தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூர தேர் உற்சவம் 2026




நல்லூரான் கொடியேற்றம் பார்த்திடுவோம் வாருங்கள் !


 









மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 





நல்லூரை நினைத்தால் நமக்கென்றும் பேரின்பம்
நல்லூரன் திருவடியை நாடிடுவார் தேறிடுவார்
பொல்லா வினைகள் சொல்லாமல் ஓடிவிடும்
எல்லாமே தந்திடுவான் நல்லைநகர் நாயகனே 

நல்லூரான் கொடியேற்றம் எல்லையில்லா ஆனந்தம்
கந்தனது கொடிபார்க்க வந்திடுவார் அடியார்கள்
வேதமொடு நாதம் மிகுசைவத் திருமுறைகள் 
விண்ணுலகம் கேட்டிடவே வேலவனின் கொடியேறும் 

அரோகரா எனுமொலியோ அவனையெலாம் ஒலிக்கும்
அடியார்கள் தமைமறந்து கொடியேற்றம் கண்டிடுவார்
கொடியேற்றம் காணாமல் தவிக்கின்ற அடியவர்க்குத்
தொலைக்காட்சி ஊடகம் சுகமாகக்  காட்டிவிடும் 

இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார் !


 









மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 




பள்ளிக்குச் சென்றார் படிப்பிலே நாட்டமில்லை
துள்ளி விளையாடினார் சோலைகளை நாடினார்
பாடினார் ஆடினார் பரவசத்தில் மூழ்கினார்
பக்குவத்தை நோக்கியே பயணத்தைத் தொடங்கினார் 

வித்தியாச விளையாட்டு வித்தியாசச் சிந்தனை
ஓவியத்தில் நாட்டம் உணர்வெல்லாம் இறையே
கழிமண்ணை எடுப்பார் கடவுளுரு ஆக்குவார்
கண்களை மூடுவார் காசினியை மறந்திடுவார்

அந்தணராய் பிறந்தார் ஆசையின்றி இருந்தார்
அர்ச்சகராய் அம்பாளை அனுதினமும் சேவித்தார்
காமமும் அறியார் கசடவர் மனமில்லை
காளியம்மா நினைப்புடனே ஆலயத்தில் இருந்தார்

வாகரைவாணன் விண்ணேகினார்


 

கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளி வாகரைவாணன் (சந்தியாப்பிள்ளை அரியரத்தினம்) தனது 85 ஆவது வயதில் ஆகஸ்ட் 10 ஆம் திகதி விண்ணேகினார்.


டிசெம்பர் 22, 1941 ஆம் ஆண்டில் பிறந்த இவர் புனித பத்திரிசியார் கல்லூரியில் (1982 – 1996) ஆசிரியராகச் சேவை அளித்தவர்.

தன்னுடைய 15 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியவர் 42 நூல்களை ஆக்கியளித்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர்.

கவிதை, நாடகம், ஆய்வுக் கட்டுரை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என்று தன் இலக்கியப் பணியை விசாலமாக்கிக் கொண்டவர்.

இலங்கை அரசின் இலக்கிய விருது (சின்னச் சின்னப் பூக்கள்), யாழ் இலக்கியப் பேரவையின் விருதுகள் இரண்டு (அருளாளர் அந்தோனியார் மற்றும் பாலர் தமிழ்ப்பாட்டு ) எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மட்டக்களப்பு (கிழக்கிலங்கைத் தமிழகம்) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.

தெய்வமும் மெய்வருத்தமும்: -சங்கர சுப்பிரமணியன்.

