சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார் !
வெற்றியடா ஒன்றுகூடல்!
பல்மருத்துவக் கலாநிதி பாரதி இளமுருகனார்
இன்றுபல ஆண்டுகளுக்கு
முன்பொரு நாளிலெம்
இராமநாதன்
தலைமையி லோர் ஒன்றுகூடல்!
நன்றங்கு சென்றிட்டால் சூடாய்
வடையும்
நாக்கிற்குச்
சுவையான மதிய உணவும்
மன்றத்தின் கணக்கினிலே
சாப்பிட லாமென
மனைவியையும்
என்னினிய நண்பர் உடனே
வென்றங்கு பரிசெடுக்கா
விட்டாலும் நல்ல
விருந்திருக்கும்
எனக்கூட்டி விரைந்து சென்றேன்!.
வையத்து வாழ்வு மன மகிழ்வாகும் !
அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்திற்கு 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்.
அவுஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பூர்த்தி செய்யும்போது, தமிழ்ச் சமூகத்தினர் வீட்டில் உள்ள அனைவருக்கும் பின்வருமாறு பதிவு செய்யுமாறு வேண்டப்படுகிறீர்கள் :
கேள்வி - வீட்டில் பேசப்படும் மொழி எது ? : TAMIL
கேள்வி உங்களது பூர்வீகங்கள் எது ?
பூர்வீகம் 1 : TAMIL
பூர்வீகம் 2 : SRI LANKAN TAMIL அல்லது INDIAN TAMIL
பூர்வீகமாக Tamil என்று பதிவு செய்வது, பல்வேறு நாடுகளையும் தலைமுறைகளையும் சேர்ந்த தமிழர்களை ஒருங்கிணைந்த தமிழ் அடையாளத்தின் கீழ் இணைக்க உதவுகிறது.
அதேவேளை, நாடு சார்ந்த Sri Lankan Tamil அல்லது Indian Tamil என்ற தமிழ் சார்ந்த பூர்வீக பதில்கள் ஒவ்வொரு சமூகத்தினதும் தனித்துவமான பின்னணியைப் பாதுகாக்கின்றன.
இந்தப் பதில்கள் "நாம் யார்" என்பதை மேலும் முழுமையாகப் பிரதிபலிப்பதுடன், தமிழ் மொழிப் பாடசாலைகள், மொழிபெயர்ப்பு சேவை, முதியோர் பராமரிப்பு, சுகாதாரச் சேவைகள், சமூகத் திட்டங்கள் மற்றும் அரசாங்க நிதியுதவிகளை எமது தமிழ் சமூகத்துக்கு பெறவும் பெருமளவில் உதவுகின்றன.
உங்களின் ஆதரவுக்கு நன்றிகள். 🙏
ஈழத்து நாடகர் திரு க.பாலேந்திரா அகவை 75 - கானா பிரபா
ஈழத்தின் முக்கியமானதொரு நாடக நெறியாளர் க.பாலேந்திரா
அவர்களது 75 வது பிறந்த தினம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி. ஈழத்து மேடை நாடக இயக்கத்தின் மிக முக்கியமானதொரு செயற்பாடாக 51 ஆண்டுகளாக நிலைத்திருப்பவர். தமிழ் அவைக்காற்றுக் கழகத்தை நிறுவிய வழியே இந்த நாடக இயக்கம் இன்று புலம் பெயர் சமூகத்திலும் அவர் குழுவோடு பல்வேறு நாடுகளுக்கும் சென்று நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கின்றது.
காடும் கடலும் ( கன்பரா மேடையேற்றம் - ஒரு பார்வை ) அனிதா ஜெயசிங்கம்
ஒரு
அலங்காரமும் இல்லாத மேடை, துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்ட சுவர்கள், நடுவே சுழன்று கொண்டிருக்கும் மேடையில் வருவதும், போவதுமாக எட்டுப்பேர்கள், அருகே இரு இசைக் கலைஞர்கள்.
1995 இலிருந்து 2009 வரை நாங்கள் போரின்
நடுவே வாழ்ந்த வாழ்க்கை, இடம் பெயர்வு, நந்திக்கடலில்
முடிவு, இப்போது 2026 ல் போர்க்குற்றத்துக்கு எதிரான குரல்
என ஒரு அதிவேக ராட்டினத்தில்
பயணம் செய்தது போன்ற உணர்வைத் தந்தது, காடும் கடலும்.
கண்
தெரியாத திருதராஷ்டிரனை மணந்ததும், தானும் இவ்வுலகைப் பார்க்க மாட்டேன் என்று தன் கண்களை மூடிக்கட்டிக்
கொண்ட காந்தாரியைப் போல கண்களைக் கட்டியபடி
கைகளில் ஒரு சங்குடன் வந்த
ஒரு தாயின் அமைதியான, ஆனால் ஆழமான அபிநயங்கள் அத்தாயின் மனவேதனையை எடுத்துக்காட்டின. என் பிள்ளைகள் எங்கே,
எங்கே என்று தேடுவது புரிந்தது.
சட்டென மாறியது காட்சி. மேடையும் சுழலத் தொடங்கியது. 4 பிள்ளைகள், தாய், தந்தை என சாதாரண எம்மைப்போன்ற ஒரு தமிழ்க்குடும்பம். Cricket விளையாடும் மகன், நடனம் பயிலும் ஒரு மகள், படிக்கும் ஒரு மகள், பொறுப்பான ஒரு மூத்த மகள், அடிக்கடி வந்து போகும் ஒரு சிங்கள நண்பரின் மகன் எனக் கலகலப்பான காட்சி. Helicopter ல் இருந்து விழும் துண்டுப் பிரசுரங்கள் எல்லோரையும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகிறது. கொழும்பிலுள்ள தன் சிங்கள நண்பருடன் கலந்தாலோசித்து விட்டு அனைவரையும் தேவாலயத்துக்குச் செல்லச் சொல்கிறார் தகப்பன். தேவாலயத்தின் மேல் குண்டு விழ எல்லாமே மாறிப்போய் விடுகின்றன. தந்தை கண்பார்வையை இழக்கிறார், மகள் கைவிரல்களை இழக்கிறாள். இவர்களுடன் கூடப் போன நண்பர் மனைவியையும், குழந்தையையும் இழக்கிறார். அங்கு தொடங்குகிறது களேபரம். எங்களின் சொந்த அரசே, தன் மக்களின் மேல் குண்டு மழை பொழிகின்றது எனக்கூறி மகனை விடுதவைப்புலிகளுடன் சேர்க்கிறார் ஒருவர். இளைய மகளும் தகப்பனும் அவுஸ்திரேலியாவுக்கு வாழ்வு தேடிப் போகிறார்கள். சகோதரனை மீட்டு வரப்போவதாக மூத்த மகள் புறப்படுகிறாள். தனது பிள்ளைகள் அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் வரை தான் இந்த உலகத்தைப் பார்க்கப் போவதில்லை என்று தனது கண்களை மூடித் துணியால் கட்டிக் கொள்கிறார் அன்னை.
சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர்- 11…..சங்கர சுப்பிரமணியன்.
இந்த அரண்மனையைச் சுற்றி இருக்கும் அகழி, பசுமையான பூங்கா என்று பரந்து விரிந்து கிடக்கும் மற்ற இடங்களைப் பார்க்க நுழைவுக்கட்டணம் இல்லை. இந்த அரண்மனையைச் சுற்று பெரிய பெரிய கற்களைக் கொண்டு கோட்டை கட்டியுள்ளார்கள். ஒவ்வொரு கற்களும் கோட்டைச் சுவர் உயரத்தில் இருப்பது நம்மை வியப்படைய வைக்கிறது.
இந்த அரண்மனை வளாகம் இரண்டாம் உலகப் போரின்போது பெரிய ஆயுதக் கிடங்குகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. மேலும் அச்சமயம் அங்கு 60,000 பேர் பணி புரிந்தார்கள். இந்த ஆயுதக் கிடங்கை குறிவைத்து ஆகஸ்ட்14, 1945ல் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தொன்னூறு சதவிதம் ஆயதக்கிடங்கு அழிந்ததோடு மட்டுமின்றி அங்கு பணிபரிந்த மக்களில் 282பேர் கொல்லப்பட்டார்கள்.
1997ல் முதன்மையான கோட்டை மீண்டும் காங்கிரிட்டால் பழைய
கோட்டையைப் போன்றே கட்டப்பட்டது. நவீனமாக மாற்றப்பட்டுள்ள உட்பகுதி தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
ஒசாகா அரண்மனை வளாகம், பூங்கா மற்றும் அகழி போன்றவற்றை பார்வையிட்டோம். அரண்மனையைச் சுற்றிலும் நிறைய செர்ரி மரங்கள் இருந்தன. அப்போது தான் பூக்கத் தொடங்கியிருந்தன. அதனால் செர்ரி ப்ளாசம் என்று சொல்லப்படும் மலர்ச்செரிவை ஒஸாகாவில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு இடத்திலும் பார்க்க வேண்டிய சிறப்பு வாய்ந்தவை என்று இருக்கும்.
அன்னக்கிளி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
நட்சத்திர நடிகர்களின் படங்கள் பெரும் செலவில் தயாராகி
தோல்வியடையும் போது சாதாரண நடிகர்களின் சிறிய பஜட்டிலான படம் பெரும் வெற்றியை பெற்று விடுவது உண்டு. அவ்வாறு 1976 ல் வெளியாகி சாதனை படைத்த படம் அன்னக்கிளி. கதாசிரியர் செல்வராஜ், வசனகர்த்தா பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், இயக்குனர்கள் தேவராஜ் மோகன் இவர்கள் எல்லோருடனும் சேர்த்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இப் படம் திருப்பு முனையாக அமைந்தது.
அன்னமாக நடித்த சுஜாதாவின் நடிப்பும் ஒரு காரணம் என்பதை குறிப்பிட வேண்டும். பாத்திரமாகவே மாறி விட்டார். ஏற்கனவே நடித்த சில படங்களில் நாகரீக பெண்ணாக நடித்தவர் இதில் கிராமத்து மருத்துவச்சியாக பாத்திரத்துடன் ஒன்றியிருந்தார்.
இலங்கைச் செய்திகள்
லலித், குகன் வழக்கு: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர அறிவிப்பு
திராய்க்கேணிப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!
லலித், குகன் வழக்கு: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
Published By: Digital Desk 3
07 Aug, 2026 | 02:23 PM
உலகச் செய்திகள்
ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் - ட்ரம்ப்
அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும் கட்டுப்பாடுகள் அமுல்
ரஷ்யக் கடற்கரையில் ட்ரோன் வீழ்ந்து வெடித்ததில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல் செய்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் மனைவி சங்கீதா
ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் - ட்ரம்ப்
07 Aug, 2026 | 03:25 PM
ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், “ஈரான் நாட்டினால் இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது” என்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஈரான் விடயத்தில் நான் மிக முக்கியமான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியபோது, அது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, இல்லையெனில், உலகம் முழுவதும் அழிந்துபோகும். அதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. நாங்களோ அல்லது மத்திய கிழக்கோ மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அது ஒரு பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். எங்களுக்கு வேறு வழியில்லை.
தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் – ஆன்மிக முன்னேற்றத்தின் அடித்தளம்
ஆணவமும் இறைத்தன்மையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்டவை. ஆணவம் நிறைந்த ஒருவர் தெய்வீக வாழ்க்கையை நோக்கி ஒருபோதும் முன்னேற முடியாது. ஆன்மிகப் பாதையில் முன்னேற வேண்டுமெனில், முதலில் அகந்தை அல்லது ‘நான்’ என்ற உணர்வு முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.
ஆனால், அகந்தையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்னம்பிக்கை ஆன்மிக முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். தன்னிடம் நம்பிக்கை இல்லாத ஒருவரால் இறைவனிடத்திலும் உண்மையான நம்பிக்கை கொள்ள முடியாது. தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் ஒன்றோடொன்று இணைந்தவை; அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.
தன்னம்பிக்கை என்பது அகந்தையல்ல.
“நான்” என்ற உணர்வு அகந்தையை வளர்க்கிறது; “என்னுள் இறைவன் இருக்கிறார்; அவருடைய அருளால் என்னால் அனைத்தையும் செய்ய முடியும்” என்ற உணர்வு தன்னம்பிக்கையை வளர்க்கிறது. ஆகவே, தன்னம்பிக்கை என்பது தன்மீது கொண்ட கர்வம் அல்ல; தன்னுள் உறையும் இறைசக்தியின் மீது கொண்ட நம்பிக்கையாகும்.
நம்பிக்கை என்பது மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த நற்பண்புகளில் ஒன்றாகும். குறிப்பாக, இறைநம்பிக்கை வாழ்க்கையின் மிகப் பெரிய ஆதாரமாகும். துன்பங்கள், சோதனைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் ஆகியவை நம்மைச் சூழும்போது, இறைநம்பிக்கையே நமக்கு மனவலிமையையும் நிம்மதியையும் அளிக்கிறது.
இறைவன் ஒவ்வொரு உயிரினுள்ளும் குடிகொண்டிருக்கிறார். “ஈச்வரன் அனைத்திலும் நிறைந்திருக்கிறார்” என்பதை நாம் உணர வேண்டும். ஆனால், இறைவன் நம்முள் உறைகிறார் என்பதை அறிவது மட்டும் போதாது; அந்த உண்மையின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் நம்முள் உறையும் தெய்வீகத்தை நாம் வெளிப்படுத்த முடியும்.
சிலர், “நான் முதலில் இறைவனை அனுபவித்துப் பார்த்த பிறகுதான் அவரை நம்புவேன்” என்று கூறலாம். ஆனால் இது வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்துவது போன்றதாகும்! ஆன்மிக வாழ்க்கையில் நம்பிக்கையே அனுபவத்திற்கு முன்னோடியாக இருக்கிறது.
முதலில் நம்பிக்கை வேண்டும்; அந்த நம்பிக்கை பக்தியை உருவாக்கும்; பக்தி சாதனையை உருவாக்கும்; சாதனை இறை அனுபவத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
நம்பிக்கையின்றி ஆன்மிக அனுபவம் இல்லை; ஆன்மிக அனுபவம் இல்லாமல் இறைத்தன்மையின் உண்மையான வெளிப்பாடு இல்லை.
ஆன்மிக அறிவியலான ஆத்யாத்ம வித்யாவிற்கு (ஆன்மஞானக் கல்விக்கு) ஸ்ரத்தா முற்றிலும் இன்றியமையாதது. வெறும் புத்தக அறிவால் மட்டும் ஆத்மாவை உணர முடியாது. கற்றுக்கொண்ட உண்மைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். மனப்பூர்வமான நம்பிக்கையுடனும், உண்மையான அக்கறையுடனும், விடாமுயற்சியுடனும் ஆன்மிக சாதனையில் ஈடுபட வேண்டும்.
இன்றைய இளைஞர்களிடமும் இளம் பெண்களிடமும் ஸ்ரத்தா குறைவாக இல்லை. அவர்களிடம் ஆற்றலும் ஆர்வமும் மிகுந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அந்த ஆர்வமும் ஈடுபாடும் பெரும்பாலும் நாடகங்கள், நாவல்கள், திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி, கிரிக்கெட், குதிரைப் பந்தயம் போன்றவற்றின் மீது திருப்பப்பட்டுள்ளன.
எதில் நாம் ஸ்ரத்தையையும் ஈடுபாட்டையும் செலுத்துகிறோமோ, அதுவே நமது வாழ்க்கையின் திசையை நிர்ணயிக்கிறது.
தவறான விஷயங்களில் அளவுக்கு மீறிய ஈடுபாடு செலுத்தப்படும்போது, அது உடல்நலத்தையும் மனத்தூய்மையையும் பாதிக்கிறது. உடல் பலவீனமடைகிறது; மனம் மாசுபடுகிறது; சிந்தனைகள் சீர்குலைகின்றன. இதன் விளைவாக, இளைஞர்கள் இறைவன் மீதான நம்பிக்கையை மட்டுமல்லாமல், தங்கள் மீதான நம்பிக்கையையும் இழக்கத் தொடங்குகிறார்கள்.
எனவே, நமது ஸ்ரத்தையைச் சரியான திசையில் செலுத்துவது மிகவும் அவசியம். நமது கவனத்தையும் ஆற்றலையும் நிலையற்ற உலக விஷயங்களில் மட்டுமே செலவழிக்காமல், நிலையான இறை உண்மையை நோக்கித் திருப்ப வேண்டும்.
நாம் நினைவில் கொள்ள வேண்டிய மிகப் பெரிய உண்மை இதுதான்:
ஆகவே, அகந்தையை அழித்து, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம். நமது ஸ்ரத்தையைத் தவறான பாதைகளில் சிதறவிடாமல், இறைவனை நோக்கித் திருப்புவோம். “இறைவன் என்னுள் இருக்கிறார்; நான் இறைவனுடையவன்; இறைவனே எனது ஆதாரம்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நமது உள்ளத்தில் வளர்த்துக்கொள்வோம்.
அத்தகைய தூய்மையான இறைநம்பிக்கையும் பக்தியும் நமது வாழ்க்கையை மாற்றி அமைத்து, நம்முள் உறையும் தெய்வீகத்தை வெளிப்படுத்தும்.
கல்வியின் உண்மையான நோக்கம் – அமைதியும் மனிதநேயமும்
கல்வியின் உண்மையான நோக்கம், ஒரு மனிதனை மகிழ்ச்சியானவராகவும், பயனுள்ளவராகவும், நல்ல பண்புகள் கொண்டவராகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும். கல்வி ஒருவருடைய அறிவை மட்டும் வளர்ப்பதற்காக அல்ல; அவரை ஒரு சிறந்த குடிமகனாக உருவாக்குவதற்காகவும் அமைய வேண்டும்.
தான் சார்ந்த நாட்டின் முன்னேற்றத்திற்குத் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்யக்கூடியவராகவும், அதற்கான பொறுப்புணர்வுடனும் விருப்பத்துடனும் செயல்படக்கூடியவராகவும் ஒருவரை கல்வி உருவாக்க வேண்டும். தனது நலத்தையும், சமூக நலத்தையும், தேச நலத்தையும் ஒன்றாகக் கருதும் மனிதனையே உண்மையான கல்வி உருவாக்க வேண்டும்.
இன்றைய கல்வி முறையில், பட்டப்படிப்புகளுக்கும் பட்டங்களுக்கும் அளிக்கப்படும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும். வெறும் பட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே கல்வி அமையக் கூடாது. பட்டங்கள், வேலைக்காக நாடெங்கும் சுற்றித் திரியும் பட்டதாரிகளின் கைகளில் இருக்கும் பிச்சைப் பாத்திரங்களைப் போல ஆகிவிடக் கூடாது. கல்வி ஒருவருக்கு வேலை தேடுவதற்கான தகுதியை மட்டுமல்ல, வேலையை உருவாக்கும் திறனையும், சமூகத்திற்கு பயனுள்ளவராக வாழும் மனப்பான்மையையும் வழங்க வேண்டும்.
இன்று நாம் “கடமை” என்றும் “பொறுப்பு” என்றும் அதிகமாகப் பேசுகிறோம். ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. ஆனால், “கடமை” என்ற சொல்லின் உண்மையான பொருளை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு மாணவன், “என்னுடைய கடமை என்ன?” என்று கேட்டால், கல்லூரிக்கோ பள்ளிக்கோ நேரத்திற்கு வருவது, ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களின்போது கவனமாக இருப்பது, கல்வி தொடர்பான பயிற்சிகளிலும் பணிகளிலும் பங்கேற்பது ஆகியவற்றையே தனது கடமை என்று நினைக்கிறான்.
அதேபோல், சில ஆசிரியர்களும் தங்களுக்குரிய நேரத்தில் பணிக்கு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களையும் பணிகளையும் செய்து முடித்துவிட்டால், தங்களுடைய கடமை நிறைவேறிவிட்டதாகக் கருதுகின்றனர்.
இந்தக் குறுகிய கண்ணோட்டம் மாற வேண்டும்.
கடமை என்பது வெறும் நேரத்தைப் பின்பற்றுவதோ, ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பதோ அல்ல. உண்மையான கடமை என்பது தன்னுடைய பணியின் மூலம் பிறருடைய வாழ்க்கையை உயர்த்துவது; தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அக்கறை கொள்வது; சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள பங்களிப்பைச் செய்வது ஆகும்.
மாணவன் கல்வி கற்கும்போது, வெறும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதையே குறிக்கோளாகக் கொள்ளக் கூடாது. அவன் நல்ல மனிதனாகவும், நல்ல குடிமகனாகவும், ஒழுக்கமும் பண்பும் நிறைந்தவராகவும் வளர வேண்டும்.
அதேபோல், ஆசிரியர் வெறும் பாடங்களைப் போதிப்பவராக மட்டும் இருக்கக் கூடாது. மாணவர்களின் உள்ளத்தில் நல்லொழுக்கம், அன்பு, கருணை, ஒழுக்கம், பொறுப்பு உணர்வு ஆகியவற்றை விதைப்பவராகவும் இருக்க வேண்டும்.
எனவே, கல்வியை வெறும் உலகியல் அறிவைப் பெறுவதற்கான ஒரு கருவியாகக் கருதாமல், ஆன்மிக சாதனையாக – சாதனாவாக – நாம் வரவேற்க வேண்டும்.
கல்வியின் இறுதி நோக்கம் தனிமனிதனின் உள்ளத்திலும், சமூகத்திலும் சாந்தியை (சாந்தி) நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். மனிதன் அமைதியாக இருந்தால்தான் குடும்பத்தில் அமைதி நிலவும்; குடும்பங்களில் அமைதி நிலவினால்தான் சமூகத்தில் அமைதி நிலவும்; சமூகத்தில் அமைதி நிலவினால்தான் உலகில் அமைதி மலரும்.
எனவே, கல்வி என்பது வெறும் அறிவைச் சேகரிப்பது அல்ல; உள்ளத்தைப் பண்படுத்தும் ஒரு ஆன்மிகப் பயணம்.
உண்மையான கல்வி மனிதனின் அறிவை மட்டுமல்ல, அவனுடைய இதயத்தையும் வளர்க்க வேண்டும். அறிவுடன் அன்பும் இணைந்தால்தான் கல்வி முழுமை பெறுகிறது. அறிவு மனிதனுக்கு திறமையை அளிக்கிறது; ஆனால் அன்பும் ஒழுக்கமும் அந்தத் திறமையை சரியான வழியில் பயன்படுத்தக் கற்றுத்தருகின்றன.
அதனால்தான் கல்வி ஒரு புனிதமான ஆன்மிக முயற்சியாகக் கருதப்படுகிறது. கல்வியின் அதிதேவதையாக விளங்கும் சரஸ்வதி தேவி, அறிவு, ஞானம், கலை மற்றும் நல்விவேகத்தின் தெய்வீக வடிவமாகப் போற்றப்படுகிறாள்.
சரஸ்வதி தேவியின் அருளைப் பெற்ற கல்வி, வெறும் வாழ்க்கையை நடத்துவதற்கான வழியைக் காட்டாமல், வாழ்க்கையை எவ்வாறு உயர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ வேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டும்.
இதுவே கல்வியின் உண்மையான மகத்துவம்.
இறைவனே அனைத்திற்கும் ஆதாரம்
இறைவனின் திருவருள் மற்றும் அனுமதி இல்லாமல், இந்த உலகில் மனிதனால் எதையும் சாதிக்க முடியாது. இறைவனே அனைத்திற்கும் ஆதாரம்; அனைத்திற்கும் அடிப்படை; அனைத்திற்கும் ஆதார சக்தி. ஆனால், மனிதன் தானே எல்லாவற்றையும் செய்கிறான் என்ற அகந்தையில் ஆழ்ந்து கிடக்கிறான்.
“நான் செய்தேன்; என்னால் முடிந்தது; நான் சாதித்தேன்” என்ற கர்வம் அவனது உள்ளத்தில் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது. இந்த அகந்தையே அவனுடைய தோல்விகளுக்குக் காரணமாகிறது. அதுவே அவனுடைய மன அமைதியின்மை, ஏமாற்றம், விரக்தி மற்றும் மனக்கசப்பு ஆகியவற்றிற்கும் மூல காரணமாகிறது.
மனிதன் இன்று இயற்கையை மட்டுமே சார்ந்து தனது வாழ்க்கையை நடத்த முயல்கிறான்; இயற்கைக்குப் பின்னால் இருக்கும் இறைவனை மறந்துவிடுகிறான். இதுவே அவன் செய்கின்ற மிகப் பெரிய தவறாகும்.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரு நிலையான அடிப்படையின் மீது இயங்குகிறது என்பதை நாம் உணர வேண்டும். அந்த அடிப்படையே இறைவன். இந்த உண்மையை உணர்ந்து, அதற்கேற்ப நமது வாழ்க்கையை நடத்த வேண்டும்.
ஒரு திரையரங்கிற்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். அங்கே ஒரு திரை உள்ளது. அந்தத் திரை அசைவற்றதாகவும் நிலையானதாகவும் இருக்கிறது. திரைப்படம் ஓடும்போது எண்ணற்ற காட்சிகள் அந்தத் திரையில் தோன்றுகின்றன. சில காட்சிகள் மகிழ்ச்சியை அளிக்கின்றன; சில காட்சிகள் துயரத்தை ஏற்படுத்துகின்றன. சில காட்சிகள் வருகின்றன; சில காட்சிகள் மறைந்து விடுகின்றன.
அந்தத் திரையை இறைவனுடன் ஒப்பிடலாம்.
இறைவன் நிலையானவர்; சத்தியமானவர்; நித்தியமானவர். அவருடைய இருப்பு எப்போதும் மாறாதது.
திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் தற்காலிகமானவை. அவை தோன்றி மறைகின்றன. ஆனால், அந்தக் காட்சிகள் தோன்றுவதற்கும் மறைவதற்கும் ஆதாரமாக இருக்கும் திரை மட்டும் அசையாமல் நிலைத்திருக்கிறது.
ஆனால், திரைப்படத்தைப் பார்க்கும் மனிதன் என்ன செய்கிறான்?
அவன் திரையைப் பார்ப்பதில்லை. திரையில் தோன்றும் காட்சிகளையே பார்க்கிறான். கதாபாத்திரங்கள் வருகின்றன; செல்கின்றன. சிரிப்பு வருகிறது; கண்ணீர் வருகிறது. மகிழ்ச்சி வருகிறது; துயரம் வருகிறது. வெற்றி வருகிறது; தோல்வி வருகிறது.
இவ்வாறு தோன்றி மறையும் காட்சிகளையே உண்மை என்று எண்ணி, அவற்றுக்குப் பின்னால் இருக்கும் நிலையான திரையை அவன் மறந்துவிடுகிறான்.
திரை இல்லாமல் திரைப்படக் காட்சிகளை நாம் காண முடியுமா?
முடியாது.
காட்சிகள் அனைத்திற்கும் திரையே ஆதாரம். ஆனால், நாம் காட்சிகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால், அந்தக் காட்சிகளுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் திரையின் முக்கியத்துவத்தை உணர முடியாது.
அதேபோலத்தான் மனிதனுடைய வாழ்க்கையும்.
நாம் காணும் இந்த உலகம், அதன் எண்ணற்ற வடிவங்கள், உறவுகள், பொருட்கள், இன்பங்கள், துன்பங்கள், வெற்றிகள், தோல்விகள் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் இயற்கையின் வெளிப்பாடுகள். அவை தோன்றி மறையும் தன்மை கொண்டவை.
ஆனால், இவை அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் இறைவன் மட்டும் நிலையானவர், நித்தியமானவர், மாறாதவர்.
மனிதன் இன்று இந்த உண்மையை மறந்து, இயற்கையின் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து வாழ்க்கையை நடத்த முயல்கிறான். இதுவே அவன் செய்கின்ற மிகப் பெரிய தவறாகும்.
இயற்கையை நாம் அனுபவிக்க வேண்டும்; ஆனால் இயற்கைக்குப் பின்னால் இருக்கும் இறைசக்தியை மறந்துவிடக் கூடாது.
எனவே, முதலில் அந்த ஆதாரமான இறைவனைச் சரணடைய வேண்டும். பின்னர், அவருடைய ஆதாரத்தின் மீது நிலைபெற்றிருக்கும் இயற்கையை அனுபவிக்க வேண்டும்.
ஆதாரத்தை மறந்துவிட்டு, ஆதாரத்தின் மீது அமைந்திருப்பதை மட்டுமே சார்ந்து வாழ்வது அறியாமையாகும்.
மனித வாழ்க்கையில் முதன்மையான தேவை இறைநம்பிக்கையே. இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் போது, வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் சோதனைகளையும் நாம் சமநிலையுடன் எதிர்கொள்ள முடியும்.
எனவே, “நான் செய்கிறேன்” என்ற அகந்தையை விட்டுவிட்டு, “இறைவனே என்னுள் இருந்து என்னை இயக்குகிறார்; அவருடைய அருளாலேயே அனைத்தும் நடைபெறுகின்றன” என்ற உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
திரையில் தோன்றும் காட்சிகள் எத்தனை மாறினாலும் திரை மாறுவதில்லை. அதுபோலவே, வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும், நமது உள்ளத்தில் நிலைத்திருக்கும் இறைவனைப் பற்றிய நம்பிக்கை மட்டும் அசைக்க முடியாததாக இருக்க வேண்டும்.
ஆகவே, நிலையற்ற காட்சிகளில் மனதைப் பறிகொடுக்காமல், அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் நித்திய இறைவனைச் சரணடைவோம்.
இறைவனை ஆதாரமாகக் கொண்டு வாழும்போது, வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் அமைதியுடனும் நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்ள முடியும். இதுவே உண்மையான ஆன்மிக வாழ்க்கையின் தொடக்கமாகும்.
இறைவனே அனைத்திற்கும் மூலாதாரம்
எங்கே புகை இருக்கிறதோ, அங்கே நெருப்பு இருப்பது நிச்சயம். நெருப்பு இல்லாமல் புகை தோன்றாது. புகை என்பது நெருப்பின் இருப்பை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். அதுபோலவே, இறைவன் இல்லாமல் இந்த உலகம் இருக்க முடியாது.
இறைவன் இல்லாமல் உயிர்கள் எவ்வாறு தோன்ற முடியும்? இறைவன் இல்லாமல் வாழ்க்கை எவ்வாறு இயங்க முடியும்?
இது முற்றிலும் சாத்தியமற்றது! சற்றும் சாத்தியமற்றது!
இந்தப் பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்தும் இறைவனுடைய சங்கல்பத்திற்கும் திருவுளத்திற்கும் ஏற்பவே நடைபெறுகின்றன. இதனை நாம் உணர்ந்து கொண்டால், வாழ்க்கையில் நிகழும் பல நுண்ணிய உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
இதற்கு ஓர் எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.
ஒரு பசு கன்றுக்குட்டியை ஈன்றெடுக்கிறது. கன்று பிறந்தவுடன், தாய் பசு தனது நாவினால் கன்றின் உடலை நக்கி, அதைச் சுத்தப்படுத்துகிறது. தாய் பசு கன்றைச் சுத்தம் செய்தவுடன், கன்றுக்குட்டி தனது கால்களில் எழுந்து நிற்கிறது. பின்னர் அது நேராகத் தாயின் மடியை நோக்கிச் சென்று பாலைப் பருகுகிறது.
இங்கே ஒரு மிகப்பெரிய கேள்வி எழுகிறது:
பால் எங்கே இருக்கிறது என்பதை அந்தக் கன்றுக்குட்டிக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்?
தாயின் மடியில் பால் இருப்பதையும், அங்கே சென்று பால் குடிக்க வேண்டும் என்பதையும் அந்தக் கன்று யாரிடமிருந்து கற்றுக்கொண்டது?
யாரும் அதற்குப் பாடம் நடத்தவில்லை. யாரும் அதற்கு பயிற்சி அளிக்கவில்லை. எந்தப் புத்தகத்தையும் அது படிக்கவில்லை. ஆனாலும், பிறந்த சில நிமிடங்களிலேயே அது தாயின் மடியைத் தேடிச் சென்று பால் அருந்துகிறது.
இது இறைவனுடைய தெய்வீக ஏற்பாடல்லவா?
உயிர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பல நுண்ணிய செயல்முறைகள் ஏற்கனவே இறைவனுடைய படைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான அறிவும் இயல்பான செயல்பாடுகளும் அதனுள் இறைவனால் பதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய நுண்ணிய உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல், சிலர் “இறைவன் என்று யாரும் இல்லை” என்று அறிவற்ற முறையில் வாதிடுகின்றனர்.
ஆனால், நம்முடைய சொந்த மனதிலேயே அடுத்ததாக என்ன எண்ணம் தோன்றப் போகிறது என்பதை நம்மால் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் சில நொடிகளில் நமது மனதில் என்ன சிந்தனை எழும் என்பதை நாமே அறியாத நிலையில், எல்லையற்ற பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், அதன் பின்னால் இருக்கும் தெய்வீக சக்தியையும் எவ்வாறு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்?
நமது அறிவு வரையறுக்கப்பட்டது. இறைவனுடைய ஞானம் எல்லையற்றது.
எனவே, நமக்குப் புரியாததை உடனடியாக மறுப்பது அறிவுடைமை அல்ல. மாறாக, தாழ்மையுடன் சிந்தித்து, உண்மையைத் தேடி, நல்லோரின் உபதேசங்களைக் கேட்டு, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, இன்றைய மனிதன் நல்ல அறிவுரைகளையும் உயர்ந்த ஆன்மிக உபதேசங்களையும் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. நல்லவற்றைக் கேட்காததால், நல்லவற்றைச் சிந்திக்காததால், அறியாமையும் அறிவீனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இறைவனுடைய படைப்பின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது. அந்த நுண்ணிய உண்மைகளை உணர்ந்து கொள்ளும்போது, நமது உள்ளத்தில் இறைநம்பிக்கை ஆழமாக வேரூன்றும்.
அவருடைய திருவுளத்தை நம்பி, அவருடைய திருப்பாதங்களைச் சரணடைந்து வாழ்வதே உண்மையான ஞானமாகும்.
இறைவனை உணரலாம்; வார்த்தைகளால் விவரிக்க முடியாது
ஒரு ஊமை மனிதர் இனிப்புப் பண்டம் ஒன்றைச் சுவைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த இனிப்பின் சுவையை அவர் முழுமையாக அனுபவிக்க முடியும். ஆனால், அந்த இனிமையை வார்த்தைகளால் பிறருக்கு எடுத்துரைக்க அவரால் முடியாது. அவர் அனுபவிப்பது உண்மையானது; ஆனால் அதைச் சொற்களால் வெளிப்படுத்த இயலாது.
அதேபோலத்தான் இறைத்தன்மையும். இறைவனை வார்த்தைகளால் முழுமையாக விவரிக்க முடியாது; அவரை அனுபவிக்க மட்டுமே முடியும். இறைவனின் தெய்வீக இருப்பை ஒருவர் உள்ளத்தில் உணர்ந்துகொண்டால், அதை மற்றொருவரிடம் விளக்குவதற்கு வார்த்தைகள் போதாது. “இறைவனுடைய அனுபவம் எப்படி இருக்கும்?” என்று யாராவது கேட்டால், அதற்கான மிகச் சிறந்த பதில் மௌனமே.
எனவே, இறைவனைப் பற்றிய தேவையற்ற வாதங்களிலும் தர்க்கங்களிலும் நமது நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நமது உள்ளத்தில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இறைவன் இல்லை என்று வாதிடுவது அறியாமையின் வெளிப்பாடாகும்.
“இறைவன் இல்லை” என்று சிலர் கூறுகிறார்கள். “அவரை நம்மால் காண முடியவில்லை; எனவே அவர் இல்லை” என்பதே அவர்களுடைய வாதம்.
ஆனால், நாம் காண முடியாத அனைத்தும் இல்லாதவையாகிவிடுமா?
ஒருவர் ஆறு அடி உயரமுடையவராக இருக்கலாம்; நல்ல நிறமுடையவராக இருக்கலாம்; வழுக்கைத் தலையுடையவராக இருக்கலாம்; 80 கிலோ எடை கொண்டவராக இருக்கலாம். இவை அனைத்தும் அவரது உடலுக்குரிய புறத்தோற்றப் பண்புகள். அவற்றை நமது கண்களால் காண முடியும்.
ஆனால், அந்த மனிதரின் உண்மையான இயல்பை அவரது உடல் தோற்றம் மட்டுமே எடுத்துக்காட்டுகிறதா?
அவருடைய உண்மையான தன்மை அவரது உள்ளத்தில் உறையும் குணங்களில்தான் வெளிப்படுகிறது. அன்பு, கருணை, பரிவு, பொறுமை, இரக்கம் போன்ற நற்குணங்களும், அதற்கு மாறாக வெறுப்பு, பொறாமை, கோபம், பகைமை போன்ற தீய குணங்களும் ஒருவருடைய உண்மையான இயல்பை நிர்ணயிக்கின்றன.
ஆனால், இக்குணங்களில் எதையும் நமது புறக்கண்களால் நேரடியாகக் காண முடியாது. அப்படியானால், “காண முடியவில்லை; எனவே அந்தக் குணங்கள் அவரிடம் இல்லை” என்று நாம் கூற முடியுமா?
நிச்சயமாக முடியாது.
காற்றை நம்மால் பார்க்க முடியாது; ஆனால் அதன் இருப்பை நாம் உணர்கிறோம். அன்பைக் கண்களால் பார்க்க முடியாது; ஆனால் அதன் அரவணைப்பை நாம் அனுபவிக்கிறோம். கருணையைப் பார்க்க முடியாது; ஆனால் அதன் செயல்களை நாம் உணர்கிறோம். அதுபோலவே, இறைவனையும் புறக்கண்களால் காண முடியாவிட்டாலும், அவருடைய இருப்பை உள்ளத்தால் உணரவும், வாழ்க்கையில் அனுபவிக்கவும் முடியும்.
எனவே, “நான் காணவில்லை; ஆகையால் அது இல்லை” என்று கூறுவது அறிவுடைமையல்ல. நமது புலன்களின் வரம்பை வைத்து இறைவனின் இருப்பை அளவிட முடியாது.
ஒருவருடைய மனிதநேயத்தையே அவருடைய கண்ணுக்குத் தெரியாத குணங்கள்தான் நிர்ணயிக்கின்றன. அன்பு, கருணை, இரக்கம், பொறுமை போன்ற தெய்வீகப் பண்புகள் அவரிடம் இருக்கும்போதுதான் அவர் உண்மையான மனிதராக உயர்கிறார்.
அதேபோல, இறைவனின் இருப்பையும் புறக்கண்களால் காண்பதை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது. இறைவன் வெளியில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒரு பொருள் அல்ல; உள்ளத்தில் உணர வேண்டிய பேருண்மை.
ஆகையால், இறைவனைப் பற்றிய தேவையற்ற வாதங்களை விட்டுவிட்டு, நமது மனதைத் தூய்மைப்படுத்தி, நம்பிக்கையையும் பக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இறைவனை உணர்வதற்கு வாதம் தேவையில்லை; நம்பிக்கை, பக்தி, தூய்மையான உள்ளம் மற்றும் அனுபவம் ஆகியவையே தேவை.
.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)




.png)
.png)
