கல்யாணியின் கணவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தமிழ் திரையுலகில் பிரபலமாக விளங்கிய


தயாரிப்பாளர்,டைரக்டர்களில் குறிப்பிடக்கூடியவர்களில் ஒருவர் பக்க்ஷிராஜா பிலிம்ஸ் அதிபர் எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு.சென்ற நூற்றாண்டில் இவர் தயாரித்து இயக்கிய சிவகவி,ஆரியமாலா,ஜெகதலப்ரதாபன்,மலைக்கள்ளன்,மரகதம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று திரையுலக சரித்திரத்தில் இடம் பெற்றன.அதிலும் இவர் உருவாக்கிய மலைக்கள்ளன் ஜனாதிபதி விருதை பெற்ற முதல்

தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.அதுமட்டுமன்றி இப் படம் ஹிந்தி,தெலுங்கு,கன்னடம்,மலையா
ளம்,சிங்களம் என்று ஆறு மொழிகளில் இவரால் உருவாக்கப்பட்டு சாதனை படைத்தது.கோயமுத்தூரில் இருந்த தனது சொந்த ஸ்டுடியோவான பக்க்ஷிராஜாவில் தனது அனைத்து படங்களையும் இவர் தயாரித்து வந்தார்.


அந்த வகையில் 1963ம் ஆண்டு இவர் உருவாக்கிய படம் கல்யாணியின் கணவன்.சிவாஜி , சரோஜாதேவி இணைந்து நடித்த இப் படம் காதல்,சஸ்பென்ஸ் என்று இரண்டு கதைக் கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

தோழிகளுடன் நீச்சலுக்கு செல்லும் கல்யாணி ஆற்றில் மூழ்கி விடுகிறாள்.அவளை பட்டதாரியும் விவசாயியான கதிரேசன் காப்பாற்றுகிறான்.இருவரிடையில் காதல் அரும்புகிறது.தன் தந்தையிடம் சொல்லி அவரின் அலுவலகத்திலேயே கதிருக்கு வேலை வாங்கி கொடுக்கிறாள் கல்யாணி.இருவரும் காதலிப்பதை அறிந்து திருமணத்துக்கு ஏற்பாடும் செய்கிறார் விஸ்வநாத்.ஆனால் எதிர்பாராத விதமாக கதிரேசன் மீது கொலைப்பழி விழுகிறது.திருமணமும் தடைப் படுகிறது.கதிர் கல்யாணியின் கணவன் ஆனானா என்பதே மீதி கதை.

கதிராக சிவாஜியும்,கல்யாணியாக சரோஜாதேவியும் நடித்தார்கள்.இருவரும் கொடுத்த வேலையை செய்திருந்தார்கள் .ஆனாலும் சரோஜாதேவியின் நடிப்பில் தென்பட்ட குறும்புத்தனம் ரசிக்கும் படி இருந்தது. அண்மையில் தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடிய சரோஜாதேவி இளமையும் வனப்பும் மிளிர படத்தில் காட்சியளித்தார்.

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 4 : தவறுகள் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன

 


கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு ஆரம்பம்.

 மக்காறியோவின் மீதான விசாரணை புஸ்வாணமாகிப் போனது. அவனுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் அவன் மீதான ஒரு பதிவு ‘மனிதவள மேலாண்மை’ப் பகுதியில் (Human Resources) இருந்தது.

 ஆனால் என்ன வேடிக்கை, இருவரும் ஒன்றுமே நடவாதது போல மீண்டும் பழகத் தொடங்கினார்கள். மக்காறியோவிற்கு சிலவேளை புங் மீது வன்மம் இருக்கக்கூடும். ஆனால் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு சுமுகமாகக் கதைத்தாள், வேலை செய்தாள்.

 புங் ஒரு அப்பாவி போலவும் எதையும் எளிதில் நம்பி விடுபவள் போலவும் காணப்பட்டாள்.

 அவளுடன் உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நந்தனுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் அவள் நினைத்த நேரம் நினைத்த இடத்தில் பேச்சை ஆரம்பித்துவிடுவாள். சுற்றுச்சூழ இருப்பவர்களை அவள் கணக்கில் எடுப்பதில்லை.

