நினைவு நல்லது வேண்டும் வெளியீட்டு விழா - யாழ் நிருபர்

.
ப.விஸ்ணுவர்த்தினியின் ‘நினைவு நல்லது வேண்டும் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா அண்மையில் அல்வாயில் உள்ள கலைஅகத்தில் நடைபெற்ற போது பிரபல எழுத்தளார் தெணியான் தலைமையுரை ஆற்றுவதையும் க.மதனாஹரன் வரவேற்புரை ஆற்றுவ தையும், நூலை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகம் வெளியீட்டு வைப்பதையும், நயப்புரைகளை எழுத்தளார்களான யோகேஸ்வரி சிவப்பிரகாசம், எஸ்.தனேஸவரி ஆகியோர்  நிகழம்துவதையும் காணலாம்



இறுதித் தேர்வு -அ.முத்துலிங்கம்

.
 காலை சரியாக ஐந்து மணிக்கு அவளுடைய செல்பேசி அலாரம் ஒலித்து அவளை  எழுப்பியது. அதை அணைத்துவிட்டு படுக்கையில் இருந்தபடியே எட்டி காப்பி மெசின் பட்டனை தட்டினாள். அது கிர் என்று சத்தத்துடன் உயிர் பெற்றது. செல்பேசியில் அன்றைய கால நிலையை பார்த்துவிட்டு முக்கியமான பத்திரிகை செய்திகளையும் படித்தாள். ஓர் இணையதளம் விலைக்கு வந்தது. அதை வாங்கி விற்றதில் 2000 டொலர் லாபம் கிடைத்தது. அதை செல்பேசி மூலம் நேரே தன் வங்கிக்கு அனுப்பினாள். அவளுடைய 19வது பிறந்தநாளுக்கு 367 வாழ்த்துக்கள் வந்திருந்தன. அவற்றிற்கெல்லாம் ’நன்றி’ என்று ஒரு வார்த்தையில் பதில் அனுப்பினாள். காப்பி, கடுதாசி குவளையில் தயாராகி பாலும் சீனியும் அளவாக கலந்து டிங் என்ற ஒலியுடன் இறங்கி நின்றது. அவள் ஒரு மிடறு பருகினாள்.

அவள் கனடியப் பெண். பெயர் அரா யாயுன். பிறந்த தேதி 31 அக்டோபர் 2011, உலக சனத்தொகை 7 பில்லியன் இலக்கத்தை தொட்ட அன்று பிறந்தாள். இன்று, 31 அக்டோபர் 2030 அவளுடைய 19வது வயதில் உலக சனத்தொகை 8.3 பில்லியனை எட்டியிருந்தது. அவளுடைய காதலன் காணொளி வாழ்த்து அனுப்பியிருந்தான். பிறந்தநாள் அன்று ஏதாவது வித்தியாசமாகச்  செய்து மகிழவேண்டும் என நினைத்தாள். 33 வருடம் பழசான டைட்டானிக் திரைப்படத்தை செல்பேசியை அமுக்கி சுவரில் ஓடவிட்டாள். ஒரு சின்ன மாற்றம். கேற்வின்ஸ்லெட் முகத்தை தன் முகமாக மாற்றினாள். லியனார்டோ டிகாப்ரியாவின் முகத்தை தன் காதலன் முகமாக மாற்றினாள். ரோஸின் தாயார் கோர்ஸெட்டை ரோஸின் வயிற்றில் இறுக்கிக் கட்டிய இடம் வந்தபோது இவளும் வயிற்றை எக்கினாள். பின்னர் வாய்விட்டு சிரித்துக்கொண்டாள்.

தமிழ் சினிமா

பட்டத்து யானை 

காரைக்குடியில் பிரபலமான சமையல்காரர் சந்தானத்திடம், அந்த ஊர் ரவுடி தன்னுடைய திருமணத்திற்கு சமையல் செய்யவேண்டுமென்று கூறுகிறார்.
ரவுடிக்கு பயந்து சந்தானத்தின் வேலையாட்கள் ஒவ்வொருவராக வேலையைவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் சமையல் செய்ய ஆள் இல்லாமல் முழித்துக் கொண்டிருக்கும் சந்தானத்திற்கு, அவனது வேலையாள் ஒருவன் விஷால், ஜெகன் உள்ளிட்ட 5 பேரை சந்தானத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
சந்தானத்தை சந்திக்கும்போதே பொலிஸ்காரரின் மகன் திருமணத்திற்கு சமையல் ஆர்டர் எடுத்து வருகிறார்கள். ரவுடியின் கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்ட அதே திகதியிலேயே இந்த ஆர்டரும் வருகிறது.
ரவுடியை பொலிஸிடம் பிடித்துக் கொடுத்துவிட்டு, பொலிஸ்காரர் மகளின் திருமணத்திற்கு சென்று சமைக்கலாம் என்று விஷால் ஆலோசனை கூறுகிறார்.
அதன்படி, பொலிசில் சென்று ரவுடியை பற்றி புகார் கொடுக்கிறார்கள். பொலிசும் ரவுடியை பிடித்து உள்ளே தள்ளுகிறது.
இதனால் கோபமடைந்த ரவுடி, சந்தானம் மற்றும் விஷால் கூட்டாளிகளை போட்டுத்தள்ள முடிவெடுக்கிறான்.
இதனால், ஊரை காலி செய்து திருச்சிக்கு சென்று ஓட்டல் வைக்கலாம் என்று முடிவெடுத்து கையிலிருக்கும் ரூ.2 லட்சம் பணத்துடன் திருச்சிக்கு வருகிறார்கள்.
திருச்சிக்கு வந்தவுடன் ஐஸ்வர்யாவை பார்க்கும் விஷால், பார்த்தவுடனே அவர் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார். ஐஸ்வர்யா திருச்சியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த காதல் மயக்கத்துடன் பஸ்ஸில் பயணம் செய்யும்போது நாயகியால் ரூ.2 லட்சம் பணத்தை தொலைக்கின்றனர்.
இதற்கு பொறுப்பேற்ற ஐஸ்வர்யா, விஷால் மற்றும் அவருடைய நண்பர்களை பணம் கிடைக்கும்வரை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார்.
மறுமுனையில், திருச்சியில் கட்டப்படும் காம்ப்ளக்சில் கார் பார்க்கிங் இல்லாததால் அதை கட்டுவதற்கு தடை உத்தரவு வாங்குகிறார் ஐஸ்வர்யாவின் அப்பா, ‘பட்டிமன்றம்’ ராஜா.
இந்த கட்டிடத்தின் உரிமையாளரான மதுரை அண்ணாச்சி இந்த பிரச்சனையை தீர்த்துவைக்கவேண்டும் என்று திருச்சி ரவுடியான மன்னாவிடம் கூறுகிறார்.
இதனால் ராஜா வீட்டுக்கு சென்று தகராறு செய்கின்றார் மன்னா. அப்போது, ஐஸ்வர்யாவைப் பார்க்கும் மன்னா அவளை தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறு அவரது பெற்றோரை மிரட்டுகிறான்.
என்னசெய்வதென்று புரியாமல் விழிக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவளது பெற்றோர், விஷாலிடம் நடந்ததை விவரிக்கின்றனர். ஐஸ்வர்யா மீதுள்ள காதலால் விஸ்வரூபம் எடுத்து ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார்.
சண்டையின் இறுதியில் சமையல்காரன் நீ என்னை அடிச்சிட்டியாடா? உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தும்போது, நான் சமையல் கத்துக்கிட்டதே மதுரை ஜெயில்லதான்டா...! என்று கர்ஜிக்கிறார் விஷால்.
அதன்பின்பு, விஷால் ஜெயிலுக்கு எப்படி போனார்? என்பதற்கு பிளாஷ் பேக் விரிகிறது. இறுதியில் மன்னா-வின் கும்பல் விஷாலிடமிருந்து ஐஸ்வர்யாவை பிரித்ததா? ஐஸ்வர்யாவிடம் தன் காதலை சொல்லி அவரை விஷால் கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
விஷால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முழுவதும் ஸ்கோர் செய்கிறார். காதல், நட்பு, பாசம், நகைச்சுவை என்று ஒவ்வொரு இடத்திலும் தனி முத்திரை பதிக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி, பார்ப்பவர்களை மிரட்டியிருக்கிறார்.
ஐஸ்வர்யா அர்ஜுன் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஆனால், பார்ப்பதற்குத்தான் கொஞ்சம் முதிர்ச்சியான தோற்றமாக காட்சியளிக்கிறார். மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கும் இவரை, பாவடை தாவணியில் ரசிக்க முடியவில்லை.
சந்தானம் தனது வழக்கமான பாணியில், நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். ஓட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு சென்று சீரழியும் இவரின் நகைச்சுவை கலாட்டா திரையரங்கில் விசில் பறக்கவைக்கிறது.
விஷாலின் நண்பர்களாக வரும் ஜெகன், சரித்திரன், ஐஸ்வர்யாவின் பெற்றோராக வரும் பட்டிமன்றம் ராஜா- சீதா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மயில்சாமி சிறிது நேரமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார். ஜான் விஜய் மற்றும் அவரது கும்பல் செய்யும் கலாட்டா மிரட்டலுடன் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறது.
தன்னுடைய படங்களில் வழக்கமாக அரைக்கும் மசாலாவையே இந்த படத்திலும் அரைத்திருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். முதல் பாதியில் கொமெடியும், இரண்டாம் பாதியில் பாசம், காதல், சண்டை என்று கலந்து கொடுத்திருக்கிறார்.
தமன் இசையில் ‘என்ன ஒரு என்ன ஒரு அழகியடா’, ‘ராஜா ராஜா நான்தானே’, ‘பூசணிக்காய்’ ஆகிய பாடல்கள் தாளம் போடவைக்கின்றன.
பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். வைத்தியின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கிய விதம் அருமை.
மொத்தத்தில் ‘பட்டத்து யானை’ - 'பட்டைய கிளப்பும்'.
நன்றி விடுப்பு 

பயிலாத பாடங்கள் - ராஜாஜி ராஜகோபாலன்

.


குழந்தைகளே கூறுங்கள்
குதூகலமாயிருப்பதை எங்கே கற்றீர்களென்று
கவலையால் என் வாழ்வு
கருகிப்போகிறது – உங்கள்
கலையில் ஒரு சிறிதாவது
கற்க விரும்புகிறேன்.

மலர்களே  மலருங்கள்
சிரிப்பை எப்படிப் பழகினீர்களென்று
பிள்ளைப் பருவத்தின்போது மட்டுமே
பொழுதெல்லாம் சிரித்திருந்தேன் – உங்கள்
செக்கச் சிவந்த இதழ்களால் சிறிதாவது
சொல்லிக் காட்டுங்கள்!

ஆறுகளே இயற்றுங்கள்
ஆற்றலும் அழகும்
எப்படி இணைய முடியுமென்று
இளவயதுக் காலத்தில்
கனவுகளை மட்டுமே
கண்டு கொண்டிருந்ததால்
ஆற்றலை வளர்க்க
அறிவிழந்து போனேன்.

எறும்புகளே அறிவியுங்கள்
ஓய்வில்லா துழைப்பது எங்ஙனமென்று
ஓரிரு நிமிடத்துக்குள்
ஓய்ந்துபோய்விடுவேன்
இளைஞனைப் போலெப்போதும்
உற்சாகமாய் இருப்பதை
ஒழிக்காமல் ஓதுங்கள்.

உலகத்தமிழ் இலக்கிய மகாநாட்டு பேச்சுப்போட்டி

.


உலகத்தமிழ் இலக்கிய மகாநாட்டு பேச்சுப்போட்டி திருக்குறள் மனனப் போட்டி என்பன துர்க்கைஅம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை இடம்பெற்றது. இப்போட்டிகளில் பல வயதுப் பிரிவுகளில் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டிகளை மகாநாட்டு கல்விக்குழுவினர் முன்நின்று நடாத்தினார்கள். இதில் பல நடுவர்கள் பங்காற்றி பரிசுக்கான மாணவர்களை தெரிவு செய்தார்கள்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைவர் திரு மகேந்திரன் இதில் கலந்து கொண்டு பரிசில்கள் பெறும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கலந்து கொண்ட அனைவருக்கும் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் உலகத்தமிழ் இலக்கிய மகாநாட்டில் பரிசில்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டடார்.
இந்நிகழ்சியில் பங்குகொண்ட மாணவர்களில் சிலரையும் நடுவர்கள் பெற்றோர்கள் ஆகியோரையும் படங்களில் காணலாம்.

மெல்பேணில் சிறப்புற நடைபெற்ற கறுப்பு ஜூலை 30வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள்





தமிழர் மீதான சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் கறுப்பு ஜூலை படுகொலையின் முப்பதாவது ஆண்டு நினைவு நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேண் நகரில் சிறப்பாகவும், உணர்வுபுர்வமாகவும் நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை 27-07-2013 Hungarian Community Centre மண்டபத்தில் மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில் தமிழரல்லாத வேற்றினத்தவர்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் மண்டப ஒழுங்கமைப்பானது தமிழர் மீதான இனவழிப்பினை கால ஒழுக்கில் நினைவுபடுத்தும் முகமாக ஒழுங்கமைப்பட்டிருந்தது. நினைவு நிகழ்வினை திரு பிரகாஸ் தொகுத்து வழங்கினார்.

இலங்கைச் செய்திகள்



வெலிஓயவில் வைத்தியரின் அசமந்தப் போக்கினால் கர்ப்பிணிப் பெண் மரணம்: நீதி கேட்டு மக்கள் போராட்டம்

நவநீதம்பிள்ளையை 50 சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்திப்பர்: ஏற்பாடு பூர்த்தி என்கிறார் விக்கிரமபாகு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 116 பேர் கைது

செப்­டெம்பர் 21 ஆம் திகதி தேர்தல்

பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆரப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்: ஒருவர் பலி, பலர் காயம்

வெலிஓயவில் வைத்தியரின் அசமந்தப் போக்கினால் கர்ப்பிணிப் பெண் மரணம்: நீதி கேட்டு மக்கள் போராட்டம்

30/07/2013      அட்டன் வெலிஓய புதுக்காடு தோட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் வைத்தியர்களின் அசமந்தப் போக்கினால் மரணமானதைக் கண்டித்து தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை சற்றுமுன் நடத்தினர்.

பிரசவத்துக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன் சுமதி (26) என்ற கர்ப்பிணிப் பெண்ணை கடமையில் இருந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் பார்வையிட மறுத்துள்ளார்.

எந்திர மாலை 2013 - 10/08/2013





உலகச் செய்திகள்



வெள்ளை மாளிகையில் இப்தார்: முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்த ஒபாமா

எகிப்தில் மீண்டும் கலவரம் : மோர்ஸி ஆதரவாளர்கள் 100 பேர் பலி

இத்தாலியில் பஸ் விபத்து: 30 பேர் பலி

போப் கலந்துகொண்ட சிறப்பு பிரார்த்தனை: 3 மில்லியன் பேர் பங்கேற்பு

நோர்வேயில் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 18 வருடகால தண்டனை :ஐ.நா.மௌனம் காப்பது ஏன்

அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா



======================================================================
வெள்ளை மாளிகையில் இப்தார்: முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்த ஒபாமா

26/07/2013   அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.




COLOR OF PARADISE

.
அனைவரையும் மிகவும் கவரக்கூடிய
இந்த திரைப்படத்தை கண்டு ரசிப்பதற்கு
உங்கள் குழந்தைகளையும் அழைத்து வாருங்கள்



இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்பு (1) - இரோமி பெரேரா


இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்பு,எனது பெற்றோர் வீரர்களாக இருந்துள்ளார்கள். நேற்று வரைகூட எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது.
blackjuly-2கோட்டைப் பகுதியில் வேலை செய்யும் எனது தாய் வீடு திரும்பும் வழியில் கட்டிடங்கள் தீப்பிடித்து புகையினால் மூடப்பட்டிருப்பதையும், டயர்கள் எரிவதையும் மற்றும் குழப்பம் நிகழ்வதையும் கண்டுள்ளார். அவரது சக தமிழ் ஊழியர்களுக்கு அலுவலக வாகனங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு முதலில் வீடு செல்ல அனுமதிக்கப் பட்டார்கள். தமிழ் பெண்ணான அவரது சக ஊழியர் ஒருவர் மூக்குத்தி அணிந்து பெரிய பொட்டும் வைத்திருந்தார்,அவரது சொந்த பாதுகாப்புக்காக எல்லோரும் அதை அகற்றும்படி வற்புறுத்திய போதிலும் அவர் அதை அகற்ற மறுத்துவிட்டாராம். எனது தாய் நுகேகொடவிலும், அவரது தலைமை அதிகாரி இரத்மலானையிலும் வசிக்கின்றபோதிலும், எனது அம்மாவும் அவரது தலைமை அதிகாரியும் பாதுகாப்பாக இருப்பதற்காக அந்தப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் உள்ள அவரது வீட்டில் தாங்களே கொண்டு சென்று சேர்ப்பிப்பது நல்லது என்று தீர்மானித்தார்கள்;.
எனது தந்தைக்கு மிகவும் நெருக்கமான தமிழ் நண்பர் ஒருவர் அவரது மனைவியுடன் வெள்ளவத்தையில் வசித்தார். அப்பா அவர்கள் இருவரையும் இரத்மலானைக்கு அழைத்துச் சென்றார், அங்கு பெரிய பௌத்த கோவிலின் பிரதம குருவான அவரது மற்றொரு நெருங்கிய நண்பர் எனது தந்தையின் தமிழ் நண்பர்களை கோவிலுக்குள் மறைத்து வைத்து அவர்களுக்கு புகலிடம் அளித்தார். வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை ஆகிய இரண்டு இடங்களும் அந்த ஜூலையில் மிகவும் மோசமான நிகழ்வுகள் சிலவற்றை சந்தித்திருந்தன.

திரும்பிப்பார்க்கின்றேன்….. சமரசங்களுக்குட்படாத படைப்பாளி - பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் முருகபூபதி




 “புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம், உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” – என்று  எழுதிய  தொ.மு.சிதம்பரரகுநாதன்  தமது 79 ஆவது வயதில் திருநெல்வேலியில் மறைந்தார் என்ற அதிர்ச்சியும் துயரமும் கலந்த செய்தியை   தாங்கிய  கடிதம்    2001 ஆம்  ஆண்டு  இறுதியில் இலங்கையிலிருந்து நண்பர்   கே.கணேஷிடமிருந்து   எனக்கு   வந்தது.
வாராந்தம்   கொழும்புப்   பத்திரிகைகள்  இங்கு திங்கள் அல்லது செவ்வாய் கிடைத்துவிடும். ஆனால் அவற்றில் இந்த மறைவுச் செய்தியை காணமுடியவில்லை.
திருநெல்வேலி பெருமாள்புரத்தில்தான் இப்பொழுதும் அவர் வசிக்கிறார் என நம்பிக்கொண்டிருந்தேன். இறுதியாக 90 இல் அவரது இல்லத்திற்கு குடும்பத்தோடு விருந்தினராகச்  சென்றேன்.
எனது  அப்பாவின்  வழியில் அவர் எனது நெருங்கிய உறவினர் என்பது எனக்கு எப்பொழுதும் பெருமை தரும் விஷயம்.
அவரது  மருமகள் (மகனின் மனைவி)  மாலதி  ஹரீந்திரன்  எனக்கு  அண்ணி  முறை.

இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்பு - தெகானி ஆரியரத்ன


வீடு

எனது வீட்டிலிருந்து தெரியும் காட்சி
myhome30 வருடங்களுக்கு முன்பு நான் உயிரோடு கூட இருந்திருக்க மாட்டேன் ஆனால் நான் இதே இடத்தில் நின்று, இதே திசையை பார்த்துக் கொண்டிருந்திருந்தால், காற்றிலே கரும்புகை கலந்து செல்வதை நான் கண்டிருக்கக்கூடும், ஒருவேளை சீரூந்துகள் மற்றும் கட்டிடங்கள் என்பனவற்றில் இருந்து தீச் சுவாலைகள் எழுவதையும்  கண்டிருக்கலாம், சித்திரவதைப் படுபவர்களின் அலறல்களையும் மற்றும் குண்டர்களின் எக்காள ஒலிகளையும் கேட்டிருப்பேன், எரிந்து கொண்டிருக்கும் இறப்பர் மற்றும் மரம்  என்பனவற்றின் கருகல் மணம் எனது நாசியை துளைத்திருக்கும், எனது இனம் எனக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு காரணமாக நான் வீட்டுக்குள் நுழைந்திருப்பேன்.
கடந்த இரண்டு மாதங்களாக நான் 1983க்குள் மூழ்கியிருந்தேன், அந்த வாரத்தின் துயரம் இரத்தம் சிந்தல், மற்றும் வன்முறை என்பனவற்றை ஒரு புதிய உணர்வுடன் இந்த காட்சியூடாக கண்டேன். நான் ஒரு வயதான பெண்மணியை சந்தித்தேன், இழந்துபோன தனது கல்யாணப் புகைப்படங்களைப் பற்றிச் சொன்னபோது அவளது கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன, ஒரு இளைஞன் தங்கள் வீதியிலுள்ளவர்களின் பாதுகாப்புக்காக தனது தந்தை அந்த வீதியை காவல் காத்ததைப் பற்றிச் சொன்னான். ஒரு பெண்மணி இந்தியாவுக்கு தப்பி ஓடிய பிறகு தனது வீட்டுக்காக ஏங்கி வாடுகிறாள், ஒரு மகன் தொலைந்துபோன தனது பெற்றோர்களைப் பற்றிப் பேசினான், மற்றும் ஒரு மகள் அந்த நள்ளிரவில் ஒளிந்து கொள்வதற்காக தனது வீட்டுக்கு வந்த சிநேகிதர்களை நினைவு கூர்ந்தாள்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் தியான யோகம்


இந்து சமயத்தின் மூன்று முக்கிய தூண்களாக கருவூலங்களாக விளங்குவன உபநிடந்தங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரங்கள் என்பவையாகும். ரிஷிகளுக்கு பரப்பிரம்மம் தோற்றுவித்தவையே வேதங்கள், உபநிடதங்களாகும். ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய திருவாய்மொழிகளே ஸ்ரீமத் பகவத்கீதையாகும். இரண்டு மகாகாவியங்களையும் பதினெண்புராணங்களையும் ஆக்கியும் வேதங்களைத் தொகுத்தும் தந்த வேதவியாசரால் ஆக்கப்பட்டது பிரம்ம சூத்திரங்கள், இவையாவும் ஆன்மீகத் தத்துவங்கள் பொதிந்தவை. இவை குரு மூலம் உய்த்துணரப் படவேண்டியவை. ஞான வேதாந்த அமைப்பு யூன் 29ம் 30ம் திகதிகளில் போக்கம் ஹில்ஸில் (Baulkham Hills) ஆச்சாரயார் ஸ்ரீ சச்சிதானந்த சாயி அவர்களை பகவத்கீதையின் தியான யோகம் பற்றி விளக்கியருள ஒழுங்கு செய்திருந்தனர். இஃது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

மகாபாரதப் போரில் பாண்டவாகட்கும் கௌரவர்கட்குமிடையே யுத்தம் - தர்மத்திற்கும் அதர்மத்திற்குமிடையேயான யுத்தம். பகவான் ஸ்ரீ கிருண்ணன் சிறந்த வில்வித்தை வீரனான அருச்சுனனுக்கு அவன் கேட்டுக்கொண்டபடி தேரோட்டியாக வந்தார். துரியோதனன் விரும்பிய வண்ணம் அவருடைய சேனை முழுவதும் கௌரவர் பக்கம் சேர்ந்தன. யுத்தகளத்தில் போரைத் தொடக்க கௌரவர் சார்பில் பிதாமகர் பீஷ்மரால் சங்கூதப்பட்டது. அதைத்தொடர்ந்து பாண்டவர்களும் சங்கூதி விட்டனர். திடவீரனும் மனஉறுதிமிக்கவனும், இப்போருக்காக நீண்ட காலம் ஆயத்தப்படுத்தியவனுமாகிய அருச்சுனன் தான் போரிடப் போகும் பகைவர்களைப் பார்த்து நிலைமையை நிர்ணயிக்க இரண்டு படைகளுக்கு மிடையே தன் ரதத்தை விடச் சொல்லி பகவானுக்கு உத்தரவிட்டான். பகவானும் வேறெங்கும் விடாது நேரே பிதாமகர் பீஷ்மர், வில்வித்தை  வேறெவர்க்கும் இல்லாதவாறு சிறப்பு மாணவனாகத் திகழ்ந்த அருச்சுனனுக்கு மிக நுணுக்கமாகக் கற்றுத்தந்த குரு துரோணாசச்சாரியார், மாமன் முதலியோர் முன்னிலையில் தேரை நிறுத்தினார். பிதாமகரால் மிக அன்போடு சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டவன் அருச்சுனன். மிகவும் சிறப்பான ஸ்தானத்தில் மதித்திருந்தவன். மாமன் முதலியவர்களைப் பார்த்தபின் மனம் தளர்ச்சி யடைந்தான். பகைவர்கள் தனது உறவினர்கள், இதனால் நான், எனது என்ற எண்ணம் மேலோங்கியது. போரிடமுடியாத தளர்ச்சி நிலை மனத்திற்கும் உடலுக்கும் ஏற்பட்டு காண்டீபமே தோளைவிட்டு தளர்ந்து விழுவதாகக் கூறி போரிடமாட்டேன் என்று தேரில் இருந்து விட்டான். தனக்குச் சாதகமாகப் அறிவுரைகள் போல பல கூறி இறுதியில் தன்னால் ஒன்றும் தீர்மானஞ் செய்ய முடியாதுள்ளது என்று “தயைகூர்ந்து என்னை வழிப்படுத்து எனக்கு வேறு புகலிடம் இல்லை கிருஷ்ணா” என்று அருச்தனன் சரணாகதி யடைந்தான். இந்த நிலையில் தான் பகவான் அருச்சனனுக்கு, மனிதகுலம் முழுமைக்குமே, உபதேசித்துப் பாடிய பாடல்களே ஸ்ரீமத் பகவத்கீதையாகும்.

தமிழ் சினிமா



மரியான்

ஆழ்கடலில் மூச்சை அடக்கி ஒரு ஈட்டி மட்டுமே துணை கொண்டு சுறாவையே வேட்டையாடுபவன் மரியான்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகான மீனவ கிராமத்தில் மீனவராக இருக்கின்றார் தனுஷ் (மரியான்).
அந்த கிராமத்தில் தனது நண்பர்களான அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி ஆகியோருடன் சேர்ந்து மீன் பிடித் தொழிலை செய்து வருகின்றார்.
அதே ஊரில் மீனவப் பெண்ணாக வரும் பார்வதி (பனிமலர்) தனுஷை ஒரு தலையாக காதலித்து வருகின்றார்.
தன்னுடைய தொழிலால் எப்போதும் சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் தனக்கு காதல் தேவையில்லை என்று பார்வதியில் காதலை புறக்கணித்துவிடுகின்றார்.
பின்பு நண்பர்களின் வற்புறுத்தல்களால் ஒரு கட்டத்தில் பார்வதியின் மீது காதல் வசப்படுகின்றார் தனுஷ். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ரவுடியிடம் பார்வதியின் தந்தை கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய கடனை திருப்பித் தர இயலாமல் திணரும் தந்தையிடம் பணத்துக்கு பதிலாக உனது பெண்ணை கொடு என்று பேரம் பேசி பிரச்சனை செய்கின்றார் வட்டிக்கார ரவுடி.
மறுமுனையில் நடுக்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தன் நண்பன் அப்புக்குட்டி குண்டடிபட்டு சடலமாக அவரது உடல் கரை ஒதுங்குகின்றது.
இதனைப் பார்த்து கதறி அழுதுக் கொண்டிருக்கும் தனுஷிடம் பார்வதி நேரில் வந்து ரவுடி பெண்கேட்டு வந்திருப்பதாக அழுது புலம்புகின்றார்.
இந்த செய்தியை கேட்ட தனுஷ் பார்வதியுடன் வீட்டிற்கு சென்று ரவுடியை அடித்து விரட்டுகின்றார்.
இதனால் கோபமடைந்த ரவுடி கொடுத்த பணத்தை திருப்பித் தராவிடில் குடும்பத்தோடு கொன்றுவிடுவேன் என்று பார்வதியின் தந்தையை மிரட்டி விட்டு செல்கின்றார்.
இதனால் தர்மசங்கடத்திற்கு ஆழாகி நிற்கும் தனது காதலியின் குடும்ப கடனை அடைப்பதற்காக 2 வருட ஒப்பந்தத்தில் சூடான் நாட்டிற்கு செல்கின்றார் தனுஷ்.
இரண்டு வருடமும் இவர்களின் காதலானது கண்ணீரும் கடிதமுமாக தொடர்கிறது.
கடனையெல்லாம் ஒரு வழியாக அடைத்துவிட்டு காதலியை காண வரும் தனுஷ் தீவிரவாதிகளால் கடத்தப்படுகின்றார்.
இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளால் கடத்தப்படும் தனுஷ் மீண்டு வந்து தன் காதலியை கைபிடிப்பாரா? என்ற மீதிக்கதையுடன் படமானது நகர்கிறது.
தனுஷ் இப்படத்தில் மீனவ நடிகராக இல்லாமல் வாழ்ந்தே இருக்கின்றார். பார்வதி மீதான காதல் காட்சிகள் மற்றும் சூடானில் தீவிரவாதிகளிடம் மாட்டித் தவிக்கும் ஏரியாவிலும் சரி தன் தேசிய விருது தகுதியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார்.
நடிகை பார்வதி படம் முழுவதும் மேக்கப் இல்லாவிட்டாலும் அழகாக இருக்கின்றார். மீனவ பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கின்றார்.
தனுஷிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் காட்சியிலும், அவரை பிரிந்து இருக்கும் காலங்களில் டெலிபோன் மணி அடிக்கும் போதெல்லாம் பதறி அடித்து ஒடுவது போன்ற காட்சிகளில் தனது ஆட்சியை நிறுவியுள்ளார்.
இயக்குனர் பரத்பாலா இப்படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக இல்லாமல், ஆவணப் படம் போல் படமாக்கியுள்ளார்.
முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் படம் மெதுவாக நகர்கின்றது. திரைக்கதையில் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஏ.ஆர்.ரகுமான் வழக்கம் போல் தனது இசையால் மக்களை தாளம் போட வைத்துள்ளார். பின்னணி இசையிலும் தனது திறமையை நிரூபித்திருக்கின்றார்.
நண்பர்களாக வரும் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, சூடான் நண்பராக வரும் ஜெகன், தனுஷின் அம்மாவாக வரும் உமா ரியாஸ்கான் ஆகியோர் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மார்க்கோனிக்ஸ் ஒளிப்பதிவில் கன்னியாகுமரி பகுதி மீனவ கிராமம் மற்றும் தென் ஆப்ரிக்காவின் பாலைவனம் ஆகியவை நாம் அதற்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகின்றது.
மொத்தத்தில் வழக்கமான காதல் கதையை பிரம்மாண்டமாக மக்களுக்கு தந்துள்ளனர்.  நன்றி விடுப்பு