இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப் பொழுது -கவிதை

.                                                                          ந.சத்தியபாலன் 

ஒளியின் பாதை மூடிக் கொள்கிறது
பீடம் விட்டெழுந்து தடித்த இருளிடை
கொலைக் கருவிகளுடன் அலைகின்றன
தெய்வங்கள்
மெல்லப் பரவுகிறது இரத்த வாடை
ஊர் முழுதும்
திறந்து கிடந்த கதவை அவசரமாய்
அறைந்து மூடிப்போகிறது காற்று


தமிழ் சினிமா

ரௌத்திரம்

பிறருக்கு துன்பமெனில் 'ரௌத்திரம்' பழகுவதில் தவறில்லை என்ற மையக்கருத்தை கருவாக வைத்து உருவான கதை.


சென்னை சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயா. ஸ்ரேயாவின் தோழியிடம் சில்மிஷம் செய்துவிடுகிறான் சட்டக்கல்லூரியில் படிக்கும் ரௌடி ஒருவன். கல்லூரி முதல்வரிடமும், பொலிஸ் அஸிஸ்டண்ட் கமிஷ்னரான தன் தந்தையிடமும் புகார் தெரிவிக்கிறார் ஸ்ரேயா.

அவன் பிரபல ரௌடி 'கௌரி'க்கு வேண்டப்பட்டவன் என்பதால் நடவடிக்கையெடுக்கத் தயங்குகிறார்கள். கலங்கிப் போகும் இருவரும் சாலைக்கு வருகிறார்கள். சில்மிஷம் செய்தவன் சாலையில் அடிபட்டு வந்துவிழுகிறான்.... ஜீவா நடுரோட்டில் அவன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் புரட்டியெடுக்கிறார். காரணம்.. ஜீவா பயணித்த ஷேர் ஆட்டோ விபத்திற்குள்ளாவது சட்டக்கல்லூரி ரௌடி மற்றும் அவனது கூட்டத்தினரால். ஜீவாவின் கோபத்தைப் பார்த்து காதல் கொள்கிறார் ஸ்ரேயா.

ஜீவாவைப் பழிவாங்க நேரம் பார்த்திருக்கும் ரௌடிகள், ஜெயிலில் இருக்கும் கௌரி வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறார்கள். பால்ய காலத்தில் தாத்தா பிரகாஷ்ராஜிடம் பெற்ற பயிற்சியால் சாலையில் நடக்கும் குற்றங்களைத் 'தட்டி'க்கேட்கும் ஜீவா, ஒரு கட்டத்தில் ஜெயிலில் இருந்து வெளியேறி வரும் பிரபல ரௌடி கௌரியைக் காயப்படுத்தி விடுகிறார். கௌரி குழுவினரின் கொலைமுயற்சி, ஜீவாவின் குடும்பம், காதல் அனைத்தும் ஜீவாவின் கோபத்திற்கு முன்பு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் உண்மையான ஹீரோ யாரென்றால் அது அனல் அரசுதான். அருமையாய் கோரியோகிராப் செய்யப்பட்ட சண்டைக்காட்சிகள். நிஜமாகவே இன்னவோட்டிவ் அண்ட் இண்ட்ரஸ்டிங். சண்டைக் காட்சிகளை எக்ஸிக்யூட் செய்த விதத்தில் அசத்தல். அதற்கு பிறகுதான் எல்லோரும். குறையாய் சொல்லப் போனால் சில இடங்களில் அந்த ஸ்லோமோஷன் ஆக்ஷன் சீன்கள் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. ஆரம்பக் காட்சியில் ஐந்து நிமிடமே வரும் பிரகாஷ்ராஜ் எபிசோட் அட்டகாசம். அதற்கு காரணம் பிரகாஷ்ராஜின் பாடி லேங்குவேஜும், அதை படமாக்கிய விதமும் நம்ப வைக்கிறது.

ஜீவாவிற்கு 'சத்யா' போல ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வேண்டுமானால் நிறைவேறியிருக்கலாம். ஆரம்ப காட்சிகளுக்கு அப்புறம் ஒரு கீறல்கூட படாமல் தொடர்ந்து எல்லாரையும் பந்தாடிக் கொண்டேயிருப்பதை நம்ப முடியவில்லை. அதற்கான பாடி லேங்குவேஜும், நடிப்பும் குறையே. ஆக்ஷன் ஹீரோ வரிசையில் சேர்க்க வேண்டிய தகுதிகளை இப்படத்தில் காட்டியிருக்கிறார். வழக்கமாய் கலகலவென பேசியே பார்த்த ஜீவா இதில் கொஞ்சம் பேசாத ஜீவாவாக போரடிக்கவே செய்கிறார். தொடர்ந்து இவரை கொல்ல முயல்வதே ஒரு கதையாய் போனவுடன் ஆரம்பித்த சுறுசுறுப்பு சுர்ரென இறங்கிவிடுகிறது.

ஸ்ரேயாவுக்கு கொடுத்த காசுக்கு உருப்படியான கேரக்டர். வழக்கமாய் வரும் லூசுப் பெண் ஹீரோயின் கேரக்டர் போலில்லாம கொஞ்சம் யோசிக்கும்படியான கேரக்டரை கொடுத்த இயக்குநருக்கு ஒரு பெரிய கும்பிடே போடலாம். ஸ்ரேயா, ஜீவாவின் காதலியாக வருகிறார். "நாங்க தனியா இருக்கும் போதுகூட அவன் என்னை கிஸ் பண்ணினது இல்ல, காதலர் தினத்தன்னிக்கு பார்வர்ட் மெஸேஜ்கூட அனுப்பினதில்ல. இதே மாதிரிதான் என்னை தவிர அவன் வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டான். அதான் என் சிவா" என ஜீவாவிற்கு தன் தோழியிடம் நற்சான்றிதழ் தரும் காட்சியில் ஸ்ரேயா அழகோ அழகு. தோழிக்காக தன் தந்தையிடம் கெஞ்சுவதும், கோபத்தால் சீறுவதும், நன்றாகவே நடித்திருக்கிறார். ஜீவா-ஸ்ரேயா காதல் காட்சிகள் சுவாரஸ்யம்.

கிட்டுவாக வரும் அந்த மகாகுண்டு கணேஷ் ஆச்சார்யா, கவுன்சிலர், கௌரியின் அல்லக்கை, இன்னொரு லோக்கல் அல்லக்கை ரவுடியாக வரும் இயக்குநர் கோகுல், பக்கா லோக்கல் பாஷை பேசும் எம்.எல்.ஏ என்று ஏகப்பட்ட கேரக்டர்கள். எல்லா கேரக்டர்களும் வரும் போது பெரிய பில்டப்போடு தான் வருகிறார்கள் முடியும் போது பொசுக், பொசுக்கென வீழ்ந்துவிடுகிறார்கள்.

பக்கத்துக் குப்பத்தின் தாதாவாக பாலிவுட் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா. ஒரு பாடலில் மாறுபட்ட நடனம் மூலம் அசத்தியிருக்கிறார். 'இன்னா பெரியா பயிப்பாநீ...' என்று பொல்லாதவனில் மிரட்டும் சுருட்டைமுடி நடிகர்தான் பிரதான ரௌடி 'கௌரி'.

ஜீவாவின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றனர். ஜீவாவிற்கும் அவரது தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நம் வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை காட்டுகின்றன. ஸ்ரீநாத், சத்யன் ஆகிய இருவரும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் கோகுல், முதல் படத்திற்கு நல்ல அவுட்புட்தான் என்றாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியில் அப்படியே தொங்கிப் போய் சரிடா இப்ப அவனை கொல்லப் போறீங்களா? இல்லியான்னு புலம்ப வைத்துவிடுகிற அளவுக்கு டிராகிங்காக போனதுதான் பெரிய மைனஸ். குடும்ப சம்மந்தப்பட்ட காட்சிகளில் கிடைக்கும் சுவாரஸ்யம் பின் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் இல்லாம போய்விடுகிறது. கௌரி.. கௌரி என்று ஆளாளுக்கு சொல்லும் போது நடு முதுகில் சில்லென ஏற வேண்டும் என்கிற அளவுக்கு முதல் பாதியில் பில்டப் செய்தவர்கள். அதற்கான கரெக்டான காஸ்டிங்கை செய்திருந்தால் இன்னும் ஏறியிருக்கும் சூடு.

இயக்குநரைப் போன்றே ஒளிப்பதிவாளர் என்.ஷண்முக சுந்திரத்திற்கும் அறிமுகப் படம் இது. பிரகாஷ்ராஜின் சண்டை, வில்லன் கௌரியை அறிமுகப்படுத்தும் காட்சி, இரவில் நடக்கும் சண்டைக் காட்சிகள், ஸ்ரேயாவும், ஜீவாவும் பாலத்தில் நடந்து வரும் காட்சி என்று பல காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு நம்மை மிரள வைக்கிறது. ஜீவா, ஸ்ரேயா காதல் காட்சிகளை கவிதை போல படம்பிடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் இவரது கேமராவும் பம்பரமாய் சுழன்றிருக்கிறது. கண்டிப்பாக இவர் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் இடம்பிடிப்பார் எனலாம். இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கிக்கும் இது முதல் படம். படத்திற்கு பாடல்கள் பலம் சேர்க்கவில்லை. இன்னும் அதில் கவனம் செலுத்தியிருக்கலாம். 'மாலை மங்கும் நேரம்' பாடல் மட்டும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதன் குணதேவாவின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குட்டி குட்டியாய் நிறைய வேலைகளை இயக்குநர் செய்திருக்கிறார். கௌரியின் ஆட்கள், அந்த கவுன்சிலர், எம்.எல்.ஏ, எதிர் கோஷ்டி கிட்டு, அவனது ஆட்கள், இவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் எல்லாம் படு நேச்சுரல். படம் ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட வில்லன்களை காட்டியதில் எவனோடு தான் ஜீவாவுக்கு பிரச்சினை என்று மழுங்கி போகும் அளவிற்கு ஒரே வில்லன் கோஷ்டியாய் இருப்பது ஒரு மைனஸே.
நன்றி விடுப்பு

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை

வயது கோளாரால் ஏற்படும் காதல், அந்த காதலினால் உண்டாகிறது கலவரம்.

இந்த கலவரத்திற்கு இறையாகும் இரண்டு உயிர்கள் என மனிதர்களால் பிரிக்கப்படும் காதலர்களை, காலம் எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதுதான் கதை.

பள்ளிப்பருவக்காதலை 'வைகாசி பொறந்தாச்சு', 'அழகி, 'ஆட்டோகிராப்', மாதிரி நேர்த்தியான திரைக்கதையில் சொன்னவர்களும் உண்டு. லாஜிக் கோளாறுகளால் சொதப்பியவர்களும் உண்டு. முதல் பாதியில் எதார்த்தமாய் காதல் கதை சொல்லி விட்டு பின் பாதியில் குழப்பமான மன நிலையில் எழுதப்பட்ட திரைக்கதையால் வெற்றியை மயிரிழையில் தவற விட்டுட்டார் அறிமுக இயக்குநர் ஏகாதசி.

பள்ளி காலத்தில் காதல் கொள்ளும் தேஜ்-கீத்திகா ஜோடியின் காதல் ஊர் பிரச்சினையால் உடைகிறது. வெவ்வேறு கிராமங்களைச் சார்ந்த இவர்களது காதல், இரண்டு கிராமத்திற்கும் இடையே ஏற்படும் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறது.

யாருக்கு வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணி கொடுப்பேன், அந்த ஊர்க்காரனுக்கு மட்டும் கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கீத்திகாவின் தாய் மாமன் மல்லுக்கட்ட, அவருக்கு போட்டியாக கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது அவனோடுதான் என்று தனது மாமாவை எதிர்க்கிறார் கீத்திகா. இப்படி காதலுக்காக போராடும் கீத்திகா, பஞ்சாயத்தில் தான் தேஜ்ஜை காதலிக்கவில்லை என்று திடீர் பல்டியடிக்க, மனமுடைந்த ஹீரோ சென்னைக்கு புறப்பட, சென்னையில் வசிக்கும் ஏகாதசியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்கிறார் கீத்திகா.

காதலில் பிரிந்த இவர்கள் சென்னையில் பக்கத்து பக்கத்து குடியிருப்பில் வசிக்க நேரிட்டாலும், தங்களை ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் போல வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் கீத்திகாவின் இளம் வயது காதலன் தேஜ் என்பது ஏகாதசிக்கு தெரிய வர கொடுமைகளுக்கு ஆளாகும் கீத்திகா இறுதியில் என்ன ஆனார் என்பதுதான் மீதிக்கதை. எட்டு வருடங்களுக்கு முன்பு தங்கர்பச்சான் இயக்கிய 'அழகி' படத்தின் சாயலை ஒத்திருக்கிறது படம்.

ஆனால் நகரமயமாதலில் முற்றிலும் சிக்கிவிடாத இடைநிலைக் கிராமங்களின் மனோநிலையை, நகல் எடுத்துக்காட்டிய வகையில் வேறுபட்டு நிற்கிறது படம். தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்டுவரும் நாகரிக வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலை இல்லாத ஒரு பழைய தலைமுறை... படித்து விட்டு மாநகரத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் இளையதலைமுறை... இந்த இரண்டு துருவங்களுக்கு மத்தியில் பயணப்பட்டிருக்கிறது கதை. நாயகன் தேஜுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லையென்றாலும், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

கதாநாயகி கீத்திகாவுக்கு அழகு கம்மியென்றாலும் நடிப்பு ஜாஸ்தி. ஒரு அரக்கனை கட்டிக்கொண்டு அவ்வளவு அமைதியாக இருக்கும் அவர், இறுதிக்காட்சியில் சாமி வந்ததை போல சிலிர்த்துக் கொண்டு கிளம்புகையில் நமக்கே அச்சம் வருகிறது. முறை மாமனாக நடித்திருக்கும் அந்த சிங்கப்பூர் துரைராஜ், பார்க்கும்போதே பதைபதைக்க வைக்கிறார். அவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்துக்கு ஒரே ஒரு வாத்தியார். அதுவும் மனோபாலா. சொல்லவே வேண்டாம்... சுத்தமாக எடுபடவேயில்லை. குத்தாட்டம் போட்டிருக்கிறார் சுஜிபாலா.

படத்தின் எதிர்மறையான அழகியலோடு வந்து நிற்கிறது ஏகாதசியின் கதாபாத்திரம். (இயக்குநரே நடிச்சு சும்மா அதகளம்பண்றாருங்கோ) சென்னை மாநகராட்சியின் கட்டணக் கழிவறை ஒன்றை குத்தகைக்கு எடுத்திருப்பவன். குறைவான கட்டணம் செலுத்தி கழிவறைக்குள் போய்வந்தவன் பொய் சொல்கிறான் என்பதை, அவன் கையை முகர்ந்து பார்த்துக் கண்டுபிடிக்கத் தயங்காதவன். யதாத்தத்திற்கு மிக அருகில் நிற்கும் ஒரு சாதாரணனின் இந்தக் கதாபாத்திரம் தமிழ்சினிமாவுக்கு புதுசு! தூக்கிக் கட்டிய வேட்டி, கழுத்தில் துண்டு என்று இவரின் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார். மொத்தத்தில் ஒரு ஹீரோவாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் ஏகாதசி!

படத்தில் மிகச்சிறந்த பகுதி என்றால், கிராமத்தில் இளம்பெண்களின் மனநிலை பாதிக்கப்பட்டால் அதற்கான உண்மையான காரணத்தை உணர மறந்து, பேய் பிடித்திருப்பதாக நினைத்து, பூசாரியைக் கொண்டு உடுக்கடிப்பதும், மந்தரிப்பதும் எத்தனை முட்டாள்தனமான மூட நம்பிக்கை என்பதை, இறுதிக்காட்சியில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் அனைத்து பாடல்களையும் இயக்குநரே எழுதியிருக்கிறார். 'உசுர திருடிப் போறா...' பாடல் அழகான தாலாட்டு. பின்னணி இசையிலும், பாடல்கள் இசையிலும் கிராமத்தையும், கிராமியத்தையும் நம் கண்முன் நிறுத்தும் பரணியும், 'மைனா' புகழ் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் படத்தின் பலம்!

சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்கி, அரிவாளால் வெட்டிக் கொள்ளும் கதைக்களத்தை பாரதிராஜா காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. ஆனால், வட்டி கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒருவனின் சின்னவிஷயம் எப்படி ஊர்ப்பகையாக உருவெடுக்கிறது என்பதை, நுணுக்கமாகச் சித்தரித்திருக்கும் அறிமுக இயக்குநர் ஏகாதசி, கொஞ்சம் முயன்றால் இன்னும் நல்ல படங்களை தரமுடியும்.

நன்றி விடுப்பு

சகாக்கள்

பழனிக்கு பாதயாத்திரை போகும் குழுவினரில் இருவருக்குள் ஏற்படும் காதல் அவர்களின் சகாக்களுக்கு இடையிலான அன்பு, பிரிவு பிரச்சினைகள் போன்றவற்றை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் இடைவேளையில்தான் சந்தித்துக் கொள்கிறார்கள் ஆனால் அதுவரை காதலித்துக் கொண்டும் இருக்கிறார்கள். வித்தியாசமான கதை சொல்லும் யுக்தியினைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார சுவாமி.

காதலித்தால் இவளைத்தான் காதலிக்கனும், கைபிடித்தால் இவளைத்தான் கரம்பிடிக்கணுமென்று, பஸ் ஸ்டாண்டில் ஏதேச்சையாக பார்த்த பேரழகியை தன் காதலியாக கற்பனை செய்து கொண்டு, தன் சகாக்களிடம் இஷ்டத்திற்கு ரீல் சுற்றும் ஹீரோ, ஒரு நாள் ஹீரோயினிடம் சிக்குகிறார்! அப்புறம்? அப்புறமென்ன...? அவர் சுற்றிய ரீல்கள் அத்தனைக்கும் அவர் தரும் விளக்கமும், கல்யாணத்திற்கு பின்பும் காதல் செய்தல் வேண்டும் எனும் சொல்லாக்கமும் நாயகிக்கும், நாயகன் மீது காதலை ஏற்புடுத்துகிறது. வெவ்வேறு சாதியை மட்டுமல்ல, வசதியையும் சார்ந்த இவர்களது காதல் சேர்ந்ததா...? சீரழிந்ததா...? என்பதுதான் மீதிக்கதை!

'குளிர்-100' படத்தில் நாயகராக ஏற்கனவே அறிமுகமான சஞ்சீவ்தான் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல் என்றாலே எங்கேயுமே பிரச்சினைதான். காதல் எப்ப வரும்.. எப்படி வரும்.. யார் மீது வரும்.. என்பது பிரம்ம ரகசியம்தான். சஞ்சீவுக்கும் அப்படித்தான் அத்வைதாவைப் பார்த்த உடனே வருகிறது காதல். ஒரு கால்பந்தாட்ட வீரராக வந்து ரயில்வேயில் வேலை வாங்க வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கும் சஞ்சீவ் மைதானங்களில் கோல் போடுகிறாரோ இல்லையோ யதார்த்த நடிப்பில் கோல் போட்டு விடுகிறார். இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்தால் 'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் போன்று புகழ் பெறலாம்.

'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்த அத்வைதாதான் இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முந்தைய படத்தைவிட அத்வைதா இதில் சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார். கிராமத்துப் பெண்களுக்கே இருக்கும் தைரியம், துடுக்கத்தனங்களை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தான் திட்டி அனுப்பியவன் மீதே காதல் வயப்படுவதும் அதனை அப்பாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் இடங்களில் நம்மையும் அவரது சோகம் தொற்றிக் கொள்கிறது.

தாநாயகியின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி அடிக்கும் லூட்டி, தியேட்டரில் விசில் சப்தத்தை கிளப்புகிறது. சஞ்சீவின் ஒரு சகாவாக வரும் சங்கர்(மெய்யர்) ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பாக்யராஜ், ராஜேந்தர், சிம்பு இன்னும் ஒரு படி மேலே போய் எம்.ஜி.ஆர். சிவாஜி என்று அனைவரையும் வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கிராமத்து இளைஞன். செம டைமிங், ஆட்டம், காமெடி என்று தூள் பறத்துகிறார்.

சஞ்சீவின் சகாக்கள் சங்கரும், சிவசங்கரும்(லெஃப்ட் பாலு) ஜோடி சேர்ந்து சும்மா காமெடித் திருவிழா நடத்தியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இருவரும் இணைந்து செயல்பட்டால் தமிழ்சினிமாவின் எவர்கிரீன் வெற்றிக் கூட்டணி கவுண்டமணி-செந்தில் போன்று சிகரங்களைத் தொடுவார்கள்.

சஞ்சீவ், அத்வைதா மற்றும் சஞ்சீவின் நண்பர்கள் பழனிக்குப் பாதையாத்திரை செல்லும் காட்சிகள் அந்த பாதயாத்திரையில் நடக்கும் ஆட்டம், பாட்டம், பரவசம் மற்றும் சுவராஸ்யமான சம்பவங்கள் அழகு. சகாக்கள் பார்த்து விட்டு தமிழக இளைஞர் கூட்டம் இன்னும் அதிக அளவில் பழனிக்குப் பாதையாத்திரை புறப்படலாம்.

தமிழகத்தில் இல்லாத கோவில்களா அல்லது கடவுள்களா..? இங்கிருந்து வேறு மாநிலம் செல்லும் போது அடிப்படை வசதிகள்கூட நம்ம ஆளுங்களுக்குச் செய்து கொடுக்க மறுக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாம் ஏன் அங்கெல்லாம் செல்ல வேண்டும். பழனி ஒன்றே போதும். பழனியை ஒரு சர்வதேச ஆன்மிகச் சுற்றுலாத்தலமாக நாம், நம் இளைஞர்கள் நினைத்தால் மாற்றலாம். சகாக்களில் காட்டியிருக்கும் பாதயாத்திரைக் காட்சிகள் நிச்சயம் அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டும்.

முற்பகுதியில் கதையைப் புதிதாகச் சொன்ன இயக்குநர் பிற்பகுதியில் அரதப்பழசான காட்சிகளுடன் கதையை நகர்த்தியிருக்கிறார். நீபா கதாபாத்திரம், அத்வைதா, சஞ்சீவ் மீது காதல் வயப்பட ஒரு காரணமாக இருக்கத் திணிக்கப்பட்டது போன்ற உணர்வினையே ஏற்படுத்துகிறது.

அதைப்போலவே அத்வைதா, தந்தையிடம் தன் காதலைச் சொல்ல வருவதும் அந்த நேரத்தில் அவர் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடியவர் அல்ல என்பதனை வேறு ஒரு சம்பவம் மூலம் புரிய வைப்பதும், அதன் பிறகு சொல்லத் தயங்கி சொல்லாமல் இருந்து விடுவதும், ரொம்ப பழசு இயக்குநர் அவர்களே. இடைவேளை வரை யூகிக்க முடியாத சுவராஸ்யமான காட்சி அமைப்புகள் அதன்பிறகு..?

ஸ்ரீ.எம். அழகப்பனின் ஒளிப்பதிவும், ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பும் படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன. சாதாரணமாக நமக்குப் பொரையேறுச்சுன்னா யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்று சொல்வோம் அந்த யதார்த்த வரிகளையேக் கொண்டு யுகபாரதி எழுதிய 'நீ என்ன நெனைக்கிறியா..' பாடல் அருமை.. திரும்பத் திரும்ப கேட்கத்தூண்டும் அளவிற்கு இசையமைத்திருக்கிறார் தயா ரத்னம். மற்ற பாடல்கள் கேட்கலாம் ரகம்.

நண்பர்கள் கதையென்றாலும் தெருமுனை குட்டிச் சுவரில் அமர்ந்து தம் அடித்து பொழுதுபோக்குவது, சைட் அடிப்பது போன்ற காட்சிகள் இல்லாமல் நட்பையும், காதலையும் யதார்த்தமாக சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் முத்துக்குமார சுவாமியை வாழ்த்தி வரவேற்போம்.

நன்றி விடுப்பு


பனங்கொட்டை முளைவிட்டு வடலியென... கவிதை


.



அனல் காற்றில் விசவாயு
கலந்தெரித்த பூமி
அதில் விளைந்த இளந்துளிர்கள்
தீய்ந்தழிந்து
கனகாலம் ஆகவில்லை.

முதுமரங்கள் விழிவரளச்
சுரசரக்கும் காவோலையாகும்.
துயர்வாய்வில்
மணல் கூடத்
தீய்ந்தெரிந்து
கரியாகச் சாகும்.

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள்

தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி


17/8/2011

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க அணித்தலைவர் டில்ஷான் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டம் கைகொடுக்க 287 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை மாலிங்கவின் அபார பந்து வீச்சுடன் 78 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

ஆஸி. அணியின் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டிய மலிங்க அபாரமாக 5 விக்கெட்டுக்களை பறிக்க 208 ஓட்டங்களுக்கு ஆஸி. அணியை சுருட்டியது இலங்கை அணி.

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் கலாசார மகாமண்டபம் - கோலாகலத் திறப்பு விழா -- ஒரு கண்ணோட்டம்! ……….. வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி.

.                                                        
                                                                     வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி 
                                                             
புலம்பெயர் தமிழரின் பங்களிப்பில் தமிழரின் புகழ்பாடும் மகாமண்டபம்!
அவுஸ்திரேலியத் தமிழருக்கு இதுவரை ஒரு சிறந்த கலாசார மகாமண்டபம் இல்லையே என்ற நெடுநாட்குறை சொற்பதங்கடந்த கற்பகதேவி அருளால் நிவர்த்தி! அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் திறமைக்கும் செயற்பாட்டிற்கும் தமிழ் மக்களின் ஏகோபித்த பாராட்டு!.

தண்ணீர்த் தாகம் - சிறுகதை - ஆனந்தன்


.
பங்குனி மாதம் வெயில் மிகவும் காய்தலாக அடித்துக்கொண்டிருந்ததுறோட்டில்அவ்வளவு நடமாட்டமில்லைதூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக் கொண்டுவியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய்க்கொண்டிருந்தான்.அதற்கப்பால் ஒரு கட்டைவண்டி 'கடா கடாஎன்று ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது.பன்னிரண்டு மணி வெளியே யாரும் தலை காட்டவில்லைபகல் முழுவதும்வெயிலிலே திரியும்நாய்கூட சுவரோத்தில் கிடந்த சிறு நிழலில் இளைத்துக்கொண்டிருந்ததுஅவ்வளவு உக்கிரமான வெயில்பலர் பகலுறக்கம் போட்டார்கள்.சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள்செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கிவழிந்துகொண்டிருந்தார்.

அந்த அரசமரத்தின் கீழ்த்தான் பகல் முழுவதும் மீனாட்சிக்கு வேலை.நியாயஸ்தலத்துக்குப் போகும் கிளைறோட்டும் பெரிய தெருவும் கோணமாய்ச்சந்திக்கும் சந்தி அதுஅந்த அரசமரத்தைச் சுற்றி வெயில் கடுமைக்கும் உகந்தகுளிர்நிழல்தட்டுச் சுளகிலே சின்னச் சின்னக் கூறாகக் கத்தரிக்காய்பிஞ்சு மிளாகாய்நன்றாக அடுக்கிப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்தனஅவளுக்குச்சோம்பேறித்தனமோ கொட்டாவியோ இல்லைஅன்றைக்கு வியாபாரம் அவ்வளவுருசியாகவில்லைகோடு கலைந்ததும் பள்ளிக்கூடம் விட்டதும்தான் வியாபாரத்தின்ருசி தெரியும்கொண்டுவந்த பெட்டியை காலி செய்து விட்டேவீடு திரும்புவாள்.அப்பொழுது அவள் உள்ளத்தில் எழுவது ஆனந்தக்கடல்தான்.

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 5


.
                                                                                            பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


அத்தியாயம் 5

கள்ளக் காதல்

கள்ளக்காதல் சம்பந்தமானவைதான் என்று தௌ;ளத்தெளிவாக உணரக்கூடிய பல்வேறு பாடல்கள் நாட்டுப்பாடல்களிலே உள்ளன. ஒருவனும், ஒருத்தியும் பெற்றோருக்கோ அல்லது மற்றோருக்கோ தெரியாமல் காதலித்தல் கள்ளக்காதல் அல்ல. காதலர் இருவர் கருத்தொருமித்துவிட்டால் அது இரகசியமாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் சரி அது நல்ல காதல்தான்.

உலகச் செய்திகள்

.
தனது முதல் 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை அறிமுகப்படுத்திய ரஷ்யா


18/8/2011
ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது.

சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும்.

ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது.

மக்களை ஈர்த்த மகராசர்....! தி. ஜானகிராமன்


.



விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ' என்று பெண் குரல் அறிவித்தது. அவர் வெள்ளைகாரர் படிக்கட்டில் இறங்கினார். நடந்து 'ட்ரான்ஸிட் ' கூடத்திற்குப் போனார்.

இன்று என்ன விசேஷம் இந்த ஊரில் ? ஏன் இவ்வளவு இரைச்சல். ' ஏன் இத்தனை கூட்டம் ?

கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தார் வெள்ளைக்காரர். தலை, தலை, எங்கும் தலைகள் 'பத்தாயிரம் தலைகள். ஆமாம் பத்தாயிரம் பேருக்குக் குறையாது. மேலும் மேலும் கார்கள் வந்து கொண்டிருந்தன. சின்னக்கார்கள், பெரிய கார்கள், உள்நாட்டு கார்கள். வெளிநாட்டு கார்கள் கதவுகள் திறந்தன. மனிதர்களைக் கொட்டிவிட்டு அப்பால் கார் கூட்டத்தோடு சேர்ந்து நின்றன. 

காலில் விழுந்த எம்.ஜி.ஆர்..!

.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலில் நிறைய பேர் விழுந்து வாழ்த்து பெற்றதை நாடறியும். ஆனால் எம்.ஜி.ஆர், இரண்டு பேரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது உங்களுக்குத் தெரியுமா..?

தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி... தான் உயிருடன் உள்ளவரை மன்னாதி மன்னனாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். (என்றழைக்கப்படுகின்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன். இவர் போன்ற பிரபலங்களின் முழுப்பெயர்களை அறிய இங்கே சொடுக்கவும்).

தன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் (முக்கிய இடங்களுக்கும் சரி, முக்கியமான பணிகளுக்கும் சரி) செல்வார்.

இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சியில் இரு பாடசாலைகள் அவுஸ்திரேலிய உதவியில் புனரமைப்பு
Saturday, 13 August 2011


2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சியில் சேதமடைந்த இரண்டு பாடசாலைகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் மீளமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உத்தியோகபூர்வ வைபவமொன்றில் கிளிநொச்சி கல்வி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்தப் பாடசாலைகள் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் அவுஸ்திரேலிய அரசாங்கம், யுனிசெப் ஆகியவற்றிற்கு இடையிலான பங்களிப்புடன் 112 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற நாய்

.
தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியொருவரை அயல் வீட்டிலிருந்து தப்பி வந்த நாயொன்று கடித்துக் குதறி கொன்ற கொடூர சம்பவம் அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகருக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

                                                             
    
                                                                                                                                                               
              
                                      

சூடானிய அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த அயன் கொல் என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஊடக அறிக்கை ஆகஸ்ட்டு 12, 2011

.
நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் இரு அங்கத்தவர்களும், விக்டோரியா மாநிலத்தில் ஒரு அங்கத்தவரும்; தெரிவு செய்வதற்கான உபதேர்தல்:

சுதந்திரத்தின் சகல அம்சங்களையும் முற்றாக இழந்து சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் அழிக்கப்பட்டுச் செயலற்று நின்ற ஈழத்தமிழரின் இன்றைய காலத்தின் தேவையாக உருவாக்கப்பட்டதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா. க. த. அ) என்பது எல்லோரும் அறிந்த விடயம். இந்தச் சிறு குழந்தை பிரசவித்து எழுந்து நடப்பதற்கு முன்னதாகவே அதனை அழித்து விடுவதற்கான முயற்சி பெருமளவில் எடுக்கப்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். நாடுகடந்த தமிழீழ அரசை உருக்குலைக்க உள்ளிருந்தும் புறமிருந்தும் பலவிதமான சக்திகளாலும் எடுக்கப்படும் பலவகையான முயற்சிகளுக்கும் முகம் கொடுப்பதிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சக்தி விரயமாக்கப்படுவதே யதார்த்தம்.

தமிழ் சினிமா

.
கருங்காலி


இளம் தம்பதிகள் மத்தியில் இன்றைக்கு இருக்கும் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் கதை.

பொறுக்கி, பெண் பித்தன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம். சேரிப்பகுதியில் அனாதைகளோடு அனாதையாக வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு கஞ்சாபேர்வழியின் கையில் அந்த சிறுவர் கூட்டமே சிக்குகிறது.

அவனிடம் கஞ்சா பொட்டலம் விற்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கொலைகாரனாகவும் மாறுகிறார். அதோடு பெண்களை அனுபவிக்க வேண்டும் ஆனால் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைக்கும் பெரிய பெண் பித்தனாகவும் இருக்கிறார். தனது கூட்டத்தில் வளரும் அஸ்மிதாவுடன் கணவன்-மனைவி போன்று வாழ்பவர் அவள் வயிற்றில் தனது குழந்தை வளர்கிறது என்பது தெரிந்ததும் அவளை சுட்டுக் கொல்கிறார் களஞ்சியம். அப்படிப்பட்டதொரு மிருக குணம் கொண்ட கேரக்டர்.

அதன்பிறகு சாலையில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒரு டாக்டர் பெண்ணின்(சுனிதா வர்மா) அழகில் மயங்கி அவளை இவர் காப்பாத்துகிறார். ஆனால் அந்த பெண்ணே இவரை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறாள். இதனால் அவளுக்கு கணவனாகி சுகபோகமான வாழ்க்கையை அனுபவிக்கும் களஞ்சியம், குழந்தையின்மை காரணமாக மனைவியிடம் சிகிச்சைக்கு வரும் அஞ்சலியை அனுபவிப்பதற்காக தொடர்கிறார். இதற்காக சில நாடகங்களை நடத்துகிறார். களஞ்சியத்தின் காமப் பிடிக்குள் அஞ்சலி சிக்கினாரா இல்லை தப்பித்தாரா என்பதே மீதிக்கதை.

ரவியாக நடித்த இயக்குநர் களஞ்சியத்திற்கு நடிப்பும், பாடி லேங்குவேஜும் வருவேனா என்கிறது. அதிலும் ரவுடியாய் இருக்கும் காலத்திலாவது தலை முடியும், தாடியும் கொஞ்சமாச்சும் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் திருந்தியவனாய் வரும் போது அவரது பார்வைகளும், பாடி லேங்குவேஜும் சுத்தமாக எடுபடவில்லை.அஞ்சலியின் கணவனாக வரும் சீனிவாசன் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் நடிப்பு நன்றாக உள்ளது.

அஞ்சலி எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நடிப்பில் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் பக்கா கிராமத்து பெண்ணாக தனது சொந்த குரலிலேயே பேசி நடித்திருக்கிறார். நடிப்பில் பலபடி உயர்ந்து நிற்கிறார். சுனிதா வர்மாவை அழகாக காண்பித்திருக்கிறார்கள். அதேபோல் தனது கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆனால் இவர்கள் அனைவரையும் விட சேரிப்பெண்ணாக வந்து களஞ்சியத்தையே சுற்றி சுற்றி வரும் அஸ்மிதாவின் கேரக்டர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிழலாடுகிறது. பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு போன்ற வெற்றி படங்களை தந்த மு.களஞ்சியம் முதல் முறையாக கதை நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம். பூமணி படத்தின் திரைக்கதை இன்னும் அப்படியே கண் முன்னே இருக்கிறது பதினைந்து வருடங்களுக்கு பிறகும் அந்த கதையை மறக்க முடியாது அப்படி ஒரு படம். ஆனால் பூமணி உடன் ஒப்பிடும் போது கருங்காலியின் திரைக்கதைக்கு களஞ்சியம் மெனக்கெடவில்லை என தெரிகிறது.

ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்ரீகாந்த் தேவாவின் இசை எல்லாமே சுமார் ரகம். அதிலும் அஞ்சலி, களஞ்சியம் சம்மந்தப்பட்ட காட்சிகளின் பின்னணியிசை பிட்டு படம் தோற்றது போங்கள். 'கன்னிப்பருவத்திலே' படத்தில் வடிவுக்கரசி ஒரு கணம் பாக்யராஜுடன் சபலப்பட்டதினால் நடக்கும் பல விஷயங்கள் நிதர்சனமான கதை. ஆனால் இவ்வளவு ட்ராமாட்டிக்காக அடல்டரி நடைபெறும் என்று கதை செய்வது படு அபத்தம்.

அதுவும் டாக்டர் சொல்லி தான் உங்களுடன் உறவு கொள்ள அனுப்பப்பட்டிருகிறேன். என் பெயர் கூட வேண்டாம். என்னை டாப்லெட்டாக நினைத்து ஒரு ஐந்து நிமிஷம் செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவனை எந்த ஒரு அப்பாவி பெண்ணும், கிராமத்துப் பெண்ணும், 'தெய்வத்திருமகள்' கிருஷ்ணாவின் மனநிலையில் உள்ள பெண்ணாயிருந்தாலே ஒழிய நம்ப மாட்டாள். ஏராளமான லாஜிக் மீறல்கள், எதையோ சொல்ல நினைத்து எங்கோ கதை சுற்றுகிறது, கடைசி இருபது நிமிடத்தில் மட்டும் விறுவிறுப்பாக உள்ளது, அந்த விறுவிறுப்பை ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

நன்றி விடுப்பு
போடிநாயகனூர் கணேசன்


பன்னி மேய்க்கிற ஒரு வில்லனுக்கும், 'தண்ணி' விற்கிற ஹீரோவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை.

பப்ளிக்காக பன்றியை கொன்று அவ்வப்போது பெண்களையும் கொல்லும் கற்கால வில்லன். அவனிடம் அடிமைப்போல கஞ்சாவும், கள்ளச் சாராயமும் விற்கும் ஹீரோ.

வேலைக்காரன் மகன் என்னைவிட புத்திசாலியாக இருக்கக் கூடாது என்று அந்த பிஞ்சு வயசிலேயே ஹீரோ ஹரிகுமாருக்கு நஞ்சை பழக்குகிறார் வில்லன் சாய் ரவி. முதலாளியின் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் சகித்துக் கொள்ளும் ஹரிகுமாரின் காதலுக்கும் சாய் ரவி குறுக்கே நிற்கிறார். ஒரு கட்டத்தில் தான் காதலிக்கும் அருந்ததியை கடத்தி திருமணம் செய்து கொள்ளவும் முற்படுகிறார் சாய் ரவி. பொறுமை இழந்த ஹரிகுமார் வில்லன் கூட்டத்துடன் மோதுகிறார், ஜெயிப்பது யார் என்பது இறுதிக்காட்சி. 'மதுரை சம்பவம்' படத்துக்குப் பிறகு ஹரிகுமார் நடித்திருக்கும் படம். இந்தப் படத்தில் எல்லாப் பழியையும் சுமக்கும் தியாகத்திருவுரு கேரக்டர் ஹரிகுமாருக்கு. எந்த சிச்சுவேஷனுக்கும் எக்ஸ்பிரஷன் மட்டும் காட்டவே மாட்டேன் என்று அவர் அடம் பிடிப்பதுதான் சரியில்லை. பிடிவாதத்தை விடுங்க பாஸ். இவருக்கு பக்க வாத்தியமாக சூரி. கொமெடியனாக வருகிறவரின் கழுத்தில் சுருக்கு மாட்டி தொங்க விடுகிறார்கள். ஹீரோவுக்கு கோபம்வர என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன... நடன இயக்குநராக இருந்து ஹீரோவானதால், ஹரிகுமாரின் நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது.

கதாநாயகியாக 'வெளுத்துக்கட்டு' அருந்ததி. ஹரிக்குமார் காதலை சொன்னதும், உன்னை எல்லாம் யாரு காதலிப்பா என்று படக்கென்று முறுக்கும் போது அடடா இது நல்லாயிருக்கே என்று தோன்றுகிறது. அவரே அடுத்தக் காட்சியில் பால்ய நட்பை சொல்லி ஹரிகுமாரிடம் பம்மும் போது சப். வழக்கமான ஹீரோயின். படத்தில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுவது பன்னி மேய்க்கிற அந்த வில்லன் சாய் ரவிதான். இவர் வருகிற காட்சிகள் எல்லாம் அடிவயிற்றில் பந்து சுழல்கிறது. தனது மனைவியை காப்பாற்றுவதற்காக நண்பனின் தம்பியை காட்டிக் கொடுக்கும் சூரி, கடைசியில் தற்கொலை செய்து கொள்கிற காட்சி மனசை ரம்பம் போட்டு அறுக்கிறது. ஆரம்பத்தில் சஸ்பென்சாக செல்லும் கதையில், பிளாஷ்பேக் வரும்போது ஓரளவு விறுவிறுப்பு தெரிகிறது. என்றாலும் காட்சிகள் ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்தது போன்றே இருப்பதால் படம் தொடங்கிய ஒரு பதினைந்து நிமிடத்திலேயே போர் அடிக்கிறது. அவ்வப்போது ஒரு பாடல் இளையராஜா ஸ்டைலில் வந்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கதையிலும், காட்சிகளிலும் பெரிதாக சுவராஸ்யம் எதுவும் இல்லை.

ஹரிகுமார் அடங்கிப் போவதற்கு முதலாளியின் சத்தியம், மூளை வளர்ச்சி இல்லாத சகோதரன் என்று காரணங்களை அடுக்கியிருக்கிறார் இயக்குநர். காட்சிகளுக்கான லாஜிக்கை உருவாக்குவதில் இயக்குநர் ஞானம் இன்னொரு ஹரி. பன்றி பிடிக்கும் வில்லன் நல்ல கற்பனை. பன்றியை கொல்லும் உலக்கையால் ஹரிகுமாரின் மூளை வளர்ச்சியில்லாத தம்பியை கொல்வது தேவையில்லாத காட்சி. காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என்று மூன்றையும் கலந்து கொடுத்திருக்கும் இயக்குநர் ஞானம் வழக்கமான கதை என்றாலும் இன்னும் லேட்டஸ்டாக வெளிப்படுத்தியிருக்கலாம். ஜான்பீட்டர் பாடல்கள் பழைய ரகம் என்றாலும் கேட்க இனிமையாக உள்ளது. பின்னணி இசையில் சபாஷ் வாங்குகிறார். தனது ஒளிப்பதிவில் கிராமத்து அழகை நன்றாக காண்பித்துள்ளார் பிரபாகர். எடிட்டிங்கின் மூலமாக படத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.

நன்றி விடுப்பு

டூ


காதலர்களுக்குள் ஏற்படற கருத்து வேற்றுமைகள், ஊடல்கள், சின்ன சின்ன சண்டைகள், தற்காலிகப்பிரிவுகள் நிரந்தரம் அல்ல.

காதல்தான் நிரந்தரம் என்பதை சொல்லும் கதை. சஞ்சய் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அவன் ப்ளஸ் டூ வரை படித்த நட்சத்திராவை ஒரு நாள் சந்திக்க நேரிடுகிறது. பள்ளியில் படிக்கும் போது அவளிடம் ஒரு நாள் அவன் காதலைச் சொல்ல அவளோ அப்போது படிப்பை காரணம் காட்டி மறுத்துவிடுகிறாள். இன்று படித்து நல்ல வேலையில் இருக்கும் நட்சத்திராவே சஞ்சய்யை தேடிப் போய் காதலைச் சொல்கிறாள். அப்போது உலகையே ஜெயித்துவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறான் அவன். பின்பு இருவருக்கும் சின்னச் சின்ன சண்டைகள் வருகின்றன. இந்த சண்டைகள் ஒருகட்டத்தில் ஈகோவில் போய் முடிகின்றன. இதனால் ஒரேயடியாக பிரிந்து விட்டால் தொல்லையே இல்லை என்று நினைக்கிற இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சுதந்திர பத்திரிகையாளினியாக, (Freelance Jouinalist) வரும் சங்கீதா பட் சஞ்சய்க்கு பிடித்தமானவராக ஆகிவிடுகிறார். இந்த மூவருக்குள்ளும் ஏற்படும் சுவாரசியமான விஷயங்களையும், உரசல்களையும் சொல்லி யார் யாரோடு சேர்கிறார்கள் என்பதை இறுதிக்காட்சியாக்கியிருக்கிறார்கள்.

'முன்தினம் பார்த்தேனே' படத்தில் அறிமுகமான சஞ்சய் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தான் நெனச்ச மாதிரி தன் காதலியின் கேரக்டர் இல்லை எனும் போது இவர் சண்டை பிடிக்கும் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். முந்தைய படத்தை விட, இப்படத்தில் தன் திறமையை மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரது நண்பர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் காட்சிகளிலும், குறிப்பாக காதலி நட்சத்திராவிற்காக ஏங்கும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார். முன்னாள் நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திரா, தாயின் பெயரை காப்பாற்றும் அளவிற்கு நடித்திருக்கிறார். சஞ்ஜயிடம் கோபப்படும் காட்சிகள், ரசிக்கும்படியாக இருக்கிறது. நகைச்சுவையும் நளினமாக வருகிறது நட்சத்திராவுக்கு. கிச்சனுக்குள் வந்து 'இதுதான் கிச்சனா?' என்று ஊர்வசியை அதிர்ச்சியூட்டுகிறாரே, தியேட்டர் கலகலக்கிறது. இருந்தாலும் சில காட்சிகளில் இவர் இன்னும் நடித்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.

மற்றொரு நாயகியான சங்கீதா பட், இவர் வருகைக்குப் பிறகு கதை வேறு கோணத்தில் நகர்கிறது. இவரது பகுதியை இவர் நிறைவாகவே செய்திருக்கிறார். இவரையும் காதலிக்கலாமே என்று சொல்லும் அளவிற்கு நடிப்பிலும், அழகிலும் நம்மைக் கவர்கிறார். எந்நேரமும் மென்று கொண்டேயிருக்கும் ஒரு சிறுவனை காட்டுகிறார்கள். காமெடிக்காகவாம். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார் தம்பி. எவ்வளவு பிரமாதமான நகைச்சுவை நடிகர்? ஆனால் வீணாக்கியிருக்கிறார்கள் மயில்சாமியை. 'லொள்ளு சபா' ஜீவா இருக்கிறார். ஆனால் நல்லவேளை, ஜெகன் இருப்பதால் சில சீன்கள் கலகல... ஊர்வசி, ராஜேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காதலர்கள் இருவரும் சீன் பை சீன் சண்டை போடுவது நம்பும்படி இல்லை. 2 சீன் காதலுடன் இருப்பது போல காட்டி 3 சீன் ஊடல் என காட்டி இருந்தால் நம்பும்படி இருந்திருக்கும். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு லவ் ஃபீலே வரவில்லை. அதாவது ஜோடிகள் ஒன்று சேர வேண்டும் என்ற பரிதவிப்பு வரணுமே அது வரவேயில்லை.

இடைவேளை ட்விஸ்ட்டுக்காக வைக்கப்பட்ட காதலர்கள் பிரிவுக்காட்சியில் ஏதோ கள்ளக்கடத்தல் கோஷ்டிகள் சட்டவிரோத பார்சலை, பணத்தை எக்ஸேஞ்ச் பண்ணிக்கொள்வது போல காதலர்கள் தாங்கள் அவரவர் தந்த பரிசுப்பொருள்களை மாற்றிக்கொள்வது ரொம்பவே செயற்கை. ஓப்பனிங் சீன் காமெடி டிராக்ல ஜெகனை சிம்பு மாதிரி மிமிக்ரி காமெடி பண்ண வெச்சு சிம்பு காலை வாரியது... படம் முழுக்கவே காதல் காட்சிகளாகட்டும் கதாநாயகிகள் உலாவாகட்டும் கண்ணியமாக, குடும்ப உறவுகளோடு அமர்ந்து பார்க்கும்படி படம் ஆக்கியது... கதையுடன் ஒட்டிய காமெடி டிராக் மற்றும் வசனங்கள்... பாடல் காட்சியில் ஜப்பான் குமாரின் ரசிக்க வைக்கும் அலட்டல்கள்.. என இயக்குநரை பாராட்டும் விஷயங்களும் உண்டு. 'தம்ம விட்டுடு மச்சான்...சரக்க விட்டுடு மச்சான்...' என்று தொடங்கும் பாடலை டி.ராஜேந்தரும், 'ஒரு பார்வையாலே பூத்தது பெண்ணே' என்ற பாடலை சிம்புவும் பாடியுள்ளார்கள். 'டூடா..' பாடலுக்கு டி.ஆரின் குரல் வளத்திற்கு முன்னால் எவ்வளவு ஆட்டம்தான் போடுவது? ஆட்டக்காரர் சீனாவை பெண்டு நிமிர்த்துகிறது அவரது குரலும், அபிஷேக்-லாரன்சின் இசையும். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சி.ஆர்.மாறவர்மனின் கொமிரா கண்கள்தான் இப்படத்திற்கு பெரிய பலம். காட்சிகளை மிக நேர்த்தியாக படம் பிடித்து நம் கண்களுக்கு இதமாகத் தந்திருக்கிறார்.
நன்றி  விடுப்பு

இலங்கைச் செய்திகள்


.
நியாயம் எப்போதாவது கிடைக்குமென்ற எந்தவொரு நம்பிக்கையுமின்றி வன்னி மக்கள்
Thursday, 11 August 2011 

 உலகில் மிகவும் செறிவான இராணுவமயமாக்கப்பட்ட வலயங்களில் ஒன்றில் யுத்தத்திற்குப் பின்னர் தற்போது உயிர்தப்பி வாழ்பவர்கள் நீதியை எப்போதாவது பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக எந்தவொரு நம்பிக்கையுமின்றி இருக்கின்றனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டங்கள் பொதுமக்களுக்கு மிகவும் கொடூரமான கதையைக் கொண்டதாக உள்ளன. பரந்தளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் நாட்டின் வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி கொழும்பு தொடர்ந்தும் நிராகரிப்பையே கடைப்பிடித்து வருகிறது.