மவுண்ட் றூட் தமிழ் கல்வி நிலையத்தில் தமிழர் பண்பாடு மற்றும் மரபுகளைப் போற்றும் வகையில் சித்திரைப் புத்தாண்டு விழா 09/05/2026 அன்று சனிக்கிழமை மாலை பள்ளியின் மண்டபத்தில்மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், விருந்தினர்கள், பெற்றோர், பள்ளி நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அதிபர் திரு. சிவசங்கர்
சிவசுப்பிரமணியம், சிறப்பு விருந்தினர்
முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன், ஆசிரியர் பாமரதி மகேஸ்வரமூர்த்தி ஆசிரியர் திருமதி .இரதிசங்கர் ஆகியோரால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. குத்துவிளக்கின் ஒளி அறிவையும் நற்குணங்களையும் குறிக்கும் வகையில் நிகழ்விற்கு மேலும் சிறப்பூட்டியது.
அதனைத் தொடர்ந்து நாம் வாழும் நாட்டின் பூர்வீக மக்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள், போராட்டத்தில் உயிர்நீத்த பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் மற்றும் தமிழர் நிலம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஈகைச்சாவடைந்த அனைத்து தமிழ் உறவுகளையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவன் செல்வன் ரதுஷான் முரளிதரன் அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளியின் தலைவர் கௌரீஸ்வரன் கந்தசாமி
அவர்கள் தலைமை உரையாற்றினார். தனது உரையில், இன்றைய நிகழ்வில் நடைபெற
இருக்கின்ற பட்டிமன்றத்தின் தலைப்பு சித்திரைப் புத்தாண்டை ஒட்டியதாக இருப்பதால்
அதுகுறித்து விரிவாக பேசுவது ஏதோ ஒரு தரப்பினரின் கருத்தை வலுப்படுத்துவதாக
அமையக்கூடும் எனக் குறிப்பிட்டார். மேலும், மாணவர்கள் ஏன் இவ்வாறான
பட்டிமன்றங்களில் பங்கேற்க வேண்டும் என்பதையும் விளக்கினார். பட்டிமன்றங்கள் மூலம்
மாணவர்கள் பல நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதுடன், பிறரது கருத்துகளை
மதிக்கக் கற்றுக்கொள்வார்கள், தன்னம்பிக்கை பெறுவார்கள், தெளிவாக பேசும் திறனை வளர்த்துக் கொள்வார்கள் என்பதையும் அவர்
வலியுறுத்தினார்.
அடுத்து உரையாற்றிய பள்ளியின் அதிபர் திரு சிவசங்கர் சிவசுப்பிரமணியம் அவர்கள், பட்டிமன்றத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனது ஆசியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், இன்றைய விழா ஆசிரியர்கள், நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் பலரின் ஒத்துழைப்பினால் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வான பட்டிமன்றத்தை பள்ளி மாணவன் செல்வன் கேசிகன் அருளாளன் அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து செல்வி சுடர்க்கொடி முத்தரசு அவர்களின் தலைமையில் “புலம்பெயர் நாட்டில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் அவசியமா? அவசியமற்றதா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.





.jpeg)
.jpeg)

.jpg)
.jpg)


.png)
.png)
.jpg)
.jpg)
.jpg)