.
தி. ஞானசேகரன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் சிறந்த சிந்தனையாளர் மற்றும் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். குறிப்பாக “ஞானம்” எனப்படும் சஞ்சிகையின் மூலம் வாழ்க்கை நெறிகளை பொதுமக்களிடம் எளிமையாக கொண்டு சென்றவர்.
சிரித்தமுகம், அமைதியான ஆனால் ஆழமான பேச்சு. காணுமிடமெல்லாம் அன்பாக பேசிப்பழகும் ஒரு மனிதர், மறைந்து விட்டார் என்றதும் அந்த சிரிப்பும் பார்வையும் தான் கண்முன்னே வந்து நின்றது.
“ஞானம்” சஞ்சிகை என்பது சாதாரண இதழாக இல்லாமல், மனிதன் தனது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும் சிந்தனை மேடையாக வழங்கியவர். ஈழத்து எழுத்தாளர்களை மட்டுமல்லாது புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களையும் எழுத தூண்டி அவர்களின் எழுத்துக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தவர் .
இவரது எழுத்துக்கள் அவர் வாழ்ந்த இடங்களையும் அனுபவத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இலகுவான எழுத்துக்களாகும் . எமது போராட்டத்தை சிறுகதையாக கொடுத்தபோது தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தி போர் செய்ய வேண்டி வந்தது என்பதை "அல்சேசன் நாயும் பூனைக்குட்டியும்" என்ற சிறுகதை மூலம் ஒரு பெரிய அரசியலை சுவையாகவும் மிக ஆழமாகவும் சொல்லி சென்றவர்.
| ஞானம் சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடு சிட்னி 2017 |
இவரது எழுத்துகள் எளிமையான தமிழில் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் ஆழமான அர்த்தங்களை கொண்டிருக்கும்,
இவரோடு பழககிடைத்த சந்தர்ப்பங்களை பெறுமதி மிக்கதாக கருதுகிறேன். அவரின் மறைவு மனதில் மெல்லிய சுமையாக கனக்கின்றது . அவரின் பிள்ளைகளுக்கும் அன்பு மனைவிக்கும் தமிழ்முரசு அவுஸ்திரேலியாவின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
| ஞானம் சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடு சிட்னி 2017 |

No comments:
Post a Comment