மெய்யறிஞர்களைத் துன்பங்கள் நெருங்காது! அன்பு ஜெயா பா வகை: ஏலப் பாட்டு என்ற சிந்து பாடல்.

 

காற்றினிலே தனையிழந்தே கண்டயிடம் பறக்கும்

ஆற்றலுமே இல்லாத அத்துரும்பென் செய்யும்;

கற்றூணோ வலிமையினால் காற்றினையே எதிர்க்கும்

கற்றூணின் வலிமையினைக் காற்றென்ன செய்யும்;

கற்றறியா மக்களையே காலமெலாம் அழுத்தி

நற்பொறுப்பு பெற்றிடுவர் நாட்டினிலே சிலரும்;

கற்றவரும் எதிர்வந்தால் கண்முன்னே தோன்றார்

பெற்றசெல்வம் காத்திடவே பேசாரே அவரும்;

உற்றபுலன் ஐந்துமிங்கே உருக்கிடுமே சிலரை

நற்றறிவு பெற்றோரை நாடாவே இவையும்;

ஏலேலோ! ஐலசா ஏலேல ஏலேலலோ!

No comments: