தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

பழிக்குள் நான்வீழாமல் பார்த்திடுவாய் கணநாதா !

 

























மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



முப்பழம் விரும்பும் மூஷிக வாகனா
தப்பிதம் வாராத் தடுத்திடு விநாயகா
கப்பிய கரிமுகா கந்தனின் சோதரா
கைத்தலம் கொண்டு கழலடி பணிகிறேன்

அப்பமும் அவலும் சர்க்கரை மோதகம்
ஆவலாய் ஏற்றிடும் அருளுடை விநாயகா
எப்பவும் தப்பிதம் நிகழ்ந்திடா வண்ணம்
எந்தனைக் காப்பாய் கந்தனின் அண்ணா 

மனதிலுறை எண்ணம் நிறைவேற நாளும்
உனதருளைத் தாராய் உமையினது மைந்தா
வருவினைகள் ஓட  மனதில்  மகிழ்வாட
கரிமுகவா நீயும் கருணைபுரி  அப்பா

நினைவினின்றும் நீங்காத நேரிழை - -கலாநிதி பாரதி


 


சிவத்திரு தங்கம்மா அப்பாக்குட்டி

(7தை  1925 – 15 ஆனி 2008)





பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்







அஞ்சாத நெஞ்சுடனே வீராங் கனையாய்

    அற்புதநற் சிந்தனையைச் செயலில் வடித்து

நம்;சாதி யினரில்நலி வுற்றோர்க் காக

    நனிசிறந்து செயலாற்ற நாளும் பொழுதும்

துஞ்சாது உழைத்துயர்ந்த செஞ்சொல் அரசீ!

    துரந்தரியே உன்பணியை உனது தொண்டன்

விஞ்சுபுகழ் ஆறுதிரு முருகனெ னுமந்தணன்

    வெகுசிறப்பாய் ஆற்றுகிறான் வெற்றி உனதே!

 

எண்ணத்தைச் சீராக்கி ஈர உணர்வை

     எல்லோர்நெஞ் சங்களிலும் ஊற்றாய் நிறைத்தாய்

கண்ணுகுக்கும் நீர்துடைத்து வாழும் பலரும்

    கசிந்துருகி உனைநினைந்து தொழுவர் அன்றோ?

பண்புடையோய்  பணிகள்பல கனவாய்க் கண்டாய்!

    பார்வியக்க  நனவாக்கி நிறைவு கொண்டாய்

விண்ணிலுமுன் திருப்பணிகள் தொடரத் தானோ

    விருப்புடனே பூத்தேரில் விரைந்து சென்றாய்!

கவிதை..."இன்றெந்தன் கடமையெனக் கொள்வேனோ?"... மெல்போர்ன் அறவேந்தன்

 










கவியரசர் கண்ணதாசன் கவிதைகளில் வாழுகிறார் !

















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா







கண்ணதாசன் கவிதைக்கு ஈடுஇணை உண்டோ
எண்ணவெண்ண முடியாத எத்தனையோ தந்தான்
வண்ணத் தமிழாலே வாழ்வினையே வடித்தான்
வரகவியாய் கண்ணதாசன் மழையாகப் பொழிந்தான்

தொட்டிலுக்கும் பாடினான் கட்டிலுக்கும் பாடினான்
கெட்டதுக்கும் பாடினான் கெடுமதிக்கும் பாடினான்
பட்டிதொட்டி உள்ளாரும் படிப்பதற்கும் பாடினான்
படியாதார் பயனாகும் பாங்கினிலே பாடினான்

சமதர்மம் பாடினான் சன்மார்க்கம் பாடினான்
அவனிக்கு உகந்ததாய் ஆராய்ந்து பாடினான்
பண்ணெடுத்துப் பாடினான் பண்பாட்டைப் பாடினான்
பட்டதுன்பம் அத்தனையும் பதியும்படி பாடினான் 

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 9…..சங்கர சுப்பிரமணியன்.

 அடுத்ததாக நாங்கள் செல்ல வேண்டிய இடம். நாரா. நாராவில் நாரா


பூங்கா மற்றும் டோடைஜி டெய்ஷா, கசூகா டெய்ஷா என்று இரு புத்த ஆலயங்கள். இவற்றுள் நாரா பூங்கா மான்களுடனும் டோடைஜி டெய்ஷா இந்தியாவுடனும் சம்பந்தப் பட்டுள்ளன. புத்த மதமே இந்தியாவோடு சம்பந்தப் பட்டிருக்கும்போது  டெய்ஷா சம்பந்தப்பட்டிருப்பதில் வியப்பு என்ன வேண்டிக் கிடக்கிறது என்கிறார் மாடசாமி அண்ணாச்சி.


இந்த மாடசாமி அண்ணாச்சியை பக்கத்தில் வைத்துக் கொள்வது பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது மாதிரிதான். நாலும் தெரிந்தவர்கள் நம் பக்கத்தில் இருந்தாலே இதே கதிதான். அதனால்தான் சற்று விபரமானவர்கள் தம்மைவிட அறிவாளிகளை பக்கத்தில் வைத்துக்கொள்ள மாட்டார்களோ?

ஆனால் நான் அவரை தொல்லையாக நினைக்கவில்லை.

அவரிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்கிறேன். இன்னொன்றையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டன். நான் ஜப்பானில் இருக்கும்போது ஒவ்வொன்றையும் அவருக்கு அவ்வப்போது சொல்லவேண்டும் என்றொரு அன்புக்கட்டளை. அப்படி அப்பேட் செய்யும்போது அவர் சொன்னது என்னை சிந்திக் வைத்தது.

அப்டேட் பண்ணியதற்கு அவர் என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன். நான் பியூஷிமி இளாரி டெய்ஷா சென்றதைச் சொன்னபின் நாராவிலுள்ள இரண்டு டெய்ஷாக்களைப் பற்றிச் சொன்னதும் அவர் கேட்ட கேள்வி நீ சுற்றுப்பயணம் சென்றிருக்கிறாயா அல்லது புனித யாத்திரையா என்றதுதான். 

ஒவ்வொரு ஊரிலும் ஏகப்பட்ட கோவில்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருக்கவா முடியும்
என்றார்.அவர் சொல்வதிலும் நியாயம் இருந்தது. ஆதலால் நாராவிலுள்ள கசூகாவிலுள்ள கோவிலுக்கு என் தரிசனம் கிட்டாமல் போனது. 

Okஇப்போது இனாரியிலிருந்து நாரா செல்வோம். கோவிலில் இருந்து ஐந்து நிமிட நடைதூரத்திலுள்ள இனாரி தொடர்வண்டி நிலையத்தை அடைந்து அங்கிருந்து நாராவுக்கு JR West ஆல் இயக்கப்படும் நாரா செல்லும் உள்ளூர் தொடர்வண்டயில் ஏறினோம்.

பறக்கும் பாவை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 

எம் ஜி ஆர், சிவாஜி இவர்கள் இருவருடனும் பல படங்களில் கதாநாயகியாக நடித்த சரோஜாதேவி ஒரு சில கலர் படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அவ்வாறு அவர் நடித்த வண்ணப் படங்களில் ஒன்று தான் பறக்கும் பாவை. படத்தின் பெயருக்கு ஏற்றாற் போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த கதாநாயகியாக அவர் நடித்திருந்தார். படத்தின் ஹீரோ எம் ஜி ஆர் என்ற போதும் படத்தில் சரோஜாதேவியின் body guard ஆகத்தான் அவர் வருகிறார். காரணம் படத்தின் கதை அவ்வாறுதான் அமைந்திருந்தது. 


ராமண்ணா தங்களின் முதல் கலர் தயாரிப்பாக இப் படத்தை பிரம்மாண்டமாக எடுத்திருந்தார். அந்த பிரம்மாண்டத்துக்கு மேலும் மெருகூட்ட ஜெமினி சர்க்கஸ் என்ற சர்க்கஸ் கம்பெனியின் ஆதரவோடு சர்க்கஸ் காட்சிகளையும் படத்தின் கதையோடும், காட்சிகளோடும் இணைத்திருந்தார்கள். இதற்கென்று சென்னையில் ஒரு பெரிய மைதானத்தை வாடகைக்கு எடுத்து நாளொன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் வாடகையில் , சாப்பாட்டுக்கு தினசரி பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து இருபது நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. 

இதனால் படத்தில் பல காட்சிகளில் சர்க்கஸ் இடம் பெற்றன. படத்தின் ஹீரோயின் பறக்கும் பாவையாக அந்தரத்தில் பறந்து சர்க்கஸ் வித்தைகள் புரிகிறாள். கதாநாயகனும் அவளுக்கு ஈடு கொடுக்கிறான். படத்தில் சர்க்கஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருந்த போதும் சஸ்பென்ஸ் கதை ஒன்றும் அதனுள் ஊடுருவி இருந்தது. 

இலங்கைச் செய்திகள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

மதவாச்சி முதல் தலைமன்னார் வரை ரயில் சேவைக்கான பரீட்சார்த்த நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை இன்று ஆரம்பம்

வவுனியாவில் 36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

திருகோணமலையில் 36வது தியாகிகள் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

கல்முனை படுகொலையின் நினைவு நாள்: 1990 ஜூன் 20 தியாகங்கள் நினைவு கூரல்! 



தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை 

20 Jun, 2026 | 01:08 PM

சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தொடர்பாக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை நடத்தப்பட்டது. 

கடந்த வியாழக்கிழமை (18) நடத்தப்பட்ட விசாரணையின்போது எழுத்தாளரின் தரப்புச் சார்பாக சட்டத்தரணி கலாநிதி விரஞ்சன ஹேரத் மற்றும் சட்டத்தரணி நடராஜா காண்டீபன் ஆகியோர் முன்னிலையாகினர். 

இதேவேளை, எதிர்த்தரப்புவாதிகளாக முறைப்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சு, கலாசார அமைச்சு மற்றும் சுங்கப்பிரிவு சார்பில் சட்டத்தரணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

உலகச் செய்திகள்

அமெரிக்கா - ஈரான் வரலாற்றுச் சிறப்புமிக்க 14 அம்ச அமைதி உடன்படிக்கை ; முழுமையான விபரங்கள் இதோ!

ஈரானின் உச்ச தலைவரை அமெரிக்க அதிபர் கடுமையாகச் சாடினார்

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே அவசர போர்நிறுத்தம் அமுல் : அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!

சுவிட்சர்லாந்தில் இன்று நடக்கவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீரென இரத்து

ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்; போர்நிறுத்த மீறல்களுக்கு பதிலடி     


அமெரிக்கா - ஈரான் வரலாற்றுச் சிறப்புமிக்க 14 அம்ச அமைதி உடன்படிக்கை ; முழுமையான விபரங்கள் இதோ!

Published By: Digital Desk 3

18 Jun, 2026 | 01:33 PM

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கவும், உலக வர்த்தகத்தின் முக்கிய நரம்பாகக் கருதப்படும் 'ஹோர்முஸ் நீரிணை' கடல் வழிப்பாதையை மீண்டும் திறப்பதுமான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேச்சுவார்த்தைக் குழுவும் ஈரானும் உத்தியோகபூர்வமாக கையெழுத்திட்டுள்ளன.

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாட்டில் வைத்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு அவர் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனி திருமஞ்சனம் 22/06/2026 காலை 9 மணி

 


ஸ்ரீ சுதர்சன ஜயந்தி (24/06/2026) மற்றும் யஜ்ஞ ஹோமம் (28/06/2026)

 


20 ஆண்டுகள். தவறவிட முடியாத ஓர் இசை இரவு. 🎶✨

இருபது ஆண்டுகளாக, Kamban Kazhagam Australia Inc. அமைப்பு, இயல் – இசை – நாடகம் எனும் தமிழரின் பண்பாட்டு செல்வங்களை உலகத் தரக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மூலம் சிட்னி தமிழர் சமூகத்துடன் பகிர்ந்து வருகிறது.
டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, ராஜேஷ் வைத்யா, சித் ஸ்ரீராம், சூர்யகாயத்ரி, ஸ்பூர்த்தி ராவ் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை வழங்கிய பெருமையை கொண்டாடி, இப்போது எங்கள் 20வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்வுகளில் ஒன்றை உங்களுக்காக கொண்டு வருகிறோம். சிட்னி ரசிகர்கள் ஏற்கனவே உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்!

🔥 டிக்கெட்டுகளில் 50% ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டது! 🔥

Isai Velvi 2026 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நினைத்திருந்தால், சிறந்த இருக்கைகள் அனைத்தும் நிறைவதற்கு முன் உடனே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!

🎻 ISAI VELVI 2026
இந்தியாவில் இருந்து வருகை தரும் உலகப் புகழ்பெற்ற வீணை வித்துவான்
Vid. Ramana Balachandhran
மற்றும் மிருதங்க மேதை
Vid. Dr. Patri Satishkumar
இணைந்து வழங்கும் அதிசயமான கர்நாடக இசை விருந்து!

இசை, லயம், உணர்வு, கலை நயம் அனைத்தும் கலந்த ஆன்மாவை வருடும் மாபெரும் இசை அனுபவத்துக்கு தயாராகுங்கள். திரை இறங்கிய பின்னரும் நீண்ட நாட்கள் பேசப்படும் ஒரு அபூர்வ இசை நிகழ்ச்சி இது!

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 59 “நூல்களைப் பேசுவோம்” - 27/06/2026


நாள்:
  சனிக்கிழமை 27-06-2026

நேரம்:

இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 9.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 நூல்களைப் பேசுவோம்:

 பெண்ணியம் செல்வகுமாரியின் “வம்பாமணல்” (நாவல்)

இராக சங்கமம் - 4 - இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்களிடையே மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில், ஒரு நடமாடும் மார்பகப் பரிசோதனை அலகை வாங்குவதற்கான நிதி திரட்டுவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும். - 04/07/2026

 மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதலை அனைவருக்கும் எட்டக்கூடியதாக்குவோம்

இலங்கையில் பெண்களிடையே அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோயாகும். இது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் சுமார் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறியும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வசித்து வருகின்றனர்; அவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.

கொழும்பு போன்ற பெரிய நகரங்களைப் போல அல்லாமல், இப்பகுதிகளில் போதுமான பரிசோதனை வசதிகள் இல்லை. மேலும், நடமாடும் மருத்துவ சேவைகள் இல்லாத காரணத்தால், பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது அல்லது மருத்துவ உதவியைப் பெறுவதில் தாமதம் செய்கின்றனர். இதன் விளைவாக, நோய் பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. இது சிகிச்சையை சிக்கலாக்குவதோடு, நோயாளிகளின் குணமடையும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கான ஒரு நடைமுறைத் தீர்வு தற்போது நம் கைகளுக்குள் உள்ளது. சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலைநிறுத்தப்படவுள்ள ஒரு நடமாடும் மார்பகப் பரிசோதனை அலகை (Mobile Breast Scanning Unit) கொள்வனவு செய்வதற்காக சுமார் அமெரிக்க டாலர் 500,000 நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நவீன மருத்துவப் படப்பிடிப்பு (Imaging) தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த அலகு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு வழக்கமாகச் சென்று, தற்போது பரிசோதனை வசதிகளைப் பெற முடியாத அல்லது மிகவும் குறைந்த அணுகல் வாய்ப்புள்ள பெண்களுக்கு நேரடியாக சேவையை வழங்கும்.


ஆன்மிகப் பயணத்திற்கான தகுதியை வளர்த்துக்கொள்வோம்

 ஆன்மிக யாத்திரைக்கு ஏற்ற கருவிகளாக நம்மை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். மனிதர்கள் பொதுவாக நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

முதல் வகை – தங்களுடைய குறைகளை கவனித்து, பிறரின் நற்குணங்களையும் சிறப்புகளையும் மட்டும் காண்பவர்கள். இவர்கள் சிறந்தவர்கள்.

இரண்டாம் வகை – தங்களுடைய சிறப்புகளையும், பிறருடைய சிறப்புகளையும் எடுத்துக்காட்டுபவர்கள். இவர்கள் நடுத்தரமானவர்கள்.

மூன்றாம் வகை – தங்களுடைய சிறப்புகளை மட்டுமே கவனித்து, பிறரின் குறைகளை மட்டுமே காண்பவர்கள். இவர்கள் தாழ்ந்த வகையினர்.

நான்காம் வகை – தங்களுடைய குறைகளையே சிறப்புகளாகவும், பிறருடைய சிறப்புகளையே குறைகளாகவும் சித்தரிப்பவர்கள். இவர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள்.

தான் எந்த வகையைச் சேர்ந்தவன் என்பதை ஒவ்வொருவரும் தாமாகவே ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம்.

இதை நினைவில் கொள்ளுங்கள்: ஒருவர் பூரணத்தை, புனிதத்தை, அன்பை (பிரேமை), ஆத்மாவை, பகவானை உணர்ந்து அறிய ஏங்கும்போது, அவர் முதல் வகையைச் சேர்ந்தவராக—அதாவது தன்னுடைய குறைகளைக் கண்டறிந்து, பிறரிடத்தில் உள்ள நற்குணங்களை மட்டுமே காண்பவராக—தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே மிகவும் விரும்பத்தக்க மற்றும் உயர்ந்த சாதனையாகும்.

இன்று மனிதன் துன்பப்படுவதற்குக் காரணம், அவன் வெளிப்புற உலகில் முழுமையாக மூழ்கியிருப்பதுதான். தனது பார்வையைத் திருத்துவதற்கான சாதனையோ, நிலையான ஆன்மிகப் பயிற்சியோ அவனிடம் இல்லை.

ஒரு மனிதனின் மனம் தீய எண்ணங்களால் மாசுபட்டிருந்தால், ஒரு நாளில் பத்து முறை குளிப்பதால் என்ன பயன்? மனம் ஆசைகளாலும் விருப்பங்களாலும் நிரம்பியிருக்கும்போது, தலையை மொட்டையடித்துக் கொள்வதாலும், காவி உடை அணிவதாலும் ஆன்மிக வளர்ச்சி எவ்வாறு ஏற்படும்?

உண்மையான ஆன்மிகம் வெளிப்புற அடையாளங்களில் இல்லை; அது மனதின் தூய்மையிலும், தன்னுடைய குறைகளை உணர்ந்து திருத்திக்கொள்ளும் பண்பிலும், பிறரின் நற்குணங்களைப் பாராட்டும் உயர்ந்த மனப்பான்மையிலும் இருக்கிறது.

மனித விழுமியங்களின் உண்மையான அடித்தளம்

 இந்தக் கைக்குட்டையின் இயல்பான நிறம் வெள்ளையாகும். ஆனால் அதை பயன்படுத்தப் பயன்படுத்த, அதில் அழுக்கும் கறைகளும் படிந்து அதன் நிறம் மாறிவிடுகிறது. அதுபோலவே, ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் இதயம் தூய்மையானதாகவும், களங்கமற்றதாகவும், பளிங்கைப் போலத் தெளிவாகவும், மின்னும் தங்கத்தைப் போலப் பரிசுத்தமாகவும் இருக்கும்.

ஆனால் தூய தங்கத்தில் வெள்ளி, செம்பு, பித்தளை போன்ற உலோகங்கள் கலக்கப்படும்போது, அதன் ஒளியும் மதிப்பும் குறைந்து விடுகின்றன. அது தூய்மையை இழக்கிறது. அதேபோல், மனிதனின் உண்மையான இயல்பு அழியாதது, நித்தியமானது, அமைதியானது மற்றும் ஆனந்தமயமானது ஆகும்.

ஆனால் உலகியல் ஆசைகள், அவனது செயல்கள், உறவினர்கள் மற்றும் சொந்தங்களின் மீது கொண்ட பற்றுதல் ஆகியவற்றால் அந்தத் தூய இயல்பு மாசுபடுகிறது. தனது வாழ்க்கையில் விழுமியங்கள் சிதைவடைவதற்கு மனிதனே காரணமாகிறான்.

இன்று மனிதர்களிடத்தில் மனித விழுமியங்களின் சுவடுகளையே காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மனித விழுமியங்கள் வெளியிலிருந்து வருவதில்லை; அவற்றை புதிதாகப் பெறவும் முடியாது. அவை ஏற்கனவே ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் உள்ளன. ஆனால் மனிதன் இதை உணரத் தவறுகிறான்.

அவன் பொய்யைப் பேசுகிறான், தவறான செயல்களில் ஈடுபடுகிறான், பார்க்கக் கூடாதவற்றைப் பார்க்கிறான், தவறான எண்ணங்களை மனதில் வளர்க்கிறான். இதன் விளைவாக அவன் தனது உள்ளத் தூய்மையை இழந்து விடுகிறான்.

மனித விழுமியங்களே இல்லாத ஒருவரை எவ்வாறு உண்மையான மனிதன் என்று அழைக்க முடியும்? மனிதனின் உயர்வு அவனது வெளிப்புற தோற்றத்திலோ, செல்வத்திலோ அல்லது பதவியிலோ இல்லை; அவனுள் உறைந்திருக்கும் சத்தியம், தர்மம், அன்பு, அமைதி மற்றும் தூய்மையான மனித விழுமியங்களில்தான் உள்ளது. அவற்றை உணர்ந்து வாழ்வதே மனிதப் பிறவியின் உண்மையான நோக்கமாகும்.

இறைவனின் சோதனைகளும் மாயையை அகற்றும் வழியும்

 ஒருவருக்கு அப்பெண்டிசைட்டிஸ் (Appendicitis) காரணமாக கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால், மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்து அப்பெண்டிக்ஸை அகற்றுகிறார். அப்போது நோயாளியின் வயிற்றை வெட்டுவதால் மருத்துவரை நாம் கொடூரமானவர் என்று கூற முடியுமா? முடியாது.

மருத்துவர் நோயாளியின் மீது கொண்ட கருணையினாலேயே அவ்வாறு செய்கிறார். உடலின் உள்ளே இருக்கும் வலியை குணப்படுத்த, உடலின் வெளிப்புறத்தில் சிறிது வலியை ஏற்படுத்த வேண்டியிருக்கும். அதுபோலவே, இறைவன் மனிதனுக்குக் கொடுக்கும் சோதனைகளும் அவனது செயல்களின் விளைவுகளைத் தாங்கிக்கொள்ள உதவுவதற்காகவே ஆகும்.

இறைவன் செய்வதெல்லாம் மனிதனின் நன்மைக்காகத்தான்; ஒருபோதும் அவனைத் துன்புறுத்துவதற்காக அல்ல. ஏன் என்றால், இறைவன் முற்றிலும் சுயநலமற்றவர். அவரிடம் சுயநலமோ, தனிப்பட்ட லாப நோக்கமோ இல்லை. உண்மையில், சுயநலம் என்றால் என்ன என்பதையே அவர் அறியாதவர்.

ஆனால் சிலர் இறைவனுடைய செயல்களுக்குக்கூட பாகுபாடு, சுயநலம் மற்றும் தன்நலம் போன்றவற்றை கற்பித்துக் கொள்கிறார்கள். இவை அனைத்தும் அவர்களுடைய கற்பனைகளே. அந்தக் கற்பனைகள்தான் அவர்களின் மாயைக்கும் மயக்கத்திற்கும் காரணமாகின்றன.

உங்கள் இதயம் பிரமம் (Bhrama – மாயை, தவறான எண்ணம், மயக்கம்) என்பதனால் நிரம்பியிருக்கும் வரை, நீங்கள் பிரம்மத்தை (Brahma – பரம்பொருள், இறைவன்) அனுபவிக்க முடியாது. இதயத்திலிருந்து பிரமத்தை அகற்றாமல், பிரம்மத்தைப் பற்றிய சிந்தனைகள் கூட உங்களிடம் எழ முடியாது.

உங்கள் இதயத்தில் ஒரு நாற்காலி மட்டுமே உள்ளது. அது இருவர் அமரக்கூடிய சோபாவோ அல்லது இசை நாற்காலி விளையாட்டில் இருப்பதுபோன்ற பலருக்கான இடமோ அல்ல. அந்த ஒரே இடத்தில் நீங்கள் பிரமத்தை அகற்றினால், பிரம்மம் வந்து அமர்வார்.

பிரமமும் பிரம்மமும் ஒரே நேரத்தில் உங்கள் இதயத்தில் இடம் பெற முடியாது. ஆனால் கலியுகத்தின் தாக்கத்தால், மக்கள் இரண்டையும் ஒரே இடத்தில் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இதயத்தில் பிரமம் இருக்கும் வரை பிரம்மம் அங்கு நுழையமாட்டார்.

எனவே, ஆன்மிக முன்னேற்றத்தை விரும்புபவர் முதலில் தனது மனதிலுள்ள மாயை, தவறான எண்ணங்கள், சந்தேகங்கள் மற்றும் அகந்தையை அகற்ற வேண்டும். இதயம் தூய்மையடைந்தபோதுதான் இறையுணர்வு மலர்ந்து, பரம்பொருளின் அருளையும் அனுபவத்தையும் பெற முடியும்.

சமநிலையான மனநிலையே உண்மையான ஞானத்தின் அடையாளம்

 தர்மராஜர் அவர்களின் மனைவி திரௌபதி அரசவையின் நடுவில் அவமதிக்கப்பட்டபோதும், அவரது மனம் அசையாமல் கிருஷ்ணர் மீது நிலைத்திருந்தது. மேலும், அசுவத்தாமா நிரபராதிகளான உபபாண்டவர்களைக் கொன்றபோதும், அவர் தனது மனதை கலங்கவிடாமல், தூய்மையுடனும் அமைதியுடனும் இறைவனை நினைத்துக் கொண்டிருந்தார்.

பீமன் கை, கால்கள் கட்டப்பட்டு விஷப்பாம்புகள் நிறைந்த நதியில் தள்ளப்பட்டபோதும், தர்மராஜர் தனது மனச் சமநிலையை இழக்கவில்லை. இதற்குக் காரணம், அவர் இன்பம் மற்றும் துன்பம் என்ற இரு எதிர்மறை நிலைகளையும் தாண்டி, இறைவனின் அத்வைதத் தத்துவத்தை உணர்ந்திருந்தார்.

அடிப்படை உண்மையை உணர்ந்தால்தான் மனம் நிலைபெறும். புத்தி மனத்தை விட உயர்ந்தது. எனவே புத்தியின் தூய்மை மனத்தில் பிரதிபலிக்கிறது. சாதனை என்ற பெயரில் தியானம் செய்வதோ, இறைநாமம் ஜபிப்பதோ மட்டுமே போதுமானதல்ல.

நாம் மேற்கொள்ள வேண்டிய உண்மையான சாதனை இதயத்தின் தூய்மையை வளர்ப்பதே ஆகும். உண்மையில், இதயத் தூய்மையே ஞான நிலையை அடைவதாகும். இந்த ஞான நிலையில் தான் மனம் அசையாமல் உறுதியாக நிற்கிறது. தர்மராஜர் இந்த உயர்ந்த நிலையை அடைந்திருந்தார்.

இவ்வுலகில் இத்தகைய பக்தர்கள் எண்ணற்றோர் உள்ளனர். ஆனால், உலகின் இன்பங்களாலும் துன்பங்களாலும் மனச் சமநிலையை இழந்து அலைபாய்பவர்களும் இருக்கின்றனர். மனத்தின் இந்தச் சஞ்சலமான இயல்பை வெல்ல, மனிதன் தனது தெய்வீக இயல்பை உணர வேண்டும்.

சமநிலை, அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் பற்றின்மை ஆகியவை மனிதனின் உள்ளார்ந்த தெய்வீக குணங்கள். அவற்றை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையில் ஏற்படும் எந்த சூழ்நிலையும் மனதை பாதிக்க முடியாது. இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே நிலை கொண்டிருப்பதே உண்மையான ஆன்மிக முன்னேற்றத்தின் அடையாளமாகும்.

மனித வாழ்க்கையின் நான்கு குறிக்கோள்களும் தர்மத்தின் உண்மைப் பொருளும்

 இந்தியப் பண்பாட்டின்படி, மனித வாழ்க்கைக்கு நான்கு முக்கியமான குறிக்கோள்கள் உள்ளன. அவை தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் ஆகும். (நீதி அல்லது அறம், செல்வம், விருப்பங்களின் நிறைவேற்றம் மற்றும் விடுதலை). இந்த நான்கு புருஷார்த்தங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்க்கையின் இலக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சிலர் “புருஷார்த்தம்” என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது, பெண்களுக்கு அல்ல என்று கருதுகின்றனர். ஆனால் இது சரியான புரிதல் அல்ல. “புருஷன்” என்ற சொல் இங்கு ஆணைக் குறிக்கவில்லை. அது ஆத்மாவையும் சுத்த சைதன்யத்தையும் (உயிருணர்வை) குறிக்கிறது. சைதன்யம் ஆண், பெண் என்ற வேறுபாட்டை அறியாது. உண்மையான புருஷன் ஆத்மாவே; அந்த ஆத்மா அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக உள்ளது.

பொதுவாக, தர்மம் என்றால் தானம் செய்வது அல்லது தருமச் செயல்கள் செய்வது என்று கருதப்படுகிறது. ஆனால் தர்மத்தின் உண்மையான பொருள் அதைவிட ஆழமானது. மனிதனை தெய்வீக நிலையை அடைய உதவும் அனைத்து செயல்களும் தர்மத்தின் கீழ் வருகின்றன.

இதயத்தில் ஆனந்தத்தை உண்டாக்கும் செயல்கள், இருமையற்ற உண்மையை வெளிப்படுத்தும் எண்ணங்கள், ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் வாழ்வியல் முறைகள்—இவை அனைத்தும் தர்மமாகும். மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகளில் தெய்வீகத்தை வெளிப்படுத்தும் அனைத்தும் தர்மத்தின் பகுதிகளாகும்.

ஒவ்வொருவரும் இந்த தர்மத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உண்மையில், மனித வாழ்க்கை இந்த உயர்ந்த நோக்கத்திற்காகவே வழங்கப்பட்டுள்ளது. மனிதன் தனது பிறப்பின் நோக்கம் தன்னுள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்துவதுதான் என்பதை உணர வேண்டும்.

தர்மம் என்பது இல்லற வாழ்க்கை (கிருஹஸ்தம்) அல்லது துறவற வாழ்க்கை (சந்நியாசம்) போன்ற வாழ்க்கை நிலைகளைக் குறிக்காது. அவை உலக வாழ்க்கையுடன் தொடர்புடையவை; ஆத்மாவுடன் தொடர்புடையவை அல்ல.

ஆனால் மனிதன் தனது இயல்பான மனிதநேயத்தை மறந்து, அன்றாட வாழ்க்கையின் உலகியல் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரக் கவலைகளில் சிக்கிக் கொள்கிறான். அதன் விளைவாக, அவனது வாழ்க்கை பரம்பொருளை நோக்கிய திசையை இழந்து விடுகிறது.

எனவே, மனிதன் வெளிப்புற சாதனைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், தன்னுள்ளே உறைந்திருக்கும் தெய்வீக உண்மையை அறிந்து வெளிப்படுத்த வேண்டும். அதுவே தர்மத்தின் சாரம்; அதுவே மனிதப் பிறவியின் உண்மையான வெற்றியாகும்.