தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

சித்திரைப் புத்தாண்டு-2026


 


மவுண்ட் றூட் தமிழ் கல்வி நிலையத்தில் தமிழர் பண்பாடு மற்றும் மரபுகளைப் போற்றும் வகையில் சித்திரைப் புத்தாண்டு விழா 09/05/2026 அன்று சனிக்கிழமை மாலை பள்ளியின் மண்டபத்தில்மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், விருந்தினர்கள், பெற்றோர், பள்ளி நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் திரு. கௌரீஸ்வரன் கந்தசாமி,
அதிபர் திரு. சிவசங்கர் சிவசுப்பிரமணியம், சிறப்பு விருந்தினர்


முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன், ஆசிரியர் பாமரதி மகேஸ்வரமூர்த்தி ஆசிரியர் திருமதி .இரதிசங்கர் ஆகியோரால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. குத்துவிளக்கின் ஒளி அறிவையும் நற்குணங்களையும் குறிக்கும் வகையில் நிகழ்விற்கு மேலும் சிறப்பூட்டியது.

அதனைத் தொடர்ந்து நாம் வாழும் நாட்டின் பூர்வீக மக்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள், போராட்டத்தில் உயிர்நீத்த பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் மற்றும் தமிழர் நிலம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஈகைச்சாவடைந்த அனைத்து தமிழ் உறவுகளையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவன் செல்வன் ரதுஷான் முரளிதரன் அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளியின் தலைவர் கௌரீஸ்வரன் கந்தசாமி அவர்கள் தலைமை உரையாற்றினார். தனது உரையில், இன்றைய நிகழ்வில் நடைபெற இருக்கின்ற பட்டிமன்றத்தின் தலைப்பு சித்திரைப் புத்தாண்டை ஒட்டியதாக இருப்பதால் அதுகுறித்து விரிவாக பேசுவது ஏதோ ஒரு தரப்பினரின் கருத்தை வலுப்படுத்துவதாக அமையக்கூடும் எனக் குறிப்பிட்டார். மேலும், மாணவர்கள் ஏன் இவ்வாறான பட்டிமன்றங்களில் பங்கேற்க வேண்டும் என்பதையும் விளக்கினார். பட்டிமன்றங்கள் மூலம் மாணவர்கள் பல நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதுடன், பிறரது கருத்துகளை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள், தன்னம்பிக்கை பெறுவார்கள், தெளிவாக பேசும் திறனை வளர்த்துக் கொள்வார்கள் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்து உரையாற்றிய பள்ளியின் அதிபர் திரு சிவசங்கர் சிவசுப்பிரமணியம் அவர்கள், பட்டிமன்றத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனது ஆசியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், இன்றைய விழா ஆசிரியர்கள், நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் பலரின் ஒத்துழைப்பினால் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வான பட்டிமன்றத்தை பள்ளி மாணவன் செல்வன் கேசிகன் அருளாளன் அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து செல்வி சுடர்க்கொடி முத்தரசு அவர்களின் தலைமையில் “புலம்பெயர் நாட்டில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் அவசியமா? அவசியமற்றதா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

சேக்கிழார் சிந்தனை சிறந்த நற்சிந்தனை !

















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்… அவுஸ்திரேலியா 




காவியம் பாடினால் கம்பனை விஞ்சுவார்
கற்பனைத் திறனில் உச்சந் தொட்டவர்
பக்தியின் வழியில் பயணந் தொடங்கினார்
பாடினார் பாடினார் பக்தியைப் பாடினார்

கல்வியில் சிறந்தவர் கசடுகள் களைந்தவர்
எண்ணிடும் அனைத்தும் ஏற்றமாய் கொண்டவர்
மண்ணிலே வாழும் மக்களின் மனத்தில்
பக்தியின் பெருமையை பாடியே கொடுத்தார்

அரசனின் அவையில் அமைச்சராய் இருந்தார்
அதிகாரம் ஆணவம் அவரகம் இல்லை
ஆண்டவன் நினைப்பே அவரிடம் நிறைந்தது
அமைச்சராய் இருப்பதை மறந்தே இருந்தார்

கவிதை..."இறைவன் படைப்பில் அத்தனையும் விந்தை!"... மெல்போர்ன் அறவேந்தன்

 
















மெய்யறிஞர்களைத் துன்பங்கள் நெருங்காது! அன்பு ஜெயா பா வகை: ஏலப் பாட்டு என்ற சிந்து பாடல்.

 

காற்றினிலே தனையிழந்தே கண்டயிடம் பறக்கும்

ஆற்றலுமே இல்லாத அத்துரும்பென் செய்யும்;

கற்றூணோ வலிமையினால் காற்றினையே எதிர்க்கும்

கற்றூணின் வலிமையினைக் காற்றென்ன செய்யும்;

கற்றறியா மக்களையே காலமெலாம் அழுத்தி

நற்பொறுப்பு பெற்றிடுவர் நாட்டினிலே சிலரும்;

கற்றவரும் எதிர்வந்தால் கண்முன்னே தோன்றார்

பெற்றசெல்வம் காத்திடவே பேசாரே அவரும்;

உற்றபுலன் ஐந்துமிங்கே உருக்கிடுமே சிலரை

நற்றறிவு பெற்றோரை நாடாவே இவையும்;

ஏலேலோ! ஐலசா ஏலேல ஏலேலலோ!

நீளிரா 🤎 திரைப்பார்வை - கானா பிரபா

 

அகலக் கண் விரித்து, ஆச்சரியத்தோடும், பிரமிப்போடும், மிரட்சியோடும் பார்க்கும் அந்தச் சிறுவனின் வயதை ஒத்த அதே பருவத்தில் தான் நானும் ஆகப் பெரிய அந்தப் போர்க் காலத்தை முதன் முதலில் அனுபவித்தேன்.

இந்திய அமைதிப் படை காலம் என்பது என்பது என் பதின்ம வயதில் என்னை உள ரீதியாகப் பலமாகத் தாக்கியதை முன்னர் பல அனுபவப் பகிர்வுகள் மூலம் எழுதியிருக்கிறேன்.
ஒரு ஐந்து நிமிடக் கண தூரத்தில் ஷெல் வீச்சில் இருந்து நாம் தப்பியதும், எமக்கு முன்னே போன குடும்பம் மாண்டதும் கூட நான் எழுதியதில் ஒன்று.
எனவே அந்த உலகத்தில் ஒன்றரை மணி நேரம் கொஞ்சமாவது வாழ்ந்து விட்டு வந்தது போலவே “நீளிரா”
பட அனுபவம் வாய்த்தது.

நீளிரா வில் துவக்கோடு விளையாடும் சிறுவர்கள், கல்யாண அமளியில் பெரியோர்கள் என்று இரண்டு தடங்களில் அந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதைப்போக்கு.
அந்தச் சிறுவனின் பார்வையிலேயே கதையை நகர்த்தி இருக்கலாம்.
“அழியாத கோலங்கள்” கொடுத்த தன் குருநாதர் பாலுமகேந்திராவின் உத்தியை சீடர் சோமிதரன் கையாண்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.
நீளிரா போலவே வீடியோ கடையில் பட கசெட் எடுத்துப் போட்டு பார்ப்பது, ஊமை விழிகள் விஜயகாந்த் மேலான நேசம், “அடுத்த நாள் ஐந்து மணிக்கு முன்னம் கசெட்டைக் கொண்டு வாங்கோ” என்ற வீடியோக் கடைக்காரரின் விதிமுறை இதெல்லாம் கண்டு அனுபவித்தவன்.
அந்தப் பெடியன் போலவே ஒரு பட போஸ்டர் கிடைக்குமா என்ற நப்பாசையும் இருந்தது.
போர்க்கால நடைமுறையில் எங்கள் வாழ்வியல் அந்தந்தக் காலப்பகுதியை ஒட்டி மாறிவிடும்.
தேசிய அடையாள அட்டைக்குப் பதில் பாடசாலை அடையாள அட்டையைக் காட்டுவது இன்னும் பாதுகாப்பானது என்ற அந்த நுணுக்கமான வாழ்க்கை முறையை அனுபவித்தவன் இங்கே அதையும் படத்தில் பதிவு செய்த போது உருவாக்கத்தின் நேர்த்தியில் ஒரு சோறு என நினைத்துக் கொண்டேன்.
பெட்டியில் துவக்கு மறைத்து வைத்தல், சாரத்தோடு பெடியள், நேரு படம் மாட்டிய வீட்டுச் சுவர், தாடிக்கார அண்ணன்மார், பெடியளுக்குச் சாப்பாட்டு பார்சல் கொடுப்பது, திடீர் சுற்றி வளைப்புகள், தலையாட்டியின் காட்டிக் கொடுப்பில் சிக்கும் அப்பாவி, துவக்கால் அடி வாங்குவது இதெல்லாம் கூட நாம் கண்டதும் கேட்டது.

கோவலன் கொலைக்குக் காரணம் யார்?


கண்ணகியா? மாதவியா?
கொற்றவனா? பொற்கொல்லனா?
 
சிலப்பதிகாரத்தில், புதியதொரு நோக்கில்
செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா வழங்கும்
ஆய்வுரை!
 
அன்புடன் அழைக்கிறோம்!
இணைந்து பாருங்கள், பார்த்துக் கேளுங்கள், கேட்டு மகிழுங்கள்!
26.05.2026 செவ்வாய்க்கிழமை
இந்திய, இலங்கை நேரம்: மாலை பிற்பகல் 3.00 மணி
ஆஸ்திரேலிய  நேரம்: மாலை 7.30 மணி
Zoom Link:
Zoom Meeting ID: 356 272 2898
Pass word: mtsacademy

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 7…..சங்கர சுப்பிரமணியன்.


ஷிண்டோ மதத்தில் சிவப்பு நிறம் பாதுகாப்பைக் கொடுக்கும் நிறமாகும். தீய சக்தி, நோய் மற்றும் விபத்து நடக்காமலிருக்க  வேண்டுபவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு கிட்சுயூனுக்கு ( நரி சிற்பம்) கழுத்தில் மேககே (சிவப்பு துணி) என்பதை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

ஷிண்டோ மதக் கடவுளான இனாரியோடு சம்மந்தப்பட்ட நரியைப் பற்றிய ஜப்பானிய புரணக்கதைகள் நிறையவே உள்ளன. ஆவி அல்லது உயிர் என்றும் உருவமோ ஆண் பெண் தன்மையோ இல்லாத அழிவற்ற ஒரு ஆற்றல் என்று என் வாசிப்பில் ஏற்பட்ட அனுபவித்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

புராணக்கதைகள் என்றாலே வளர்ந்த நாடுகள்
பின்தங்கிய நாடுகள் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆனால்

வளர்ந்த நாடுகள் அதை புராணக்கதைகளாக மட்டுமே பார்த்துவிட்டு
முன்னேற்றத்தில் முன்னேறிப் போய்க்கொண்டே இருப்பார்கள். பின்தங்கிய நாடுகள் புராணக்கதைகளை கதைகளாக மட்டும் பார்க்காமல் அதிலேயே மூழ்கி இளம் சமுதாயத்தையும் மூழ்கவைத்து விடுகிறார்கள்.


முன்னேற்றம் பற்றிய எண்ணத்துக்கு மூடுவிழா நடத்துகிறார்கள். முன்னேற்றம் என்றால் அணு ஆயுதங்கள் மற்றும் பரிசோதனையிலும் விண்வெளிக்கு விண்கலங்களை வானுக்கு அனுப்புவதிலும் மட்டும் இல்லை. நாட்டு மக்கள் இருக்க இடமும் உடுக்க உடையும் பசி பட்டினி இல்லாமல் இருப்பதும்தான் உண்மையான முன்னேற்றம்.   


அது இல்லாத முன்னேற்றம் பெற்றோரை பிச்சைஎடுக்க வைத்துவிட்டு அன்னதானம் செய்வதற்கு ஒப்பாகும். நான் சொல்வதை மாடசாமி அண்ணாச்சி ஏற்றுக் கொள்வார் என்று எண்ணுகிறேன். என்னைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருப்பீர்கள். அடிக்கடி கட்டுரையிலிருந்து தடம்புரள்வேன். இது மதிமயங்கிய தடம் புரள்வது கிடையாது. மதுநுட்பமான தடம் புரள்வுதான்.

ATBC வானலையில் கூத்தாடி நடிகர் திரு செல்வின்தாஸ் அவர்களுடனான ஒரு கலந்துரையாடல்

 .

வைகாசி மாதம் 26 ம் திகதி செவ்வாய்க்கிழமை (26 MAY 2026 ) இரவு 8 மணிக்கு ( இலங்கை , இந்திய நேரம் மாலை 3.30 மணிக்கு ) ATBC வானலையில் "செவ்வாய் இரவில் உங்களுடன் நான்" நிகழ்ச்சியில் சிட்னியில் இருந்து கூத்தாடி திரைப்பட நடிகர் , தயாரிப்பாளர் திரு செல்வின்தாஸ் அவர்களுடனான ஒரு கலந்துரையாடல்

நாம் மூவர் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் , சிவாஜி இருவரும் ஒரே ஒரு படத்தில் சேர்ந்து நடித்ததுடன் தொடர்ந்து சேர்ந்து நடிப்பதை விட்டு விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு பின் நடிக்க வந்த இளம் நடிகர்களான ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் இருவரும் வெற்றி பட நாயகர்களாக திகழ்ந்த போதும் சேர்ந்து நடிக்க எவ்வித தயக்கமும் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு அவர்கள் இணைந்து நடித்த ஆரம்ப கால படங்களில் ஒன்று நாம் மூவர். 


 நாம் மூவர் என்று படத்துக்கு பேர் என்றால் மூன்றாவது நடிகர் யார் என்ற கேள்வி எழும் அல்லவா , அவர் வேறு யாரும் அல்ல நாகேஷ் தான்! 

 ஏற்கனவே எம் ஜி ஆர் நடிப்பில் தாயின் மடியில் படத்தை எடுத்த கே ஆர் பாலன் இனி எடுக்கும் படங்கள் புது நடிகர்களின் நடிப்பில் வணிக ரீதியான படங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முடிவில் முழு மசாலா படமாக நாம் மூவர் படத்தை தயாரித்தார். 

 தான் எடுக்கும் மசாலா படத்துக்கு கதை எழுத அவரால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் தான் மகேந்திரன். பின் நாட்களில் ஜனரஞ்சக படங்களை விமர்சனம் செய்து கொண்டும், மட்டம் தட்டிக் கொண்டும் இருந்த மகேந்திரன் தான் இப் படத்தின் கதையை எழுதினார் . இந்தப் படத்துடன்தான் அவரின் திரையுலக பிரவேசம் ஆரம்பமானது. 

 செல்வ செழிப்பில் வாழும் ஓர் இளைஞன் , வருமானம் தேடி கிராமத்தில் இருந்து பட்டணம் வரும் மற்றுமோர் இளைஞன், தெருவில் வரும் கார்களை பஞ்சராக்கி , பின்னர் அதை திருத்திக் கொடுத்து அதன் மூலம் வருமானம் தேடும் ஒருவன் மூவரும் சந்தித்து இணை பிரியாத நண்பர்களாகிறார்கள். கால ஓட்டத்தில் மூவருக்கும் காதலிகள் கிடைக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழலால் ஒருவன் மீது கொலைப் பழி விழுகிறது. அவனை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு அவன் நண்பன் மீது சுமத்தப் படுகிறது. மூன்றாவது நண்பனோ இறந்து விட்டவனாக மறைந்து வாழ்கிறான். இவர்கள் மூவரும் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் மீதி. 

சாதனையில் உறுதியும் சரியான புரிதலும் அவசியம்

 சாதனையை மேற்கொள்ளும் போது, ஒருவர் சாஸ்திரங்களில் கூறப்பட்ட விதிமுறைகளையோ, குருவின் கட்டளைகளையோ அல்லது இறைவனின் ஆணைகளையோ பின்பற்ற வேண்டும். அவற்றைப் பின்பற்றும் போது எத்தகைய தடைகள் வந்தாலும் கவலைப்படக் கூடாது. உயிரையே இழக்க நேர்ந்தாலும், தமக்குக் கூறப்பட்ட சாதனையை தொடர்ந்து செய்து வெற்றியை அடைய வேண்டும்.

சிலர், “நாங்கள் ஸ்வாமியின் கட்டளைகளைப் பின்பற்றுகிறோம்; ஆனால் எங்கள் சாதனையில் பல தடைகள் வருகின்றன” என்று கூறுகிறார்கள். இது சரியான மனப்பான்மை அல்ல. உண்மையில், ஒருவர் ஸ்வாமியின் அறிவுரைகளை கவனமாகவும் சரியாகவும் பின்பற்றினால், எந்தத் தடைகளும் வராது. தடைகள் வந்தால், அந்தக் கட்டளைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதற்கே அது அடையாளமாகும்.

சாதனையைத் தொடங்குவதற்கு முன், சில விஷயங்களை ஒருவர் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். சாதனை என்பது வாழ்க்கையின் குறிக்கோளை அல்லது இலக்கை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். சாதகர் தாம் எதை அடைய விரும்புகிறார், தன் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பின்னர், அந்த இலக்கை அடையும் வரை சாதனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படை அம்சங்களை அறியாமல் சாதனையைத் தொடங்கினால், ஒருவர் தடுமாறி பல பிரச்சினைகளையும் தடைகளையும் சந்திப்பார். அதன் விளைவாக, குருவின் மீது இருந்த நம்பிக்கையே குலைந்து போகலாம்; அது ஒருவரின் முழுமையான வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் காரணமாக முடியும். ஆகையால், சாதனையை மேற்கொள்ளும் போது ஒருவர் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.

அகந்தை தியானப் பாதையின் மிகப் பெரிய தடையாகும்

 அகந்தை, தற்பெருமை, தன் மேன்மையை வெளிப்படுத்தும் ராஜசிக மனப்பான்மை, கோபம், பிறரின் பலவீனங்களையும் வலிமைகளையும் ஆதாரமின்றி அறிய விழையும் ஆசை, வஞ்சகம் — இவையெல்லாம் தியானப் பாதையில் பெரிய தடைகளாகும். இவை வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அந்தத் தவறான திசைகளில் மனிதனை இட்டுச் செல்லும் வாசனைகள் மனத்தின் ஆழத்தில் மறைந்தே இருக்கும்.

நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறந்தால், அது தூசியும் துர்நாற்றமும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அதை நன்றாகச் சுத்தம் செய்த பிறகு, அது சுத்தமாகவும் வாழத் தகுந்ததாகவும் மாறுகிறது. அதுபோலவே, தியானத்தின் சக்தியால் மனத்தின் எல்லா அசுத்தங்களும் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.

ஆன்மீக சாதகர் அகமுகப் பார்வையுடன் தன் மனத்தையும் அதன் நிலையும் உள்ளடக்கங்களையும் ஆராய வேண்டும். சரியான ஒழுக்கப் பழக்கங்களின் மூலம், மனத்தில் சேர்ந்து கிடக்கும் அசுத்தங்களை சிறிது சிறிதாக முறையாக அகற்ற வேண்டும்.

அகந்தை மிகவும் ஆழமாக வேரூன்றியதும் எளிதில் விடாமலும் இருப்பதாகும். ராஜசிக மனதில் அது பல கிளைகளை எல்லாத் திசைகளிலும் விரித்து பரவி நிற்கும். சில காலம் அது உலர்ந்துவிட்டது போலவும் இறந்துவிட்டது போலவும் தோன்றலாம்; ஆனால் மீண்டும் எளிதாக முளைத்து வளரத் தொடங்கும். அதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலே, அது மீண்டும் தன் பாம்புத் தலையை உயர்த்தும்.

நம்பிக்கையும் சந்தேகமின்மையும் வாழ்க்கையின் இரு கரைகள்

 ஒரு நதிக்கு இரண்டு கரைகள் உள்ளன. அவை இல்லையென்றால், நதி எல்லாத் திசைகளிலும் பாய்ந்து வயல்களையும் கிராமங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்து அளவிட முடியாத துன்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தும். ஆனால் அதன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த கரைகள் இருந்தால், அது பாசனத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

அதேபோல், மனித வாழ்க்கை என்னும் நதி இரண்டு எட்டு எழுத்து மஹாவாக்கியங்களின் கரைகளுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒன்று: ம்பிக்கையுள்ளவன் ஞானத்தை அடைவான். (Shraddhavan labhate jnanam) மற்றொன்று: எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்பவன் நாசமடைவான். (Samsayatma vinashyati). இந்த இரு வாக்கியங்களையும் பகவத் கீதையில் Lord Krishna அறிவித்துள்ளார்.

ஒருவருக்கு சந்தேகம் இருக்கும் வரை, அவர் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் முழு நம்பிக்கையுடன் சந்தேகமின்றி இருந்தால், எதையும் சாதிக்க முடியும். இந்த இரண்டு கரைகளுக்குள் பாயும் மனித வாழ்க்கை என்னும் நதி, இறையருளின் இலக்கை வெற்றிகரமாக அடைகிறது.

ஒரு மரத்திற்கு நீர் தேவைப்பட்டால், அதன் வேரில்தான் நீர் ஊற்றப்படுகிறது. அந்த வேர் மண்ணுக்குள் புதைந்திருப்பதால் கண்களுக்கு தெரியாது; ஆனாலும் அதுவே மரம் செழித்து வளர அடிப்படையாக உள்ளது. வேர் வறண்டுவிட்டால், மரம் உயிரிழக்கும். ஆகையால், வேரை பாதுகாக்க வேண்டும்.

அதேபோல், வாழ்க்கையின் வேரையும் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் அது அழிந்து போகும். வாழ்க்கையின் வேர் என்பது சந்தேகத்தை அழிப்பதே ஆகும். எனவே, இந்த இரண்டு எட்டு எழுத்து மந்திரங்களே வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளாகும்.

கோபத்தை வெல்வதே ஆன்மீக முன்னேற்றத்தின் வழி

 கோபத்தைப் பற்றிய விஷயத்தில், ஆன்மீக சாதகர் தன்னைத் தூண்டக்கூடிய மிகச் சிறிய காரணங்களுக்குக் கூட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் அலட்சியமாக இருந்தால், சிறிதளவும் முன்னேற்றம் அடைய முடியாது. இப்படிப்பட்டவர்கள் சௌம்ய பிரேம பாவம் (மென்மையான அன்பு மனப்பான்மை) வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தீய குணங்கள் குறையத் தொடங்கும்.

சில சாதகர்கள், தங்களிடம் உள்ள குறைகளை யாராவது சுட்டிக்காட்டினால், அதற்கே மேலும் கோபப்படுகிறார்கள். இது நிலையை இன்னும் மோசமாக்குகிறது. சாதகர் எப்போதும் அகமுகப் பார்வையுடன் இருக்க வேண்டும்; மனதை வெளிப்புற விஷயங்களில் அலையவிட்டால், தன் குறைகளை ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. அகந்தையே அகமுகப் பார்வையைத் தடுக்கிறது மற்றும் மனதைச் சிதறடிக்கிறது.

சாதகர் வெற்றியை அடைய விரும்பினால், யாராவது தன் குறைகளை எடுத்துரைக்கும் போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அவற்றைத் திருத்திக்கொள்ளவும், மறுபடியும் அவற்றைச் செய்யாமல் இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே தியானப் பாதையில் விரைவாக முன்னேறவும், ஆனந்தத்தை அனுபவிக்கவும் உதவும் சரியான வழியாகும்.

ஒவ்வொரு உயிரிலும் இறைவன்

 ஆன்மீகத்தின் உண்மையை உள்ளத்தில் பதியச் செய்ய, தெய்வத்தின் சன்னிதியில் இருக்கும் போது புனிதத்தையும் வணக்கத்திற்குரிய நிலையையும் பெறும் விலங்குகளின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். பாம்பு, சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் போது அனைவராலும் வணங்கப்படுகிறது. ஆனால் வேறு இடங்களில் அதைக் கண்டால், மக்கள் அதை கொல்லத் தயங்குவதில்லை. அதுபோலவே, விநாயகரின் வாகனமான எலி, விநாயகருடன் இருக்கும் போது வணக்கத்திற்குரியதாகிறது; ஆனால் அதையே உங்கள் வீட்டில் கண்டால், அதை பிடித்து அகற்ற முயல்கிறீர்கள்.

இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், நாம் இறைவனின் சன்னிதியில் இருக்கும்போது உயர்ந்த மரியாதையைப் பெறுகிறோம் என்பதே. எவ்வாறு உடலின் அங்கங்கள் நமது உடலின் பகுதிகளோ, அதுபோல நாமெல்லாரும் அந்த விச்வரூபமான இறைவனின் உடலின் அங்கங்களே. அந்த விச்வரூபம் ஆயிரக்கணக்கான தலைகள், கால்கள், கைகள் மற்றும் கண்கள் கொண்டது. எல்லா உயிரினங்களின் உடல்களும் அவருடையதே.

இதில் உறுதியான நம்பிக்கை வளர்த்துக் கொண்டால், தெய்வீகத்தை அதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்துகொள்ள முடியும். சிவன் கோவிலில் கல்லால் செய்யப்பட்ட நந்தியைப் பார்க்கும்போது நாம் அதை வணங்குகிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் ஒரு காளையைப் பார்த்தால், அதை அடிக்கவும் தயங்குவதில்லை. இது ஒவ்வொரு உயிரிலும் இறைவனை காணாத மனிதனின் அறியாமையாலேயே ஏற்படுகிறது. எறும்பிலிருந்து யானை வரை, எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான்!

இலங்கைச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிப்பு

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா தெரிவு

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறு - வைத்தியர் சமில் சஞ்சீவ கோரிக்கை



முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிப்பு

Published By: Digital Desk 1

22 May, 2026 | 12:48 PM

(செ.சுபதர்ஷனி)

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக, சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய மாத்தறை நீதிவான்  நீதிமன்றம்  இன்று (22) வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.   நன்றி வீரகேசரி 

உலகச் செய்திகள்

தெற்கு லெபனானில் இரு இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் - சிறுமி உட்பட 10 பேர் பலி

ஆபிரிக்காவில் ‘பண்டிபுஜியோ’ எபோலா வைரஸ் பரவல் தீவிரம் : தடுப்பூசி கண்டுபிடிக்க 9 மாதங்கள் ஆகலாம் - WHO

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றார் ரஷ்ய அதிபர் புதின் 



தெற்கு லெபனானில் இரு இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் - சிறுமி உட்பட 10 பேர் பலி 

23 May, 2026 | 09:45 AM

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

தெற்கு லெபனானில் இரு இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

முதலில் ஹனுயே கிராமத்துக்கு குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்லாமிய சுகாதார சங்கத்தைச் சேர்ந்த 4 மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

 வைகாசி மாதம் 26 ம் திகதி செவ்வாய்க்கிழமை (26 MAY 2026 ) இரவு 8 மணிக்கு      ( இலங்கை , இந்திய நேரம் மாலை 3.30 மணிக்கு ) ATBC  வானலையில் "செவ்வாய் இரவில் உங்களுடன் நான்" நிகழ்ச்சியில் சிட்னியில் இருந்து கூத்தாடி திரைப்பட நடிகர் ,  தயாரிப்பாளர் திரு செல்வின்தாஸ் அவர்களுடனான ஒரு கலந்துரையாடல் 

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் பரிசு பெற்ற நூல்கள் - சிறப்புப் பேட்டி

 அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும்,  அஸ்திரேலியா தமிழ் இலக்கிய


கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.


அவற்றுடன், கடந்த சில வருடங்களாக, இச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும், புதியவர்களை எழுதத் தூண்டுவதுடன் அவர்களுக்குத் தமிழ் எழுத்துலகில் களம் அமைத்துக்கொடுப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயற்படுத்தப்படுகிறது.

நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில், ஒவ்வொன்றிலும் கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் சங்கத்தின் பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் இலங்கை  ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் பற்றிய விபரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

20 ஆண்டுகள். தவறவிட முடியாத ஓர் இசை இரவு. 🎶✨

இருபது ஆண்டுகளாக, Kamban Kazhagam Australia Inc. அமைப்பு, இயல் – இசை – நாடகம் எனும் தமிழரின் பண்பாட்டு செல்வங்களை உலகத் தரக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மூலம் சிட்னி தமிழர் சமூகத்துடன் பகிர்ந்து வருகிறது.
டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, ராஜேஷ் வைத்யா, சித் ஸ்ரீராம், சூர்யகாயத்ரி, ஸ்பூர்த்தி ராவ் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை வழங்கிய பெருமையை கொண்டாடி, இப்போது எங்கள் 20வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்வுகளில் ஒன்றை உங்களுக்காக கொண்டு வருகிறோம். சிட்னி ரசிகர்கள் ஏற்கனவே உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்!

🔥 டிக்கெட்டுகளில் 50% ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டது! 🔥

Isai Velvi 2026 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நினைத்திருந்தால், சிறந்த இருக்கைகள் அனைத்தும் நிறைவதற்கு முன் உடனே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!

🎻 ISAI VELVI 2026
இந்தியாவில் இருந்து வருகை தரும் உலகப் புகழ்பெற்ற வீணை வித்துவான்
Vid. Ramana Balachandhran
மற்றும் மிருதங்க மேதை
Vid. Dr. Patri Satishkumar
இணைந்து வழங்கும் அதிசயமான கர்நாடக இசை விருந்து!

இசை, லயம், உணர்வு, கலை நயம் அனைத்தும் கலந்த ஆன்மாவை வருடும் மாபெரும் இசை அனுபவத்துக்கு தயாராகுங்கள். திரை இறங்கிய பின்னரும் நீண்ட நாட்கள் பேசப்படும் ஒரு அபூர்வ இசை நிகழ்ச்சி இது!

குரு பெயர்ச்சி 2026

 




வைகாசி விசாகம் – சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் 30 மே 2026, சனிக்கிழமை, மாலை 5.30 மணி

 வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் வைகாசி விசாகம், முருகப்பெருமானின் (கார்த்திகேயன்) அவதார தினமாகப் போற்றப்படுகிறது.

இந்நாளை முன்னிட்டு துர்கா ஆலயத்தில் சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானைக்கு பால் கலச அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தங்கத் தேர்பவனி மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.



சிட்னியில் மிக விரைவில் (ஜூன் மாதத்தில் ) "கண்ணம்மா" இலங்கை திரைப்படம்

 .

இலங்கை தயாரிப்பான "கண்ணம்மா" திரைப்படம் சிட்னியில் மிக விரைவில் வெளியிடப் படவுள்ளது . யூட் சுகி அவர்களின் கமரா,எழுத்து, இயக்கத்திலும், பிரசாந்த் கிரிஷ்ணபிள்ளையின் இசையிலும், காரை சிவநேசனின் படத்தொகுப்பிலும், மகேந்திரசிங்கம், சபேசன், நிந்துஜா, ஜீவேஸ்வரன், சிவநேசன், ஜஸ்மின், கிளிநொச்சி கண்ணம்மா போன்றோரின் சிறந்த நடிப்பிலும் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியில் உருவான முழு நீள திரைப்படம் கண்ணம்மா. ஜூன் மாதத்தில் வெளியிட உள்ள இத் திரைப்படத்தை பார்க்கத் தவறாதீர்கள்.

வைகாசி விசாகம் – 30 மே 2026

 உருவமுமாக, அருவமுமாக, ஆதியின்றி, ஒன்றாகவும் பலராகவும்


ஜோதி ஸ்தம்பமாக விளங்கிய பரம்பொருளான பரபிரம்மம், உலகின் மீட்சிக்காக அருள்மிகு ஆறு முகங்களும் பன்னிரண்டு கரங்களும் உடைய தெய்வ அவதாரமாக முருகப்பெருமானாக அவதரித்தார்.

முருகப்பெருமானின் பரம தெய்வீக அவதாரம் தமிழ் மாதமான வைகாசியில் (மே மாத நடுப்பகுதி முதல் ஜூன் மாத நடுப்பகுதி வரை), விசாகம் எனப்படும் நட்சத்திர நாளில் நிகழ்ந்தது.

மங்களகரமான “விசாக நட்சத்திரம்” வானில் பிரகாசமாக ஒளிரும் மூன்று நட்சத்திரங்களின் சங்கமமாகும். அந்த புனித நாளில்தான் முருகப்பெருமான் அசுர சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநிறுத்தவும், உலகிற்கு உயர்ந்த பாதுகாப்பையும் ஞானத்தையும் அருளவும் வெளிப்பட்டார்.




சிட்னி இசை விழா 2026 - ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதி

 சிட்னி இசை விழா ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் பார்ரமட்டா ரிவர்சைட் தியேட்டரில் நடைபெறும்.  


நீங்கள் பிரபல கலைஞர்களிடமிருந்து இசையின் உச்ச  அனுபவத்தை பெறுவீர்கள்.   டிக்கெட்டுகள் பார்ரமட்டா ரிவர்சைட் இணையதளத்தின் மூலம் மட்டுமே விற்கப்படுகின்றன.   நீங்கள் விரும்பும் வசதியான இருக்கையைத் தேர்வு செய்ய முன்கூட்டியே உங்கள் டிக்கெட்டுகளைப் பெறுங்கள்.

இதற்கு கீழே மேலும் விவரங்களுடன் விளம்பரத் தாள் வழங்கப்பட்டுள்ளது.