திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும் !
மணிவாசகப் பெருமானை மனத்தில் இருத்துவோம் !
தேனை நாடி வண்டுகள் ஓடும்.தேனைச் சுவைப்பதில் வண்டுகளுக்கு பேரானந் தம். இந்த வண்டு மற்றைய வண்டுகள் போன்றதன்று.இவ் வண்டு திருவாதவூரில் இருந்து வந்த வண்டு. ஏனைய வண்டுகள் பல மலர்களையும் நாடிநிற்க - வாதவூர் வண்டு; வேத உபநிடதங்களை நாடி அங்கு திருவாசகம் என்னும் உயரிய தேனைப் பருகி எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறது.அந்த வண்டு வழங்கிய தேனான திருவா சகம் - தொட்டாலும் இனிக்கும்.கேட்டாலும் இனிக்கும். படித்தாலும் இனிக்கும்.சொல் லச் சொல்ல இனிக்கும் சொற்களால் ஆனதுதான் அந்த வாசகம் " திருவாசகம் ". இதனால்த்தான் "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் " என்று பலரும் வியந்து போற்றும் நிலை அமைந்து விட்டது.
திருவாதவூரில் பிறந்தபடியால் திருவாதவூரர் என்றும் , மணிமணியான வார்த்தை களை வழங்கியதால் மணிவாசகர் என்றும் , அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சைவத்துக்கும் , தமிழுக்கும் மாணிக்கமாய் அமைந்தமையால் மாணிக்கவாசகர் என் றும் யாவராலும் பெருமதிப்புடன் அழைக்கப்பட்டர்.
அந்தணகுலத்தில் பிறந்து , பேராளுமை மிக்கவராய் விளங்கினார் மணிவாசகப் பெருமான் என்று அவரைப்பற்றி திருவாதவூரடிகள் புராணம் வாயிலாக அறிகின் றோம். மணிவாசகப் பெருமானின் ஆளுமையினை அவர் வாழ்ந்த பாண்டி நாட்டின் அரசன் - அரிமர்த்தன பாண்டியன் அகத்தில் இருத்தி அவரை தனது அரசாட்சியில் முதலமைச்சர் ஆக்கினான். அத்துடன் அவரின் ஆற்றல்களை மெச்சி " தென்னவன் பிரம்மராயன் " என்னும் பட்டத் தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினான்.மன்னவன் இவ்வாறு பெருமைப்படு த்தினான் என்பதை
மனம் வலிக்கிறது மறைவு கண்டு!
என்னுள் தோன்றிய எதிர்பாராதது
வெங்கல குரலில் கவிதை சொல்லி
எங்களை ஈர்த்த இனிய நண்பரவர்
இலக்கிய கலை சங்கப் பயணமும்
இலக்கில்லை என்று மறைந்தீரோ
உலகை வலம்வந்த உயர்கல்விமான்
உலகில் இல்லை கண்ணீர் வடிகிறது
நகைச்சுவை மிகுந்த அவர் பேச்சும்
வகைவகையாய் செவிக்குணவாகும்
நகையறு முகமாய் எமையுமாயாக்கி
தகையிலவென தனியிடம் சென்றீரா
நேற்று முன் தினமன்றோ கதைத்தீர்
கூற்றுவன் வருவதை அறிந்திலையா
ஆற்றொனாத் துயரில் எமை யாழ்த்தி
வேற்றுலகு செல்வீரென அறிந்திலனே
இன்னல் நிறை இவ்வுலகு வேண்டாமென
கன்னல் சுவை நாடி கனதூரம் சென்றீரோ
என்னுள் தோன்றியெழும் துயரம் யாவுமே
தன்னில் இருந்தார் தகைசார்ந்தார் கண்!
-சங்கர சுப்பிரமணியன்.
நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது!
அன்று வியாழக்கிழமை. வாரத்தில் ஏழு கிழமைகள் உள்ளன. ஒவ்வொரு கிழமைகளை ஒவ்வொரு கடவளுக்கென்று மனிதன் வகுத்து விட்டான். இருப்பவர்களோ ஏகப்பட்ட கடவுளர். இதில் கடவுளருக்கு கிழமை பற்றாக்குறை. கடவளுக்கே இந்த நிலை என்றால் பற்றாக்குறையால் அரசு வரவுசெலவுத் திட்டத்தில் துண்டு விழுவதில் வியப்பில்லை.
பெங்களூரில் மல்லேஸ்வரம் சீரடி சாய்பாபா கோவிலில் சாய்பாபாவின் முன் வெகு நேரமாக வேல்முருகன் கண்மூடி மனமுருக வேண்டிக் கொண்டிருந்தார். அவர் அக்கோவிலுக்கு அடிக்கடி வருபவர். அதனால் கோவிலில் பூஜை செய்பவருக்கும் வேல்முருகனுக்கும் நல்ல பழக்கம். ஆதலால் அவர் வேல்முருகன் வேண்டுதலை முடித்தபின்,
சரஸ்வதி சபதம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
உலகில் சிறப்போடு வாழ கல்வியா, செல்வமா, வீரமா அவசியம்
என்ற சர்ச்சை இன்றும் நிலவி வருகிறது. இந்த சர்ச்சை தேவ லோகத்தில் மூன்று தேவியர்களுக்கு மத்திலும் எழுந்ததால் , அல்லது எழுந்தால் விடை என்னவாக அமையும் என்பதை விளக்கும் பொருட்டு அறுபது வருடங்களுக்கு முன் தயாரான படம் சரஸ்வதி சபதம்.
சரஸ்வதியிடம் , செல்வம் தான் உலகில் பெரியது என்றும், செல்வத்துக்குரிய கடவுள் லஷ்மியிடம் கல்விதான் பெரியது என்றும், வீரத்துக்குரிய துர்க்கையிடம் கல்விதான் பெரியதென்றும் கூறி கலகத்தை மூட்டி விடுகிறார். இதன் விளைவாக மூன்று தேவியர்களும் பூலோகம் சென்று தங்கள் சக்திதான் பெரியது என்று நிரூபிக்க கங்கணம் கட்டிக் கொள்கிறார்கள். வாய் பேச முடியாத ஊமையை பெரும் அறிஞனாக ,கவிஞனாகவும் , பிச்சைக்காரியை நாட்டின் அரசியாகவும், தொடை நடுங்கி கோழையை மாபெரும் வீரனாகவும் மாற்றி விடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து யார் சிறந்தவர் என்ற பலப் பரீட்சை கவிஞன், அரசி, வீரன் மூவரிடமும் தோன்றுகிறது. முடிவில் யார் ஜெயித்தார்கள் என்பதே படத்தின் முடிச்சு.
இலங்கைச் செய்திகள்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இராணுவ வீரருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இராணுவம்!
வவுனியாவில் அனுமதியின்றி வாகன பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் ; மோட்டார் சைக்கிள் பறிமுதல் ; பலருக்கு எதிராக வழக்கு!
உள்நாட்டு இறைவரி திணைக்கள யாழ். அலுவலகத்தில் வரிசெலுத்துவோர் அடையாள அட்டை இலக்கத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருப்பு!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இராணுவ வீரருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இராணுவம்!
23 Jun, 2026 | 02:21 PM
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீடொன்று அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.
புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் எம்.எம் ராஜா ராஜா எனும் இராணுவ வீரருக்கு இராணுவத்தினரின் "சேவா வனிதா" திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் கட்டப்படும் இந்த வீடானது, எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி கட்டி முடித்து கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வீட்டுக்கான அடிக்கல்லினை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நாட்டி வைத்தார்.
உலகச் செய்திகள்
வெனிசுவேலா சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் 164 பேர் பலி, 971 பேர் காயம்!
அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம்: வளைகுடா நாடுகளின் ஆதரவைத் திரட்ட பஹ்ரைனில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை!
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலகல்
ஜப்பானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்: டோக்கியோ 5.8 ரிச்டர் அளவில் பதிவு!
வெனிசுவேலா சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் 164 பேர் பலி, 971 பேர் காயம்!
25 Jun, 2026 | 06:38 PM
தென்அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் புதன்கிழமை (24) இரவு ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதோடு, 971க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வியாழக்கிழமை (25) அறிவித்துள்ளார்.
முன்னதாக பலி எண்ணிக்கை 32 ஆகக் காணப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.2 ஆகவும், அடுத்த ஒரு நிமிடத்திற்குள் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.5 ஆகவும் பதிவாகியுள்ளது.
இராக சங்கமம் - 4 - இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்களிடையே மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில், ஒரு நடமாடும் மார்பகப் பரிசோதனை அலகை வாங்குவதற்கான நிதி திரட்டுவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும். - 04/07/2026
மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதலை அனைவருக்கும் எட்டக்கூடியதாக்குவோம்
இலங்கையில் பெண்களிடையே அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோயாகும். இது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் சுமார் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறியும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வசித்து வருகின்றனர்; அவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
கொழும்பு போன்ற பெரிய நகரங்களைப் போல அல்லாமல், இப்பகுதிகளில் போதுமான பரிசோதனை வசதிகள் இல்லை. மேலும், நடமாடும் மருத்துவ சேவைகள் இல்லாத காரணத்தால், பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது அல்லது மருத்துவ உதவியைப் பெறுவதில் தாமதம் செய்கின்றனர். இதன் விளைவாக, நோய் பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. இது சிகிச்சையை சிக்கலாக்குவதோடு, நோயாளிகளின் குணமடையும் வாய்ப்பையும் குறைக்கிறது.
இந்தப் பிரச்சினைக்கான ஒரு நடைமுறைத் தீர்வு தற்போது நம் கைகளுக்குள் உள்ளது. சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலைநிறுத்தப்படவுள்ள ஒரு நடமாடும் மார்பகப் பரிசோதனை அலகை (Mobile Breast Scanning Unit) கொள்வனவு செய்வதற்காக சுமார் அமெரிக்க டாலர் 500,000 நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நவீன மருத்துவப் படப்பிடிப்பு (Imaging) தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த அலகு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு வழக்கமாகச் சென்று, தற்போது பரிசோதனை வசதிகளைப் பெற முடியாத அல்லது மிகவும் குறைந்த அணுகல் வாய்ப்புள்ள பெண்களுக்கு நேரடியாக சேவையை வழங்கும்.
இந்தியப் பண்பாட்டின் ஆன்மிக அடித்தளம்
குடிசையும் கோட்டையும் இரண்டும் ஒரே பூமியின் மேல் கட்டப்படுகின்றன. அதுபோலவே, எல்லா மதங்களும், சமயங்களும், ஆன்மிக ஒழுக்க முறைகளும் வேதத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளன. இந்தியப் பண்பாட்டின் தனிச்சிறப்பு என்னவெனில், இங்கு உடை மற்றும் நடத்தை, மொழி மற்றும் இலக்கியம், வாழ்க்கை முறை, உயரிய இலட்சியங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் மனிதனின் ஆன்மிக முன்னேற்றத்தை நோக்கியவையாக அமைந்துள்ளன. அவை உடலைவிட ஆன்மாவே உயர்ந்தது, ஸ்தூலத்தைவிட சூட்சுமமே சிறந்தது என்பதை வலியுறுத்துகின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் அந்த உயரிய குறிக்கோளுக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடலைப் போஷித்து, நோயின்றி பாதுகாக்க வேண்டும். ஏன்? அது ஆன்மிக சாதனைக்கு ஏற்ற கருவியாக இருக்க வேண்டும் என்பதற்காக. ஆன்மிக சாதனை எதற்காக? தன்னுடைய உண்மையான இயல்பை உணர்வதற்காக. ஸ்தூலத்தின் அடிப்படை சூட்சுமம்; மனிதனின் அடிப்படை தெய்வீகம். இந்தியப் பண்பாடு, வெளிப்படையாகத் தோன்றும் உருவங்களை அல்ல, அவற்றின் அடித்தளமான உண்மையை நோக்கிப் பார்ப்பதற்கே மனிதனை வழிநடத்துகிறது. நீண்ட காலமாக, இந்தக் கண்ணோட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் இயல்பான வாழ்க்கை நோக்கமாக இருந்தது. அது அவர்களின் இரத்தத்தோடு கலந்திருந்தது என்று கூறலாம். தாயின் மடியில் இருந்து, வயலில் உழைக்கும் தந்தையிடமிருந்து, பள்ளியில் ஆசிரியரிடமிருந்து, அண்டை அயலார், நண்பர்கள், உறவினர்கள், முதியோர்கள், இளையோர்கள் என சுற்றியிருந்த அனைவரிடமிருந்தும், அவர்கள் செய்த செயல்கள், எழுதியவை, பேசியவை அனைத்திலிருந்தும் இந்த உயரிய பண்பாடு இயல்பாகவே அவர்களுள் ஊறிப்போனது.
தர்மம் – மனிதகுலம் முழுவதற்குமான உலகளாவிய வாழ்வியல் நெறி
‘தர்மம்’ என்ற சொல்லின் ஆழத்தையும், அதன் பரந்த அர்த்தத்தையும் முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய வேறு எந்தச் சொல்லும் இல்லை. ‘சரியான செயல்’ அல்லது ‘நீதிநெறியுடனான வாழ்க்கை’ போன்ற மொழிபெயர்ப்புகள், தர்மத்தின் உண்மையான பொருளை முழுமையாக எடுத்துரைக்க இயலாது. உண்மையில், ‘தர்மம்’ என்பதற்கு இணையான சொல் ‘தர்மம்’ மட்டுமே. பலர் தர்மத்தை ‘மதம்’ என்று தவறாகப் புரிந்துகொள்கின்றனர். ஆனால் ‘மதம்’ என்ற சொல், தர்மத்தின் எல்லையற்ற அர்த்தத்தை வெளிப்படுத்த முடியாது. தர்மம் ஒரு பரந்த பெருங்கடல் போன்றது; மதம் ஒரு சிறிய ஏரி போன்றது. ஒரு மதத்தின் வரம்பும் அதன் முக்கியத்துவமும் குறிப்பிட்ட நம்பிக்கையைப் பின்பற்றும் சிலருக்குள் மட்டுமே இருக்கும். ஆனால் தர்மம், இனம், மதம், மொழி, நாடு போன்ற எல்லா வேறுபாடுகளையும் தாண்டி, உலக மனிதகுலம் முழுவதற்கும் பொதுவானது. தர்மம் அனைவருக்கும் உரியது. மேற்கத்திய சிந்தனையில், ஒவ்வொரு மனிதருக்கும் சில உரிமைகள் உள்ளன என்பதே முக்கியமான கருத்தாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்திய ஆன்மீகக் கண்ணோட்டம் வேறுபட்டது. ஒவ்வொருவருக்கும் சில தர்மக் கடமைகள் உள்ளன; அவற்றை நிறைவேற்றுவதே வாழ்க்கையின் முதன்மைப் பொறுப்பு என்று அது வலியுறுத்துகிறது. உண்மையில், உரிமைகளும் தர்மமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. பெற்றோர் தங்களுடைய தர்மக் கடமைகளைச் சரியாக நிறைவேற்றினால், குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வளர்கின்றன. அதேபோல், குழந்தைகள் தங்களுடைய தர்மத்தை உணர்ந்து நடக்கும்போது, பெற்றோரின் உரிமைகளும் மதிப்பும் உயர்கின்றன. இதுபோலவே, ஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளை மனச்சாட்சியுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றினால், மாணவர்களின் உரிமைகள் வளர்ச்சி பெறும். மாணவர்கள் தங்களுடைய கடமைகளை ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் நிறைவேற்றினால், ஆசிரியர்களின் உரிமைகளும் கண்ணியமும் மேலும் உயர்வடையும். எனவே, தர்மம் என்பது வெறும் மதக் கோட்பாடு அல்ல; அது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பையும், கடமையையும், பரஸ்பர மரியாதையையும், சமுதாய நலனையும் நிலைநிறுத்தும் உலகளாவிய வாழ்வியல் நெறியாகும். தர்மம் நிலைத்திருக்கும் இடத்தில் உரிமைகள் இயல்பாக மலர்கின்றன; தர்மம் காக்கப்படும் சமுதாயமே அமைதி, நீதி, மற்றும் ஒற்றுமை நிறைந்த சமுதாயமாக விளங்கும்.
இறைவனின் ஆணையைப் பின்பற்றுவதே பாதுகாப்பான வாழ்க்கைப் பயணம்
ஒரு முதியவர் தனது குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அனைவருக்கும் தேவையான பயணச்சீட்டுகள் அவரிடமே உள்ளன. அவர் தனது குழந்தைகளிடம், “நான் இறங்கும் வரை நீங்கள் எந்த நிலையத்திலும் தனியாக இறங்கக்கூடாது; என்னுடன் சேர்ந்து மட்டுமே இறங்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். பயணத்தின் போது சில ரயில் நிலையங்களில் பலவிதமான தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. அவற்றைக் கண்டு குழந்தைகளுக்கு அவற்றை வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. இருந்தாலும், ரயில் புறப்பட்டுவிட்டால் தாங்கள் பின்னால் விடப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால், தந்தையின் கட்டளையை நினைத்து தங்களது ஆசையை அடக்கிக் கொள்கிறார்கள். நீண்ட நேரமாகத் தந்தை எந்த நிலையத்திலும் இறங்காததால், சில குழந்தைகள் பொறுமை இழந்து இடைப்பட்ட நிலையங்களில் இறங்க முயல்கின்றனர். அப்போது மூத்த குழந்தை, “அப்பாவின் கட்டளையின்படி நாம் விருப்பம்போல் இறங்க முடியாது” என்று அவர்களைத் தடுக்கிறது. இதேபோல், இறைவனே அனைவருக்கும் தந்தை. நாம் அனைவரும் வாழ்க்கை என்னும் நீண்ட பயணத்தில் செல்லும் அவருடைய பிள்ளைகள். “என் ஆணையைப் பின்பற்றுங்கள்; உங்கள் விருப்பப்படி எங்கும் வழி தவறி இறங்காதீர்கள்” என்று இறைவன் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், உலகில் பெரும்பாலானோர் அவரது கட்டளைகளைப் பின்பற்றுவதில்லை. தங்களது ஆசை, விருப்பு, வெறுப்புகளுக்கேற்பவே நடந்து கொள்கின்றனர். ரயிலில் பயணம் செய்தவர்கள், சரக்கு வண்டிகளில் ‘Return 5-98’ போன்ற அடையாளங்கள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பார்கள். குறிப்பிட்ட தேதியில் அந்த வண்டி பழுதுபார்க்கும் பணிமனைக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதையே அது குறிக்கிறது. இதை அறிந்து அதற்கான நடவடிக்கையை எடுப்பது நிலைய மேலாளரின் பொறுப்பாகும். அதேபோல், மனித வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் எப்போது இந்த உலகப் பயணத்தை முடித்து திரும்ப வேண்டும் என்பதை இறைவன் மட்டுமே அறிவார். அந்தக் கவலை அவருக்கே உரியது; மனிதன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இறைவனே பரம அதிகாரி. அவரது திருவுளப்படியே அனைத்தும் நடைபெறுகின்றன. ஆகையால், அவரது கட்டளைகளை நம்பிக்கையுடனும் பணிவுடனும் பின்பற்றி வாழ்வதே மனித வாழ்க்கையின் உண்மையான பாதுகாப்பும் உயர்வும் ஆகும்.
நற்செயல், பக்தி, தியானம் – ஞானத்தை நோக்கிய ஆன்மீகப் பயணம்
மலர் இல்லாமல் கனியைப் பெற முடியாதது போல, கர்மம் (நற்செயல்) இல்லாமல் பக்தி மலர முடியாது. மலர் கனியாகி இனிமை பெறுவது போல, பக்தி முதிர்ந்து இறுதியில் ஞானமாக மலர்கிறது. எனவே, தூய்மையான நோக்கத்துடனும் நற்சிந்தனையுடனும் புனிதமான செயல்களில் முதலில் ஈடுபட வேண்டும். இன்றைய காலத்தில் பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் ஆன்மீகச் சாதனைகளில் ஒன்று தியானம். ஆனால் பலர் மேற்கொள்ளும் தியானம், பாரதிய ஆன்மீகப் பண்பாட்டின் உண்மையான தத்துவத்திற்கேற்ப அமைந்ததல்ல. மனம் தூய்மையடையாமல் தியானம் செய்தால், பரமாத்மாவுடன் ஒன்றுபடும் உயர்ந்த நிலையை ஒருபோதும் அடைய முடியாது. செங்கற்களும் சுண்ணாம்பும் இல்லாமல் ஒரு வீட்டைக் கட்ட முடியுமா? அதுபோல, தேவையான ஆன்மீக அடித்தளமின்றி உண்மையான தியானம் சாத்தியமில்லை. சிலர், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சிறிது நேரம் தியானம் செய்தாலே போதும் என்றும், ஒருவரின் பழக்கவழக்கங்கள் எப்படியிருந்தாலும், மனதில் எத்தகைய எண்ணங்களும் உணர்வுகளும் இருந்தாலும், எந்த வாழ்க்கை முறையிலிருந்தாலும் தியானத்தில் வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இத்தகைய கருத்து சரியானதல்ல. ஒருவர் சில நேரம் அமைதியாக இருந்து, பயமோ கவலையோ இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே தியானம் செய்ய வேண்டுமென்றால், அதற்குப் பதிலாக மதுவையோ போதைப் பொருள்களையோ உட்கொண்டு சில மணி நேரம் உலகத்தை மறந்து இருக்கலாம். ஆனால் அதுவே தியானம் அல்ல. தியானத்தின் நோக்கம் அதைவிட அளவற்ற உயர்ந்தது. அதற்கு மிகவும் உயர்ந்த இலட்சியங்களும், கடுமையான ஒழுக்கமும், மனத் தூய்மையும் அவசியம். இல்லையெனில், பாரதத்தின் உயரிய ஆன்மீகப் பண்பாடு பெரிதும் பாதிக்கப்படும். எனவே, முதலில் உயர்ந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களை மனதில் நிலைநிறுத்த வேண்டும். மனிதப் பிறவியின் உண்மையான மகிமையையும் உயர்வையும் காத்து வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கையே உண்மையான தியானத்திற்கும், பக்திக்கும், இறுதியில் ஞானத்திற்கும் உறுதியான அடித்தளமாக அமையும்.
ஒழுக்கமான உணவுப் பழக்கம் – ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளம்
சுவையாக இருக்கும் உணவைப் பார்த்தால் நாம் வழக்கத்தை விட அதிகமாகச் சாப்பிடத் தோன்றுகிறது. ஆனால் நம் வயிற்றில் ஜீரண சக்தியாக விளங்கும் **வைஷ்வானரன்** (தெய்வீக ஜடராக்னி) தொடர்ந்து நம்மை எச்சரிக்கிறான்: “போதும்! இனி சாப்பிடாதே. கவனமாக இரு!” என்று. ஆனால் அந்த உள் எச்சரிக்கையை நாம் பெரும்பாலும் புறக்கணிக்கிறோம். “இந்த உணவு மீண்டும் எப்போது கிடைக்குமோ?” என்ற எண்ணத்தில், சுவையான உணவுகளை வயிறு நிரம்பிய பின்னரும் தொடர்ந்து உண்ணுகிறோம். அதன் விளைவாக, வயிறு தனது இயல்பான சக்தியை இழந்து பலவீனமடைகிறது; இறுதியில் உடல்நலக் குறைகள் தோன்றுகின்றன. எனவே, உணவு உண்பதில் ஒழுக்கம் மிகவும் அவசியம். இந்த ஒழுக்கத்தைப் பின்பற்றாவிட்டால் அஜீரணம் ஏற்படும். அஜீரணமே பல நோய்களின் மூல காரணமாகும். பெரும்பாலான உடல் நோய்கள் அனைத்தும் வயிற்றின் கோளாறுகளிலிருந்தே தோன்றுகின்றன. ஆகவே, வயிற்றை முழுமையாக நிரப்பாமல், அதில் முக்கால் பங்கு மட்டுமே நிரப்ப வேண்டும். அதாவது, இரண்டு பங்கு உணவாலும், ஒரு பங்கு தண்ணீராலும் நிரப்பி, மீதமுள்ள ஒரு பங்கை காலியாக விட வேண்டும். இப்படிச் செய்தால் உணவு உண்பதில் சரியான ஒழுக்கத்தைப் பின்பற்றியவராவீர்கள். இந்த ஒழுக்கம் ஒரு நாள் மட்டுமல்ல, தினமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். விடியற்காலையிலிருந்து இரவு வரை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். அது வழிபாடாக இருந்தாலும், நடப்பதாக இருந்தாலும், அமர்வதாக இருந்தாலும், உணவு உண்பதாக இருந்தாலும், ஒவ்வொன்றையும் கட்டுப்பாடுடனும் ஒழுங்குடனும் செய்ய வேண்டும். இவ்வாறு ஒழுக்கத்துடன் வாழும் வாழ்க்கையே பிறருக்கு முன்னுதாரணமாக அமையும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதே உண்மையான **கர்மயோகம்**. அந்த கர்மயோகம், செயல்களில் முழுமையையும் சிறப்பையும் அளித்து, மனிதனை உயர்ந்த வாழ்க்கைப் பாதைக்கு வழிநடத்தும்.
சம்ஸ்காரம் – மனிதனை உயர்த்தும் பரிணாமப் பயணம்
**சம்ஸ்காரம்** (பண்படுத்துதல் அல்லது மேம்படுத்துதல்) என்பது சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் உரியதல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அது பொருந்துகிறது. எந்தப் பொருளும் ஒரு மாற்றம் அல்லது பண்படுத்தும் செயல்முறையை அடைந்த பிறகே மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் மதிப்புமிக்கதாகவும் அமைகிறது. உதாரணமாக நெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். வயலில் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை அப்படியே உணவாக உட்கொள்ள முடியாது. அது அரைக்கப்பட்டு அரிசியாக மாற்றப்பட வேண்டும். இந்த மாற்றத்தின் மூலம், சாதாரண நெல்லைவிட அரிசியின் மதிப்பும் பயன்பாடும் பல மடங்கு உயர்கின்றன. எனவே, ஒரு பொருளை மாற்றியமைக்கும் செயல்முறையே அதை அதிக பயனுள்ளதாக்கி, மதிப்புமிக்கதாக்குகிறது. அதேபோல், பருத்தியையும் எடுத்துக் கொள்ளலாம். இயற்கையான நிலையில் இருக்கும் பருத்திக்கு மிகக் குறைந்த பயன்பாடே உள்ளது. ஆனால் அது நூலாக நூற்கப்பட்டு, பின்னர் துணியாக நெய்யப்படும்போது மனிதனுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகிறது. பருத்தியின் மதிப்புக்கும், அதிலிருந்து உருவாகும் துணியின் மதிப்புக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இதே விதி தங்கத்திற்கும் பொருந்துகிறது. சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் தங்கத் தாதுவிற்கும், பல்வேறு சுத்திகரிப்பு முறைகளுக்குப் பிறகு கிடைக்கும் தூய தங்கத்திற்கும் இடையே மதிப்பில் அளவிட முடியாத வித்தியாசம் உள்ளது. இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. உலகில் உள்ள எந்தப் பொருளும் உரிய பண்படுத்தும் செயல்முறையை மேற்கொள்ளாமல் உயர்ந்த மதிப்பைப் பெற முடியாது. அப்படியானால், இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருட்களையும் விட உயர்ந்த படைப்பாகிய மனிதன், தன்னுடைய உள்ளத்தையும் குணநலன்களையும் பண்படுத்திக் கொண்டு உயர்ந்த நிலையை அடைவது எவ்வளவு அவசியமானது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். மனித வாழ்க்கையின் உண்மையான மதிப்பு, அவன் மேற்கொள்ளும் இந்த உள்மாற்றம் மற்றும் ஆன்மீகப் பரிணாமத்தில்தான் இருக்கிறது.
சத்தியத் தேடல் – தினசரி ஆன்மீக ஒழுக்கமாக அமையட்டும்
சத்தியத்தைத் தேடுவது உங்கள் அன்றாட ஆன்மீக ஒழுக்கமாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இந்த முதன்மைக் கடமையை நிறைவேற்றுவதற்கே பயன்படுத்தப்பட வேண்டும். தவம் எனும் ஆன்மீகச் சாதனையால் உங்கள் புத்தி தூய்மையடையும் போதுதான், அதில் சத்தியம் தன்னை வெளிப்படுத்த முடியும். தவம் என்பது வெறும் உடல் வருத்தமல்ல. உயர்ந்த நோக்கத்துடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலுமே தவமாகும். ஆன்மீக உயர்வை ஏங்கும் எண்ணங்களும் செயல்களும் தவமே. கடந்த காலத் தவறுகளுக்காக மனம் வருந்தி, இனி தர்ம நெறியில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்ற உறுதியும் தவமே. புலனடக்கத்துடன் வாழ்வதும், வெற்றி–தோல்வி ஆகிய இரண்டிலும் சமநிலையுடன் இருப்பதும் தவத்தின் வெளிப்பாடுகளாகும். 'தபஸ்' என்ற சொல்லுக்கு வெப்பம், எரிச்சல், தீவிரம், உறுதியான முயற்சி என்ற பொருள்கள் உள்ளன. இந்தத் தவமே துறவுணர்வையும் ஒழுக்கத்தையும் வளர்க்கிறது. இன்றைய காலத்தில் மனிதனை வழிதவறச் செய்யும் கவர்ச்சிகள் ஏராளமாக இருப்பதால், இத்தகைய ஒழுக்கம் மிகவும் இன்றியமையாததாகும். இக்கலியுகத்தில் அறியாமை என்னும் இருள் மனித மனத்தைச் சூழ்ந்திருக்கிறது. அத்தகைய இருளில் நமது பாதையை ஒளிரச் செய்யும் சிறிய விளக்குகூட அளவற்ற அருமை உடையது. அதனால்தான் நீங்கள் சத்கர்மம் (நற்செயல்கள்), சதாசாரம் (நல்லொழுக்கம்), சத்பிரவர்த்தனம் (நல்ல மனப்பான்மை மற்றும் உயர்ந்த அணுகுமுறை) ஆகியவற்றைக் கடைப்பிடிக்குமாறு நான் அறிவுறுத்துகிறேன். இவற்றின் மூலம் நீங்கள் எப்போதும் இறைவனின் சந்நிதி உணர்வில் நிலைபெற முடியும். மேலும், உயர்ந்த ஆன்மீக உண்மைகளைச் செவிமடுக்க வேண்டும் (ஸ்ரவணம்). அவற்றை ஆழ்ந்து சிந்தித்து மனதில் பதியச் செய்ய வேண்டும் (மனனம்). பின்னர் அவற்றின் உண்மையை உணர்ந்த பின், ஆழ்ந்த பக்தியுடனும் மரியாதையுடனும் அவற்றின் மீது தியானிக்க வேண்டும் (நிதித்யாசனம்). மற்ற எல்லாச் செயல்களும் இரண்டாம் நிலை. ஆன்மாவை உயர்த்துவது இதுவே; உண்மையான நன்மையை அளிப்பதும் இதுவே.
.jpeg)

.jpeg)

.jpeg)

.png)
.png)

