எங்கும் இருப்பான் முருகனே !


 




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 






கால் வண்ணம் கண்டேன்
கழல் தொழுது நின்றேன்
வேல் வண்ணம் கண்டேன்
விழுந்து நான் விட்டேன்

மால் மருகன் முருகன்
மா அடியைப் பற்றினேன்  
பால் வண்ணங் கண்டேன் 
பரவசத்தில் மூழ்கி விட்டேன் !

சேல் கொண்ட கண்ணழகி
தேவ யானை கண்டேன்
மனத்தால் அரு கணைந்த
வனக்குறவர் மகள் கண்டேன்

அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய் !


 















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்… அவுஸ்திரேலியா 





காலனைக் காலால் உதைத்ததும் சிவமே
கண்ணப்பன் கண்ணை ஏற்றதும் சிவமே
ஆலமாம் விஷத்தை உண்டதும் சிவமே
அனைத்துமாய் எங்கும் இருப்பதும் சிவமே

பிட்டுக்காய் மண்சுமந்து நின்றதும் சிவமே
பிரம்படி ஏற்றிட வந்ததும் சிவமே
கெட்டவர் ஆயினும் கேட்டிடும் வரத்தைக் 
கொட்டியே கொடுப்பதும் சிவமே ஆகும்

விண்ணும் சிவமே மண்ணும் சிவமே
உண்ணும் உணவெலாம் கொடுப்பதும் சிவமே
எண்ணம் சிவமே எழுத்தும் சிவமே
இயக்கம் சிவமே இயக்குநர் சிவமே

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர- 10…..சங்கர சுப்பிரமணியன்.

 பல நூற்றாண்டுகளுக்கு முன் நூறு மீட்டர் உயரமும் ஏழு


அடுக்குகளும் கொண்ட மிகவும் பெரிய மரத்திலான பகோடா என்ற இரட்டைக் கோபரங்கள் இருந்தன. அன்றைய கால கட்டத்தில் அதுதான் உலகிலேயே மரத்திலான பெரிய கட்டிடமாகும். எதிர்பாராமல் ஏற்பட்ட நிலச்சரிவு, தீ மற்றும் மின்னலால் அவை அழிந்து போயின.


இன்று அதே இடத்தில் சிறிய கண்களைக் கவரும் நிறத்துடன் இந்திய தொன்மையான தூபிகளின் அடிப்படையில் நவீன முறையில் திரும்பவும் கட்டப்பட்டுள்ளது. இது தனித்துவமாக தங்கம்போன்ற மஞ்சள் நிறத்துடன் குடை போன்று உச்சியில் கோபுரவடிவில் இருப்பதால் வரலாற்று வழிவந்த பழைய கோபரத்தை தழுவியதாக
காண்படு கிறது.

அசோக தூபியை நினைவுச் சின்னமாக இங்கே நிறுவியிருப்பதன்

காரணத்தைப் பார்ப்போமா? புத்தமதம் இந்தியாவில் தோன்றியபோதும் அதற்குண்டான அங்கீகாரம் அன்று அங்கு வழங்கப்படவில்லை. அதன் காரணத்தை மதம் மற்றும் வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள். உண்மையையும் ஒளியையும் மறைத்துவிட செய்துவிட முடியாது.

அதனால் புத்தமதம் இந்தியா தாண்டி நன்றாகப் பரவியது. சிறப்படைந்த பின் உரிமை கொண்டாடுவது வழக்கம்தானே.
புத்தமதம் பேரரசர் அசோகர் காலத்தில் உச்சம் பெற்றிருந்தது. புத்த மதத்தில் சிங்கத்தின் பொருள் அரசு, அச்சமின்மை மற்றும் உச்ச அதிகாரம் போன்றவற்றின் பொருளாகும். அதனால் தான் புத்த மதத்தைப் பரப்ப்பும் வகை அடயாளமாக அசோக தூபியின் உச்சியில் சிங்கமுகம் செதுக்கப் பட்டது.

நான்கு சிங்கமுகத்தின் அடையாளம் நான்கு திசைகளிலும் புத்தமதத்தைப் பரப்ப வேண்டும் என்பதாகும். ஆனால் நாம் அசோக தூபியின் சிங்கமுகத்தை எடுத்து புத்தமதத்தை நாடுகடத்தினோம். ஆனால் அசோகரின் விருப்பப்படி புத்தமதம் வடக்கே சீனா தெற்கே இலங்கை கிழக்கே ஜப்பான் என்று பரவத் தொடங்கியது.

இதேபோல்தான் தமிழ் மொழியும். செம்மொழி என்ற அங்கீகாரத்தை மட்டும் அரசு கொடுத்தது. அதற்குண்டான சிறப்பைத் தரவில்லை. ஆனால் தமிழ் தன்சிறப்பால் உலகம் முழுக்க பரவியுள்ளது. எனவே எதன் சிறப்பையும் எவர் சிறப்பையும் திட்டமிட்டு அழித்து விடமுடியாது.

எழுத்தாளர் தி. ஞானசேகரனின் - பன்முக ஆளுமை




சித்ரா பௌர்ணமி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

படங்களில் நடிக்கத் தொடங்கிய காலம் தொட்டு எம் ஜி ஆர் , சிவாஜி என்று மாறி மாற்றி அவர்களுடன் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. அப்படி நடித்த ஜெயலலிதா சிவாஜியுடன் கடைசியாக நடித்த படம் சித்ரா பௌர்ணமி. 


 சிவாஜியுடன் நட்புறவில் இருந்த ஜெயலலிதாவின் தாயான சந்தியா அவரின் பல படங்களில் தொடர்ந்து நடித்தவராவார். ஆனாலும் திரைக்கு அறிமுகமாகி மூன்றாண்டுகள் கழித்தே கலாட்டா கல்யாணம் படத்தின் மூலம் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார். அதன் பின் பல வெற்றி படங்களில் அவர்கள் இணைந்து நடித்த போதும் புது நடிகைகளின் வருகையை தொடர்ந்து இதற்கொரு முடிவு வந்தது. அது சித்ரா பௌர்ணமி மூலம் முடிவானது. 

சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் படத்தை தயாரித்த இப்

படத்தையும் தயாரித்தது. அந்தப் படத்துக்கு கோபு கதை வசனம் எழுத தாதா மிராசி இயக்கி நகைச்சுவை கலந்த சமுகப் படமாக வந்து ஓரளவு வெற்றி கண்டது. மீண்டும் தங்களின் அடுத்த படத்துக்கு அவர்களை பயன்படுத்தாமல் மாதவன், பாலமுருகன் கூட்டணியிடம் படத்தை ஒப்படைத்தார்கள். ஆனால் அவர்களால் படத்தை வெற்றி படமாக்க முடியவில்லை. 

காரணம் படத்தின் கதைதான். ஒளிப்பதிவாளர் கர்ணன் ஏற்கனவே ஜெய்சங்கர் நடிப்பில் எடுத்து விட்ட பட கதைகளை தொகுத்து சிவாஜியை நடிக்க வைத்து படமாக்கியது எடுப்பட வில்லை. 

இலங்கைச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை

ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது - ஜனாதிபதி தெரிவிப்பு

வட பகுதி மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம் - அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதி!

நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான பணமோசடி வழக்கு ; மேலதிக விசாரணை நடத்த சட்டமா அதிபர் ஆலோசனை

மஹர சிறைச்சாலையில் மோதல் கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு பலப்படுத்தல் – ஊரடங்கு தொடர்கிறது



ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை

Published By: Vishnu

31 Jul, 2026 | 07:41 PM

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைத்தும் அதை தடுக்க தவறியமை மேலும் தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 

உலகச் செய்திகள்

இஸ்ரேல் "மிகவும் மகிழ்ச்சியாக" இருக்கிறது - ட்ரம்ப்

ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஈரானுடன் நட்புறவான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன – டொனால்ட் டிரம்ப்



இஸ்ரேல் "மிகவும் மகிழ்ச்சியாக" இருக்கிறது - ட்ரம்ப்

01 Aug, 2026 | 10:01 AM

காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதமேந்திய பலஸ்தீனக் குழுக்களை முழுமையாக ஆயுதமேற்கச் செய்வதற்காக, தன்னுடைய "அமைதி வாரியம்" எட்டிய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் "மிகவும் மகிழ்ச்சியாக" இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இஸ்ரேலுடன் ஒரு புரிதலைக் கொண்டுள்ளோம். இதுகுறித்து இஸ்ரேல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்ரேல் நமக்கு உதவியது. அவர்கள் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர்" என்று ட்ரம்ப் கூறினார். 

"இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்குமா? நிச்சயமாக, அங்கு நிலவுவது மிகவும் சிக்கலான ஒரு சூழல்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

சிட்னி அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோவில் - ஆடிப்பூரத் திருவிழா 2026

 ஆடிப்பூரத் திருவிழா அன்னை துர்க்கை அம்மன் இவ்வுலகில் அவதரித்து, தனது அருளாலும் ஆசிகளாலும் பக்தர்களைக் காக்க வந்ததைப் போற்றும் புனித விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் மாதமான ஆடி அம்மனுக்குரிய மிகவும் புனிதமான மாதமாகும். இவ்வாண்டு 2026 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, புதன்கிழமை முதல் 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வரை 10 நாள் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.

திருவிழாவின் ஒவ்வொரு இரவும் ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவ மூர்த்தி பிரதட்சிணை ஆகியவை பக்தி பூர்வமாக நடைபெறும்.

ஆடிப்பூரத் தேர்த்திருவிழா
ஞாயிற்றுக்கிழமை, 2026 ஆகஸ்ட் 9 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும்.

சிறப்பு ஆடிப்பூர பூஜை
வெள்ளிக்கிழமை, 2026 ஆகஸ்ட் 14 அன்று மாலை 5.30 மணிக்கு, 108 பால்குட அபிஷேகத்துடன் சிறப்பாக நடைபெறும்.

அன்னை துர்க்கை அம்மனின் அருளைப் பெற அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.


























இயற்கையே உண்மையான குரு

 மனிதன் என்பவன், ஆத்ம நிலையிலிருந்து பரமாத்ம நிலையை நோக்கி முன்னேறுபவனே ஆவான். தனிப்பட்ட ஆன்ம உணர்விலிருந்து, அனைத்தையும் உள்ளடக்கிய பரமாத்ம உணர்வை அடைவதே மனிதப் பிறவியின் உயர்ந்த குறிக்கோள். அந்தப் பயணத்தில் வெற்றி பெறுவதற்கு, இறைவனால் நிறைந்திருக்கும் இயற்கை, ஆரம்பம் முதல் இறுதி வரை நமக்கு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் விளங்குகிறது.

நாம் நம்பிக்கையுடன் சார்ந்து கொள்ள வேண்டிய உண்மையான குரு இயற்கையே ஆகும். இறைவன் நமக்கு நேரடியாகப் போதிப்பதில்லை; நம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையின் வழியாகவே தனது போதனைகளை வழங்குகிறார்.

சிறு குழந்தைகளுக்கு “ஓம்” என்று கற்பிக்கும் போது, நாம் அதை உரக்க உச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், பலகையில் “ஓம்” என்று எழுதிக் காட்டுகிறோம். அதுபோலவே, இறைவன் இயற்கையின் ஒவ்வொரு துகளிலும் தனது தெய்வீக “ஓம்” என்னும் முத்திரையைப் பதித்துள்ளார். அந்த இயற்கை என்னும் பலகையிலிருந்தே நாம் இறைவனை அறிந்துகொள்ள வேண்டும்.

எனவே, உலகத்தை வெறுத்து விலகாதீர்கள்; இயற்கையை இகழாதீர்கள். பிரபஞ்ச நாயகனாகிய இறைவனை ஒரு பெயரிலோ, ஒரு உருவத்திலோ மட்டும் கட்டுப்படுத்த வேண்டாம். அவருடைய எல்லா திருநாமங்களையும் திருவுருவங்களையும் அன்போடு ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் அன்பின் எல்லைகளை விரிவுபடுத்தி, உலகம் முழுவதையும் அரவணையுங்கள்.

ஒரு சிறிய உதாரணத்தை நினைத்துப் பாருங்கள். மதிய உணவில் பருப்பு வழங்கப்பட்டால், அதில் உப்பு குறைவாக இருந்தால் உடனே அதை ஒதுக்கிவிடுகிறோம். நாவின் ஒரு கணநேர சுவைக்காக நாம் இவ்வளவு கவனம் செலுத்துகிறோம். அப்படியானால், இந்த பூமியில் எழுபது அல்லது எண்பது ஆண்டுகள் வாழ வேண்டிய வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அடைவதற்காக நாம் எவ்வளவு அதிக அக்கறையுடன் வாழ வேண்டும்!

நற்குணமே வாழ்க்கையின் உப்பு. உப்பு இல்லாத உணவு சுவையற்றதுபோல், நற்குணம் இல்லாத வாழ்க்கையும் அர்த்தமற்றதாகிவிடும். எல்லா நற்குணங்களிலும் உயர்ந்தது அன்பு ஆகும். அன்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலமே அன்பு பெருகுகிறது; பகிரப்படும் அன்பே தெய்வீக அன்பாக மலர்கிறது.

எனவே, இப்பிரபஞ்சம் முழுவதையும் உங்கள் குருவாக மதித்து வாழுங்கள். இயற்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் இறைவனின் போதனையை உணருங்கள். மனித வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அறிந்து, அன்பும் நற்குணமும் நிறைந்த வாழ்வை நடத்துங்கள்.

குருபூர்ணிமா திருநாளில் நான் உங்களுக்குக் கூற விரும்பும் முக்கியமான செய்தி இதுவே.

ஆத்ம சக்தியே ஆனந்தத்தின் ஆதாரம்

 இயற்கையின் எல்லாப் பகுதிகளிலும் மின்சக்தி நிறைந்துள்ளது. ஆனால் மனிதன் உருவாக்கிய பொருத்தமான கருவிகளின் மூலம் மட்டுமே அந்த மின்சக்தியைச் சேகரித்து, சேமித்து, பயனுள்ளதாகப் பயன்படுத்த முடிகிறது. அதைப் போலவே, எங்கும் நிறைந்திருக்கும் ஆத்ம சக்தி (தெய்வீக உள்ளாற்றல்) மனித உடலில் நிலைபெற்று, நரம்புகள் என்னும் நுண்ணிய வழித்தடங்கள் மூலம் உடலெங்கும் பரவி, நமது சிந்தனைக்கும் செயல்களுக்கும் ஒளியையும் ஆற்றலையும் அளிக்கிறது.

இந்த உடல், மனம், புலன்கள் ஆகியவற்றின் செயல்கள் அனைத்தும் நிலையற்ற உலக இன்பங்களை நோக்கி அல்ல; நிலையான பேரின்பமான ஆனந்தத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்.

உடலின் ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு நரம்பிலும் அறிவாகப் பாய்ந்து கொண்டிருக்கும் உயிர்சக்தி கூட ஆத்மாவின் பிரதிபலிப்பே ஆகும். பிறந்த அனைத்திற்கும் இறப்பு நிச்சயம். வருவது போக வேண்டும் என்பது இயற்கை நியதி. ஆனால் பிறப்பே இல்லாத ஒன்றுக்கு இறப்பும் இல்லை.

ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. அது வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை, பலவீனமடைவதுமில்லை. அதற்கு வரலாறும் கிடையாது. ஆத்மாவைப் பற்றி கூறக்கூடிய ஒரே உண்மை – “அது இருக்கிறது” என்பதே. அது எப்போதும் தூய அறிவாகவும், எப்போதும் பேரானந்தமாகவும் விளங்குகிறது.

ஒரு பொருளை விரும்பும் உந்துதல் இச்சாசக்தி (விருப்ப சக்தி) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த இச்சாசக்தியும் ஆத்ம சக்தியிலிருந்தே தோன்றிய ஒன்றாகும். உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் தெய்வீக சக்தியின் வெளிப்பாடே அது. எனவே, அந்த உயர்ந்த சக்தியைத் தீமையை விளைவிக்கும் பொருட்களையும் நிலையற்ற ஆசைகளையும் நாடுவதன் மூலம் தாழ்த்திவிடாதீர்கள்.

இச்சாசக்தி தூய்மையடைந்து, இறைவனை நோக்கித் திரும்பும்போது அதுவே அன்பாக (பிரேமையாக) மலர்கிறது. அந்த அன்பு, இறைவனை நோக்கிய விருப்பமரத்தில் விளையும் இனிய கனியாகும்.

ஆனால் அந்தக் கனிக்கு கசப்பான தோல் உள்ளது; அது மாயை. அதனுள் கடினமான விதைகள் உள்ளன; அவை பேதபுத்தி, அதாவது ‘நான்’, ‘நீ’ என்ற வேற்றுமை உணர்வு. இந்த மாயையையும் வேற்றுமை எண்ணத்தையும் நீக்கிவிட்டால்தான் கனியின் உண்மையான இனிமையைச் சுவைக்க முடியும்.

அந்த இனிய சாறு எதுவோ, அதுவே ஆத்மா அருளும் பேரானந்தம் (ஆனந்தம்) ஆகும். அதனை அனுபவிப்பவனே உண்மையான அமைதியையும், அன்பையும், தெய்வீக வாழ்வின் நிறைவையும் அடைகிறான்.

அனசூயா – பொறாமையற்ற தூய மனமே இறையனுபவத்திற்கான வாயில்

 அனசூயா என்பது பொறாமை, அழுக்காறு, தீய எண்ணம் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலையாகும். எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை நெருக்கமாகவும், நேரடியாகவும், தனிப்பட்ட அனுபவமாகவும் உணர விரும்புபவர்களுக்கு இந்த அனசூயா என்னும் உயரிய பண்பு இன்றியமையாததாகும். ஆன்மீகப் பாதையில் செல்லும் ஒவ்வொரு சாதகரும் இந்த நற்குணத்தைத் தவறாமல் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அனசூயா என்பது மனிதனின் ஆளுமையைத் தூய்மையாக்கி, பளிங்கைப் போல வெளிப்படையாக மாற்றும் தெய்வீகப் பண்பாகும். இதற்கு மாறாக, அசூயை அல்லது நிலையான பொறாமை மனிதனின் மனநோய்களுக்கும் உடல்நோய்களுக்கும் மூலக் காரணமாக விளங்குகிறது. மன அமைதியையும் அக அமைதியையும் பெற விரும்பும் மனிதன், பொறாமை என்னும் மனவியாதியை தனது உள்ளத்திலிருந்து முற்றிலும் அகற்றி, இதயத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

மனிதன் முதலில் உண்மையான மனிதனாக உயர வேண்டும்; அதன் பின்னரே தெய்வீக நிலையை அடைய முயல வேண்டும். பிறரிடம், சிறிய விஷயங்களில்கூட பொறாமை கொள்வது மனிதாபிமான உணர்வுகளை அடக்கி, உள்ளத்தின் உயர்ந்த பண்புகளைச் சிதைத்துவிடுகிறது.

இன்றைய மனிதர்கள் தங்களுடைய நேரத்தையும் ஆற்றலையும் பிறரைக் குறை கூறுவதிலேயே வீணடிக்கின்றனர். ஆனால், பிறரின் குறைகளைத் தேடி, அவற்றை வெளிக்கொணர்வதே மிகக் கொடிய பாவங்களில் ஒன்றாகும் என்பதை அவர்கள் உணருவதில்லை.

அர்ஜுனன், பொறாமை, அழுக்காறு, பகைமை ஆகிய கொடிய குணங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தான். அதனால்தான் அவன் “அனசூயன்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். அந்த உயர்ந்த தகுதியினாலேயே பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உலகிற்கு அமுதமாய் விளங்கும் பகவத் கீதையின் அருள்மொழிகளை அவனுக்குப் போதிக்கத் தகுதியானவனாக அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்தார்.

பாடம்:
பொறாமையற்ற தூய மனமே ஆன்மீக முன்னேற்றத்தின் அடித்தளமாகும். பிறரின் நன்மையில் மகிழ்ந்து, குறை காணும் பழக்கத்தை விட்டொழித்து, அன்பு, கருணை, மனிதநேயம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால் மட்டுமே இறையருளையும் உண்மையான அக அமைதியையும் அனுபவிக்க முடியும்.

இறைவன் செய்வதெல்லாம் நன்மைக்கே

 இவ்வுலகிலுள்ள அனைத்து படைப்புகளுக்கும் ஆதாரமும் ஆதரவுமானவர் இறைவன். இறைவன் ஏன் ஒரு செயலை ஒரு குறிப்பிட்ட முறையில் செய்கிறார் என்று எவராலும் கேள்வி எழுப்ப முடியாது. அவர் இப்பிரபஞ்சத்தின் பரம்பொருளும் பரமாதிபதியும் ஆவார். தமது தெய்வீக சங்கல்பத்தின்படி அவர் செயல்படுகிறார். ஆனால் அவர் செய்யும் ஒவ்வொரு செயலுமே உலக நலனுக்காகவே அமைகிறது.

எடுத்துக்காட்டாக, காற்று இல்லாத இடமோ காலமோ எங்கும் இல்லை. காற்றை நம்மால் கண்களால் காண முடியாவிட்டாலும், அதன் இருப்பை நாம் உணர்கிறோம். அதுபோலவே, இவ்வுலகில் நடைபெறும் மிகச் சிறிய செயலிலிருந்து மிகப் பெரிய நிகழ்வுவரை அனைத்தும் இறைவனின் திருவுளத்தின்படியே நடைபெறுகின்றன.

சில சமயங்களில் இறைவனின் ஒரு செயல் நமக்கு துன்பமாகவோ, சிரமமாகவோ தோன்றலாம். அது நமது தனிப்பட்ட பார்வை மட்டுமே. உண்மையில், இறைவனின் படைப்பில் துன்பம் என்ற ஒன்று இல்லை. அவர் செய்வதெல்லாம் மனிதகுலத்தின் நலனுக்காகவே அமைகிறது.

பலர், “ஏன் இறைவன் எனக்கு இத்தனை துன்பங்களையும் சோதனைகளையும் கொடுத்தார்?” என்று மனம் உடைந்து வருந்துகின்றனர். ஆனால் இறைவன் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை; யாருக்கும் துன்பம் அளிப்பதுமில்லை. துன்பங்களும் சிரமங்களும் என்பது நமது மனம் உருவாக்கும் உணர்வுகளே.

இறைவனின் படைப்பில் உள்ள அனைத்தும் உயிர்கள் இன்பமாகவும் நலமாகவும் வாழ்வதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், துயரத்தில் இருந்தாலும், “இது அனைத்தும் எனது நன்மைக்காகவே நடைபெறுகிறது” என்ற உறுதியான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் செய்வதெல்லாம் நம்மைத் துன்புறுத்துவதற்காக அல்ல; நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கும் வாழ்வின் உயர்விற்கும், இறுதியில் நன்மை விளைவிப்பதற்காகவே என்பதை உறுதியாக உணர்ந்து வாழ்வதே உண்மையான பக்தியின் அடையாளமாகும்.