தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

கண்ணம்மா" – உணர்வுகளால் நிரம்பிய, யதார்த்தமான ஒரு திரைப்பட அனுபவம்- சிறி திருநாவுக்கரசு

 .



கண்ணம்மா" – உணர்வுகளால் நிரம்பிய, யதார்த்தமான ஒரு திரைப்பட அனுபவம்.
இலங்கைத் தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் உணர்வுபூர்வமான திரைப்படம் – "கண்ணம்மா"
இலங்கையில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான "கண்ணம்மா", இன்று (14 ஜூன் 2026) சிட்னியின் Auburn Reading Cinemas திரையரங்கில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. திரைப்படத்தை காண பெருமளவிலான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.
அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் வரவேற்பு, இந்த திரைப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது.
யூட் சுகி அவர்களின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் கிரிஷ்ணபிள்ளை இசையமைத்துள்ளார். காரை சிவநேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

கண்ணம்மா திரைப்பட அனுபவம்-Sydney Audience Review

 .


மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் வருடாந்த பேச்சுப்போட்டி சிறப்பாக நிறைவு

 


மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பேச்சுப்போட்டி 06.06.2026 அன்று பள்ளியின் மண்டபத்தில் சிறப்பாகவும் சிறப்புமிக்க முறையிலும் நடைபெற்றது. தமிழ் மொழியின் வளத்தையும் மாணவர்களின் சிந்தனைத்திறன், ஆராயும் மனப்பாங்கு, தன்னம்பிக்கை மற்றும் மேடைப்பேச்சுத் திறன்களையும் வளர்க்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அரும்புகள் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகள் வரை பல்வேறு


பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமக்கென வழங்கப்பட்ட தலைப்புகளில் ஆழமான சிந்தனைகளுடனும் தெளிவான கருத்துக்களுடனும் உரையாற்றினர்
.

போட்டியின் போது மாணவர்கள் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை, தெளிவான உச்சரிப்பு, கருத்துக்களை ஒழுங்குபடுத்தி முன்வைக்கும் திறன் மற்றும் மேடை ஆளுமை ஆகியவை பார்வையாளர்களையும் நடுவர்களையும் பெரிதும் கவர்ந்தன. இளம் தலைமுறையினர் தமிழ் மொழியை ஆழமாகக் கற்றறிந்து அதன் வழியே தமது சிந்தனைகளை வெளிப்படுத்தும் திறனை வளர்த்து வருவதற்கான சிறந்த சான்றாக இந்நிகழ்வு அமைந்தது.      

நிகழ்வில் நடுவர்களாகப் பங்கேற்ற கல்வியாளர்களும் சமூகப் பிரமுகர்களும் மாணவர்களின் உரைகளை கவனமாக மதிப்பீடு செய்து, அவர்களின் பேச்சாற்றலை பாராட்டியதோடு மேலும் முன்னேறுவதற்கான பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கினர். அவர்களின் ஊக்கமூட்டும் கருத்துக்கள் மாணவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்தன.

இந்நிகழ்வின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த தலைவர்,

அதிபர்ஆசிரியர்கள்நிர்வாகக் குழு உறுப்பினர்கள்தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வின் திட்டமிடல்ஒழுங்கமைப்புமேடை அமைப்புஒலியமைப்புமாணவர்களை மேடைக்கு தயார்படுத்தல்மாணவர்களை மேடைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீள அழைத்து வருதல்நேர முகாமைத்துவம்புகைப்படம்  காணொளிப் பதிவு மற்றும் உரிய நேரத்திற்கு கலந்து கொண்டு அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டி வழங்கியமை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.

சென்ற 26 - 04 -2026 அன்று சிவபதம் எய்திய அமரர் திரு பொன் மயிலைநாதன் அவர்களின் ஆத்ம சாந்தி வழிபாட்டிலே பாடப்பெற்ற கவிதையஞ்சலி.

 வாழ்வாங்கு வாழ்ந்துயர்ந்த வள்ளலுக்கோர்

            கவிதையஞ்சலி














வளம்;மிகுந்த செந்தண்மை அந்தணப் பெரியோன்

    வாழ்ந்துயர்ந்த பொன்மயிலை நாதன் இன்று

களம்மாறி இறையடிகள் சேர்ந்தா ரென்ற

    கவலைச்சொல் இதயத்தே வேலைப் பாச்சும்!

குளமாகும் விழியிரண்டும்! உள்ளம் சோரும்!

    கூற்றுவனா பூத்தேரிற் கவர்ந்து சென்றான்?

அழுதழுது பிரிவால்உறும் குடும்பத் தார்க்கு

    ஆறுதலைச் சொல்வதற்கு வார்த்தைதா னுண்டோ?

 

பொய்யாகா தாவிந்தச் செய்தி யென்றே

   புலம்பியழும் பலருடனே கவல்கின் றேனே!

கொய்யாத பூப்போலச் சிரித்து மூத்தோர்

   கூட்டத்தில் மலர்ந்தமுகத் துடனே எழுந்து

ஐயாபொன் மைலைநாதன் பாடி யின்று

  அறுபத்துஐந்து நாள்கூட ஆக வில்லை

மெய்யாக ஒருவருமே எதிர்பர்க்கா வண்ணம்

  மேலுலகம் சென்றனனே வையம் ஈதோ?

குமரனது அருளாலே குமரகுருபரர் எழுந்தார் !

 
















மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



ஐந்து வயதாகியும் அம்மாவென் றழைக்காமல்
வாய்பேச முடியாது அப்பிள்ளை இருந்தது
பெற்றவர்கள் வருந்தினார் பெருந்துயர  மெய்தினார்
உற்றதுணை முருகனென உளமுருகி வேண்டினார்

பேசாத பிள்ளையினை தீராதா கவலையுடன்
திருமுருகன் கோவிலுக்குக் கூட்டியே போனார்கள்
திருமுருகன் சன்னதியில் அழுதவரும் வேண்டினார்
திருமுருகன் அருளாலே வாய்திறந்தார் அப்பிள்ளை

பேசாத பிள்ளை பெரும்பொருளைப் பாடினார்
கந்தர்கலி வெண்பா கவிமலராய் மலர்ந்தது
நொந்தவர்கள் மகிழ்ந்தார்கள் நூறுமுறை தொழுதார்கள்
கந்தனது கருணையினால் கவிதைமழை கொட்டியது 

கவிதை..."ஆறடி மண்"... மெல்போர்ன் அறவேந்தன்

 




பிறப்பினில் உயர்வு தாழ்வு வேண்டா! - அன்பு ஜெயா பா வகை: கண்ணாட்டிச் சிந்து

  

பாம்பிடத்தில் உள்ளமணி பழுதாய்ப் பார்ப்பரோ – கண்ணாட்டி

பழுதாய்ப் பார்ப்பரோ!

பாம்பிடத்தில் உள்ளநஞ்சின் பழுதையும் மறப்பரோ -  கண்ணாட்டி

பழுதையும் மறப்பரோ!                 (1)

 

உயர்வென்றும் தாழ்வென்றும் உள்ளம் உரைக்குமோ – கண்ணாட்டி

உள்ளம் உரைக்குமோ!

உயர்வதுவும் தாழ்வதுவும் உம்மைப் பிரிக்குமே – கண்ணாட்டி

உம்மைப் பிரிக்குமே!            (2)

 

உயர்வுதாழ்வும் பிறப்பினிலே உண்டோ கூறாய் – கண்ணாட்டி

உண்டோ கூறாய்!

உயர்த்துவதே அறிவென்றும் உணர்ந்திடு நன்றாய் – கண்ணாட்டி

உணர்ந்திடு நன்றாய்!            (3)


தமிழக முதலமைச்சரும் திருக்குறளும்!

திருக்குறள் எக்காலத்துக்கும் எம்மதத்துக்கும் எந்நாட்டவருக்கும் பொருந்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனக்கு அதில் அதிக அளவில் உடன்பாடு உண்டு. திருக்குறள் ஒன்றே பார்ப்பவர்களின் பார்வைக்கு ஏற்ப பொருள் தரும். சான்றாக ஒன்றைச் சொல்வேன். இராமாயணத்தையோ சிலப்பதிகாரத்தையே படிக்கும் போது படிப்பவர்களுக்கு ஏற்ப அதில் சொல்லப்பட்டிருப்பவை மாறாது.


யார் படித்தாலும் சீதையை இராவணன் சிறை எடுத்தான் என்பதும் கண்ணகி பாண்டிய மன்னன் சபையில் நீதிக்காக வாதாடியதும் மாறாது. ஆனால் திருக்குறள் பார்ப்பவர் பார்வைக்கேற்ப மாறுபடும். எனது பார்வையில் முதலாம் அதிகாரத்தில் உள்ள பத்து குறட்பாக்களும் இயற்கை வாழ்த்தாக தெரிகிறது.

ஒரு சிலையை ஒருவர் கல்லாகவும் பார்க்கலாம் கடவுளாகவும் பார்க்கலாம். கல்லாகப் பார்பவர் கண்ணில் எந்தவகை கல்லில் செதுக்கப்பட்டது என்ற பௌதீக கண்ணோட்டத்தில் பார்வை விரிகிறது.  அச் சிலையை கடவுளாக பார்பவர் கண்ணில் தன்னை கடைத்தேற்றும் நம்பிக்கையாக பார்க்கப் படுகிறது.

எனது கண்களை பாரதி வேறொரு வகையில் திறந்தார். பாரதிதாசனின் கொள்கை வேறென்றாலும் அவர் பாரதியின் தாசன் ஆனார் அல்லவா?

“காண்பவவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ
காண்பதுவே உறுதி கண்டோம்
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம்”

என்ற வரிகள் இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல என்று கூறுவதோடு நிலையாமைத் தத்துவத்துக்கு அடிகோளுகிறது.

மெட்றாஸ் டு பாண்டிச்சேரி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 

சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு பஸ்ஸில் இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம் . இந்த தூரத்தை கடப்பதற்குள் பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் வாழ்வில் என்னென்ன சம்பவங்கள் நடக்கலாம் என்பதை அறுபது ஆண்டுகளுக்கு முன் படமாக்கி இருந்தார்கள். அந்த படத்தின் பேர் தான் மெட்றாஸ் டு பாண்டிச்சேரி. 


 இன்றைய சென்னை அன்றைய மெட்றாஸிலிருந்து புறப்படும் பஸ் சீரான பயணத்தை மேற் கொள்ளவில்லை . பல வித தங்கு தடைகளை தாண்டியே அந்த பஸ்ஸின் பயணம் தொடர்கிறது. இப் பயணத்தில் நகைச்சுவை, திகில், வீரம், ஆடல், பாடல், என்று எல்லாம் இடம் பெறுகிறது. 

 குமரிப் பெண்ணான மாலா தன் அழகைப் பற்றியும், இளமையைப்

பற்றியும் பெருமை கொண்டவள். அவளின் பலவீனத்தை பயன் படுத்தி பணம் பறிக்க சுதாகர் என்பவன் திட்டம் போடுகிறான். மாலாவை பெரிய சினிமா ஸ்டாராக்கி விடுவதாக அவன் சொல்வதை மாலா நம்பி விடுகிறாள். ஆனால் ரவி என்ற இளைஞன் சுதாகர் மோசமானவன் என்று எச்சரிக்கிறான். ஆனாலும் சுதாகரின் வலையில் விழும் மாலா அவனோடு செயல்பட விரும்புகிறாள். பணத்துக்காக எதையும் செய்யத் துணியும் சுதாகர் தன் கூட இருந்தவனையே கொலை செய்து விடுகிறான். 

 கொலையை பார்த்து விடும் மாலா அவனிடம் இருந்து தப்ப மெட்ராஸில் இருந்து பாண்டிச்சேரி போகும் பஸ்ஸில் ஏறி விடுகிறாள். அவளை பாதுகாக்கும் பொருட்டு ரவியும் அதே பஸ்ஸில் ஏற , கொலைகாரனின் கையாளும் அதே பஸ்ஸில் நுழைந்து விடுகிறான் . பஸ் பல பயணிகளுடன் ஒவ்வொரு விவகாரங்களுடன் இவர்களை சுமந்து கொண்டு பயணிக்கிறது. 

இலங்கைச் செய்திகள்

'தூயஒளி' படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆலயங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் திருவிழாக்களை மட்டும் செய்துகொண்டு இருக்காது பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்

கிளிநொச்சி சொல்லிசை பாடகரின் பிணை மனு: யாழ். மேல் நீதிமன்றில் விசாரணை!

சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளும் இவர்களே: பொன்சேக்கா சுட்டிக்காட்டு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் விடுதலை: நாமல் வரவேற்பு! 


'தூயஒளி' படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் 

11 Jun, 2026 | 11:35 AM

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்று (11) புதன்கிழமை நடைபெற்றது.

குருநகர் ஆலய பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுத்ததை அடுத்து,  மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1986ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி குருநகர் பகுதியில் இருந்து 'தூயஒளி' படகில் கடலுக்குச் சென்ற 31 கடற்தொழிலாளர்கள் மண்டைதீவுக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகச் செய்திகள்

 வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை: 12 பொலிஸார் காயம், 16 பேர் கைது

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான் அறிவிப்பு

இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை முடக்க பேஸ்புக், எக்ஸ் தளங்களுக்கு சிங்கப்பூர் உத்தரவு!

குவைத் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது



வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை: 12 பொலிஸார் காயம், 16 பேர் கைது

Published By: Digital Desk 3

11 Jun, 2026 | 04:20 PM

வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு இரண்டாவது நாளாகவும் கடுமையான இனவாத வன்முறைகளும் கலவரங்களும் வெடித்துள்ளன. 

நேற்றிரவு நடந்த இந்த மோதல்களில் 12 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், 16 கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வட அயர்லாந்துக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் ஹிலாரி பென் தெரிவித்துள்ளார்.

பெல்பாஸ்டிற்கு சற்று வெளியேயுள்ள ‘கிளென்கோர்ம்லி’ பகுதியில் உள்ள ஒரு வீதியில் திரண்டிருந்த வன்முறையாளர்கள் பொலிஸார் மீது கல், போத்தல்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளை வீசித் தாக்கியதுடன், குப்பைத் தொட்டிகள் மற்றும் திணைக்கள வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். இதனால் கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்த நேரிட்டுள்ளது.

ஸ்ரீ சுதர்ஷன ஹோமம் - ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி

 


ஆனி திருமஞ்சனம் 22/06/2026 காலை 9 மணி

 


20 ஆண்டுகள். தவறவிட முடியாத ஓர் இசை இரவு. 🎶✨

இருபது ஆண்டுகளாக, Kamban Kazhagam Australia Inc. அமைப்பு, இயல் – இசை – நாடகம் எனும் தமிழரின் பண்பாட்டு செல்வங்களை உலகத் தரக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மூலம் சிட்னி தமிழர் சமூகத்துடன் பகிர்ந்து வருகிறது.
டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, ராஜேஷ் வைத்யா, சித் ஸ்ரீராம், சூர்யகாயத்ரி, ஸ்பூர்த்தி ராவ் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை வழங்கிய பெருமையை கொண்டாடி, இப்போது எங்கள் 20வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்வுகளில் ஒன்றை உங்களுக்காக கொண்டு வருகிறோம். சிட்னி ரசிகர்கள் ஏற்கனவே உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்!

🔥 டிக்கெட்டுகளில் 50% ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டது! 🔥

Isai Velvi 2026 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நினைத்திருந்தால், சிறந்த இருக்கைகள் அனைத்தும் நிறைவதற்கு முன் உடனே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!

🎻 ISAI VELVI 2026
இந்தியாவில் இருந்து வருகை தரும் உலகப் புகழ்பெற்ற வீணை வித்துவான்
Vid. Ramana Balachandhran
மற்றும் மிருதங்க மேதை
Vid. Dr. Patri Satishkumar
இணைந்து வழங்கும் அதிசயமான கர்நாடக இசை விருந்து!

இசை, லயம், உணர்வு, கலை நயம் அனைத்தும் கலந்த ஆன்மாவை வருடும் மாபெரும் இசை அனுபவத்துக்கு தயாராகுங்கள். திரை இறங்கிய பின்னரும் நீண்ட நாட்கள் பேசப்படும் ஒரு அபூர்வ இசை நிகழ்ச்சி இது!

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 59 “நூல்களைப் பேசுவோம்” - 27/06/2026


நாள்:
  சனிக்கிழமை 27-06-2026

நேரம்:

இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 9.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 நூல்களைப் பேசுவோம்:

 பெண்ணியம் செல்வகுமாரியின் “வம்பாமணல்” (நாவல்)

இராக சங்கமம் - 4 - இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்களிடையே மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில், ஒரு நடமாடும் மார்பகப் பரிசோதனை அலகை வாங்குவதற்கான நிதி திரட்டுவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும். - 04/07/2026

 மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதலை அனைவருக்கும் எட்டக்கூடியதாக்குவோம்

இலங்கையில் பெண்களிடையே அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோயாகும். இது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் சுமார் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறியும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வசித்து வருகின்றனர்; அவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.

கொழும்பு போன்ற பெரிய நகரங்களைப் போல அல்லாமல், இப்பகுதிகளில் போதுமான பரிசோதனை வசதிகள் இல்லை. மேலும், நடமாடும் மருத்துவ சேவைகள் இல்லாத காரணத்தால், பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது அல்லது மருத்துவ உதவியைப் பெறுவதில் தாமதம் செய்கின்றனர். இதன் விளைவாக, நோய் பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. இது சிகிச்சையை சிக்கலாக்குவதோடு, நோயாளிகளின் குணமடையும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கான ஒரு நடைமுறைத் தீர்வு தற்போது நம் கைகளுக்குள் உள்ளது. சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலைநிறுத்தப்படவுள்ள ஒரு நடமாடும் மார்பகப் பரிசோதனை அலகை (Mobile Breast Scanning Unit) கொள்வனவு செய்வதற்காக சுமார் அமெரிக்க டாலர் 500,000 நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நவீன மருத்துவப் படப்பிடிப்பு (Imaging) தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த அலகு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு வழக்கமாகச் சென்று, தற்போது பரிசோதனை வசதிகளைப் பெற முடியாத அல்லது மிகவும் குறைந்த அணுகல் வாய்ப்புள்ள பெண்களுக்கு நேரடியாக சேவையை வழங்கும்.


தெய்வ தரிசனத்தின் உண்மையான அர்த்தம்

 வெறும் ஒளி இருப்பது மட்டுமே போதாது. அந்த ஒளியின் வழிகாட்டுதலுடன் நாம் முன்னேற வேண்டும். அந்த ஒளி நமக்குப் பாதையைக் காட்டிய பின்னரும், அதில் நாம் நடக்கவில்லை என்றால், பார்வையற்றவர்களைப் போலவே நாம் அறியாமையில் இருப்போம்.

ஒருமுறை, குருட்டுப் பக்தரான சூர்தாஸின் முன் பகவான் கிருஷ்ணர் தோன்றி, “சூர்தாஸ்! நீ உலகத்தைக் காண விரும்பினால், இக்கணமே உனக்கு பார்வையை அருளுகிறேன்” என்றார்.

அதற்கு மகத்தான பக்தரான சூர்தாஸ் இவ்வாறு பதிலளித்தார்:

“கண்கள் இருந்தும், உமது மங்களகரமான அழகிய திருவுருவத்தைத் தரிசிக்காதவர்கள் உண்மையில் குருடர்களே. காதுகள் இருந்தும், உமது இனிமையான கானத்தைச் செவிமடுக்காதவர்கள் உண்மையில் செவிடர்களே. கைகளால் தெய்வத்தை அடையும் சக்தி இருந்தும், அவர்கள் தங்களைச் சம்சார சாகரத்தில் மூழ்கடித்துக் கொள்கிறார்கள்.

நீர் அவர்களுடைய இதயத்தில் வாசம் செய்தாலும், உலகின் பொய்யான, கவர்ச்சிகரமான மற்றும் நிலையற்ற இன்பங்களால் அவர்கள் மயக்கமடைகிறார்கள். அகன்ற கண்கள் இருந்தும், உம்மை அவர்கள் காண முடியவில்லை. எனவே, அத்தகைய இதயமும், அத்தகைய கண்களும், அத்தகைய காதுகளும் எனக்குத் தேவையில்லை.

பிரபுவே! உமது தெய்வீக கீதத்தைச் செவிமடுக்கும் காதுகளை எனக்குத் தாரும். உமது அழகிய திருவுருவத்தைத் தரிசிக்கும் கண்களை எனக்குத் தாரும். நீங்களே நிரந்தரமாக வாசம் செய்யும் இதயத்தை எனக்குத் தாரும்” என்று சூர்தாஸ் பிரார்த்தித்தார்.

இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது. உடல் உறுப்புகள் இருப்பது மட்டுமே பெருமையல்ல; அவை தெய்வீகத்தை உணரவும், இறைவனை அனுபவிக்கவும் பயன்படும்போதுதான் அவற்றின் உண்மையான பயன் வெளிப்படுகிறது. இறைவனை நோக்கித் திரும்பிய மனமும், அவரை உணரும் இதயமும், அவரைத் தரிசிக்கும் ஆன்மிகப் பார்வையும் தான் மனித வாழ்வின் உயர்ந்த செல்வங்களாகும்.

தெய்வீக சோதனைகளின் உட்பொருள்

 பக்தர்களை ஆன்மிக ரீதியாக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதற்காக, இறைவன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களை விதவிதமான சோதனைகளுக்கும் பரீட்சைகளுக்கும் உட்படுத்துகிறார். அனைத்து ஞானங்களுக்கும் ஆதாரமான இறைவன், தம்மை நாடி வருபவர்களுக்கே ஞான ஒளியை அருளுகிறார்.

“பகவான் என்னைக் கவனிக்கவில்லை”, “என்னிடம் பேசவில்லை” என்று எண்ணுபவர்கள், தாங்கள் மனதளவில் பகவானுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்றும், தங்களின் ஆன்மிகப் பயிற்சிகள் இறைவனை நோக்கி எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளன என்றும் தங்களைத் தாங்களே ஆராய்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சுயவிசாரணையில் ஈடுபடுவது அவசியம்.

இறைவனுக்கு ஆக்ரஹமும் (கோபம்) இல்லை; அனுக்ரஹமும் (சிறப்பான பாரபட்ச அருள்) இல்லை. அவர் கடுமையாகத் தோன்றினாலும், அந்தக் கடுமையில்கூட அருள் மறைந்துள்ளது. அவர் தண்டிப்பது போல் தோன்றினாலும், அதற்குள் கருணை நிறைந்துள்ளது. அவர் கோபப்படுவது போல் தோன்றினாலும், அதன் பின்னணியில் அன்பே இருக்கிறது.

தெய்வீகத்தின் உண்மையான இயல்பை உணர்ந்தவர்களால் மட்டுமே இறைவனின் செயல்முறைகளைப் புரிந்து கொள்ள முடியும். பக்தன் சரியான பாதையில் செல்லவும், உயர்ந்த இலட்சியமிக்க வாழ்க்கையை வாழவும் இறைவன் சில நேரங்களில் தண்டனைகளைப் போன்ற அனுபவங்களை அளிக்கிறார். ஆனால் அவை அனைத்தும் பக்தனின் நன்மைக்காகவும், நல்வாழ்வுக்காகவும், ஆன்மிக முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே அமைகின்றன.

எனவே, வாழ்க்கையில் வரும் சோதனைகளையும் துன்பங்களையும் இறைவனின் கருணைமிக்க வழிகாட்டுதலாக ஏற்று, அவற்றின் மூலம் தன்னை மேம்படுத்திக் கொள்வதே உண்மையான பக்தனின் பண்பாகும்.

மோகத்தை வெல்வதே முக்திக்கான வழி

 உயிரினங்கள் அனைத்திலும் பொதுவாகக் காணப்படும் ஒரு குணம் மோகமாகும் (பற்று அல்லது ஆசை). இந்த குணம் மனிதர்களிடமும் உள்ளது. ஆனால், மோகத்தை வென்று மோக்ஷம் (முக்தி அல்லது விடுதலை) அடையும் திறன் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மனிதனைச் சூழ்ந்திருக்கும் மாயை, அவனைத் தவறான பாதைகளில் செல்லத் தூண்டுகிறது. இந்த மாயைக்கு மூன்று குணங்கள் உள்ளன: சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் (தூய்மை, செயற்பாடு மற்றும் அறியாமை/சோம்பல்). இக்குணங்களின் தாக்கத்தால் மனிதன் தனது தெய்வீக இயல்பையும் மனிதநேயத்தையும் மறந்து, விலங்கினைப் போன்ற நடத்தையில் ஈடுபடுகிறான்.

மாயையின் இந்த மூன்று குணங்களும், மோகத்தின் மூன்று வடிவங்களும் ஒன்றிணைந்து மனிதனை அரக்க குணம் கொண்டவனாக மாற்றுகின்றன. மோகத்தின் மூன்று முக்கிய வடிவங்கள்:

  1. செல்வத்தின் மீதான பேராசை
  2. மனைவியின் மீதான அளவுகடந்த பற்று
  3. குழந்தைகளின் மீதான அளவுகடந்த பற்று

இந்த மூன்றும் மனிதனை மோகத்தின் அடிமையாக்குகின்றன. இந்த மூன்று ஆசைகளையும் வெற்றிகொள்பவனே மோகத்தைத் தாண்டி உயர முடியும்.

மோகம் குறையத் தொடங்கும்போது, மோக்ஷம் அல்லது முக்தி அடையக்கூடியதாகிறது. உண்மையில், முக்தி என்பது மோகத்தின் முழுமையான நீக்கமே ஆகும். பற்றுகள், ஆசைகள் மற்றும் சுயநல பந்தங்கள் அகன்றபோதுதான் மனம் சுதந்திரமடைகிறது.

எனவே, ஒவ்வொருவரும் செல்வம், குடும்பம் மற்றும் பிள்ளைகள் ஆகியவற்றின் மீதான பற்றுகளை முற்றிலும் கைவிட வேண்டியதில்லை; ஆனால் அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்து, அவற்றின் அடிமையாகாமல் வாழ முயற்சிக்க வேண்டும். இந்த மூன்று ஆசைகளையும் சமநிலையுடன் கட்டுப்படுத்தும் போது, மனம் தூய்மையடைந்து, ஆன்மிக விடுதலையை நோக்கி முன்னேற முடியும்.

இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டியது தூய இதயமே

 குசேலர், பல பொருளாதார உதவிகளையும் செல்வ வளங்களையும் பெறும் எண்ணத்துடன் கிருஷ்ணரைச் சந்திக்கச் சென்றார். ஆனால், கிருஷ்ணரின் தெய்வீக திருமுகத்தைத் தரிசித்தவுடன், தன்னுடைய அனைத்து ஆசைகளையும் அவர் மறந்து விட்டார்.

பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது, பழைய குடிசை இருந்த இடத்தில் பிரமாண்டமான மாளிகைகள் எழுந்திருப்பதைக் கண்டார். அவரது மனைவி அழகிய ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து வெளியில் வந்து, “நாதா! ஸ்ரீ கிருஷ்ணர் உங்களுக்குக் கொடுத்துள்ள அற்புதமான வரங்களைப் பாருங்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

அதைக் கேட்ட குசேலர் அனைத்தையும் பார்த்துவிட்டு, “நான் பகவானிடம் எதையும் கேட்கவில்லை. நமது குடும்ப நிலைமையைப் பற்றிக்கூட அவரிடம் பேசவில்லை. எங்கும் நிறைந்திருக்கும், அனைத்தையும் அறிந்திருக்கும் பரமாத்மாவிடம் எதையாவது சொல்ல வேண்டிய அவசியம் உண்டா?” என்றார்.

அதன்பின், கிருஷ்ணர் தன்னை எவ்வாறு அரண்மனையில் அன்புடன் வரவேற்றார், எவ்வாறு தழுவி அணைத்தார், எவ்வாறு அளவற்ற அன்பைப் பொழிந்தார் என்பதனை தனது மனைவியிடம் விரிவாக விவரித்தார்.

“அவருடைய கருணையையும் அன்பையும் நான் எப்படி விவரிப்பேன்? ஒரு கைப்பிடி அவலைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக அளவற்ற செல்வ வளங்களை அருளக்கூடியவர் வேறு யார் இருக்க முடியும்? அவர் அன்பின் வடிவம். அன்பே அவருடைய இயல்பு” என்று குசேலர் பரவசத்துடன் கூறினார்.

ஆனால் இன்றைய பக்தனின் அணுகுமுறை இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. எண்ணற்ற ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் மனதில் சுமந்துகொண்டு கோவிலுக்குச் செல்கிறான். அதற்குப் பதிலாக ஒரு சிறிய தேங்காயை மட்டுமே இறைவனுக்கு சமர்ப்பிக்கிறான்.

இது இறைவனுக்கு அளிக்க வேண்டிய காணிக்கை அல்ல. இறைவன் எதிர்பார்ப்பது பொருட்களையோ வெளிப்படையான காணிக்கைகளையோ அல்ல. அவருக்கு அர்ப்பணிக்க வேண்டியது தூய்மையான, களங்கமற்ற, சுயநலமற்ற இதயமே. அத்தகைய இதயத்தில் இறைவன் தானாகவே குடிகொண்டு அருள்புரிவார்.

இன்பமும் துன்பமும் – இறைவனின் அருள்மிகு பாடங்கள்

 சிலர் இடையறாத இன்பத்தை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் அது வாழ்க்கையின் இயல்பல்ல. காலை 10 மணிக்கு உணவு உண்ட பிறகு, ஒவ்வொரு மணிநேரத்திலும் தொடர்ந்து உணவருந்த முடியாது. உணவு செரிமானமாக சிறிது இடைவெளி தேவைப்படுகிறது. அதுபோலவே, நாம் அனுபவிக்கும் இன்பத்திற்கும் இடையே ஒரு இடைவெளி அவசியம். அந்த இன்ப அனுபவம் மனதில் செரிமானமாகிய பிறகே மற்றொரு இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.

உணவு செரிமானமாக உடற்பயிற்சி தேவைப்படுவது போல, இன்பத்தை அனுபவித்த பிறகு வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் எதிர்கொள்வது அவசியமாகிறது. எனவே, இறைவன் எதை அளித்தாலும், அது நம் நன்மைக்காகவே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு தாய் தனது குழந்தையைப் பார்க்கும் பேரின்பத்தை அடைவதற்கு முன், கடுமையான பிரசவ வேதனையை அனுபவிக்கிறாள். அந்த வேதனையின் பின்னரே அந்த மகிழ்ச்சி மேலும் அர்த்தமுள்ளதாகிறது.

அதேபோல், ஒரு நாளின் இருபத்து நான்கு மணிநேரமும் குளிர்சாதன அறையில் இருந்தால், அதன் குளுமையின் மகிழ்ச்சியை உணர முடியாது. கடுமையான வெயிலில் சில நேரம் கழித்துவிட்டு அந்த அறைக்குள் நுழையும்போதுதான் அதன் சுகத்தை உண்மையாக அனுபவிக்க முடியும்.

மகாபாரதப் போர் முடிந்தபின், பகவான் கிருஷ்ணர் பாண்டவர்களின் தாயான குந்திதேவியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு குந்தி, “எனக்கு எப்போதும் துன்பங்களே வரமாகக் கிடைக்கட்டும்” என்று வேண்டிக்கொண்டார்.

அவரது இந்த வேண்டுகோளைக் கேட்டு பலர் ஆச்சரியப்படலாம். ஆனால் குந்தி அதன் காரணத்தை விளக்கினார். “நாங்கள் வனவாசத்தில் இருந்தபோது இடைவிடாமல் இறைவனை நினைத்தோம். ஒவ்வொரு சிரமத்திலும் அவரையே சரணடைந்தோம். ஆனால் அரண்மனையில் ராணியாக வாழ்ந்த காலத்தில், உலக சுகங்களில் மூழ்கியதால் இறைவனை அவ்வளவாக நினைக்கவில்லை. துன்பங்கள் வந்தபோதுதான் இறைவனின் நாமம் என் உதடுகளில் நிலைத்திருந்தது” என்றார்.

உண்மையில், இறைவனின் நாமத்தை ஜபிப்பதன் இனிமையை மனிதன் மிகவும் ஆழமாக அனுபவிப்பது துன்ப காலங்களில்தான். துயரங்கள் மனிதனை இறைவனிடம் நெருக்கமாக அழைத்துச் செல்கின்றன. அவை மனதைத் தூய்மைப்படுத்தி, இறைநினைவை வலுப்படுத்துகின்றன.

எனவே, இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் இரு பிரிக்க முடியாத அம்சங்கள் என்பதை உணர வேண்டும். இரண்டையும் இறைவனின் அருளாக ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு அனுபவத்தையும் ஆன்மிக முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

உடலையும் மனதையும் புனிதப்படுத்தும் உண்மையான அர்ப்பணிப்பு

 உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சியும் உழைப்பும் அவசியம். அதேபோல், மனம் ஆரோக்கியமாக இருக்க இறை தியானம் (உபாசனை), இறைநாம ஸ்மரணம், ஒழுங்கான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஒழுக்க வாழ்க்கை தேவை. இந்த ஒழுக்கத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, மகிழ்ச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

அஹிம்சை (பிறருக்கு தீங்கு செய்யாமை) என்பது அரிசி போன்றது. அர்ப்பணம் (இறைவனுக்கான முழு சமர்ப்பணம்) என்பது கடலைப்பருப்பு போன்றது. பிராயச்சித்தம் (தவறுகளுக்கான பரிகாரம்) திராட்சைப் பழம் போன்றது. பச்சாத்தாபம் (உண்மையான மனவருத்தம்) வெல்லம் போன்றது. இவை அனைத்தையும் நற்குணம் என்ற நெய்யுடன் நன்றாகக் கலந்து, அதையே உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு நைவேத்தியமாக அர்ப்பணிக்க வேண்டும்.

ஒரு காசுக்கு கடைகளில் வாங்கிய பொருட்களால் தயாரிக்கப்படும் அற்பமான படையல்கள் அல்ல, இத்தகைய உயர்ந்த குணங்களாலான அர்ப்பணிப்பே இறைவனுக்கு உண்மையில் பிரியமானது.

கோபிகைகள் இந்த இரகசியமான வழியை அறிந்திருந்தனர். அதனால் அவர்கள் மிக விரைவாக இறைவனை உணர்ந்து அனுபவித்தனர்.

நீங்கள் கிருஷ்ணர் “முரளி மாதவன்” என்று அழைக்கப்படுவதை கேட்டிருப்பீர்கள். ஆனால் அந்த முரளி (புல்லாங்குழல்) என்ன என்பதை சிந்தித்துப் பார்த்ததுண்டா? நீங்கள் தான் அந்த முரளியாக மாற வேண்டும்.

கிருஷ்ணரின் தெய்வீக மூச்சு உங்கள் வழியாக பாய்ந்து, இதயங்களை உருகச் செய்யும் இனிய இசையை உருவாக்கட்டும். உங்களை முழுமையாக அவரிடம் சரணடையுங்கள். வாசனைகள் (மனப்போக்குகள் மற்றும் ஆசைகளின் சுவடுகள்) இல்லாத வெற்றிடமாக இருங்கள். அகங்காரமற்றவராகவும், ஆசையற்றவராகவும் மாறுங்கள்.

அப்போது அவர் தாமாகவே வந்து, அன்போடு உங்களைத் தம் கைகளில் ஏந்தி, அந்த புல்லாங்குழலைப் போல தமது உதடுகளுக்கு அருகில் வைத்து, தமது இனிய மூச்சை உங்கள் வழியாக ஊதுவார். பின்னர் அவர் விரும்பும் எந்த இசையையும் உங்களால் இசைக்கச் செய்வார்.

இதுவே உண்மையான பக்தியின் ரகசியம் — முழுமையான சரணாகதி, அகங்காரமின்மை மற்றும் தெய்வீக விருப்பத்திற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தல்.

பிரேயஸ் (preyas) மற்றும் ஸ்ரேயஸ் (shreyas)– வாழ்க்கையின் உண்மையான இலக்கு

 பிரேயஸ் (புலனின்பங்கள்) நாடுபவன் உடலை மையமாகக் கொண்டு வாழ்கிறான். ஆனால் ஆத்மாவைப் பற்றிக் கவலைப்படுபவன் ஸ்ரேயஸை (ஆன்மீக நலன் மற்றும் உயர்வு) நாடுகிறான். இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் புலனின்ப ஆசைகளிலேயே ஈடுபட்டுள்ளனர்; ஆன்மீக ஆனந்தத்தை நாடுபவர்கள் மிகவும் குறைவு.

இன்றைய கல்வி முறை பெரும்பாலும் புலன்களின் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே அமைந்துள்ளது. மனிதனின் தொழில்கள், முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் புலனின்பங்களை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. வாழ்க்கையில் அனுபவிக்கப்படும் பலவிதமான சுகங்களும் புலன்களுடன் தொடர்புடையவையே. செல்வம் சம்பாதிப்பதற்கான பெரும்பாலான முயற்சிகளும் இறுதியில் சிறிய புலனின்பங்களை அனுபவிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும், உடலின் நலன் மற்றும் வசதிகளைப் பற்றி கவலைப்படுவது தேவையற்றது என்று கூற முடியாது. “தர்மத்தை உணர்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் உடல் அவசியமானது” என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உடலின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும். குடும்பப் பொறுப்புகள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் உடலே அடிப்படையாக உள்ளது.

ஆனால், இவை மட்டுமே வாழ்க்கையின் இறுதி இலக்காக இருக்கக் கூடாது. இவை அனைத்தும் வெளிப்புற உலகத்துடனும் உலகியல் ஆசைகளுடனும் தொடர்புடையவை. இதனுடன் சேர்ந்து, உயர்ந்த ஆன்மீக வாழ்க்கையை நோக்கிய ஏக்கமும் மனிதனிடம் இருக்க வேண்டும். அதுவே ஸ்ரேயஸை நோக்கிய பயணம்.

பிரேயஸை நாடுவது எதிர்மறையான பாதையாகும்; ஸ்ரேயஸை நாடுவது நேர்மறையான மற்றும் உயர்ந்த பாதையாகும். மனிதன் எவ்வளவு உலகியல் செல்வங்களையும் வசதிகளையும் பெற்றிருந்தாலும், அவை ஸ்ரேயஸுடன் இணைக்கப்படாவிட்டால் உண்மையான பயனை அளிக்காது. ஆன்மீக உயர்வை நாடும் மனப்பான்மை உருவானபோதுதான், உலகியல் இன்பங்களும் அர்த்தமுள்ளவையாகவும் நிறைவளிப்பவையாகவும் மாறுகின்றன.

எனவே, வாழ்க்கையில் உடலின் தேவைகளையும் உலகியல் கடமைகளையும் புறக்கணிக்காமல் நிறைவேற்றிக் கொண்டே, அதே சமயம் ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும். ஸ்ரேயஸை நோக்கிய ஏக்கமே மனித வாழ்விற்கு உண்மையான அர்த்தத்தையும் நிரந்தரமான நிறைவையும் அளிக்கிறது.

பக்தி மார்க்கம் – அனைவருக்கும் எளிதான ஆன்மிகப் பாதை

 கர்ம மார்க்கத்தை (செயல் வழி) பின்பற்றுபவர் உலக நலனுக்காக பல்வேறு செயல்களை மேற்கொள்கிறார். அவர் யஜ்ஞங்கள் மற்றும் யாகங்களில் (வேத சம்பிரதாய வேள்விகளில்) பங்கேற்கிறார். சேவை மற்றும் தர்மச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். ஆனால் இத்தகைய கர்மங்கள் அனைத்தும் சில சிரமங்களையும் சவால்களையும் கொண்டுள்ளன.

வேள்விகள் மற்றும் யாகங்களை முறையாகச் செய்ய, வேத நூல்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது சாதாரண மக்களுக்கு எளிதானதல்ல. ஞான மார்க்கம் (அறிவின் வழி) வேத சாஸ்திரங்களின் அறிவையும், ஆத்மஞானத்தை அடைவதற்குத் தேவையான பல்வேறு தத்துவ அறிவுகளையும் கோருகிறது. ஞானம் என்பது அத்வைத தரிசனம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, பன்மையில் ஒற்றுமையையும், எல்லாவற்றிலும் ஒரே தெய்வீக உணர்வையும் உணர்வதாகும். இந்த ஒற்றுமை அனுபவத்தை அடைவது எளிதான காரியமல்ல.

யோக மார்க்கமும் மனதைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டதால் மிகவும் கடினமானதாகும். அது புலன்களின் மீது உறுதியான கட்டுப்பாட்டை வேண்டுகிறது. இதற்காக பல தடைகள், சோதனைகள் மற்றும் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான சவால்களையும் ஆன்மிகப் பரீட்சைகளையும் சமாளிக்கத் தேவையான மனவலிமையும் ஆன்மிக வலிமையும் மிகச் சிலரிடமே காணப்படுகிறது. எனவே, யோக மார்க்கமும் பல இடையூறுகள் நிறைந்த பாதையாகும்.

ஆனால் பக்தி மார்க்கம் (இறைபக்தியின் வழி) அனைவருக்கும் மிகவும் எளிதான பாதையாகும். இதற்கு சாஸ்திரங்களில் ஆழ்ந்த புலமை அவசியமில்லை. யாகங்கள், யஜ்ஞங்கள் போன்ற சடங்குகளைச் செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. பன்மையில் ஒற்றுமையைத் தேடும் கடினமான ஆன்மிகப் பயணத்தையும் இது தவிர்க்கிறது. இறைவன் மீது அன்பை வளர்த்துக் கொண்டால், புலன்கள் இயல்பாகவே ஒழுக்கத்திற்குள் வந்து விடுகின்றன. பக்தியின் மூலம் மனம் தூய்மையடைந்து, இறையருளை எளிதில் அனுபவிக்க முடிகிறது.