 

ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தின் கீழ் ஒன்பதாவது குறளாக,

 

"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்

மெய் வருத்தக் கூலி தரும்"

 

என்ற குறளை வழங்கியிருக்கிறார் திருவள்ளுவப் பெருமகனார். இப்போது இக்குறள் பற்றி சற்று விரிவாகக் காண்போம். முதலில் இக் குறளில் சொல்லப் பட்டிருக்கும் தெய்வம் என்ற சொல் பற்றி ஆய்வோம். நமக்கும் மேலாக எல்லவற்றையும் இயக்கும் ஒரு ஆற்றல் இருப்பதை எவராலும் மறுக்க இயலாது. இப்போது அந்த ஆற்றல் என்ன என்பதுதான் கேள்வி. அந்ந ஆற்றலால் தான் பிறப்பும் இறப்பும் இரவும் பகலும் பயிர் வளர்வதும் பருவங்கள் மாறுவதும் என இப்படி எல்லாம் நிகழ்கிறது


இந்த ஆற்றல் வேறு எதுவுமல்ல. அதுவே இயற்கை என்னும் மாபெரும் ஆற்றலாகும். இந்த ஆற்றலானது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. தெய்வம் என்ற சொல்லைப் பாருங்கள். இச்சொல் ஆண் பால் சொல்லாகவோ பெண் பால் சொல்லாகவோ இல்லாமல் தெய்வம் என்ற பொதுவின் பால் சொல்லாக இருந்து உண்மையை உணர்த்துகிறது அல்லவா? அதேபோல் தான் கடவுள் என்ற சொல்லும் பொதுவின் பாலாக நிற்பதை யாராலும் இல்லை என்று சொல்லி மறுக்க இயலாது.

 

இப்போது உங்களுக்கு நிச்சயமாக ஒரு சந்தேகம் வரக்கூடும். அப்படி என்றால் இறைவன், இறைவி என்றெல்லாம் சொல்கிறோமே அது என்ன தவறா? என்பதே அச்சந்தேகம். நீங்கள் நினைப்பது முற்றிலும் சரியே. இந்த இறைவன் இறைவி என்பதெல்லாம் மனிதன் கண்டுபிடிப்பு . எப்படி தெய்வம், கடவுள் என்று சொல்கிறோமோ அதேபோல் இதையும் இறை என்றே சொல்ல வேண்டும்


சற்று யோசித்துப் பாருங்கள் நான் சொல்வது சரி என்று உணர்வீர்கள். கடவுளன், கடவுளி(னி) என்றோ தெய்வன் தெய்வி என்றோ சொல்கின்றோமா? இல்லையே. அப்படியிருக்க இறை என்பதை மட்டும் இறைவன் இறைவி என்று நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டு இயற்கை என்னும் மாபெரும் ஆற்றலை ஆணாகவும் பெண்ணாகவும் சொல்வது எப்படி என்று சற்றே யோசியுங்கள். இப்போது தெய்வம் என்று குறளில் சொல்லப் பட்டிருப்பது இயற்கையே என்பது நன்கு புலப்படும்.

 

கரிகால தேசத்துக் காதலி (கவிதைத் தொகுப்பு) ✍️ பிரபா அன்பு 📚 நூல் நயப்பு - கானா பிரபா


"வாய் இருந்தால்

பதுங்கு குழிகளும்
தறப்பாள் கொட்டில்களும்
ஓலமிட்டுக் கதறியிருக்கும்”
ஈழத்துப் படைப்பாளிகள் புனைவுகளை எழுத வேண்டிய தேவை இருக்காது. தாம் வாழ்ந்த வாழ்க்கையின் படிமங்களை அப்படியே கொடுத்தாலே போதும் அதுவொரு கனத்த இலக்கியமாக அமைந்து விடும்.
அங்கே இன்னொரு அம்சமும் தொக்கி நிக்கின்றது. அந்த வாழ்வின் இருப்பு குறித்த பகிர்வுகள் கதைகளாகவோ, கட்டுரைகளாக மட்டுமல்ல, கவிதைகளில் கூடக் கையாளப்படும் சூழலில் அங்கே வரலாறு தேக்கப்படுகிறது. ஒரு சிறு கவிதைக்குள் மிகப் பெரிய அநர்த்தத்தையோ, அந்த இன்னலில் அகப்பட்ட மனிதர்களையோ அடையாளப்படுத்த முடிகிறது.