 “இப்போதே ஒல்லியாக இருக்கின்றாய். முன்பு பள்ளியில் படிக்கும்போது எப்படி இருந்திருப்பாய்?”

 உடனே வாயைச் சுழித்துவிட்டு சிரிக்கத் தொடங்கினாள்.

 “என் இளமைக் காலங்களில் துவிச்சக்கரவண்டியில் சிட்டாகப் பறப்பேன். அப்போது ஒடிந்துவிழும் தேகம் எனக்கு. எங்கேனும் மோதிவிடுவேனோ என்று பயப்படுவேன். இப்ப சைக்கிள் ஓடி எத்தனை வருடங்கள் இருக்கும்? கணவனிடம் சொல்லி எனக்கொரு சைக்கிள் வாங்க வேண்டும்.”

மறுநாள் தன் பதின்ம வயதுப் படங்கள் கொண்ட அல்பம் ஒன்றை நீட்டி நந்தனைப் பார்க்கச் சொன்னாள். அவன் அதைப் பார்த்ததும் கிறங்கிப் போனான்.

 “நீ அப்போது நல்ல வடிவாக இருக்கின்றாய்?”

 “ஏன் இப்ப என்ன குறைச்சல்?” நந்தனின் காதைத் திருகினாள்.

நந்தனும் புங்கும் சோடியாக வேலை செய்யத் தொடங்கினார்கள். அங்கு வேலை செய்பவர்கள் எல்லாரும் அவர்களை ’வேர்க்கிங் பாற்னேஸ்’ என்று சொல்லிக் கொள்வார்கள். அப்படி வேலை செய்யாத சிலவேளைகளில் ’எங்கே உனது பாற்னர்’ என்று நந்தனைச் சிலர் கேட்பதுண்டு.

பரமட்டா பொங்கல் 2023 பகுதி 2

 .


வெளிச்சம் கழகத்தாரின் முதல் நிகழ்வு



 மனிதனை வாழ்வாங்கு வாழ்வதை மனிதருக்கு உரைக எழுதப்பட்டது என்பதை விளக்கி கஜறாகோ கோவில் சிற்பங்கள் அவற்றை சிலையாக வடித்தை மனித வாழ்வில் ஆண்-பெண் தாம்பத்தியத்தை மக்கள் மனதில் வலியுறுத்தும்  நோக்குடன் படைக்கப் பட்டதாக விளக்கினார் .

திருநந்தகுமார் இந்திய பாரம்பரிய கல்வி முறை எவ்வாறு குரு சிஷ்ய


ன் பாரம்பரியமாக வளர்ந்தது என்பதை விளக்கினார் .தொடர்ந்து இந்துமத சிந்தனையில் பரிணாம சிந்தனையை விஷ்ணுவின் தசாவதாரமாக கூறப்பட்டுள்தையும் அதே கருத்தை தொல்காப்பியத்திலும் காண முடிகிறது என விளக்கினார்

 பிரபா இந்திய அறிவியல் பற்றி விளக்கமாக எடுத்து ஆராய்தார்ஆச்சாரியார்  கணாதர் கி மு800 இல் வாழ்ந்தவர் இவரை இன்றய அறிஞர் அணு பற்றிய அறிவின் மூல கர்தாவாக கருதுவதாக கூறி வரலாற்றாசிரியர் T .N . Colebrook " Compared to the scientists of Europe,Kanad and other Indian scientists were global mastered of this field. என கூறியுள்ளதை வியந்து கூறினார்.

இறுதியாக சௌந்தரி கணேசன் நடராச மூர்த்தியின் ஆனந்த தாண்டவம் எவ்வாறு திருமூலர் திருமந்திரம் விளக்கும் அணு பற்றிய சிந்தனையை விளக்குகிறது என கூறி திருமந்திர பாடல்கள் சிலவற்றை எடுத்து விளக்கி அவை அணு பற்றிய ஆழமான கருத்தை கொண்டிருப்பதை எடுத்துவிளகினார்இன்றைய விஞ்ஞான வளர்ச்சி இந்து மத சிந்தனையாக எமது பாரம்பரியத்தில் வழர்ந்துள்ளதை கூறினிர்

வெளிச்சம் கழகத்தாரின் முதல் நிகழ்வு தேனீர் விருந்துடன் இனிதே நிறைவேறியது.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை ! நிரந்தர நண்பரும் இல்லை !! அவதானி


இலங்கை, இந்திய அரசியலை தொடர்ந்து கூர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற முதுமொழிகள்தான் நினைவுக்கு வரும்.

சமகாலத்தில் இலங்கையில் அரசியல் நிலவரங்களை அவதானிக்கும் எமக்கு,  கூட்டணிகள், கூத்தணிகளாக மாறியிருப்பது அதிசயமல்ல. இதற்கு முன்னரும் அரசியல் கட்சிகளின் கூத்துக்களை பார்த்து வந்திருப்பவர்கள்தான்.

தேர்தல் காலம் நெருங்கும்போது இக்கூத்துக்கள் ஊடகங்களில் அம்பலமாகிவிடும்.  எனினும்,  மக்கள் ஏதாவது ஒரு கூத்தணிக்கு வாக்களித்துவிட்டுத்தான் வருவார்கள்.

அத்தகைய கூத்தணிகளுக்கு தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தேவைப்படுவார்கள். அப்போது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை என்பதுபோன்று எவராவது கிடைத்தும் விடுவார்கள்.

இம்முறை நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்  வடக்கிலிருந்து மாத்திரம்  சுமார் 23  அரசியல் கட்சிகள் களமிறங்கவிருப்பதாக அறியப்படுகிறது.  அவற்றின் பெயர்களில்   “ தமிழ்  “ என்ற சொல் மாத்திரம் நிச்சயம் இருக்கும்.  அதனால் வாக்களிக்கும் மக்களுக்கு மனக்குழப்பமும் வருவதுண்டு.

எனினும்,  அவர்கள் எளிதாக மாவையின் கட்சி,  விக்னேஸ்வரன் கட்சி, சுரேஷ் பிரேமசந்திரன் கட்சி, சிவாஜிலிங்கம் கட்சி, சித்தார்த்தன் கட்சி, கஜேந்திர குமார் கட்சி, டக்ளஸின் கட்சி, சந்திரகுமார் கட்சி,  வரதராஜப்பெருமாள் கட்சி,  ஆனந்தசங்கரி கட்சி , அங்கஜன் கட்சி,  விஜயகலா மகேஸ்வரன் கட்சி , ஜனநாயகப் போராளிகள் கட்சி என அடையாளம் கண்டுகொள்வார்கள். மக்களுக்கு இதுவிடயத்தில் பல வருட இனம் காணும் அனுபவம் இருக்கிறது.

இம்முறை வீடு சின்னத்தில் போட்டியிடவிருக்கும் தமிழரசுக்கட்சிக்கும், குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவிருக்கும்,  புதிய தமிழ்த்தேசியக்கூட்மைப்பினை உருவாக்கியிருக்கும் சில கட்சிகளும் மத்தியில் பலமான போட்டியிருந்தாலும், இவர்களுக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகள்  விக்னேஸ்வரனின் கட்சியாலும், கஜேந்திரகுமாரின் கட்சியாலும்,  அங்கஜன், டக்ளஸ்,  மற்றும் இதர கட்சிகளினாலும் சிதறண்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

பரமட்டா பொங்கலில் சக்தி இசைக்குழு

 .



பரமட்டா பொங்கலில் சக்தி இசைக்குழு

 .



50 - ஆன்மீக கேள்விகளும்-பதில்களும் ஏன் ? எதற்கு? எப்படி?


 தனாசிவம் குருக்கள்,  சிட்னி

1 - வீட்டில் விளக்கேற்றும் போது 
சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் 
போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

2 - செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

3 - கண்ணை மூடிக் கொண்டு 
கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

4 - திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை 
மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?

அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

5 - சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?

சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

6 - கனவில் பாம்பு அடிக்கடி 
வருகிறது. அதைத் தவிர்க்க 
ஏதாவது பரிகாரம் உண்டா?

பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

7 - பூஜை, விரதம் 
போன்றவற்றை பெண்கள் மட்டுமே 
கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?

இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.

இலங்கைச் செய்திகள்

 இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்புகள் அவசியம்

இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை அவசியம்

யாழில் கைதான வேலன் சுவாமி பிணையில் விடுதலை

 நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மைத்திரி 03 பக்க அறிக்கை

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, சீனாவுனான பேச்சுவார்த்தைகள் வெற்றி


இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்புகள் அவசியம்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் நடவடிக்கை நிறுத்தப்படவும் வேண்டும்

அமைச்சர் டக்ளஸ் இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வேண்டுகோள்

உலகச் செய்திகள்

 பிரான்ஸ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்

 ஜப்பானில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம்

நியூசிலாந்து பிரதமர் ஆர்டன் திடீர் இராஜினாமா அறிவிப்பு

மேற்கத்திய கனரக ஆயுதங்களால் உக்ரைன் போர் தீவிரமடையும்

இரகசிய ஆவண விவகாரம்; ஜோ பைடனுக்குச் சிக்கல்


பிரான்ஸ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்

பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வெடித்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் தின விழா!


பிரித்தானிய தமிழர் பேரவை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணி அளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானியாவில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் தின விழாவினை சிறப்பாக கொண்டாட உள்ளது. இந் நிகழ்வில் கடந்த காலங்களை விட அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

பிரித்தானியத் தமிழர் பேரவை  ஹரோ உள்ளூராட்சி சபையுடன்  இணைந்து முதன்முதலாக பிரித்தானியாவில் தைப்பொங்கல் தினத்தை 2011ஆம் ஆண்டு கொண்டாடியது. இதன் மூலம் தைப்பொங்கல் தினத்தை முக்கியமான அரச நிறுவனங்கள் ஊடாக முன்னெடுப்பதற்கான கால்கோள் இடப்பட்டது.  அதன் பின்னர் சீரும் சிறப்பும் வாய்ந்த  தமிழ் மக்களின் மரபினை தமிழ் இளையோருக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்ற முடிவுடன் வருடா வருடம் தை பொங்கல் தினத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை உள் அரங்கத்தில் கலை பண்பாட்டு நிகழ்வுகளை அரங்கேற்றி வந்தது.

இதனைத் தொடர்ந்து கனடாவில்  குறிப்பிடத் தக்க மாநகர சபைகள் தை மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக அங்கீகரித்தன.  அதன் தொடர்ச்சியாக ஒட்டாவா மாநில அரசும்  கனடிய அரசாங்கமும் தை மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக  பிரகடனப்படுத்தின.  

இந் நிகழ்வை மேலும் ஒரு படி முன்னகர்த்தி 2018ஆம் ஆண்டு முதன்முறையாக பிரித்தானிய தமிழர் பேரவையால் பாராளுமன்றத்தில் தைப்பொங்கல் தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கொண்டாடப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக இன்று வரை ஒவ்வொரு வருடமும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பாராளுமன்றத்தில்   பிரித்தானிய தமிழர் பேரவை தைப்பொங்கல் நிகழ்வை நடாத்தி வருகின்றது.  கொரோனா பொது முடக்க காலப் பகுதியிலும் தைப்பொங்கல் தினம் எந்தவித முடக்கமும் இன்றி மெய் நிகர் காணொளிக்கூடாக (Virtual event) பிரித்தானிய தமிழர் பேரவையால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இதே காலப்பகுதியில் ரெட்பிரிட்ஜ் (Redbridge),  கிங்ஸ்டன் (Royal Borough of Kingston),  சௌதேர்க் (Southwark), (Barnet)  மற்றும் சட்டன் (Sutton) ஆகிய உள்ளூராட்சி மன்றங்கள் தை மாதத்தை  தமிழ்  மரபுரிமை மாதமாக  அங்கீகரித்துள்ளன. 2021  டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி லண்டன் மாநகர அவை (London Assembly)  தை மாதத்தை  தமிழ்  மரபுரிமை  மாதமாக பிரகடனப்படுத்தியது. 

காற்றுவெளி 2023(தகவல்)

 காற்றுவெளி இன்றுவரை படைப்பாளர்களின்,வாசகர்களின்


இணைந்து பயணிப்பது தாங்கள் அறிந்ததே.

தொடர்ந்தும் அப்படியே பயணிக்கும்.
காற்றுவெளி பல சிறப்பிதழ்களையும் தந்துள்ளது.
காற்றுவெளியின் மாசிமாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வரவுள்ளது.இதுவரை படைப்புக்கள(சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரை) அனுப்பாதவர்கள் அனுப்புங்கள்.அனுப்பியவர்கள் தங்கள் படைப்புக்கள் கிடைத்த தகவல்களையும் அறிந்துகொள்ளுங்கள்.மின்னஞ்சல்கள் வரும் தொகைகளால் கிடைக்கும் தொகைகளால் தடங்கல்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
கட்டுரைகள் கிடைக்கவேண்டிய இறுதி நாள்:20/01/2023.
தொடர்ந்து ஈழத்துச் சிறுகதைகளின் சிறப்பிதழுடன்,இங்கிலாந்து படைப்பாளர்களின் சிறுகதைகளின் சிறப்பிதழும் அச்சில் வரவுள்ளது.
நம்பிக்கையுடன் இவ்வாண்டை இலக்கியத்துடன் சிறப்பிப்போமே.
நட்புடன், முல்லைஅமுதன்

வையத்தமிழ் பன்னாட்டு காலாண்டு மின்னிதழ் !

 தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் 

ஆஸ்திரேலியாவிலிருந்து அகிலத்தை நோக்கி ,,,,,,,,

🙏பொங்கல்  வாழ்த்துக்கள் !

வையத்தமிழ் பன்னாட்டு காலாண்டு மின்னிதழ் ! 
தங்கள் பார்வைக்கு சகோ ! 

வையத்தமிழ் காலாண்டு மின்னிதழ் தங்கள் பார்வைக்கு ! 


இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 26


“மொழிபெயர்ப்பு இலக்கியமும் அதன் இயங்குநிலையும்

 

நாள்:         சனிக்கிழமை 28-01-2023       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 8.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

                     

சிறப்புப் பேச்சாளர்கள்:

 

'தமிழில் மொழிபெயர்ப்புகளின் தாக்கம்' - ந.முருகேச பாண்டியன்

 

'சிங்களம் - தமிழ் மொழிபெயர்ப்புகள்' - ஹேமசந்திர பதிரன

 

'தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்புகள்' - புதுவை சீனு. தமிழ்மணி

 

 

பொங்கல் வரப்போகுதடி தங்கமே தங்கம் !







மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

 

 

தை பிறக்கப் போகுதடி தங்கமே தங்கம்

தளர் வகலப் போகுதடி தங்கமே தங்கம்

கை நிறையப் போகுதடி தங்கமே தங்கம்

கை யணைத்து நிற்போமே தங்கமே தங்கம் 

 

பொங்கல் வரப்போகுதடி தங்கமே தங்கம்

புத்துணர்வு பெற்றிடுவோம் தங்கமே தங்கம் 

மங்கலங்கள் வரவெண்ணி தங்கமே தங்கம்

பொங்கலிட்டு மகிழ்வோமே தங்கமே தங்கம் 

 


உறவுகளைக் கூட்டிடுவோம் தங்கமே தங்கம்

உவகையுடன் பொங்கிடுவோம் தங்கமே தங்கம்

அறவுணர்வை அகமிருத்தி தங்கமே தங்கம்

அனைவருமே பொங்கிடுவோம் தங்கமே தங்கம் 

 

புதுப்பானை எடுத்திடுவோம் தங்கமே தங்கம்

புத்தரிசி வாங்கிடுவோம் தங்கமே தங்கம்

அடுப்பெடுத்து வைத்திடுவோம் தங்கமே தங்கம்

அதில்பானை ஏற்றிடுவோம் தங்கமே தங்கம்