மரண அறிவித்தல்


 திருமதி கணேஸ்வரி  பத்மநாதன் 


aef2a667-0e7b-43bc-b59b-5c91f3619612.jpg

                                          தோற்றம்:  26.06.1950            மறைவு: 4.10.2023                                                      
வைரவர் கோவில் றோட், யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் அமரர் செல்லத்துரை சின்னையாஅமரர் தெய்வானை செல்வத்துரை தம்பதியினரின்  இளய அன்புப் புத்திரி ஆவர்.  அமரர் பத்மநாதன் பரமசாமி அவர்களின் பாசமிகு மனைவியும், அமரர் இராஜேந்திரம் செல்லத்துரை, அமரர் பரலோகபுஷ்பம் துரைராசா, பத்மாவதி அரசரத்தினம் (அவுஸ்திரேலியா), அமரர் செல்வநாயகம் செல்லத்துரை, அமரர் விஜயலட்சுமி அமிர்தலிங்கம், ஜெயலட்சுமி ஜீவாநந்தன் (லண்டன்),  இந்திராணி குணரத்தினம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவர். சயந்தன் (அவுஸ்திரேலியா) உமா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்.  

 திருமதி கீர்திகா சயந்தன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு  மாமியாரும் ஆவர்.

 

அமரர் திருமதி  கணேஸ்வரி  பத்மநாதன் அவர்களின் இறுதிச் சடங்கு 7 அக்டோபர்  2023சனிக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து மாலை 12.30 மணி வரை 

South Chapel, Rookwood Memorial Gardens and Crematorium, Lidcombe, NSW 2141 


இந்த அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

 

மேலதிக விபரங்களுக்கு  சயந்தன் பத்மநாதன் 0421569934தொடர்பு கொள்ளலாம்.

அஞ்சலிக்குறிப்பு : மலேசியா எழுத்தாளர் சை. பீர்முகம்மது விடைபெற்றார் ! ஆறாம்திணை தமிழ் இலக்கியத்தில் இணைந்திருந்தவரின் இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியது ! ! முருகபூபதி

 “ இலக்கியப்போக்குகள் ஒவ்வொரு தலைமுறையிலும்


மாற்றங்களைப்பெற்றே வளர்ந்துள்ளன. நமது சங்க இலக்கியங்களிலிருந்து இன்றைய இலக்கியப் போக்கின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் இது விளங்கும். இலக்கிய வரலாறு ஒவ்வொரு மொழிக்கும் மிக முக்கியமானது. ஆனால், தமிழைப்பொறுத்தவரையில்  ‘ வரலாறு  ‘ என்பது கண்டுகொள்ளப்படவேயில்லை.

தமிழ் இலக்கியத்தை நமது இலக்கணத்தில் கூறப்படுவது போல் ஐந்திணைகளில் இப்பொழுது அடக்கிவிடமுடியாது. தென்குமரி, வடவேங்கடம் வரையிருந்த தமிழ் வேறு, இன்றுள்ள தமிழின் பரப்பு வேறு. ஐந்திணைகளில் பனிகொட்டும்  நாடுகளில் வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தை நாம் அடக்கிவிடமுடியாது. வடவேங்கடம் தென்குமரிக்கு அப்பால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது, உலகின் ஐந்து கண்டங்களிலும் தமிழ் இலக்கியம் அதனதன் போக்கில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது.  “ என்று மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் நூலகர் என். செல்வராஜாவின்  மலேசியாவில் தமிழ்: பார்வையும் பதிவும் என்ற நூலில்  ( 2016 )  தனது கருத்தை எழுதியிருக்கும் எமது இலக்கியக்குடும்பத்தினைச் சேர்ந்த  எழுத்தாளர் மலேசியா சை. பீர்முகம்மது  கடந்த  செப்டெம்பர் 26 ஆம் திகதி  மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.

1942 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் பீர்முகம்மது, தனது நீண்டகால


உழைப்பிலும் தேடலிலும்  வெளியான  இலக்கியப் படைப்புகளையும், தொகுப்பு நூல்களையும் வரவாக்கித்தந்துவிட்டு, 81 வயதில் விடைபெற்றிருக்கிறார்.

மலேசியா தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பீர்முகம்மது தவிர்க்க முடியாத ஆளுமை. மலேசியா தமிழ் இலக்கிய வரலாற்றில் இவரது பங்களிப்பும் சேவையும் பலரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

ஜப்பானியரின் ஆட்சிக்காலத்தில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்த பீர்முகம்மது, இளமைக்காலத்தில் வறுமையை அனுபவித்தவர்.  படிப்பதற்கும் வசதியற்ற குடும்பச் சூழ்நிலையில், ஒரு உணவு விடுதியில் பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டவாறே இரவு நேரப்பாடசாலையில் படித்தார்.

அவரது வாழ்க்கை அனுபவங்கள் அதிர்வுகளைக்கொண்டது.

அவரது வாய்மொழிக்கூற்று இவ்வாறு அமைந்துள்ளது.

 “ என் பள்ளி வாழ்வைத் தொடர முடியாமல் பல சிக்கல்கள் ஏற்பட்டன. மூன்றாம் ஆண்டிலேயே எனது தந்தையார் என்னை பள்ளிக்கூடத்திற்குச் செல்லவேண்டாம் எனக் கூறிவிட்டார். பிள்ளைகள் அதிகமாகிவிட்டதை ஒரு காரணமாகக் காட்டினார். என்னால் அதனைத் தாங்க இயலாது வீட்டை விட்டு ஓடிவிட்டேன். ஸ்தாபாக்கில் இருக்கும் பஞ்சாபி குடும்பத்தில் அடைக்கலமானேன். அவரது பிள்ளைகள் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர் குடும்பத்தின் மூத்த மகன் அப்போது சீனியர் கேம்பிரிட்ஜ் படித்துக் கொண்டிருந்தார். காலையில் பள்ளிக்குச் செல்லவும் மாலையில் அவர்களின்  மாடுகளைப் பார்த்துக்கொள்ளும்படியும் யோசனை கூறினார். அப்போது அவர்களிடத்தில் நாற்பது மாடுகள் வரை இருந்தன. பிறகு அவரே அவரது தந்தையாரிடம் பேசி எனக்கு முப்பது வெள்ளி சம்பளம் வாங்கிக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் அது பெரிய தொகையாக இருந்தது. சம்பளம் போக அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டேன், தூங்கினேன். இதைவிட வேறென்ன வேண்டுமென அங்கேயே தங்கிப் படித்தேன்.

சினிமா : பார்த்ததும் கேட்டதும் ✍🏻 லெ.முருகபூபதி | நூல் நயப்பு 📚 கானா பிரபா

 இலக்கியவாதியாக இருப்பவர், மொழி பேதமற்ற சினிமா ரசிகராகவும் இருந்தால் நமக்குக் கிடைக்கும்


இலாபம் எது என்பதற்கான விடை தான் இந்த நூல்.

எழுத்தாளர் லெ.முருகபூபதி அடிப்படையில் ஒரு பத்திரிகையாளராகவும் இயங்கியவர் என்பதால் அவரின் தளம் பரந்து விரிந்தது. ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இலக்கிய, வாசிப்பு, பத்திரிகைப் பணி எல்லாம் சேர்ந்து “சினிமா : பார்த்ததும் கேட்டதும்” அவரின் இன்னொரு அனுபவத் தேடலாகப் பதியப்பட்டிருக்கின்றது.

தான் வருடத்தில் குறைந்தது 200 திரைப்படங்களாவது பார்க்கிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலமும் அவர் கொடுத்திருப்பதால் இந்த நூலில் பகிரப்பட்ட கட்டுரைகள் இவ்வளவு காலமும் தான் கண்ட படைப்புகளில் ஆளுமை செலுத்தியவைகளின் பதிவுகளாகக் கூடக் கொண்டு நோக்கலாம். ஆனால் இதையும் தாண்டி “சொல்லப்படாத கதைகள்” இன்னொரு பாகமாகவும் நாம் எதிர்பார்க்கலாம்.

“திரைப்படங்கள் நமக்குள் உருவாக்கும் கனவுகள் மிக அந்தரங்கமானவை. அது கூடவே வளர்ந்து கொண்டேயிருக்கிறது. சில நேரங்கள் அந்தக் கனவுகள் பகிரங்கமாகி விடுகின்றன. ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சினிமா மறக்கமுடியாத நினைவு ஒன்றின் பகுதியாகி விடுகிறது”

என்று சொன்ன எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அந்தக் கருத்தை நூலின் ஒரு கட்டுரையிலும் பதிவு செய்கிறார். இந்த நூலில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் அடிநாதமும் அதுவே எனலாம்.

சில கட்டுரைகளில் ஒரே நிகழ்வுகள் திரும்பவும் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவற்றைத் தனியாகப் படிக்கும் படிக்கும் போது அவற்றின் தேவையும் உணரப்படுகிறது. இது பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதாலும் சமரசம் கொள்ளலாம்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் திரையுலகப் படைப்பாக முயற்சிகளை “ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும்” என்ற கட்டுரையில் விலாவாரியாக எழுதும் போது அவற்றை வெறும் பட்டியலாகத் திரட்டாமல், அந்த முயற்சிகளின் பின்னால் உள்ள வரலாற்றுச் சங்கதிகளோடு கொடுப்பது தனிச் சிறப்பு. இவற்றில் பலவற்றைக் காலம் அடித்துப் போன, மறந்து போன செய்திகளாகவும் சொல்லலாம். இதே பாங்கிலேயே “கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும்” கட்டுரையும் ஆழமான பல தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது.

ஈழத்தில் பிறந்த கலை மீதான வேட்கை கொண்டோருக்குக் கிடைத்த இன்னொரு இலாபம் சிங்களக் கலைப்படைப்புகள், ஆக்க கர்த்தாக்கள் பற்றிய அனுபவ அறிவும், தொடர்பும் அமையப்பெற்றிருப்பது. அதன் விளைச்சலாகவே சிங்கள சினிமாவின் பிதாமகன், இயக்குநர்  லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜ போன்ற ஆளுமைகள் குறித்த பதிவுகளோடு, Death on a Full Moon Day (பெளர்ணமியில் ஒரு மரணம்), President Supper Star போன்ற திரை விமர்சனங்களை இவர் எழுதியிருப்பது. இந்தக் கட்டுரைகளிலும் முன் சொன்ன கூற்றின் நியாயத்தன்மையைப் பறை சாற்றுகின்றது.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 79 கல்வி போதித்த ஆசிரியையும், அரசியல் போதித்த அனுபவசாலியும் ! முருகபூபதி

 “ எனது தொடர்  பயணத்தில்  நான் சந்தித்த மேலும் சில பெண்


ஆளுமைகளை இனிவரும் அங்கங்களில் பதிவுசெய்வேன் “ என்று கடந்த 78 ஆவது அங்கத்தில் சொல்லியிருந்தேன்.

எதிர்பாராதவகையில் மேலும் சில உள்ளுர் பயணங்களில் ஈடுபட்டிருந்தமையால,  கடந்த சில வாரங்கள் எனது எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) தொடரை எழுத முடியாமல் போய்விட்டது.

இலங்கையில் எனது ஆரம்பகால கல்வி வாழ்க்கையில் எனது ஆசான்களாக விளங்கிய பலர், பசுமையான நினைவுகளை தந்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்கள்.

அந்த ஆசான்களில் மூவினத்தவர்களும் மும்மதத்தவர்களும்  இருந்தனர்.

அமரர்கள் பண்டிதர் க. மயில்வாகனன், “ பெரிய ரீச்சர் அம்மா  “ மரியம்மா திருச்செல்வம், உடப்பூர் பெரி. சோமஸ்கந்தர், நிக்கலஸ் அல்ஃபிரட், நாகராஜா, இராமலிங்கம், கௌரி ரீச்சர், மணிமேகலை ரீச்சர், ஜப்பார் சேர், சுஃபியான் சேர், தர்மரத்தின சேர்… இவ்வாறு பலரை இன்றும் நினைவில் வைத்திருக்கின்றேன்.

இவர்கள் காலத்தில் எமக்கு கல்வி புகட்டிய திருமதி திலகமணி


தில்லைநாதன் ஆசிரியைக்கு தற்போது எண்பத்தியெட்டு  வயதும்  கடந்துவிட்டது.

இன்றும் இளமையோடு பேசுகிறார். இயங்குகிறார். இந்த வயதிலும் தனது அருமை மகள் ராதாவுடன் சேர்ந்து வீட்டில் ஒரு பாலர் பாடசாலையை நடத்திவருகிறார்.

எங்கள் ஊரில் ஐம்பதுகளில் நடன , சங்கீத ஆசிரியர்கள் இல்லாதிருந்த குறையைப்போக்கியவர்தான் திலகமணி ரீச்சர். நான் அவரது அபிமான மாணவன். இன்று அவரது அபிமான எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.

இலங்கை செல்லும்போதெல்லாம் இவரைச்  சென்று பார்ப்பேன்.  இறுதியாக 2019 இல் எனது இலங்கையில் பாரதி நூல் அறிமுகம் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்தபோதும், இவர் வருகைதந்து ஆசியுரை வழங்கி வாழ்த்தினார்.

இலங்கை வானொலியில் இவரது குரலில் இடம்பெற்ற நாடகங்கள் பிரசித்தம். அப்போது இவரது பெயர் திலகா தில்லைநாதன் என ஒலித்தது.

இவருக்கும் பூர்வீகம் நீர்கொழும்புதான்.  1954 ஆம் ஆண்டு விஜயதசமியின்போது எங்கள் ஊரில் வதியும் இந்து தமிழ் மாணவர்களுக்கு ஒரு பாடசாலையை  ( விவேகானந்தா வித்தியாலயம் ) அன்றிருந்த நகர பிதா எஸ். கே. விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் இயங்கிய இந்து வாலிபர் சங்கம் உருவாக்கியபோது நான் முதல் மாணவனாக ( சேர் விலக்கம் : 01 ) சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

அன்று திலகமணி ரீச்சர், இந்தப் பாடசலையில் தொண்டர் ஆசிரியராக இணைத்துக்கொள்ளப்பட்டவர். அன்று முதல் இவரது பாசத்திற்குரிய அபிமான மாணவன்.

இம்முறை இலங்கை சென்றபோது எனது பேறாமகள் மதுரா, எமது வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலுக்கு என்னையும் அழைத்து பேசவைத்தார்.

தற்போது இந்த மன்றத்திலிருக்கும் பல இளம் தலைமுறையினருக்கு எமது கல்லூரி, வித்தியாலயமாக இருந்த காலப்பகுதியில் எவ்வாறு இருந்தது, யார்… யார்… எமது ஆசிரியர்கள் முதலான விபரங்கள் தெரியாது.

அவர்களையெல்லாம் நினைவுபடுத்தி நான் உரையாற்றியபோது,  அந்த அரங்கில் அனைத்தையும் செவிமடுத்துக்கொண்டிருந்த திலகமணி ரீச்சர், என்னை தனியாக அழைத்து தமது வீட்டுக்கு வருமாறும் தன்னோடு அமர்ந்து விருந்துண்ணுமாறும் கேட்டிருந்தார்.

எனது தங்கை ஜெயந்தியையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன்.

மௌனம் ஏனோ (கவிதை) உஷா ஜவகர் (ஆவுஸ்திரேலியா)

 

அன்று நான் உன்

கழுத்தில் மங்கல நாண்

சூட்டினேன் மிக்க மகிழ்ச்சியுடன்

மணவறையில் நீ மௌனம்  காத்தாய்


பின் கூட்டு குடித்தனத்தில்

வாழ்ந்தோம் சில வருடங்கள்

சில பல பிரச்சினைகள்

வந்தாலும் நீ மௌனம் காத்தாய்


அதன் பின் தனிக் குடித்தனத்தில்

வாழ்ந்தோம் பல வருடங்கள்!

கோபக் கனல் தலைக்கேற

நான் கத்தினாலும் நீ மௌனம் காத்தாய்

இலக்கியவாழ்வில் பொன்விழா காணும் தாமரைச்செல்வி – சந்திரா இரவீந்திரன்

 

“வணக்கம் இலண்டனால் 2023ம் ஆண்டு செப்டெம்பர் 17ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர் தாமரைச்செல்வியின் பொன்விழா மெய்நிகர் நிகழ்வில் எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன் ஆற்றிய பொன்விழாப் பேருரையின் முழுவடிவம்.”

 

இன்றைய தினம், தனது இலக்கிய வாழ்வில் பொன்விழாக்காணும்; இன்றைய விழா நாயகியான தாமரைச்செல்வி அவர்களுக்கும்,
மற்றும், இணையவழியாக இங்கே கூடியிருக்கும் அனைத்துப் பார்வையாளர்களுக்கும்,
மேலும் இங்கே தாமரைச்செல்வி அவர்களின் இலக்கியப்பணிக்கான இந்தப் பொன்விழாவில் வாழ்த்துரை வழங்க வந்திருக்கும்-
எண்பதுகளிலிருந்து எனக்கு அறிமுகமான, நான் அன்போடு ‘கோகிலாக்கா’ என்று அழைக்கும் எழுத்தாளர்- பேச்சாளர்- நாடகக்கலைஞர் எனப் பல்துறைகளில் மிளிரும் கோகிலா மகேந்திரன் அவர்களுக்கும்,
முன்னாள் வீரகேசரி நாளிதழின் துணையாசிரியராகப் பணியாற்றியவரும், ரஸஞானி என்ற பெயரில் வீரகேசரி இதழில் தொடர்ந்து எழுதி வந்தவருமான….எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கும்,
மற்றும், தமிழியல்துறை பேராசிரியரும். பதிப்பாசிரியரும், கட்டுரையாளரும், திறனாய்வாளரும், தமிழ் இலக்கியப்பரப்பில் காத்திரமான விமர்சகராகவும் இருக்கும் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கும்,
மற்றும், வன்னியில் ஒரு பேராட்சி இருந்த காலத்தில், பலராலும் பேசப்பட்டு வந்த ‘வெளிச்சம்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும், தமிழீழத்தொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் இயங்கிய, பதின்னான்கு கவிதை நூல்களின் ஆசிரியரும், எழுத்தாளரும், கவிதைகளிற்காகப் பல விருதுகளைப் பெற்றவருமான- பேரன்புக்குரிய கவிஞர் கருணாகரன் அவர்களுக்கும்,
அண்மையில் ‘திரைகடல் தந்த திரவியம்’ என்ற பன்னாட்டு சிறுகதைத்தொகுப்பு நூலொன்றை வெளிக்கொண்டுவந்து, எமது ஞாபகத்தில் பதிந்துபோன முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஸ்மி அவர்களுக்கும்,
ஈழத்தின் அரங்கத்துறையில் முக்கிய பங்காற்றியவரும், நாடக ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான மதிப்பிற்குரிய பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுக்கும்,
மற்றும் மதிப்பிற்குரிய கலாநிதி க. ஸ்ரீகணேசன் அவர்களுக்கும்,
விமர்சகரும், கவிஞருமான… நட்புக்குரிய மாதவி சிவலீலன் அவர்களுக்கும்,
எண்பதுகளிலே ஈழத்துப் பத்திரிகைகள், மற்றும் வானொலி மெல்லிசைப்பாடல்களில் தன்னை முத்திரை பதித்துக்கொண்டவரும், கவிஞரும், எழுத்தாளருமான மண்டூர் அசோகா அவர்களுக்கும்,
மேலும், உலகமெல்லாம் பரந்து வாழும் திறமை மிக்க ஈழத்தமிழ் படைப்பாளிகளை இனம்கண்டு, அவர்களின் படைப்புகளையெல்லாம் உலகத்தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகப்படுத்தும், அரிய பணிகளை 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துகொண்டிருப்பவரும், ‘தமிழியல்’; வெளியீடுகள், ‘ருவான்’ வெளியீடுகள் எனத் தரம்மிக்க நூல்களைப் பதிப்பித்து வந்தவரும், ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பிற்கும்- தமிழ்நாட்டு இலக்கியப்பரப்பிற்கும்; ஒருபெரும் பாலமாக இருந்து, அரிய பணிகளை செய்துகொண்டிருப்பவரும், நூல்களை ஆராதிப்பவருமான பெருமதிப்பிற்குரிய நூலவர் பத்மநாபஐயர் அவர்களுக்கும்,
என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

தாமரைச்செல்வி அவர்களுடைய இந்த இலக்கியப்பொன்விழாவிலே, இத்தனை- ஆளுமைகளும் ஒன்றாகக் கூடியிருப்பதே, ஒரு பெரும் வரம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒவ்வொருவரும் உலகின் வெவ்வேறு பாகங்களில், வெவ்வேறு நாடுகளில் வாழுபவர்கள். இவர்களனைவரும்… குறிப்பிட்ட இந்த நிகழ்விற்கான இணையமேடையிலே ஒன்றாக அமர்ந்திருப்பது என்பதே தாமரைச்செல்வி அவர்களுக்குக் கிடைத்த பல விருதுகளில் இன்னுமொரு சிறப்பு விருது என்று தான் நான் நினைக்கிறேன்.

ராஜபார்ட் ரங்கதுரை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த தினம் இவ்வாண்டு அக்டோபர் முதல் தேதி ஆகும். எடுத்த ஒரு பிறவியிலேயே ஏராளமான வேடங்களில் நடித்து ரசிகர்களளை பிரமிக்க வைத்த சிவாஜி நாடக நடிகனாக ஒரு படத்தில் வாழ்ந்து காட்டினார். அந்தப் படம்தான் 1973ம் ஆண்டு வெளிவந்த ராஜபார்ட் ரங்கதுரை. இலங்கை புங்குடுதீவில் பிறந்து இளம் வயதிலேயே தமிழ் திரையுலகில் பிரபல கதாசிரியராக, வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக உருவாகியிருந்த வி சி குகநாதன் , வி சி கணேசனின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் இப் படத்தை கலரில் தயாரித்திருந்தார் .



தானே ஒரு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் விளங்கிய போதும் தான் தயாரிக்கும் சிவாஜியின் படத்தில் தயாரிப்பாளராக மட்டும் நின்று கொண்டு கதைவசனம் எழுதும் பொறுப்பை பலமுருகனிடம் விட்டிருந்தார் குகநாதன். நாடகப் பின்னணியில் இருந்து வந்திருந்த பாலமுருகனும் அதனை ஏற்று திறமையாக கதைவசனத்தை அமைத்திருந்தார். நாடக மன்றம் ஒன்றை நடத்திக் கொண்டு அதனை மட்டும் நம்பி தானும் தன் குடும்பமும் மட்டுமன்றி தன் நாடக மன்ற அங்கத்தவர்களையும் எவ்வாறு ஒரு தனி கலைஞன் சுமந்து நிற்கிறான் என்பதே படத்தின் கதையாகும். இதனால் ரங்கதுரையாக வரும் சிவாஜி படம் முழுவதும் தன் நடிப்பால் வியாபித்திருந்தார் . மற்றைய கலைஞர்கள் எல்லாம் அவர் பின்னாலேயே மேடையிலும் , படத்திலும் நிற்கிறார்கள்!

அரிச்சந்திரன்,ஹேம்லட், திருப்பூர் குமரன், வேலன்,பகத்சிங் , இப்படி பல பாத்திரங்களில் தோன்றும் சிவாஜி, ஜெமின்தாராக மிடுக்குடன் வரும் போது மலைப்பாக இருக்கிறது. மறு காட்சியில் ராஜபார்ட்டாக மாறும் போது அவர் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது. என்ன நடிப்பு!

சிவாஜியின் நிரந்தர கதாநாயகியாகி விட்ட உஷா நந்தினி இதிலும் அவருக்கு ஜோடி. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் பாடலில் அழகாக தோன்றுகிறார். மற்றபடி அவருக்கும் சேர்த்து சிவாஜியின் தங்கையாக வரும் ஜெயா உணர்ச்சிகரமாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் நடிப்பில் முதிர்ச்சி தென்படுகிறது. வில்லனாக வரும் நம்பியாரை விட அவருடனேயே வரும் ராமதாஸ் தான் சைலன்ட் வில்லன். இவர்களுடன் வி கே ராமசாமி, டி கே பகவதி, குமாரி பத்மினி, சுருளிராஜன், மனோரமா, சசிகுமார், சி கே சரஸ்வதி, சாமிக்கண்ணு, அங்கமுத்து, பகோடா காதர், இன்னும் ஏராளமான நாடக நடிகர்களும் படத்தில் பங்கேற்றார்கள் .

இலங்கைச் செய்திகள்

நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு 

பாலியல் குற்றச்சாட்டு: குணதிலக்க குற்றமற்றவரென நீதிமன்றம் தீர்ப்பு

‘கொழும்பு துறைமுக நகரம்’ – ‘கொழும்பு நிதி வலயம்’ ஆக மாற்ற புதிய சட்டம்

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கை: ‘INFOTEL கண்காட்சி’ நவம்பர் 03 – 05 வரை BMICH இல்

யாழ். பல்கலைக்கு விஜயம் செய்த பிரான்ஸ் தூதுவர்

யாழில். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்



நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு 

September 30, 2023

குருந்துமலை விவகாரம் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி
வருகின்றன முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, தனக்கு மரண
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில்
விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின்
செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணித்துள்ளார்.

உலகச் செய்திகள்

 விண்வெளியில் சிக்கியிருந்த வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

ஈராக்கில் திருமண வைபவத்தில் தீ: புதுமண தம்பதியுடன் 114 பேர் பலி

உக்ரைன் நாட்டின் அமைதி திட்டத்திற்கு ரஷ்யா மறுப்பு

பாகிஸ்தானில் ஜனவரி கடைசி வாரத்தில் பாராளுமன்ற தேர்தல்

அமெரிக்க அரசாங்கம் ‘முடங்கும்’ நெருக்கடி



விண்வெளியில் சிக்கியிருந்த வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

September 29, 2023 6:23 pm 

விண்வெளியில் மிக அதிக நாட்கள் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்குத் திரும்பியுள்ளார்.
பிரெங்க் ருபியோவும் 2 ரஷ்ய வீரர்களும் கடந்த ஆண்டு செப்டம்பரில் விண்வெளிக்குச் சென்றனர்.

கட்டுரை - தமிழ் பொது வேட்பாளர் யோசனை

 September 30, 2023

இவ்வாறானதொரு யோசனையை ஈழநாடு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் கூட்டுத் தீர்மானமொன்றுக்கு தமிழ்த் தேசிய கட்சிகள் வரவேண்டும்.
பிரதான கட்சியான தமிழரசு கட்சி இந்த யோசனை தொடர்பில் ஆராய வேண்டும்.
தேர்தலில் போட்டியிடுவது என்பதுகூட இரண்டாவது விடயமே – ஆனால், முதலில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கூட்டுத் தீர்மானமொன்றுக்கு வரவேண்டும்.
பகிஷ்கரிப்பு கோரிக்கை தவறானது.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான ஆண்டு.
இந்தத் தேர்தல் இலங்கை அரசியலில் தீர்மானகரமான ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
2020இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலானது சிங்கள தேசியவாதத்தின் எழுச்சியாக அமைந்தது.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள வாக்கில் வெற்றிபெற்று தன்னையொரு சிங்கள – பௌத்த தலைவனாக பிரகடனம் செய்திருந்தார்.
ஆனால், பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட அதிருப்திகள் பிறிதோர் எழுச்சிக்கு வழிவகுத்தது.

ரூ.1,000 கோடி வசூலைத் தொட்டது ஷாருக்கானின் ‘ஜவான்’ - முதல் தமிழ்பட இயக்குனராக அட்லீ சாதனை

September 26, 2023 3:22 pm 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

ரூ. 1000 கோடி வசூல் செய்த படத்தை இயக்கிய முதல் தமிழ் பட இயக்குனர் என்ற சாதனையையும் ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் அட்லீ.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் செப்.7ஆம் திகதி வெளியான இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.

இந்தப் படம் முதல் நாளில் ரூ.129.6 கோடியை உலகளவில் வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. முதல் நாளில் இவ்வளவு தொகை வசூலித்த படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் வரை (24) ரூ.500-கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இவ்வளவு வேகமாக ரூ.500 கோடியை வசூலித்த படமும் இதுதான்.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இந்தப் படம் ரூ. 1004.92 கோடியை வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ‘ஜவான்’ படம் வசூலில் வரலாறு படைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.    நன்றி தினகரன் 




மரண அறிவித்தல்


திருமதி.கௌரி அல்லமதேவன்


மலர்வு 25.10.1962                   உதிர்வு 27.09.2023

இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலிய மெல்பேண் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.கௌரி அல்லமதேவன் நேற்று புதன்கிழமை 27.09.2023 அன்று சிவகதி எய்திவிட்டார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான திரு.செல்லையா துரைரத்தினம், திருமதி.யோகேஸ்வரி துரைரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான பண்டிதர் சிவஸ்ரீ.இ.நவரத்தினக்குருக்கள், சரஸ்வதியம்மா நவரத்தினக்குருக்கள் ஆகியோரின் அன்பு மருமகளும், அல்லமதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும், சங்கீர்த்தனா (மெல்பேண்) இன் அன்புத் தாயாரும், நீலன் (மெல்பேண்) இன் பாசமிகு மாமியாரும், காலஞ் சென்ற ஸ்ரீதரன், வத்சலா அருமைநாயகம் (உரும்பிராய் .இலங்கை) சசிகலா இராஜநாயகம் (மெல்பேண்), ரமணீதரன் (மெல்பேண்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும், அருமைநாயகம் (உரும்பிராய்), இராஜநாயகம் (மெல்பேண்), உமாஸ்ரீ (மெல்பேண்), சரோஜினிதேவி\ பாலசுப்பிரமணியம் (மெல்பேண்) சிவஸ்ரீ.ந.பிரபுதேவக்குருக்கள் (உரும்பிராய்), பத்மாதேவி கதிரவேலுக்குருக்கள் (உரும்பிராய்), சந்திராதேவி வதனதீசன் (தெகிவளை-கொழும்பு), இந்திராதேவி (நெதர்லாந்த்), இராமதேவன் (கனடா), வசவதேவன் (கனடா), மகாதேவன் ( ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும், ஜெனோஷன் (உரும்பிராய்), காலஞ் சென்ற ஜெரீஷன், ஷம்கி, ஜூட், ஜெய்ஷன், மதுரா, ரம்யா, கிரிதரன், கோகுலபாலன், பத்மசொரூபன், பத்மதாசன், பத்மஸ்ரீ, காலஞ் சென்ற பதமசீலன், பத்மகமலன், கமலப்பிரியா, லோகிதப்பிரபு, திவாஷ்கர், தீபிகா, விவாஷ்கர், இனியவன், கனியவன், எழிலினி, ஆரணன், கணன், அக்‌ஷயா, ராகவி, பைரவி, சகிஷ்ணா, ஹரிஷ்ணா, சஹானா, ஆகியோரின் அன்பு சித்தி / மாமியும், ஜொஷ், டனீஷியா, ஷிரேயா, மேக்னா, அமரன் ஆகியோரின் சின்னஅம்மம்மாவும், யுகேஸ், ஹாஷினி ஆகியோரின் ஆசைஅம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :- கணவர் மற்றும் பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சகோதரன் - ரமணன் - + 61 403 430 112

மருமகன் - நீலன் + 61 404 645 472

பெறாமகள் - ஷம்கி +61 415 119 677

பெறாமகன் - ஜெய்ஷன் +61 401 741 244

நான் பார்த்து ரசித்த யாழ் மத்திய கல்லூரி சிட்னிகக் கிளையினர் வழங்கிய இசை அமுதம் 2023 - செ .பாஸ்கரன்

.

யாழ் மத்திய கல்லூரி சிட்னிகக் கிளையினர் வழங்கிய இசை அமுதம் 2023 சென்ற வெள்ளிக்கிழமை செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பென்றித்தில் அமைந்திருந்த John Sutherland performing arts centre ரில் மாலை ஏழு மணிக்கு ஆரம்பமானது. மத்திய கல்லூரி குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய நிகழ்ச்சியை ஆரம்பிப்பது வழமையாகும், அந்த விதத்திலே இம்முறையும் இசை அமுதம் 2023 நிகழ்வு மாலை 7 மணிக்கு சிட்னியில் பிரபல அறிவிப்பாளரும், பல வானொலிகளில் அறிவிப்பாளராகவும் இருக்கும் திரு மகேஸ்வரன் பிரபாகரன் அவர்களுடைய கம்பீரமான குரலோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. 
 இம்முறை நிகழ்ச்சியிலே பாடுவதற்கு 
தென்னிந்திய பின்னணி பாடகர்களான வி எம் மகாலிங்கம், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சரிகமப மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்த பாடகி ஸ்ரீநித, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களுடைய மனதைக் கவர்ந்த பாடகி பிரியா ஜேர்சன் இவர்களோடு எல்லோருக்குமே பிடித்த இசை குழுவினரும், பலமுறை சிட்னிக்கு வருகை தந்த இசை குழுவினருமான மணியன் band இசைக்குழுவினர் இந்த நிகழ்ச்சிக்கு இசையை வழங்கி இருந்தார்கள். நிறைந்த மக்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. 


ஸ்ரீகாந்த் ஹரிஹரன் அவர்களுடைய அம்மா என்றழைக்காத என்ற பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானத. அதனை தொடர்ந்து பாடகர்களும் பாடகிகளும் மாறி மாறி பாடல்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக வி எம் மகாலிங்கம் அவர்கள் மக்களோடு நன்றாக கதைத்து, பேசி, சிரித்து மக்களை தன் வசப்படுத்திக் கொண்டது மக்கள் அவருக்கு வழங்கிய கரகோஷங்களில் இருந்து பார்க்கக் கூடியதாக இருந்தத. உச்ச ஸ்தானியில் கணீர் என்ற குரலில் அவர் பாடிய பாடல்கள் மக்களை நன்றாக கவர்ந்திருந்தத. அதேபோல் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ என்ற பாடல் எங்கள் காதுகளில் ரீங்காரித்துக் கொண்டிருக்கின்ற அந்தப் பாடலை பிரியா ஜேர்சன் பாடி மக்களிடமிருந்து கரகோஷங்களை பெற்றுக் கொண்டார். அதேபோல் ஸ்ரீநிதியின் கண்ணீரென்கிற குரலிலே பல பாடல்கள் வந்து மக்கள் கரகோஷங்களை அள்ளிச் சென்றத. எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தத. ஆரம்பத்தில் அறிவிப்பாளர் அவர்களோடு சிறிய உரையாடல்களை மேற்கொண்டு அவர்களுடைய தற்போதைய நிலைமை பற்றியும் அவர்கள் பாடக் கொண்டிருக்கின்ற திரைப்படங்கள் பற்றியும் சில வினாக்களை கேட்டு தெளிவுபடுத்தி கொண்டிருந்தார். பின்பு எப்படி நேரம் போனது என்று தெரியாமல் இடைவேளை அறிவிக்கப்பட்டத. இடைவேளையின் போது உணவு வழங்கப்பட்டது . இலவசமாக கொத்து ரொட்டி எல்லோருக்குமே வழங்கப்பட்டது . 

செல்வி மாயா குமரதேவனின் பரதநாட்டிய அரங்கேற்றம். கண்ணோட்டம் - உஷா ஜவாகர்

 


27 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்கு Parramatta  Riverside தியேட்டர், சிட்னி ஆஸ்திரேலியாவில் செல்வி மாயாவின் அரங்கேற்றம் நடைபெற்றது.

மாயா ஆரம்ப காலத்தில் தனது தாயும் நாட்டிய ஆசிரியையுமான திருமதி அபிராமி குமரதேவனிடமும் பின்னர் ஆருதி குமணனிடமும் நாட்டியம் பயின்றார்.

அரங்கேற்றத்திற்கு நட்டுவாங்கம் செய்தவர் மாயாவின் நடன ஆசிரியர் ஆருதி குமணன், வாய்ப்பாட்டு அகிலன் சிவானந்தன், மிருதங்கம் ஜெனகன் சுதந்திரராஜ், வயலின் கிரந்தி கிரன் முடிகொண்டா, புல்லாங்குழல் வெங்கடேஷ் ஸ்ரீதரன்.

பின்னணி இசையும், பாடகர் அகிலனின் பாடல்களும் பார்ப்போரை இருந்த இடம் விட்டு அசையாது கட்டிப்போட்டன. செல்வி பிரதாயினி ரவிச்சந்திரன் திறமையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செல்வன் ஆயன் குமரதேவனும், செல்வன் மயிலன் குமரதேவனும் நல்லதொரு வரவேற்புரையை நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கினார்கள்.
மண்டபம் நிறைந்திருந்த அந்த வேளையில் அரங்கேற்றம்

ஆரம்பித்தது.
பிள்ளையார் சுலோகத்துடன் மாயா நடனமாட ஆரம்பித்தார். நல்ல அபிநயத்துடன் மிகவும் திறமையாக மாயா ஆடினார்.
 
அகிலாண்டேஸ்வரித் தாயே என்ற வர்ணத்தை மாயா ஆடி முடித்த போது அரங்கு எங்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. அவர் அந்த நடனத்தை ஆடி முடித்த போது அந்த அகிலாண்டேஸ்வரியே அரங்கில் அமர்ந்திருந்த மாதிரி ஒரு பிரமை பார்ப்போர் மத்தியில் உருவானது.

இடைவேளைக்குப் பின்னர் பூங்குயில் கூவும் என்று ஆரம்பிக்கும் பதத்திற்கும், இடது பாதம் தூக்கி என்று ஆரம்பிக்கும் கீர்த்தனைக்கும், பின்னர் விஷமக்காரக் கண்ணன் என்று ஆரம்பிக்கும் பதத்துக்கும் மாயா நடனம் ஆடினார்.

முருகன் மீது அளவற்ற காதல் கொண்டவளாகவும் பின்னர் சிவனாகவும் தோன்றி மாயா மிகவும் அற்புதமாக நடனம் ஆடினார். விஷமக்காரக் கண்ணன் என்ற பாடலுக்கு ஆடும் போது அவரது கண்களில் குறும்பு கொப்பளித்தது. அந்த கண்ணனாகவே மாறி  பார்ப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்.


அடிக்கடி
மாறும் வேகமான தாளத்திற்கு இலாவகமாக  ஆடும் திறமை எல்லாவற்றையும் தன்னில் கொண்டுள்ளார் மாயா. இறுதியில் தில்லானா மற்றும் லிங்காஷ்டகத்துடன் மாயாவின் அரங்கேற்றம் சுபமாக நிறைவேறியது.






பார்வையாளர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்!

நல்லதொரு அரங்கேற்றத்தைக் கண்டு களித்த பூரிப்புடன் எல்லோரும் வீடு திரும்பினார்கள்.

புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்குத் தமிழ் கலைகளை மறவாது பழக்கி அந்தக் கலைகளை தொடர்ந்து எடுத்து செல்லும் இளம் தலைமுறைப் பெற்றோர் ஆசிரியர்கள் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்.

திறமை மிகுந்த ஒரு நாட்டிய தாரகையாக மாயா எதிர்காலத்தில் நடன உலகில் ஜொலிப்பார் என்பது திண்ணம்.