“கரிகால தேசத்துக் காதலி” என்ற பிரபா அன்பு பகிர்ந்த கவிதைத் தொகுதியும் முன் சொன்ன “வரலாற்றைக் கடத்தி” ஆகவே விளங்கி நின்ற்கின்றது.
இந்தக் கவிதைகளில் இரண்டு பரிமாணங்களில் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

“நானும் காதலித்தேன்
ஆனால் எனக்குள்
பட்டாம்பூச்சி பறக்கவில்லை
எனக்கு முன்பாக
தோட்டாக்களே பறந்தன”
இவ்விதம், தன்னவன் பிரிவின் ஆற்றாமையால் எழுந்த அக உணர்வுப் பகிர்வுகள்.

இரண்டு, தன்னோடு உயிருக்குயிராய் வாழ்ந்திருந்து மடிந்த, களத்தில் நின்ற அந்த வீர மங்கையரின் இழப்பில் முகிழ்த்தவை.

பிரபா அன்பு தான் எடுத்துக் கொள்ளும் களம் குறித்த அச்சொட்டான கவிதைப் படிமம், அந்தச் சூழலின் முரண் நிலை எப்படியிருக்கும் என்பதைப் புரட்டிப் போட்டுப் பார்க்கும் பண்பு இவற்றோடு கவிதைகளைப் படைத்திருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி அந்தக் களத்தில் நின்ற உறவுகளின் குணாம்சங்களை வைத்தே அவர்களை அடையாளப்படுத்தும் பாங்கில் தான் ஒரு பெரும் வலியை நம்முள் கடத்துகிறார். அந்த நாலைந்து வரிகளாலேயே முகம் தெரியாத அந்த வீர மங்கையருக்கான முகவரியைக் காட்டுகிறார்.

உழைக்கும் கரங்கள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தி மு கவில் இருந்து எம் ஜி ஆர் நீக்கப் பட்ட பின் அவருடன் சேர்ந்து


பலர் கழகத்தில் இருந்து விலகி எம் ஜி ஆரின் அண்ணா தி மு கவில் இணைந்தார்கள் . அவர்களில் நாஞ்சில் மனோகரன், கோவை செழியன் போன்றோர் குறிப்பிடக் கூடியவர்கள். இவர்களில் ஒருவர் படம் தயாரிக்க மற்றுமொருவர் படத்தின் கதை வசனம் எழுத அவர்களின் தலைவர் கதாநாயகனாக நடிக்க 1976ம் வருடம் உருவான படம் உழைக்கும் கரங்கள். 


 எம் ஜி ஆர் , கருணாநிதி மோதல் உச்சம் தொட்ட காலத்தில் தயாரான படம் என்பதால் படத்தின் கதை, வசனம், எல்லாமே கருணாநிதியை இலக்கு வைத்தே எழுதப்பட்டிருந்தது. இதனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் படம் திரையிடப்பட்ட போது காட்சிக்கு காட்சி வசனங்கள் அதிர்வை ஏற்படுத்தின. 

 கிராமத்தின் பெரிய மனிதராகவும் அரசியல் புள்ளியாகவும் திகழும்

நாகலிங்கம் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பது அவரிடம் ஊழியம் செய்யும் ரங்கனுக்கு காலம் கடந்தே தெரிய வருகிறது . ஆனாலும் அவரின் ஊழலை அஞ்சாமல் தட்டிக் கேட்கிறான், அநியாயம் செய்வதை நிறுத்தும் படி எச்சரிக்கிறான் . 

 அதற்கு பதில் அவன் மீதே ஒழுக்கம் கெட்டவன் என்று பழி சுமத்தி விரட்டி விடுகிறார் நாகலிங்கம் . தெருவுக்கு வரும் ரங்கனுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள் நாட்டிய தாரகை பங்கஜம், அத்தோடு தன் மனதையும் அவனுக்கு கொடுக்கிறாள். ஆனால் ரங்கன் பழம் விற்கும் முத்தம்மாவை காதலிக்கிறான். இதனிடையே ரங்கன், நாகலிங்கம் மோதல் வலுக்கிறது . இறுதியில் ரங்கன் ஊழலுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றானா என்பதே படத்தின் மீதி! 

இலங்கைச் செய்திகள்

புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ். அரசாங்க அதிபரை சந்தித்தார்

நாடு முழுவதும் 2,500 மில்லியன் ரூபா செலவில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள் ஆரம்பம்

மும்பையில் இருந்து 862 சுற்றுலாப் பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்த சொகுசு கப்பல்!

யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கின் பங்கை 10 சதவீதமாக உயர்த்த நிர்ணயித்துள்ளோம் - வடக்கு ஆளுநர்!

திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்



புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ். அரசாங்க அதிபரை சந்தித்தார் 

14 Aug, 2026 | 06:28 PM

(எம்.நியூட்டன்)

புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சலியா டயஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வெள்ளிக்கிழமை (14) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி மற்றும் 52ஆவது படைப்பிரிவின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.   

உலகச் செய்திகள்

புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ; “இது மிகுந்த வலியுடையது” - மகன் ஹன்டர் பைடன் கவலை

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியன்மார்

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச வணிகப் சேவையை ஆரம்பித்தது

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலம்!  



புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ; “இது மிகுந்த வலியுடையது” - மகன் ஹன்டர் பைடன் கவலை 

10 Aug, 2026 | 04:26 PM

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிர நிலைமையில் இருப்பதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார். 

“இது மிகவும் வலி மிகுந்தது. இந்தப் புற்றுநோய் எனது தந்தையை முடக்கிவிட்டிருக்கிறது” என ஜோ பைடனின் மகன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி வகித்தபோதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்  விதைப்பையில் பரவிய புற்றுநோய் காரணமாக அவர் அப்போதும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

06 - 09 -2026 Sunமுற்பகல் 10 மணி: திருக்குறள் மனனப் போட்டிகள் - 2026

சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபம்

06 - 09 -2026 Sunபிற்பகல் 1 மணிதுர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி 2026

சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபம்

06 - 12 -2026 Sunஆஸ்திரேலிய மருத்துவ உதவி அறக்கட்டளை. (AMAF)🌺 முத்தமிழ் மாலை – 2026 🌺

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 61 " அண்மைக்கால சிங்களப் புனைகதைகள்"


நாள்:  சனிக்கிழமை 29-08-2026

 நேரம்:

 இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 9.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

  சிறப்புப் பேச்சாளர்கள்:

 லறீனா அப்துல் ஹக்

ஜெப்ரி தங்கராஜ்

இரா. கனகேஸ்வரி

 ஒருங்கிணைப்பு:   அகில்

  மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316

  https://www.ilakkiyaveli.com

திருக்குறள் மனனப் போட்டிகள் - 2026


இப்
போட்டிகள் செப்டம்பர் மாதம் 6ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபத்தில் முற்பகல் 10.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2021 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2019 க்கும் 31.07.2021 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2014 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2007 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 கீழே விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு உள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026

தயவுசெய்து 2026 செப்டம்பர் மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

போட்டிக்கான விதிமுறைகள்,  கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளின் வயதை கவனத்தில் கொண்டு, அவர்கள் சரியான பிரிவுகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.  

மேலும் தகவல்களுக்கு கருணாசலதேவாவை 0418442674 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026


இப் போட்டிகள்  செப்டம்பர் மாதம் 6ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

 

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும்  போட்டிகளும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

போட்டிகள்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2021 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு

01.08.2019 க்கும் 31.07.2021 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு

01.08.2014 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மேற்பிரிவு

01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு

01.08.2007 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

  கீழே விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு உள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026

 

தயவுசெய்து 2026 செப்டம்பர் மாதம் 4ம்  ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

 போட்டிக்கான விதிமுறைகள்,  கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளின் வயதை கவனத்தில் கொண்டு, அவர்கள் சரியான பிரிவுகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.  

மேலும் தகவல்களுக்கு கருணாசலதேவாவை 0418442674 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.