரர்கள் சட்டத்திடம் சரணடைந்தனர். பலர் தம்மிடம் இருந்த மேலதிக நிலத்தை பூமிதானம் செய்தனர். வினோபாவின் இந்தக் கொள்கைகளில் ஏற்பட்ட பிடிப்பின் காரணமாக அவற்றை அடிப்படையாக வைத்து எம் ஜி ஆர் நடித்த படம் நான் ஆணையிட்டால். 


 எம் ஜி ஆருக்கு மிக நெருக்கமாக இருந்து அவருடைய மனம் அறிந்து

செயற்படும் ஆர் .எம் . வீரப்பன் தனது சத்யா மூவிஸ் சார்பில் படத்தை எடுத்திருந்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இப் படத்தில் நம்பியார், அசோகன், மனோகர், ஓ .ஏ .கே . தேவர், குண்டுமணி, புத்தூர் நடராஜன் என்று ஒரு வில்லன் கோஷ்டியே நடித்திருந்தது. 

 படத்தில் பல வில்லன்கள் இருந்த போதும் படத் தயாரிப்பின் போது ஏவி. எம் நிறுவனம், தேவர் பிலிம்ஸ், ஜெயலலிதா, எம் ஜி ஆர் என்று பல வில்லன்களை சமாளிக்க வேண்டிய நிலை வீரப்பனுக்கு ஏற்பட்டது . 

 படம் தயாராவது உறுதியானவுடன் கதாநாயகியாக ஜெயலலிதா தான் நடிக்க வேண்டும் என்பதில் எம் ஜி ஆர் உறுதியாக இருந்தார். ஆனால் சரோஜாதேவி தான் நடிக்க வேண்டும் என்பதில் வீரப்பன் தெளிவாக இருந்தார். கதாநாயகனுக்கு நல்லுரை கூறி , அவனை சீர்படுத்தும் வேடம் கதாநாயகிக்கு. இதற்கு ஜெயலலிதா பொருந்த மாட்டார், சரோஜாதேவி தான் பாத்திரத்துக்கு பொருந்துவார் என்று வீரப்பன் வலியுறுத்தியதால் இறுதியில் எம் ஜி ஆர் சம்மதித்தார். 

மக்களாட்சி அமையுமென்று நம்பிக்கை, வித்யாசாகர், குவைத்!

 முதலமைச்சரின் இன்றைய (10.05.2026 ) பதவியேற்பு விழா உரை குறித்து!!


மிகச் சிறப்பான பேச்சு. கோட்சூட் போட்ட அழகான முதல்வர். எழுச்சியுற்ற குரலின் கம்பீரமான பதவியேற்பு விழா. உணர்ச்சிமிகுந்த உண்மைக்கும் நேர்மைக்கும் ஏதுவான ஒரு முதலமைச்சரின் வருகையாக அமைந்தது இன்றைய பதிவியேற்பு நிகழ்வு.

1 பெண்களின் பாதுகாப்பு
2 போதை ஒழிப்பு
3 சிறார் கல்வி உயர்வு

மற்றும் அடிப்படை நலன்களை கருத்தில் கொண்டதில், நேர்மையான அரசியலை முன்வைக்க முனைந்ததில் மகிழ்ச்சி.

எளிய மக்களின் தலைவனாக வாக்குறுதி அளித்ததும், எவரையும் தவறுசெய்ய விடமாட்டேன், ஒரு காசு கூட அரசிலிருந்து தொடமாட்டேன், இது நமது ஆட்சி என்று சொன்ன சகோதரத்துவ உரையும் நமக்கின்று பெருமைக்குரிய முதல்வரை எடுத்துக்காட்டியது. 

சற்று வெள்ளித் திரையில் கண்டதைப் போலவே தெரிந்தாலும் முகத்தில் முழுக்க முழுக்க உண்மை இருந்தது. மக்களின் மீதான அக்கறை உண்மைக்குரலில் வெளிப்பட்டது. முதல்வர் பேசிய முழுப் பேச்சும் மனத்திலிருந்து வந்ததை எவரும் மறுப்பதற்கேயில்லை.

குறிப்பாக,
நாம் தான் இனி, நடிகனெனும் மயக்கத்தில் அவரைச் சார்ந்திராமல், வெறுப்பில் ஒதுங்கியிராமல்; தமிழகத்தின் முதல்வரெனும் பெருமதிப்போடு கண்டு போற்றி உயர்த்தி உடன் நிற்றல் மண்ணுக்குப் பெருமையைச் சேர்க்கும். மக்களுக்கு நலத்தைப் பயக்கும்.

நம்மோடிருந்த ஒரு சாமானியன் இன்று எட்டுகோடித் தமிழரின் முதல்வராக உயர்ந்துள்ளார். தனது திறமையாலும் நம்பிக்கையாலும் உழைப்பாலும் உயர்ந்துள்ளார். படிப்பு காதல் விளாயாட்டு என்றிருந்த இளைஞர்களையும் இளைஞிகளையும் தனது மேலிருந்து அன்பால் ஈர்ப்பால் கவர்ந்து, திறன்வழிப் பயனாக அரசியலை நாடச்செய்து 80% மக்களையும் ஓட்டிடவைத்து, இன்று எல்லோரின் அரசாக "தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை" மாற்றியிருப்பதும், இத்தமிழகத்தை அதன் சீரோடு ஆண்டு; இயன்றவாறு உயர்த்தி; அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பதற்கு போராடுவேனென்று முழக்கமிட்டிருப்பதும் எல்லோருக்குமே நம்பிக்கையை தருகிறது.

இது தான் மக்கள். இது தான் வாழ்வு. இது தான் நம் நாடு. இதுவும் தான் அரசியல். 
நம்பிக்கை தானே வாழ்க்கை; நம்புவோம். உடன் நிற்ப்போம். வாழ்க சனநாயகம். வெல்க புதிய அரசு.

முதலமைச்சர் மாண்புமிகு திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்து🌾

இலங்கைச் செய்திகள்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி அநுர

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை மறுநாள் நீதிமன்றில் சமர்ப்பணம்

எயார்பஸ் ஊழல் விவகாரம் : வாக்குமூலம் அளிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை!


தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி அநுர

Published By: Digital Desk 3

10 May, 2026 | 04:01 PM

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான ஆழமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.

உலகச் செய்திகள்

போர்நிறுத்த உடன்பாட்டை மீறி லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரான் வெளிவிவகார அமைச்சரிடம் சீனா வலியுறுத்தல்!

உலக வரைபடத்தில் இருந்து ஈரான் அழிக்கப்படும் - டிரம்ப்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது டிவிகே: விஜய் தலைமையில் புதிய அரசு - காங்கிரஸ், விசிக ஆதரவு!


போர்நிறுத்த உடன்பாட்டை மீறி லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

Published By: Digital Desk 3

07 May, 2026 | 10:37 AM

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் புதன்கிழமை (06) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹெஸ்ஸ்புல்லா அமைப்பின் அதிமுக்கியப் பிரிவான 'ரத்வான்' படையின் தளபதி ஒருவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தாயின் அன்பும் தந்தையின் மரியாதையும்

 தாயின் மீது அன்பும் தந்தையின் மீது மரியாதையும் அவசியமானவை. ஆனால் பெற்றோர்களும் குருவும் நிலையற்றவர்கள். நண்பர்களும் நிரந்தரமற்றவர்கள். இறைவன் மட்டுமே நிரந்தரமானவரும் ஒருபோதும் தவறாதவரும் ஆவார்; ஆகையால் இதயத்தில் நிரந்தர இடம் பெற வேண்டியது இறைவனுக்கே.

மனித உடல் தெய்வீகத்தின் வாசஸ்தலமாக இருப்பதனால் புனிதமானதாகிறது. Bhagavad Gita உடலை “க்ஷேத்திரம்” (புனிதப் புலம்) என்றும், அதில் உறையும் தெய்வத்தை “க்ஷேத்ரஜ்ஞன்” என்றும் குறிப்பிடுகிறது. உடலின் இந்தப் புனிதத்தன்மையால், அதை தெய்வத்தின் கருவியாகச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

மனிதன் இறைவன் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். இறைவனின் அருள் இல்லாமல் மனிதனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்காது.

இன்றைய மனிதர்கள் உலகியலான செயல்களில் மிகுந்து மூழ்கியிருப்பதால் மன அமைதியை இழந்துள்ளனர். அவர்கள் அமைதியை பெறக்கூடிய ஒரே மூலமானவர், அமைதியின் உன்னத வடிவமான இறைவன் மட்டுமே. அவர் அளவற்ற அன்பும் நிலையான அமைதியும் நிறைந்த திருவாசஸ்தலமாக இருக்கிறார்.

இறைவனின் நாமத்தை ஜபிப்பதன் மூலம் அவருடைய அன்பைப் பெற வேண்டும். இறைவனின் நாமத்தை உச்சரிக்கக்கூடிய இந்த உடலை உங்களுக்கு அளித்த தாயாருக்கு நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.

ஆற்றில் நீந்துபவன் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடம்

 ஆற்றில் நீந்துபவன் நேராகவும் வேகமாகவும் முன்னேற வேண்டும் என்றால், முன்புறத்தில் இருக்கும் தண்ணீரை இருபுறமும் தள்ள வேண்டும்; மேலும் தண்ணீரை பின்னால் உதைக்கவும் வேண்டும். தண்ணீரை பின்னோக்கித் தள்ளும் அந்தச் செயல்வே அவனை முன்னே கொண்டு செல்கிறது.

அதுபோலவே, வாழ்க்கையிலும் சிலவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை விடுத்து, துறந்து, பின்செலுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால்தான் மனிதன் சிறிதளவாவது முன்னேற்றம் அடைய முடியும்.

ஆனால் மனிதன் என்ன செய்கிறான்? அவன் சேகரிக்கிறான், குவிக்கிறான், பிடித்துக் கொள்கிறான்; அவன் வைத்திருப்பதில் பெருமை கொள்கிறான். துறவின் உயர்ந்த மனிதப்பண்பை உணராமல், பொருளாசை, வெற்றி, வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றில் மூழ்கிக் கிடக்கிறான். ஆசைகளின் அலைகளைத் தாண்டி நீந்துவதற்குப் பதிலாக, அவற்றுக்குள் சிக்கிக் கொள்கிறான்.

ஆகையால், நாம் முன்னேற்றத்தின் வழிகளைத் தேடி அறிந்து கொள்ள வேண்டும். “இவ்வுலக அறிவில் மூழ்கிய மனிதன் ஆத்மாவை எவ்வாறு உணர முடியும்?” என்று கேள்வி எழலாம். ஆனால் அதற்காக மனம் உடைய வேண்டியதில்லை; நம்மைத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணவும் கூடாது.

சிறிய மனிதர்கள் பெரிய முடிவுகளை எடுக்கும் போது, மகான்களின் ஊக்கமும் அருளும் அவர்களுக்கு கிடைக்கும். கடலுக்கு மேல் பாலம் கட்டும் பணியில் தன்னாலும் இயன்ற அளவு உதவ வேண்டும் என்று சிறிய அணில் முடிவு செய்தபோது, அது ஸ்ரீ ராமரின் அருளைப் பெறவில்லையா?

தன்னுடைய உதவி மிகச் சிறியது என்பதை அந்த அணில் அறிந்திருந்தது. ஆனாலும், அதனைத் தூண்டியது அர்ப்பணிப்பு உணர்வே. அந்தத் தன்னலமற்ற பக்தியே இறைவனின் அருளைப் பெற்றுத் தந்தது.

தூய சங்கல்பத்தின் மகத்துவம்

 மனதில் உருவாகும் ஒரு சங்கல்பம் (உறுதி) என்பது ஒரு ஏரிக்குள் எறியப்படும் கல்லைப் போன்றது. அது அலைகளை உருவாக்கி, ஏரியின் முழு மேற்பரப்பையும் பாதித்து அமைதியை குலைக்கிறது. ஒரு நல்ல சங்கல்பம் இப்படிப்பட்ட நல்ல எண்ணங்களின் தொடரை உருவாக்குகிறது; அவற்றில் ஒவ்வொன்றும் மனத்தின் தூய்மைக்கும் வலிமைக்கும் தன் பங்கினை அளிக்கிறது.

Bharatiya culture சங்கல்பத்தின் தூய்மையை மிகவும் வலியுறுத்துகிறது. கையில் இருக்கும் மணமிக்க மலர் அதன் நறுமணத்தைச் சுற்றியுள்ளவர்களிடம் பரப்புவது போல, ஒரு தூய எண்ணம் பிறருக்கும், அவர்களின் மூலம் சமுதாயத்திற்கும், சமூக வாழ்விற்கும் நன்மை பயக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு தீய எண்ணம் தனிநபரையும் சமுதாயத்தையும் களங்கப்படுத்துகிறது. துயரமும் தொற்றுபோன்றதே; உங்கள் அசுத்தமான எண்ணங்கள் மற்றவர்களையும் பாதிக்கக்கூடும்.

மனம் புத்திக்கு — அதாவது விவேகத்திற்கும் பகுத்தறிவிற்கும் — கீழ்ப்படிந்து செயல்பட்டால், அது உள்ளார்ந்த உண்மையை உணர உதவும். ஆனால் அது புலன்களின் இழுப்புக்கு அடிபணிந்தால், பந்தங்களை மேலும் இறுக்கமாக்கும்.

நல்ல எண்ணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்; தீய எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு எண்ணமும் விவேகம் எனும் உயர்ந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். அங்கு வழங்கப்படும் தீர்ப்பை மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

இறை மகிமையும் மனித வாழ்வின் குறிக்கோளும்

 இறைவனின் மகிமையும் மாட்சியும் இந்த பிரபஞ்சமெங்கும் நிறைந்துள்ளது. அது காற்றில் மணம் இருப்பதுபோலும், நெருப்பில் சூடு இருப்பதுபோலும், பாலில் வெண்ணெய் மறைந்து இருப்பதுபோலும் உள்ளது. எல்லா மணிகளையும் ஒன்றாக இணைத்து நிறுத்தும் நூல்போல், அனைத்திற்கும் ஆதாரமாகவும் ஆதரவாகவும் இருப்பவர் இறைவன்.

அவரை இவ்வாறு உணர்ந்து, இந்த உலகப் படைப்பின் மூலமும், பாதுகாப்பும், உயர்ந்த குறிக்கோளும் அவரே என்பதை அறிதலே மனித வாழ்வின் இறுதி இலக்கும் நோக்கமும் ஆகும். இதுவே மனிதகுலம் பல மொழிகளிலும் பல காலங்களிலும் பெற்ற அனைத்து வேதங்களும் சாஸ்திரங்களும் போதிக்கும் மையச் செய்தியாகும்.

அனைத்து மதங்களும் மனிதனை அந்த உயர்ந்த நிலையை அடைய வழிநடத்தும் பாதைகளே ஆகும். ஒவ்வொரு ஒழுக்க நெறியும் மனிதனின் பேச்சு, செயல், உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, அவன் உண்மைப் பாதையை தெளிவாகக் காணவும் அதில் உறுதியாக நடக்கவும் உதவுகின்றன.

இந்த அரிய ஆன்மீக ஞானத்தை உணர்ந்து உலகிற்கு பரப்பிய தேசம் இந்தியா. தீவிர ஆன்மீகத் தேடலிலும் தவப்பயிற்சியிலும் ஈடுபட்ட முனிவர்களும் ஞானிகளும் இந்த மண்ணில் வாழ்ந்தனர். ஆனால் இன்று, அந்த உயர்ந்த ஆன்மீக இலட்சியங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதையும், அந்த ஞானிகள் அடைந்த பேரானந்த நிலையை கேலி செய்யும் அளவிற்கு மக்கள் தாழ்ந்துவிட்டதையும் வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால், இப்போது நாம் செய்ய வேண்டியது — அந்த உயர்ந்த பார்வையையும் வெற்றியையும் அளித்த பண்பாட்டை மீண்டும் போற்றுவது; உண்மையை நோக்கிய ஆன்மீகப் பயணத்திற்கு நம்மை மறுபடியும் அர்ப்பணிப்பது; பல்வேறு வேறுபாடுகளால் நிரம்பிய இந்த உலகக் காட்டில் அடிப்படையான ஒன்றுபாட்டை உணர்ந்து கண்டறிவதே ஆகும். அதுவே உண்மையான நிதர்சனம்.

அனைவரிலும் உறையும் தெய்வத்தை உணருங்கள்

 மற்றவர்கள் உங்களுக்கு தொந்தரவு செய்தாலும், பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும், அது இறுதியில் உங்களுக்கே நன்மை தரும் என்ற நம்பிக்கையுடன் பொறுமையுடன் சகித்துக்கொள்ளுங்கள்.

ஐம்பூதங்களால் ஆன இந்த உடல் ஒருநாள் அழிந்து போக வேண்டியதே. ஆனால் உடலினுள் உறையும் ஆன்மா நித்தியமானது; அதற்கு பிறப்பும் இல்லை, மரணமும் இல்லை; எந்த பந்தங்களாலும் அது கட்டுப்படுவதில்லை. உண்மையில், அந்த உள்ளுறைவான் இறைவனே ஆவான்!

ஒரு பிச்சைக்காரன் உணவிற்காக பிச்சை கேட்கும்போது, “பவதி பிக்ஷாம் தேஹி!” என்று கூறுகிறான். உண்மையில், அவன் உங்களிடமல்ல, உங்களுள் உறையும் அந்த “தேஹி”யிடமே — அதாவது தெய்வத்திடமே — பிச்சை கேட்கிறான். அவன் உங்களுள் இருக்கும் இறைவனை நோக்கி வேண்டுகிறான் என்பதை உணருங்கள்.

அவன் உங்களிடமே கேட்கிறான் என்று நினைப்பது அறியாமை. அது அகந்தையையும் குறிக்கிறது.

ஒருவன் அரசனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், அனைவரிடமும் தெய்வீகம் உறைகிறது. ஆகையால், ஒவ்வொருவரிடமும் இருக்கும் அந்த தெய்வீகத் தத்துவத்தை வணங்கி, அவர்களை அன்புடன் நேசிக்க வேண்டும். ஆனால் அந்த அன்பு சுயநலமற்றதாக இருக்க வேண்டும்.

உடல்பற்றற்ற அன்பே எல்லோரிடமும் சமமாக பாய்கிறது.

தர்மத்தின் வழியில் மனித வாழ்வு

பொருளாதார வாழ்க்கையில் மனிதனின் ஆசைகள் தர்மத்தால் கட்டுப்படுத்தப்படும்போது, அவனுள் தெய்வீக உந்துதல் எழுகிறது. செல்வத் தேடலும் இன்பவாசனைகளின் மீதான பற்றும் தர்மத்தின் அடிப்படையில் அமைந்தால், மனம் தன்னிச்சையாக இறைவனை நோக்கித் திரும்பும்.

இந்தப் பெரும் பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு சிறிய துகளே போன்றவன். உண்மையில், மனிதனுக்கும் படைப்பிற்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை. ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலைக் குடிக்கும் உரிமை இருப்பதுபோலவும், தேனீக்கு மலர்களிலிருந்து தேனை அனுபவிக்கும் உரிமை இருப்பதுபோலவும், மனிதனும் இயற்கையின் வளங்களைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை.

ஆனால் கட்டுப்பாடற்ற ஆசைகளும் இயற்கை வளங்களைப் பொறுப்பில்லாமல் சுரண்டுவதும் காரணமாக, இயற்கை பயங்கரமான மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், வறட்சி மற்றும் வெள்ளப் பேரழிவுகள் போன்ற இயற்கை அனர்த்தங்கள், இயற்கையின் சமநிலைக்கேடு ஏற்பட்டதன் விளைவுகளாகும்.

இன்றைய மனிதகுலம், தானே அமர்ந்திருக்கும் மரக்கிளையை கோடாரியால் வெட்டிக்கொண்டிருக்கும் ஒரு முட்டாள் மனிதனைப் போன்றதாக உள்ளது.

மனிதர்கள் ஆன்மீக ஒற்றுமை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த ஒற்றுமை உணர்விலிருந்தே அன்பு மலரும். அன்பு மட்டுமே முழு மனிதகுலத்தையும் ஒரே குடும்பமாக இணைக்கக்கூடிய சக்தியாகும்.

மனதிற்கு ஓய்வு தரும் தியானம்

 மனம் அனுபவங்களைச் சேகரித்து நினைவில் பதித்து வைத்துக்கொள்ளும் இயல்புடையது. விடுவித்துவிடும் கலையை அது அறியாது. மனம் எதையும் எளிதில் கைவிடுவதில்லை. அதன் விளைவாக துயரம், கவலை, வேதனை ஆகியவை அதற்குள் தொடர்ந்து கொதித்துக்கொண்டே இருக்கும். மனதிற்கு தியாகம் செய்யும் பண்பை கற்றுக்கொடுக்க முடிந்தால், ஒருவர் யோகியாக — ஆன்மிக அமைதியுடையவராக — மாற முடியும்.

ஒரு கடிகாரம் தொடர்ந்து டிக்-டிக் என்று ஓடிக்கொண்டே இருப்பது போல தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது தொடர்ச்சியானது அல்ல. ஒரு டிக்கும் அடுத்த டிக்கும் இடையில் சிறிய இடைவெளி இருப்பதை கவனிக்கலாம். அதுவே அதன் ஓய்வு நேரம். ஆனால் மனித மனத்திற்கு, ஒரு எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் இடையில் அத்தகைய சிறிய ஓய்வுக்கூட இல்லை.

மேலும், எண்ணங்களின் தொடர்ச்சியில் ஒழுங்கோ தொடர்போ இல்லாமல் இருக்கிறது. இதுவே குழப்பத்தையும் கவலையையும் அதிகரிக்கிறது. மனிதனின் உடல்நலக்குறைவுகளுக்கான முக்கிய காரணம் இதுவாகும்.

இப்போது நாம் உடலுக்கு ஓய்வும் பொழுதுபோக்கும் அளிப்பதற்காக பல திட்டங்களை வகுக்கிறோம். இயந்திரங்களுக்குக் கூட ஓய்வு தேவை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் மனதிற்கு ஓய்வு அளிக்கும் கடமையை நாம் புறக்கணித்துவிட்டோம்.

பணியில் அலைந்து திரியும் மனதிற்கு நாம் வழங்கும் ஓய்வு காலமே “தியானம்” எனப்படுகிறது.