பெருமனது தருவாயே பெருமாளே !




    
















மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



கொடியவினை எனையகல
குடிமுழுது விடிவுபெற
அடிதொழுது பரவிவிட - அருளாயே

மனமுருகி தினமுமுனை
தொழுதழுது பாடிவிட
அருகிலெனை அணையவிடு - பெருமாளே

உலகிடையே நாளுமுனை
ஒருபொழுது மறவாத
பெருமனது தருவாயே - பெருமாளே

மனதிலுறை குறையகல
மனநிறைவு எனையடைய
தினமுமெனை காவாவாயோ - பெருமாளே !

( குற்றுப் போடாமல் பதங்கள்வர அமைந்த திருப்புகழ் )



No comments: