கரையொன்று நம்மையெலாம்
காத்திடுமே வெள்ளத்தின்
கடுமையுமே தாக்கிடாதே!
கரைதானே வெள்ளத்தின்
கடுஞ்சினமும் அழித்திடாமல்
காவலுமே புரிகின்றதே!
கரைதாண்டி வெள்ளமதும்
கடந்திடுதல் அரிதாகும்
காத்திடுதல் அதன்பண்பே!
கரைபோன்றே உள்ளமதும்
கடுஞ்சினத்தை எந்நாளும்
காத்திடுதல் சிறப்பன்றோ!
கடுஞ்சினமும் வெளிப்படாது
காலமெல்லாம் அமைதியினைக்
காத்திடுதல் பெருமையன்றோ!
கடுஞ்சினத்தை அடக்குவோனே
களத்தினிலே வெற்றிதனைக்
காலமெல்லாம் காண்பானே!
No comments:
Post a Comment