.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
வள்ளுவப் பெருந்தகையின் இந்த குறளுக்கு ஏற்ப, நம்முடைய இந்த முதல் இணையவழி தொடர்பினை அந்த பகவானுக்கு சமர்பிப்போமாக! எந்த ஒரு நீண்ட பயணமும் நம் கால்கள் எடுத்து வைக்கும் ஒரு அடியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அது போலவே நம்முடைய ஆன்மிகம் குறித்த இந்த கருத்து பரிமாற்றமும் "பகவான்" என்ற இந்த ஒரு சொல்லைக் கொண்டு தொடரட்டும்.
இந்த காலத்தில் பகவான் என்ற சொல்லை மிகவும் தாராளமாக உபயோகிக்கின்றோம். பகவான் என்ற ஒரு சொல்லை சற்று கூர்ந்து கவனித்து ஆராய்ந்தால் அதிலிருந்து பல உன்னத உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம் . சத்தியவான் என்றால் சத்தியத்தைக் கொண்டவன் என்று பொருள். "சத்தியவான்" என்ற இந்த சொல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டது - "சத்தியம்" மற்றும் "வான்". "சத்தியம்" என்றால் உண்மை என்று பொருள். "வான்" என்றல் உருவமுள்ள ஒரு ஆள் என்று பொருள். அதைப்போலவே "தனவான்" என்றால் தனங்களைக் கொண்டவன் என்று பொருள். "வித்யவான்" என்றால் வித்யா அதாவது அறிவினைக் கொண்டவன் என்று பொருள்.
சத்தியவான், தனவான், வித்யவான் ஆக இந்த மூன்று சொற்களுமே இரண்டு வார்த்தைகளைக் கொண்டே அமைந்தது. அது போலவே பகவான் என்ற இந்த சொல்லும் இரண்டு வார்த்தைகளைக் கொண்டது. "பகம்" மற்றும் "வான்" - இதில் பகம் என்றால் செல்வங்கள் என்று பொருள். வான் என்றால் அந்த செல்வங்களைக் கொண்ட ஒரு ஆள் என்று பொருள். இதிலிருந்தே கடவுளுக்கும் உருவம் உள்ளது என்று அறியலாம். மகத்தான செல்வங்களைக் கொண்ட உருவமுடைய அந்த ஒரு ஆள் தான் "பகவான்". அந்த செல்வங்கள் எப்பேற்பட்டவை என்று பார்ப்போம்.
வேத வியாசரின் தந்தையும் மாபெரும் முனிவருமான பராசரர், "பகவான்" என்ற இந்த சொல்லிற்கு வேதங்களில் இருந்து விளக்கம் அளித்திருக்கிறார். "அழகு", "பலம்", "செல்வம்", "புகழ்", "அறிவு", "பற்றில்லாமை" ஆகிய இந்த ஆறு செல்வங்களையும் முழுமையாகவும் எண்ணிலடங்காமலும் ஒருங்கே பெற்ற அந்த ஒருவம் கொண்ட ஒரு ஆள் தான் பகவான். மனிதர்களில் சிலர் அழகுடையவராக இருக்கலாம். சிலர் பலசாலியாக இருக்கலாம். சிலர் செல்வந்தராக இருக்கலாம். சில மேதைகளும் சில பற்றில்லாதவர்களும் கூட இருக்கலாம். மேதையாக இருக்கும் ஒருவனுக்கு அழகு இருக்காது. பலம் கொண்ட ஒருவனுக்கு புகழ் இருக்காது. செல்வம் கொண்ட ஒருவனுக்கோ அறிவு இருக்காது. ஒரு வேளை இந்த ஐந்து செல்வங்களும் ஒருவனுக்கு இருப்பினும் ஆறாவது செல்வமான பற்றில்லாமை இருக்காது. ஆக இந்த ஆறு செல்வங்களும் ஒருங்கே கொண்டு நான் தான் தன்னிகரற்றவன் என்று மனிதரில் யாரும் பறை சாற்றிக்கொள்ள முடியாது. பகவான் ஒருவனுக்கே அந்த கூற்று பொருந்தும்.
இந்த காலத்தில் நான் தான் கடவுள் என்று பல முனிவர்களும், சாமிகளும் கூறிக்கொள்கின்றனர். அவர்கள் கூற்று சரியா தவறா என்று இந்த "பகவான்" என்ற ஒரு சொல்லை வைத்தே அறிந்துகொள்வோமாக!
புனித நூலான பகவத் கீதையில் இருந்து இனி வரும் ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்லோகத்தை ஆராய்ந்து, நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் அதை எப்படி பின்பற்றுவது என்று புரிந்து கொள்வோம். உங்களுடைய கருத்துக்களையும் கேள்விகளையும் என்னுடையஇணைய அஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
என்றும் அன்புடன்,
கனஷியாம் கோவிந்த தாஸ்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010
.
அன்பான தமிழ் முரசு வாசர்களுக்கு எம் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2010ம் ஆண்டு தமிழ்வருசமான விகுர்தி வருசம் 14ம் திகதி புதன் கிழமை காலை அவுஸ்ரேலிய நேரப்படி சரியாக 9 மணிக்கு பிறக்கின்றது.பிறக்கின்ற இந்த விகுர்தி வருடத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக நோய் நொடியின்றி சந்தோசமாக வாழ தமிழ் முரசு பிரார்த்திக்கின்றது.
ஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் எதிர் கட்சித் தலைவர் ரோனி அபேட்
.
எதிர் கட்சித் தலைவர் ரோனி அபேட் லிபரல் கட்சியின் ஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். அவரின் இந்த அறிவிற்பிற்கு கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எதிர் கட்சியின் குடிவரவுத் துறை பேச்சாளர் Scott Morrison, ரோணி அபேட் வெளியிட்டுள்ள குடிவரவுக் கொள்கை தனிப்பட்ட முறையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முடிவு எனவும் இது தொடர்பாக கட்சியில் கலந்து ரையாடப்படவோ அல்லது கட்சியில் முடிவெடுக்கவோ இல்லை எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மல்கம் ரேண்புல் முக்கிய விடயங்களில் கட்சியுடன் கலந்துரையாடாமல் முடிவுகளை மேற்கொண்டமையாலேயே கட்சித் தலைமையை இழந்தார் அதே போன்ற செயல்பாட்டினை ரோனி அபேட்டும் மேற்கொள்கின்றார் என கட்சியில் மற்றுமொரு முக்கியமானவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எதிர் கட்சித் தலைவர் ரோனி அபேட் லிபரல் கட்சியின் ஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். அவரின் இந்த அறிவிற்பிற்கு கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எதிர் கட்சியின் குடிவரவுத் துறை பேச்சாளர் Scott Morrison, ரோணி அபேட் வெளியிட்டுள்ள குடிவரவுக் கொள்கை தனிப்பட்ட முறையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முடிவு எனவும் இது தொடர்பாக கட்சியில் கலந்து ரையாடப்படவோ அல்லது கட்சியில் முடிவெடுக்கவோ இல்லை எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மல்கம் ரேண்புல் முக்கிய விடயங்களில் கட்சியுடன் கலந்துரையாடாமல் முடிவுகளை மேற்கொண்டமையாலேயே கட்சித் தலைமையை இழந்தார் அதே போன்ற செயல்பாட்டினை ரோனி அபேட்டும் மேற்கொள்கின்றார் என கட்சியில் மற்றுமொரு முக்கியமானவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் என்னை கவர்ந்த இனிய இசை நிகழ்வு
.
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
சென்றமாதம் தமிழர்களாகிய நாம் வழமைக்கு மாறான ஒரு இசை நிகழ்ச்சியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐங்கரன் கந்தராஐhவால் நடாத்தப்பட்ட தபேலா நிகழ்ச்சியே அது.
வழமையாக தமிழரது என கர்நாடக இசையையும் மெல்லிசையையும் கேட்டு பழகிய காதுகளுக்கு இந்த கச்சேரி ஒரு புதிய உணர்வை ஊட்டியது. ஆமாம் அன்று நாம் கேட்டது முற்று முழுக்க வட இந்திய இசையான ஹிந்துஸ்தானி இசையே.
எப்படி இருக்குமோ என கேள்விக்குறியுடன் போனவர்களை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். அன்றைய கலைஞர்கள் Kuring-Gai Campusல் அமைந்த Greenhalgh Theatre நிறைந்த ஐனதிரள் கச்சேரியின் நாயகனான ஐங்கரன் கந்தராஜாவின் தனி தபேலா நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. அவருக்கு துணையாக Sandeep Mishra சாரங்கி என்ற நரம்பு வாத்தியத்தை இசைத்தார். இவை எல்லாம் எம்மவருக்கு புதிதுதான்.
இதை உணர்ந்த ஐங்கரன் பார்வையாளருக்காக வாத்தியம் பற்றிய சிறு விளக்கத்தை தந்து எம்மை உசுப்பிவிட்டார். நிமிர்ந்து ஆசனத்தில் அமர்ந்தோம். கச்சேரி சூடு பிடிக்கத் தொடங்கியது. மக்கள் இயற்கையாக இசையிலே லயித்து போயினர். ஐங்கரனோ தான் தனியாக தபேலாவில் வாசிப்பவற்றை மக்கள் இரசிக்கவேண்டும் என்பதற்காக சிறு சம்பவங்களை விளக்கினார். குறிப்பாக மான் ஓடுவது மேலும் காலையிலே தாயார் எழுப்பும்போது புரண்டு படுத்து முனகும் பையன் என தனது வாசிப்பை உருவகப்படுத்தினார். இசையில் இணையாதவரையும் இணையவைக்கமுடியும் யாவரையும் என் இசையால் கவருவேன் என்பது போன்று இருந்தது இந்த வாசிப்பு.
ஐங்கரனுக்கு இணையாக Sarangi வாசித்த கலைஞர் Sandeep Mishra மிக பிரபலமான கலைஞர் Bhimsen Jushi மற்றும் Ustart Vilayat Khan போன்றவருக்கு வாசிப்பர். இவர் ஐங்கரனுடன் இணைந்ததே ஐங்கரனுக்கு மட்டும் பெருமையல்ல தமிழ் சமூகமே இதையிட்டு பெருமைப்படலாம்.
சந்தேகம் இல்லாமல் இசை ரசிகர்களும் விற்பன்னர்களும் Dr ஐங்கரன் கந்தராஜா ஒரு சிறந்த கலைஞராக உருவாகி இருப்பதை பாராட்டினார்கள். ஐங்கரன் சிட்னியிலே Ram Chandra Suman டம் கற்க தொடங்கியவர். தனது ஆர்வத்தில் கலையை மேலும் விருத்தி செய்யும் ஆர்வத்தில் Mumbai சென்று Yogesh Sumsi டம் கற்றார். Yogesh Sumsi இசையுலகில் கோலோச்சும் Zahir Hussain ன் தந்தையான Allah Rakka யின் சிஸ்யராவார். நமது ஐங்கரனும் Zahir Hussain டமும் தபேலா கற்றுள்ளார். சிறந்த உயர்ந்த பாரம்பரியத்தின் வாரிசுதான் ஐங்கரன்.
கலை உலகிலே யாரது சிஸ்யன் யார் என்பதே முக்கியம். குருவின் பரிபூர்ண ஆசியும் அன்பும் அபிமானமும் ஐங்கரனுக்கு உண்டு. ஐங்கரனின் முழுநீள கச்சேரியை கண்டு இரசிப்பதற்கு குருவான Yogesh Sumsi யே மும்பையில் இருந்து வருகை தந்திருந்தார். ஆரம்பகால குருவான Ram Chandra Suman ம் Yogesh Sumsi யும் ஐங்கரனை மனதார வாழ்த்தினார்கள்.
இடைவேளையின்பின் கச்சேரி எதிர்பாராத ஒரு திருப்பத்தை தந்தது. திருமதி கலா றாம்னாத்தின் வயலின் இசைக்கு ஒத்திசையாக தபேலா வாசித்தார் ஐங்கரன். இங்கு ஐங்கரன் தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை நிரூபித்தார். எப்போதுமே ஒத்திசையாக தாளவாத்தியத்தை வாசிக்கும்போது இசையை உணர்ந்து, இசையின் அழகு குறைந்துவிடாது அதை மேலும் மெருகூட்டுவதாக அமையவேண்டும் பக்கவாத்தியம். தனது பங்கை நன்றாகவே உணர்ந்து வாசித்தமை அவரது இசை ஞானத்தையும் ஈடுபாட்டையும் எமக்கு உணர்த்தியது.
வயலின் மேற்கத்திய வாத்தியமாக இருந்தபோதும் கர்நாடாக இசை கலைஞர்கள் மனித குரலுடன் இணைந்து வாசிக்கக்கூடிய அருமையான வாத்தியம் என்பதை உணர்ந்து வயலினை 200 வருடங்களுக்கு மேலாக நமதாக்கி கொண்டனர். ஆனால் இன்றோ மேற்கத்தியவரும் வியக்கும் வண்ணம் கர்நாடக கலைஞர்கள் வயலினை வாசித்து வருகின்றார்கள். புரவலாக கர்நாடக சங்கீத கச்சேரியில் ஒத்திசையாக வாசிக்கப்பட்டபோதும் அதில் தேர்ந்த வித்தகர் வயலினை தனிவாத்திய கச்சேரியாக வாசித்து புகழ்பெற்று வருகிறார்கள். வு T N Krishnan, T N Rajam குன்னைக்குடி வைத்தியநாதன் போன்றோர் பிரபலமானவர்கள். இவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இளம் கலைஞரே கலா றாம்நாத். இவர் தனது வாசிப்பால் யாவரையும் கவர்ந்தார். கச்சேரியின் ஆரம்பத்திலேயே கர்நாடக சங்கீதத்திற்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கு வயலின் புதிய வாத்தியமே. இசையிலே இணைந்த விதூசகி இசை பிரவாகமாக இரசிகர்களை வர்சித்தார். ஐங்கரன் ஸ்ரீபன் கந்தராஜா
சளைக்காமல் அதற்கு ஈடு செய்தார்.
மொத்தத்திலே ஒரு அருமையான கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினோம்.
வசீகர தோற்றமுடைய ஐங்கரன் இன்றைய இளைஞருக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐங்கரன் டாக்டர் மட்டுமல்ல சிறந்த கலைஞனும்கூட. சளைக்காத உழைப்பும் தீராத தாகமும் இருக்குமானால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஐங்கரன் ஒரு எடுத்துக்காட்டு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
சென்றமாதம் தமிழர்களாகிய நாம் வழமைக்கு மாறான ஒரு இசை நிகழ்ச்சியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐங்கரன் கந்தராஐhவால் நடாத்தப்பட்ட தபேலா நிகழ்ச்சியே அது.
வழமையாக தமிழரது என கர்நாடக இசையையும் மெல்லிசையையும் கேட்டு பழகிய காதுகளுக்கு இந்த கச்சேரி ஒரு புதிய உணர்வை ஊட்டியது. ஆமாம் அன்று நாம் கேட்டது முற்று முழுக்க வட இந்திய இசையான ஹிந்துஸ்தானி இசையே.
எப்படி இருக்குமோ என கேள்விக்குறியுடன் போனவர்களை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். அன்றைய கலைஞர்கள் Kuring-Gai Campusல் அமைந்த Greenhalgh Theatre நிறைந்த ஐனதிரள் கச்சேரியின் நாயகனான ஐங்கரன் கந்தராஜாவின் தனி தபேலா நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. அவருக்கு துணையாக Sandeep Mishra சாரங்கி என்ற நரம்பு வாத்தியத்தை இசைத்தார். இவை எல்லாம் எம்மவருக்கு புதிதுதான்.
இதை உணர்ந்த ஐங்கரன் பார்வையாளருக்காக வாத்தியம் பற்றிய சிறு விளக்கத்தை தந்து எம்மை உசுப்பிவிட்டார். நிமிர்ந்து ஆசனத்தில் அமர்ந்தோம். கச்சேரி சூடு பிடிக்கத் தொடங்கியது. மக்கள் இயற்கையாக இசையிலே லயித்து போயினர். ஐங்கரனோ தான் தனியாக தபேலாவில் வாசிப்பவற்றை மக்கள் இரசிக்கவேண்டும் என்பதற்காக சிறு சம்பவங்களை விளக்கினார். குறிப்பாக மான் ஓடுவது மேலும் காலையிலே தாயார் எழுப்பும்போது புரண்டு படுத்து முனகும் பையன் என தனது வாசிப்பை உருவகப்படுத்தினார். இசையில் இணையாதவரையும் இணையவைக்கமுடியும் யாவரையும் என் இசையால் கவருவேன் என்பது போன்று இருந்தது இந்த வாசிப்பு.
ஐங்கரனுக்கு இணையாக Sarangi வாசித்த கலைஞர் Sandeep Mishra மிக பிரபலமான கலைஞர் Bhimsen Jushi மற்றும் Ustart Vilayat Khan போன்றவருக்கு வாசிப்பர். இவர் ஐங்கரனுடன் இணைந்ததே ஐங்கரனுக்கு மட்டும் பெருமையல்ல தமிழ் சமூகமே இதையிட்டு பெருமைப்படலாம்.
சந்தேகம் இல்லாமல் இசை ரசிகர்களும் விற்பன்னர்களும் Dr ஐங்கரன் கந்தராஜா ஒரு சிறந்த கலைஞராக உருவாகி இருப்பதை பாராட்டினார்கள். ஐங்கரன் சிட்னியிலே Ram Chandra Suman டம் கற்க தொடங்கியவர். தனது ஆர்வத்தில் கலையை மேலும் விருத்தி செய்யும் ஆர்வத்தில் Mumbai சென்று Yogesh Sumsi டம் கற்றார். Yogesh Sumsi இசையுலகில் கோலோச்சும் Zahir Hussain ன் தந்தையான Allah Rakka யின் சிஸ்யராவார். நமது ஐங்கரனும் Zahir Hussain டமும் தபேலா கற்றுள்ளார். சிறந்த உயர்ந்த பாரம்பரியத்தின் வாரிசுதான் ஐங்கரன்.
கலை உலகிலே யாரது சிஸ்யன் யார் என்பதே முக்கியம். குருவின் பரிபூர்ண ஆசியும் அன்பும் அபிமானமும் ஐங்கரனுக்கு உண்டு. ஐங்கரனின் முழுநீள கச்சேரியை கண்டு இரசிப்பதற்கு குருவான Yogesh Sumsi யே மும்பையில் இருந்து வருகை தந்திருந்தார். ஆரம்பகால குருவான Ram Chandra Suman ம் Yogesh Sumsi யும் ஐங்கரனை மனதார வாழ்த்தினார்கள்.
இடைவேளையின்பின் கச்சேரி எதிர்பாராத ஒரு திருப்பத்தை தந்தது. திருமதி கலா றாம்னாத்தின் வயலின் இசைக்கு ஒத்திசையாக தபேலா வாசித்தார் ஐங்கரன். இங்கு ஐங்கரன் தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை நிரூபித்தார். எப்போதுமே ஒத்திசையாக தாளவாத்தியத்தை வாசிக்கும்போது இசையை உணர்ந்து, இசையின் அழகு குறைந்துவிடாது அதை மேலும் மெருகூட்டுவதாக அமையவேண்டும் பக்கவாத்தியம். தனது பங்கை நன்றாகவே உணர்ந்து வாசித்தமை அவரது இசை ஞானத்தையும் ஈடுபாட்டையும் எமக்கு உணர்த்தியது.
வயலின் மேற்கத்திய வாத்தியமாக இருந்தபோதும் கர்நாடாக இசை கலைஞர்கள் மனித குரலுடன் இணைந்து வாசிக்கக்கூடிய அருமையான வாத்தியம் என்பதை உணர்ந்து வயலினை 200 வருடங்களுக்கு மேலாக நமதாக்கி கொண்டனர். ஆனால் இன்றோ மேற்கத்தியவரும் வியக்கும் வண்ணம் கர்நாடக கலைஞர்கள் வயலினை வாசித்து வருகின்றார்கள். புரவலாக கர்நாடக சங்கீத கச்சேரியில் ஒத்திசையாக வாசிக்கப்பட்டபோதும் அதில் தேர்ந்த வித்தகர் வயலினை தனிவாத்திய கச்சேரியாக வாசித்து புகழ்பெற்று வருகிறார்கள். வு T N Krishnan, T N Rajam குன்னைக்குடி வைத்தியநாதன் போன்றோர் பிரபலமானவர்கள். இவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இளம் கலைஞரே கலா றாம்நாத். இவர் தனது வாசிப்பால் யாவரையும் கவர்ந்தார். கச்சேரியின் ஆரம்பத்திலேயே கர்நாடக சங்கீதத்திற்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கு வயலின் புதிய வாத்தியமே. இசையிலே இணைந்த விதூசகி இசை பிரவாகமாக இரசிகர்களை வர்சித்தார். ஐங்கரன் ஸ்ரீபன் கந்தராஜா
சளைக்காமல் அதற்கு ஈடு செய்தார்.
மொத்தத்திலே ஒரு அருமையான கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினோம்.
வசீகர தோற்றமுடைய ஐங்கரன் இன்றைய இளைஞருக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐங்கரன் டாக்டர் மட்டுமல்ல சிறந்த கலைஞனும்கூட. சளைக்காத உழைப்பும் தீராத தாகமும் இருக்குமானால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஐங்கரன் ஒரு எடுத்துக்காட்டு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதமான ராகங்கள்
.
ஈழத் தமிழர் கழகம் ஆண்டு தோறும் ஏப்பிரல் மாதத்தில் கலை நிகழ்வு ஒன்றினை நடாத்தி அதன் மூலம் திரட்டப்படும் நிதியை இலங்கையின் வட கிழக்குப் பிரதேசங்களில் வாழும் நம் தமிழ் உறவுகளின் நல்வாழ்வுக்குப் பயன் படுத்தி வருகின்றது. இவ் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதமான ராகங்கள் என்ற இசை நிகழ்சியை நாடாத்த உள்ளது. இந் நிகழ்வில் சகானா நாடகத் தொடரில் பல பாடல்களைப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவரான டாக்டர் நாராயணன், இளம் இளையராஜா எனப் போற்றப்டும் சதீஸ் மற்றும் உள்ளுர் கலைஞரான திருமதி மீனாட்சி வெங்கடேஸ் ஆகியோருடன் மற்றும் பல உள்ளுர் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந் நிகழ்வில் தமிழிசை மெல்லிசை திரை இசை ஆகிய அம்சங்கள் இடம் பெற உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் திரட்டப்படும் நிதி வவுனியாவில் உருவாகிவரும் ஆனந்த நிலைத்துக்கு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். வன்னியில் இடைத் தங்கல் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 முதியவர்களுக்கு புது வாழ்வு அளிக்கும் பாரிய பணியில் ஆனந்த நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும், இம் முதியவர்களுக்கு உதவ உறவினர் எவரும் இல்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர்களுக்கான குடியிருப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு வவுனியா அரச அதிபர் 10 ஏக்கர் அரச நிலத்தினை வழங்கியுள்ளார். இந் நிலத்தில் இவர்கள் குடியேறுவதற்கும், அங்கு வாழ்வதற்கும் அத்தியாவசியமான உள்கட்டுமாணப் பணியினை ஆனந்த இல்லம் அறக் கட்டளை நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நற்பணிக்கு உதவும் நோக்குடன் கழகம் ஏற்கனவே 4 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளதாகவும் இப் பணம் ஆனந்த இல்லம் மேற்கொள்ளும் பாரிய பணிக்குப் போதுமானதல்ல என்றும், எனவே தேவையான பணத்தின் ஒரு பகுதியையேனும் சேகரிக்கும் நோக்குடன் கழகம் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதென்றும், இந்நற்பணியில் ஒஸ்ரேலிய மக்களும் பங்கு கொண்டு வாழ்வாதாரத்துக்கு ஏங்கும் எம் உடன் பிறப்புகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள் ஈழத்தமிழர் கழகத்தினர்.
ஆனந்த இல்லத்தின் கட்டுமானப் பணிகளைக் காட்டும் படங்கள் சில:
ஈழத் தமிழர் கழகம் ஆண்டு தோறும் ஏப்பிரல் மாதத்தில் கலை நிகழ்வு ஒன்றினை நடாத்தி அதன் மூலம் திரட்டப்படும் நிதியை இலங்கையின் வட கிழக்குப் பிரதேசங்களில் வாழும் நம் தமிழ் உறவுகளின் நல்வாழ்வுக்குப் பயன் படுத்தி வருகின்றது. இவ் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதமான ராகங்கள் என்ற இசை நிகழ்சியை நாடாத்த உள்ளது. இந் நிகழ்வில் சகானா நாடகத் தொடரில் பல பாடல்களைப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவரான டாக்டர் நாராயணன், இளம் இளையராஜா எனப் போற்றப்டும் சதீஸ் மற்றும் உள்ளுர் கலைஞரான திருமதி மீனாட்சி வெங்கடேஸ் ஆகியோருடன் மற்றும் பல உள்ளுர் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந் நிகழ்வில் தமிழிசை மெல்லிசை திரை இசை ஆகிய அம்சங்கள் இடம் பெற உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் திரட்டப்படும் நிதி வவுனியாவில் உருவாகிவரும் ஆனந்த நிலைத்துக்கு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். வன்னியில் இடைத் தங்கல் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 முதியவர்களுக்கு புது வாழ்வு அளிக்கும் பாரிய பணியில் ஆனந்த நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும், இம் முதியவர்களுக்கு உதவ உறவினர் எவரும் இல்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர்களுக்கான குடியிருப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு வவுனியா அரச அதிபர் 10 ஏக்கர் அரச நிலத்தினை வழங்கியுள்ளார். இந் நிலத்தில் இவர்கள் குடியேறுவதற்கும், அங்கு வாழ்வதற்கும் அத்தியாவசியமான உள்கட்டுமாணப் பணியினை ஆனந்த இல்லம் அறக் கட்டளை நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நற்பணிக்கு உதவும் நோக்குடன் கழகம் ஏற்கனவே 4 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளதாகவும் இப் பணம் ஆனந்த இல்லம் மேற்கொள்ளும் பாரிய பணிக்குப் போதுமானதல்ல என்றும், எனவே தேவையான பணத்தின் ஒரு பகுதியையேனும் சேகரிக்கும் நோக்குடன் கழகம் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதென்றும், இந்நற்பணியில் ஒஸ்ரேலிய மக்களும் பங்கு கொண்டு வாழ்வாதாரத்துக்கு ஏங்கும் எம் உடன் பிறப்புகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள் ஈழத்தமிழர் கழகத்தினர்.
ஆனந்த இல்லத்தின் கட்டுமானப் பணிகளைக் காட்டும் படங்கள் சில:
நம்மைக் கவர்ந்த நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி
.
மதுரா மகாதேவ்
தாயகத்தில் இருந்து சிட்னி முருகனின் திருவிழாவை சிறப்பிக்க வந்திருந்த தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி சிட்னி முருகன் ஆலயத்தின் கலை கலாச்சார மண்டபத்தில் 04.04.2010 அன்று நடை பெற்றது. நுழைவுச் சீட்டுகள் பத்து வெள்ளிகள் என விற்கப்பட்டன. நிகழ்ச்சி சரியாக ஐந்து மணிக்கு மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் ஆரம்பமானது. . முதலில் கீர்த்தனைகளை வாசித்தார்கள். நாதஸ்வரத்தின் இனிமைக்கு ஏற்றாற்போல் தவில் வித்வான்களாகிய சுதாகரும் நர்மதனும் மிகவும் திறம்பட தாளத்திற்கேற்ப வாசித்தார்கள்.
நாதஸ்வர வித்வான்களான நாகேந்திரமும் பாலமுருகனும் மிகவும் இனிமையாக பல தமிழ்த் திரை இசை பாடல்களை இடைவேளையின் பின்பு வாசித்தார்கள். 1940 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெளியான பட பாடல்களை வாசித்தது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்தது. புதிய பாடல்களில் குத்து பாடல்களையும் அவர்களின் நாதஸ்வரம் விட்டுவைக்கவில்லை. அவற்றில் ஒன்று வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம். இதைவிட வில்லு படத்திலிருந்து டாடி மம்மி வீட்டிலில்லை தடை போட யாருமில்லை, வாடா மாப்பிள்ளே வாழைப்பழ தோப்பிலே என்னும் இளையவர்களை மட்டுமல்லாமல் வயதுவந்தவர்களையும் கவரந்த பாடல்களாகும்.
படிக்காத மேதை திரைப் படத்திலிருந்து பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை, அபூர்வ ராகங்களில்ருந்து அதிசய ராகம் ஆனந்த ராகம், சிவாஜியிலிருந்து ரா ரா, என்னும் பாடல்களை மிகவும் இனிமையாக வாசித்தார்கள். பொம்பே திரை படத்திலிருந்து உயிரே என்னும் பாடலை பாலமுருகன் வாசித்தது அனைவரையும் கொள்ளை கொண்டுவிட்டது. இவர் ஒரு இளம் தலை முறையை சேர்ந்த கலைஞர் இவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் சேர்ந்த பணத்தை வழமைபோல் சைவமன்றத்தினர் அவர்களுக்கே கொடுத்து கௌரவித்தார்கள். இசை நிகழ்ச்சி இரவு ஒன்பது நாற்பந்தைந்திற்கு நிறைவு பெற்றது. எமது தாய் நாட்டிலிருந்தும் கனடாவில் இருந்தும் வருகை தந்து எங்களை நாதஸ்வர தவில் இசையில் நனைய செய்த இந்த நால்வரும் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல சிட்னி முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும். ஒரு சிறந்த நிகழ்சியை சிறந்த முறையில் நடாத்தி முடித்த சைவமன்றத்தினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
மதுரா மகாதேவ்
தாயகத்தில் இருந்து சிட்னி முருகனின் திருவிழாவை சிறப்பிக்க வந்திருந்த தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி சிட்னி முருகன் ஆலயத்தின் கலை கலாச்சார மண்டபத்தில் 04.04.2010 அன்று நடை பெற்றது. நுழைவுச் சீட்டுகள் பத்து வெள்ளிகள் என விற்கப்பட்டன. நிகழ்ச்சி சரியாக ஐந்து மணிக்கு மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் ஆரம்பமானது. . முதலில் கீர்த்தனைகளை வாசித்தார்கள். நாதஸ்வரத்தின் இனிமைக்கு ஏற்றாற்போல் தவில் வித்வான்களாகிய சுதாகரும் நர்மதனும் மிகவும் திறம்பட தாளத்திற்கேற்ப வாசித்தார்கள்.
நாதஸ்வர வித்வான்களான நாகேந்திரமும் பாலமுருகனும் மிகவும் இனிமையாக பல தமிழ்த் திரை இசை பாடல்களை இடைவேளையின் பின்பு வாசித்தார்கள். 1940 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெளியான பட பாடல்களை வாசித்தது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்தது. புதிய பாடல்களில் குத்து பாடல்களையும் அவர்களின் நாதஸ்வரம் விட்டுவைக்கவில்லை. அவற்றில் ஒன்று வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம். இதைவிட வில்லு படத்திலிருந்து டாடி மம்மி வீட்டிலில்லை தடை போட யாருமில்லை, வாடா மாப்பிள்ளே வாழைப்பழ தோப்பிலே என்னும் இளையவர்களை மட்டுமல்லாமல் வயதுவந்தவர்களையும் கவரந்த பாடல்களாகும்.
படிக்காத மேதை திரைப் படத்திலிருந்து பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை, அபூர்வ ராகங்களில்ருந்து அதிசய ராகம் ஆனந்த ராகம், சிவாஜியிலிருந்து ரா ரா, என்னும் பாடல்களை மிகவும் இனிமையாக வாசித்தார்கள். பொம்பே திரை படத்திலிருந்து உயிரே என்னும் பாடலை பாலமுருகன் வாசித்தது அனைவரையும் கொள்ளை கொண்டுவிட்டது. இவர் ஒரு இளம் தலை முறையை சேர்ந்த கலைஞர் இவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் சேர்ந்த பணத்தை வழமைபோல் சைவமன்றத்தினர் அவர்களுக்கே கொடுத்து கௌரவித்தார்கள். இசை நிகழ்ச்சி இரவு ஒன்பது நாற்பந்தைந்திற்கு நிறைவு பெற்றது. எமது தாய் நாட்டிலிருந்தும் கனடாவில் இருந்தும் வருகை தந்து எங்களை நாதஸ்வர தவில் இசையில் நனைய செய்த இந்த நால்வரும் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல சிட்னி முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும். ஒரு சிறந்த நிகழ்சியை சிறந்த முறையில் நடாத்தி முடித்த சைவமன்றத்தினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
துர்க்கா தேவி தேவஸ்தான சமய அறிவுப்போட்டி 2010
துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2010
இப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 18ம் திகதி சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் பிரிவுக்கு மட்டும்), சமய அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்களும் வழங்கப்படும்)
Labels:
THURKA
அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் இசை வேள்வி 2010
.
எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை
.
- -நடராஜா முரளிதரன் -
- -நடராஜா முரளிதரன் -
எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை
அந்த அவாவினை
என் நினைவின் இடுக்கிலிருந்து
பிடுங்கியெறிவதையே
என் எதிரிகளும்
என்னவர்களும்
இடைவிடாது புரியும்
தொழிலாகக் கொண்டுள்ளார்கள்
எனது கனவுகளின் போதே
சாத்தியமாகியுள்ள
அந்த நினைவுப்படலத்தை
எனது அன்புக்குரியவளே
நீயும் சிதைத்து விடாதே
மூடுண்ட பனியில்
அமிழ்ந்து போய்
சுவாசம் இழந்துபோய்
நான் தவிப்பதுவாய்
நேற்றும் ஓர் கனாக் கண்டேன்
கோடை தெறித்த வெய்யிலில்
கருகும் உயிரினத்துக்கான
உஷ்ணவெளியில்
பிறந்த நான்
கனவுகளில்
உயிர் பிழைப்பதாய்
நீ நம்புவாய்
ஆனால்
எனது மண்ணிலிருந்து
நான் இடம்பெயர்க்கப்பட்டபோது
எனது மண்ணின் சில துணிக்கைகளும்
என்னோடு ஒட்டிக்கொண்டு
விலக மறுத்து
சகவாசம் புரிவதை
யாருக்கு நான் உணர்த்துவேன்
##### பெண் ####
.
xxxxxx சௌந்தரி xxxxxx
xxxxxx சௌந்தரி xxxxxx
பெண் என்பது அவளது பெயர்
அவள் ஒரு இனம்
அவளுக்கு பலகோடி முகம்
அவளது உடலும் உள்ளமும் தனித்தனியாக
தவணைமுறையில் தாக்கப்படும்
பிறக்கமுதல் சிசுக்கொலை
பிறர் இறக்கும்போது உடன்கட்டை
இடையில் கற்பழிப்புஇ வன்முறை
உள்ளச்சுமைகளின் ஓயாதவலி
இவை பட்டியலிட்டு மாளாது
மெல்ல மெல்ல தடைகள் தாண்டி
முட்டிமோதி ஓட்டை உடைத்து
வெளியேவந்து தடம் பதித்தால்
எழுதப்பட்ட சட்டங்கள் பாதுகாக்காது
எழுதப்படாத விதிகளால் ஆளப்பட்டாள்
தனிமைச் சிறைக்குள் அவஸ்தைப்பட்டாள்
ஆண்டாண்டு காலமாய்
தொடர்கின்ற பெண்ணின்கதையிது
ஊடகங்களின் குறியீடு பெண்
சாமி தொடங்கி சாமானியன் வரை
தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் பெண்
கல்லோ புல்லோ கட்டிக்கொண்டு
அழுகின்ற பேதை பெண்
ஆணும் பெண்ணும் வேறுபட்ட இனம்
இரு வேறுபாடு கொண்ட மனம்
பெண்மை என்பது வெறும் நளினமல்ல
அவளிடம் கம்பீரம் உண்டு
நேர்மையுண்டு வீரமுண்டு
ஆண்மை என்பது வெறும் ஆதிக்கமல்ல
அவனிடம் கோழையுண்டு
மூடருண்டு முரடனுண்டு
பெண்ணியம் என்பது வீறாப்பல்ல விவேகம்
பெண்களின் மொழி
உரிமைக்கான ஓர் குரல்
பெண்களின் கருத்து
கைதட்டலுக்கு மட்டுமல்ல
கண்களைத் திறப்பதற்கே!
விபத்துக்குள்ளாகும் வாகனங்களை மீள் பதிவு செய்தல் ஒளிக்கப்படும்
.
நியூ சவுத்வேல்சில் விபத்துக்கள்ளாகும் வாகனங்களை காப்புறுதி ஸ்தாபனங்கள் பாவனைக்கு உகந்தவையல்ல என்று பதிவளிக்கப்பட்ட வாகனங்களை குறைந்த விலையில் வாங்கி மீழவும் பதிவு செய்யும் முறையை இனிமேல் இல்லாது ஒழிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பதிவளிக்கப்பட்ட வானங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டு தோறும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 36 ஆறாயிரம் வாகனங்கள் பதிவளிக்கப்படுகின்றன எனவும் அவற்றில் சராசரி 14 ஆயிரம் வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்பட்டு வீதிக்கு வருகின்றது எனத் தரவுகள் காட்டுகின்றன. போக்குவரத்து அமைச்சர் David Campbell இம் முறை ஒழிக்கப்படுவது பழுது பார்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களைப் பெற வாகனங்கள் கழவாடப்படுவதைக் குறைப்பதுடன் பாதுகாப்பற்ற வாகனங்கள் ஓட்டப்படுவதையும் அதனால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கவும் வகை செய்யும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நியூ சவுத்வேல்சில் விபத்துக்கள்ளாகும் வாகனங்களை காப்புறுதி ஸ்தாபனங்கள் பாவனைக்கு உகந்தவையல்ல என்று பதிவளிக்கப்பட்ட வாகனங்களை குறைந்த விலையில் வாங்கி மீழவும் பதிவு செய்யும் முறையை இனிமேல் இல்லாது ஒழிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பதிவளிக்கப்பட்ட வானங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டு தோறும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 36 ஆறாயிரம் வாகனங்கள் பதிவளிக்கப்படுகின்றன எனவும் அவற்றில் சராசரி 14 ஆயிரம் வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்பட்டு வீதிக்கு வருகின்றது எனத் தரவுகள் காட்டுகின்றன. போக்குவரத்து அமைச்சர் David Campbell இம் முறை ஒழிக்கப்படுவது பழுது பார்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களைப் பெற வாகனங்கள் கழவாடப்படுவதைக் குறைப்பதுடன் பாதுகாப்பற்ற வாகனங்கள் ஓட்டப்படுவதையும் அதனால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கவும் வகை செய்யும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று தமிழர்களுக்கு விடுதலை
.
விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் மார்ச் மாதம் 31ம் திகதி விடுவித்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பணம் சேகரித்த குற்றத்திற்காக 2007ம் ஆண்டு இந்த மூவரும் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் பயங்கரவாதக் குழுவிற்கு பணம் அனுப்பியதற்கான குறைந்த குற்றத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து 31ம் திகதி மார்ச் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கின் முடிவைப் பார்ப்பதற்காக வந்திருந்த பல ஆதரவாளர்கள் 1000 டொலர்கள் நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முடிவைக் கேட்டதும் அவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
சிட்னியில் வசித்து வருபவரான ஆறுமுகம் ராஜீவன், 44, மெல்மேனில் வசித்து வருபவர்களான ஆருரன் விநாயகமூர்த்தி 35, மற்றும் சிவாயன் யாதவன் 39 ஆகியோர் ஈழப் புலிகளுக்கு பணம் அனுப்பிய ஒரே குற்றத்திற்காக ஒப்புக்கொண்டார்கள்
இந்த மூவரும் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களிடம் பணம் சேகரித்து இலங்கையில் தனிநாடு கேட்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பியிருந்தார்கள் என நீதவான் Paul Coghlan கூறினார். இந்த மூவரும் நல்ல நோக்கத்திற்காக தமிழர்களுக்கு உதவி புரிந்து இருந்தாலும் இவர்களின் பொறுப்பற்ற செயலால் இந்த நிதி துர்ப்பிரயோசனம் செய்யப்பட்டிருக்கலாம் என அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்த மூவரும் தமிழ்ப் புலிகள் பயங்கரவாதக் குழு என சில நாடுகளால் தீர்மானிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டதைத் தெரிந்தவர்கள் எனவும் அவுஸ்திரேலியாவிலும் இப்படி தடை செய்யப்படுவதற்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுத்தவர்கள் எனவும் நீதவான் Paul Coghlan கூறினார்.
Paul Coghlan விநாயமூர்த்தியின் இரண்டாவது குற்றமாகிய $97,000 பெறுமதியான மின்சார உபகரணங்களை தமிழ்ப் புலிகளுக்கு அனுப்பியது தனக்கு வேதனையை தந்தது எனவும் கூறினார்.
நீதவான் Paul Coghlan விநாயமூர்த்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து நாலுவருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார். அவர் யாதவனுக்கும் ராஜிவனுக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து மூன்று வருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார்.
'சிறிலங்காவில் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு உதவவேண்டும் என்ற பேரவாவினால் நீங்கள் ஒவ்வொருவரும் உந்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்' என அவர் தொடர்ந்தார்.
'உங்களது இலக்கு மனிதாபிமான அடிப்படையில் மாத்திரமே அமைந்ததென நான் கூறுவதற்கு இன்னமும் நான் விரும்பவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவவேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் செயற்பாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.'
சிறிலங்காவில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியிலேயே இவர்கள் இந்தக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது எனச் சுட்டிக்காட்டிய நீதியரசர் ஹோல்சன் இந்தக் காலப்பகுதியில் நாட்டினது வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடைமுறை நிழல் அரசொன்றை நிருவகித்து வந்தார்கள் எனக் குறிப்பிட்டார்.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிக்கென அனுப்பப்பட்ட நிதி தவறாக பயன் படுத்தப்பட்டதாக எந்தத் தகவலுமில்லை என்பதை அவர் அவதானத்துடன் குறிப்பிட்டார்.
நீதியரசர் ஹோல்சன் ஒரு மணி நேரமாக இந்த வழக்கின் தீர்ப்பினை வாசித்தார்.
விடுதலைப் புலிகள் தொடர்பான சர்தேக கருத்து இவர்களுக்குத் தெரிந்திருக்காமல் இருந்திருக்காது என முடிவெடுத்த நீதியரசர் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்ற விருப்பத்தினால் இவர்கள் தூண்டப்பட்டதாகத் தெரியவில்லை எனக் கடைசியில் கூறினார்.
விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் மார்ச் மாதம் 31ம் திகதி விடுவித்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பணம் சேகரித்த குற்றத்திற்காக 2007ம் ஆண்டு இந்த மூவரும் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் பயங்கரவாதக் குழுவிற்கு பணம் அனுப்பியதற்கான குறைந்த குற்றத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து 31ம் திகதி மார்ச் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கின் முடிவைப் பார்ப்பதற்காக வந்திருந்த பல ஆதரவாளர்கள் 1000 டொலர்கள் நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முடிவைக் கேட்டதும் அவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
சிட்னியில் வசித்து வருபவரான ஆறுமுகம் ராஜீவன், 44, மெல்மேனில் வசித்து வருபவர்களான ஆருரன் விநாயகமூர்த்தி 35, மற்றும் சிவாயன் யாதவன் 39 ஆகியோர் ஈழப் புலிகளுக்கு பணம் அனுப்பிய ஒரே குற்றத்திற்காக ஒப்புக்கொண்டார்கள்
இந்த மூவரும் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களிடம் பணம் சேகரித்து இலங்கையில் தனிநாடு கேட்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பியிருந்தார்கள் என நீதவான் Paul Coghlan கூறினார். இந்த மூவரும் நல்ல நோக்கத்திற்காக தமிழர்களுக்கு உதவி புரிந்து இருந்தாலும் இவர்களின் பொறுப்பற்ற செயலால் இந்த நிதி துர்ப்பிரயோசனம் செய்யப்பட்டிருக்கலாம் என அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்த மூவரும் தமிழ்ப் புலிகள் பயங்கரவாதக் குழு என சில நாடுகளால் தீர்மானிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டதைத் தெரிந்தவர்கள் எனவும் அவுஸ்திரேலியாவிலும் இப்படி தடை செய்யப்படுவதற்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுத்தவர்கள் எனவும் நீதவான் Paul Coghlan கூறினார்.
Paul Coghlan விநாயமூர்த்தியின் இரண்டாவது குற்றமாகிய $97,000 பெறுமதியான மின்சார உபகரணங்களை தமிழ்ப் புலிகளுக்கு அனுப்பியது தனக்கு வேதனையை தந்தது எனவும் கூறினார்.
நீதவான் Paul Coghlan விநாயமூர்த்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து நாலுவருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார். அவர் யாதவனுக்கும் ராஜிவனுக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து மூன்று வருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார்.
'சிறிலங்காவில் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு உதவவேண்டும் என்ற பேரவாவினால் நீங்கள் ஒவ்வொருவரும் உந்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்' என அவர் தொடர்ந்தார்.
'உங்களது இலக்கு மனிதாபிமான அடிப்படையில் மாத்திரமே அமைந்ததென நான் கூறுவதற்கு இன்னமும் நான் விரும்பவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவவேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் செயற்பாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.'
சிறிலங்காவில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியிலேயே இவர்கள் இந்தக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது எனச் சுட்டிக்காட்டிய நீதியரசர் ஹோல்சன் இந்தக் காலப்பகுதியில் நாட்டினது வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடைமுறை நிழல் அரசொன்றை நிருவகித்து வந்தார்கள் எனக் குறிப்பிட்டார்.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிக்கென அனுப்பப்பட்ட நிதி தவறாக பயன் படுத்தப்பட்டதாக எந்தத் தகவலுமில்லை என்பதை அவர் அவதானத்துடன் குறிப்பிட்டார்.
நீதியரசர் ஹோல்சன் ஒரு மணி நேரமாக இந்த வழக்கின் தீர்ப்பினை வாசித்தார்.
விடுதலைப் புலிகள் தொடர்பான சர்தேக கருத்து இவர்களுக்குத் தெரிந்திருக்காமல் இருந்திருக்காது என முடிவெடுத்த நீதியரசர் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்ற விருப்பத்தினால் இவர்கள் தூண்டப்பட்டதாகத் தெரியவில்லை எனக் கடைசியில் கூறினார்.
காத்திருப்போம்
செ.பாஸ்கரன்
முற்றத்து மணற்பரப்பில் விரித்தபாயும்
வேப்பமர நிழலில் கயிற்றுக் கட்டிலுமாய்
வீற்றிருந்த என் வீடும் வளவும்
தூசி படிந்து தூர்ந்து கிடக்கிறது
வளையோசையும் வாய்ப்பாட்டு ராகமுமாய்
வலம் வந்த என் அம்மை
கழுவித்துடைத்து அழகுக்கோலமிட்ட அரண்மனை
தூண்களும் கல்லுமாய் அடையாளம் தருகிறது
பிரசவத்துக்காய் காத்துக் கிடந்த
முப்பது வருடங்களின் முற்றுப்பெறாத கருக்கலைப்பு
மக்கள் மௌனித்திருந்த நகரத் தெருக்களும்;
மரணித்திருந்த மானிட நேயமும்
ஊட்டச்சத்தின்றி உலாவிவரும் பிள்ளைபோல்
எழுந்து நிற்க எத்தணிப்புச் செய்கிறது
சாவிலிருந்து தப்பியவர்களில் சவாரிவிட காத்திருக்கிறது
சாதிப்பேயும் பிரதேச வேறுபாடும்
காதல் வரி பாடி கழித்திருந்த காலம்
மீண்டும் துளிர்விட்டு பசுமைதருமென்று
காத்திருக்கும் பெரிசுகளும்
அம்மன் கோயில் தேராக அசைந்துவரும் காதலியின்
விழிபார்த்து காத்திருக்கும் இளசுகளும்
கேலிச் சிரிப்பும் கெக்களமும் கொட்டி
சேர்ந்து மகிழ்திருக்க
நாம் நடந்த நகரம் மீண்டும்
திரும்பும் என காத்திருப்போம்
முற்றத்து மணற்பரப்பில் விரித்தபாயும்
வேப்பமர நிழலில் கயிற்றுக் கட்டிலுமாய்
வீற்றிருந்த என் வீடும் வளவும்
தூசி படிந்து தூர்ந்து கிடக்கிறது
வளையோசையும் வாய்ப்பாட்டு ராகமுமாய்
வலம் வந்த என் அம்மை
கழுவித்துடைத்து அழகுக்கோலமிட்ட அரண்மனை
தூண்களும் கல்லுமாய் அடையாளம் தருகிறது
பிரசவத்துக்காய் காத்துக் கிடந்த
முப்பது வருடங்களின் முற்றுப்பெறாத கருக்கலைப்பு
மக்கள் மௌனித்திருந்த நகரத் தெருக்களும்;
மரணித்திருந்த மானிட நேயமும்
ஊட்டச்சத்தின்றி உலாவிவரும் பிள்ளைபோல்
எழுந்து நிற்க எத்தணிப்புச் செய்கிறது
சாவிலிருந்து தப்பியவர்களில் சவாரிவிட காத்திருக்கிறது
சாதிப்பேயும் பிரதேச வேறுபாடும்
காதல் வரி பாடி கழித்திருந்த காலம்
மீண்டும் துளிர்விட்டு பசுமைதருமென்று
காத்திருக்கும் பெரிசுகளும்
அம்மன் கோயில் தேராக அசைந்துவரும் காதலியின்
விழிபார்த்து காத்திருக்கும் இளசுகளும்
கேலிச் சிரிப்பும் கெக்களமும் கொட்டி
சேர்ந்து மகிழ்திருக்க
நாம் நடந்த நகரம் மீண்டும்
திரும்பும் என காத்திருப்போம்
பறக்கும் கார் 2011 இல் பறக்கும்.
வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.
தமிழ்க் கங்கை செவாலியர் அமரர் புலவர் அமுது நினைவஞ்சலி
.
தமிழ்க் கங்கை செவாலியர் அமரர் புலவர் அமுது நினைவஞ்சலி
தொண்நூற்றிரண்டு வயதிலும் இளமைத் துடிப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிய இளவாலை அமுது என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அவர்கள் அண்மையில் இலண்டனில் அமரத்துவம் எய்தியமை எல்லோருக்கும் தெரிந்ததே, புலவர்மணி இளமுருகனார். பண்டிதமணி கணபதிப்பிள்ளை. வித்துவான் வேந்தனார். பேராசிரியர் செல்வநாயகம் போன்றோரிடம் தமிழை ஐயந்திரிபறக் கற்றவர் புலவர் அமுது, "கவிதைச் சிலைக்கு மரபுக் கவிதைகளால் ஆடையணியவேண்டும், மானுடத்தின் மனச்சாட்சியைக்கொண்டு அதன் கண்களைத் திறக்கவேண்டும்" என்ற அவரின் கனவை நனவாக்கி இறையடி சேர்ந்த அன்னாருக்கு ஓர் கவிதை அஞ்சலி -
காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே,
தேமதுரஞ் சொட்டச்சொட்டக் கவிதை யாலே
செல்வா! எனை வாழ்த்திநின்றாய்! செந்தமிழ்ப் பூந்
தாமரைகள் பூத்திடவே தடாகம் அமைத்துத்
தனித்தமிழை வளர்த்துநின்றாய்! தகைமை பெற்றாய்!
நாமகிழ்ந்து தினம்போற்றச் "செவாலியர்" விருதை
நற்குணத்தோய் பெற்றனையே! பற்ற றுத்துக்
காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே!
சீலம்மிகு பெருவாழ்விற் றிழைத்துப் பெற்ற
செல்வங்கள் ஐயிரண்டுஞ் சிறக்கச் செய்தாய்!
காலத்தாற் பட்டழியும் தமிழ் மலரக்
கடமையென மரபுதனை ஓம்பிக் காத்தாய்!
கோலச்செங் கதிரோன்போற் கவிக் கிரணம்
குவலயத்திற் பாய்ச்சித்"தமிழ்க் கங்கை" யானாய்!
பாலனவன் இராச்சியத்திற் பணி இயற்றப்
பக்குவம்பெற் றேகினையோட? சாந்தி! சாந்தி!!
நடைக்கெனவே உனக்கென்றோர் பாணி தேர்ந்து
நறுந்தேனும் சர்க்கரையும் கலந்தாற் போலப்
படைத்தளித்த செந்தமிழ்ப்பா மரபுக் கவிகள்
பகர்ந்திடுமே உன்புகழைப் பாரில் அன்றோ?
"கிடைத்திடுமோ அமுதேயுன் தீஞ்சொல் அமுது?
கீற்றுமதி போலெங்கு உற்றாய்"என் றேங்க
அடைக்கலமாய் இயேசுபிரான் பாதார விந்தம்
அணைத்துய்த்த அடைக்கல முத்தே சாந்தி!
ஓம் சாந்தி!
பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி
சிட்னி – அவுத்திரேலியா,
தமிழ்க் கங்கை செவாலியர் அமரர் புலவர் அமுது நினைவஞ்சலி
தொண்நூற்றிரண்டு வயதிலும் இளமைத் துடிப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிய இளவாலை அமுது என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அவர்கள் அண்மையில் இலண்டனில் அமரத்துவம் எய்தியமை எல்லோருக்கும் தெரிந்ததே, புலவர்மணி இளமுருகனார். பண்டிதமணி கணபதிப்பிள்ளை. வித்துவான் வேந்தனார். பேராசிரியர் செல்வநாயகம் போன்றோரிடம் தமிழை ஐயந்திரிபறக் கற்றவர் புலவர் அமுது, "கவிதைச் சிலைக்கு மரபுக் கவிதைகளால் ஆடையணியவேண்டும், மானுடத்தின் மனச்சாட்சியைக்கொண்டு அதன் கண்களைத் திறக்கவேண்டும்" என்ற அவரின் கனவை நனவாக்கி இறையடி சேர்ந்த அன்னாருக்கு ஓர் கவிதை அஞ்சலி -
காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே,
தேமதுரஞ் சொட்டச்சொட்டக் கவிதை யாலே
செல்வா! எனை வாழ்த்திநின்றாய்! செந்தமிழ்ப் பூந்
தாமரைகள் பூத்திடவே தடாகம் அமைத்துத்
தனித்தமிழை வளர்த்துநின்றாய்! தகைமை பெற்றாய்!
நாமகிழ்ந்து தினம்போற்றச் "செவாலியர்" விருதை
நற்குணத்தோய் பெற்றனையே! பற்ற றுத்துக்
காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே!
சீலம்மிகு பெருவாழ்விற் றிழைத்துப் பெற்ற
செல்வங்கள் ஐயிரண்டுஞ் சிறக்கச் செய்தாய்!
காலத்தாற் பட்டழியும் தமிழ் மலரக்
கடமையென மரபுதனை ஓம்பிக் காத்தாய்!
கோலச்செங் கதிரோன்போற் கவிக் கிரணம்
குவலயத்திற் பாய்ச்சித்"தமிழ்க் கங்கை" யானாய்!
பாலனவன் இராச்சியத்திற் பணி இயற்றப்
பக்குவம்பெற் றேகினையோட? சாந்தி! சாந்தி!!
நடைக்கெனவே உனக்கென்றோர் பாணி தேர்ந்து
நறுந்தேனும் சர்க்கரையும் கலந்தாற் போலப்
படைத்தளித்த செந்தமிழ்ப்பா மரபுக் கவிகள்
பகர்ந்திடுமே உன்புகழைப் பாரில் அன்றோ?
"கிடைத்திடுமோ அமுதேயுன் தீஞ்சொல் அமுது?
கீற்றுமதி போலெங்கு உற்றாய்"என் றேங்க
அடைக்கலமாய் இயேசுபிரான் பாதார விந்தம்
அணைத்துய்த்த அடைக்கல முத்தே சாந்தி!
ஓம் சாந்தி!
பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி
சிட்னி – அவுத்திரேலியா,
ANJANEYAM
RASANA School of Aesthetic Arts வழங்கும் ஆஞ்சநேயம் நடன நிகழ்வு சிட்னியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ம் திகதி மாலை 6.30 மணிக்கு Bankstown Townhall மண்டபத்தில் இடம் பெற இருக்கின்றது.
Subscribe to:
Posts (Atom)



.jpg)











