கட்டுரைகள் பல கண்டான்
சிறந்த கட்டுரையாளன் என்றனர்
கதைகள் எத்தனையோ சமைத்தான்
நல்ல கதாசிரியன் என்றனர்
கவிதைகள் எண்ணிலடங்கா படைத்ததா
கவிஞனானான் அவனும்
சித்திரங்கள் சிறப்பாய் தீட்டி
ஓவியனாய் கொண்டாடினர்
விளையாட்டில் பல கோப்பை வென்று
விளையாட்டு வீரனானான்
பலதொழிலும் செய்து தொழில்வல்லு
என்றும் பெயரெடுத்தான்
இத்தனை அவன் சிறப்பாய் செய்ய
இப்படியெல்லாம் பாராட்டியவர்
மற்றவற்றை செய்தபோது மட்டமாய்
ஏன் சொன்னார்கள் என்றான்
அப்படி நீ என்ன செய்தாய் மற்றோ
அவதூறு செய்யவென்றேன்
மது பலவும் அருந்தி மகிழ்ந்திரு
பெருங்குடிகாரன் என்றனர் என்
போதைப் பொருட்களை நாடிச்சென்றேன்
போதைக்கு அடிமை என பெயரிட்டனர்
மற்றபடி எதுவும் தவறாக செய்யவி
நான் என்றே சொன்னான் அவனும்
உள்ளமும் உடலும் கெடும் வண்ணம்
செய்யும் எதுவும் தவறென்றேன்
உள்ளதைத்தான் சொன்னார்கள் என்றே
உண்மையில் அமைதியானான்!
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment