இஸ்ரேல் "மிகவும் மகிழ்ச்சியாக" இருக்கிறது - ட்ரம்ப்
ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
ஈரானுடன் நட்புறவான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன – டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல் "மிகவும் மகிழ்ச்சியாக" இருக்கிறது - ட்ரம்ப்
01 Aug, 2026 | 10:01 AM
காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதமேந்திய பலஸ்தீனக் குழுக்களை முழுமையாக ஆயுதமேற்கச் செய்வதற்காக, தன்னுடைய "அமைதி வாரியம்" எட்டிய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் "மிகவும் மகிழ்ச்சியாக" இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இஸ்ரேலுடன் ஒரு புரிதலைக் கொண்டுள்ளோம். இதுகுறித்து இஸ்ரேல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்ரேல் நமக்கு உதவியது. அவர்கள் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர்" என்று ட்ரம்ப் கூறினார்.
"இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்குமா? நிச்சயமாக, அங்கு நிலவுவது மிகவும் சிக்கலான ஒரு சூழல்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹமாஸை ஆயுதம் ஏந்தச் செய்வது சாத்தியம் என்று யாரும் நினைத்துப் பார்க்காத வேளையில், இந்த ஒப்பந்தத்தை ஒரு மிகப்பெரிய திருப்புமுனை என்று ட்ரம்ப் வர்ணித்தார்.
காசாவில் இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான "டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை" செயற்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் ஒரு "முக்கிய மைல்கல்" என்று டிரம்ப் கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த ஒப்பந்தம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
ஆயுதங்களைக் களைவது தொடரும்போதே இஸ்ரேலியப் படைகள் வெளியேறும் என்றும், காசாவைப் பாதுகாக்கப் புதிய பலஸ்தீன பாதுகாப்புப் படையுடன் இணைந்து 'சர்வதேச ஸ்திரத்தன்மைப் படை' செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நன்றி வீரகேசரி
ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
30 Jul, 2026 | 02:17 PM
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு (Darya Shipacheva) 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்டது.
உக்ரைன் நாட்டுக்குப் பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2025இல் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது தர்யா ஷிபச்சேவா தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.
அறிவியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த செய்தியாளரான தர்யா ஷிபச்சேவா, ரஷ்யாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியுள்ளார். ரஷ்யாவில் தொடரும் ஊடகக் கட்டுப்பாடு உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதல், ரஷ்யா தனது நாட்டில் ஊடகத் தணிக்கைச் சட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
'பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு' (CPJ) வெளியிட்ட தகவல்களின்படி, ரஷ்யாவில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்களின் பணி மற்றும் செய்தியளித்தல் தொடர்பான காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஈரானுடன் நட்புறவான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன – டொனால்ட் டிரம்ப்
Published By: Vishnu
28 Jul, 2026 | 07:03 AM
ஈரானுடன் மிகவும் நட்புறவுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நம்பிக்கையான வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்காவுடன் எந்த நேரடிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் கூறுகிறது.
செவ்வாய்க்கிழமை (27) தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த இராணுவ மோதல்களும் நடைபெறவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. நன்றி வீரகேசரி
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார், ஈரானும் தனது தாக்குதல்களை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment