காற்றினிலே தனையிழந்தே கண்டயிடம் பறக்கும்
ஆற்றலுமே இல்லாத அத்துரும்பென் செய்யும்;
கற்றூணோ வலிமையினால் காற்றினையே எதிர்க்கும்
கற்றூணின் வலிமையினைக் காற்றென்ன செய்யும்;
கற்றறியா மக்களையே காலமெலாம் அழுத்தி
நற்பொறுப்பு பெற்றிடுவர் நாட்டினிலே சிலரும்;
கற்றவரும் எதிர்வந்தால் கண்முன்னே தோன்றார்
பெற்றசெல்வம் காத்திடவே பேசாரே அவரும்;
உற்றபுலன் ஐந்துமிங்கே உருக்கிடுமே சிலரை
நற்றறிவு பெற்றோரை நாடாவே இவையும்;
ஏலேலோ! ஐலசா ஏலேல ஏலேலலோ!
No comments:
Post a Comment