.
" கழுத்தில் சயனைற் குப்பி, கரத்தில் ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன், இப்போது எதுவுமே இல்லாமல் காற்றுப்போல் அலைகிறான்."
சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத் தயாராகிறது.
இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட அழகிய காருக்குப்பின்னால் தத்தம் கார்களில் அணிவகுத்து வருவார்கள்.
மயானத்திற்குச்சென்றபின்னர், எரிவாயுவில் என்னை சாம்பலாக்கிவிடுவார்கள். செம்மணியிலும் கோம்பயன் மணலிலும் மரக்குற்றிகளும் விறகுகளும் மண்ணெண்ணையும் செய்யும் கைங்கரியத்தை கண்ணுக்குப்புலப்படாத வாயு இந்த நாட்டில் என்னை தகனமாக்கப்போகிறது.
நாட்டுக்கு நாடு இந்த அக்கினி சங்கமத்தில்தான் எத்தனை வேறுபாடு...?
காராளசிங்கம், மருமகனிடமும் மரணச்சடங்கிற்கு வந்தவர்களிடமும் சொன்னதையே மீண்டும் மீண்டும் அலுப்புத்தட்டாமல், வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு சொல்வதில் பெருமிதமும் காண்கிறார்.
" கழுத்தில் சயனைற் குப்பி, கரத்தில் ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன், இப்போது எதுவுமே இல்லாமல் காற்றுப்போல் அலைகிறான்."
சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத் தயாராகிறது.
இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட அழகிய காருக்குப்பின்னால் தத்தம் கார்களில் அணிவகுத்து வருவார்கள்.
மயானத்திற்குச்சென்றபின்னர், எரிவாயுவில் என்னை சாம்பலாக்கிவிடுவார்கள். செம்மணியிலும் கோம்பயன் மணலிலும் மரக்குற்றிகளும் விறகுகளும் மண்ணெண்ணையும் செய்யும் கைங்கரியத்தை கண்ணுக்குப்புலப்படாத வாயு இந்த நாட்டில் என்னை தகனமாக்கப்போகிறது.
நாட்டுக்கு நாடு இந்த அக்கினி சங்கமத்தில்தான் எத்தனை வேறுபாடு...?
காராளசிங்கம், மருமகனிடமும் மரணச்சடங்கிற்கு வந்தவர்களிடமும் சொன்னதையே மீண்டும் மீண்டும் அலுப்புத்தட்டாமல், வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு சொல்வதில் பெருமிதமும் காண்கிறார்.








