ஒளியின் வழியில் முன்னேறுதல்

 ஒளி இருப்பது மட்டும் போதுமானதல்ல. அந்த ஒளியின் வழிகாட்டுதலுடன் நாம் முன்னேற முயற்சிக்க வேண்டும். இந்த ஒளி நமக்குக் கிடைத்திருந்தும், அது காட்டும் பாதையில் நாம் செல்லாவிட்டால், நாம் குருடர்களைப் போலவே அறியாமையில் இருப்போம்.

ஒருமுறை, பகவான் கிருஷ்ணர் குருட்டுப் பக்தரான சூர்தாஸின் முன் தோன்றி, “சூர்தாஸ், நீ உலகத்தைப் பார்க்க விரும்பினால், இந்தக் கணமே உனக்குப் பார்வையை மீட்டுத் தருகிறேன்” என்று கூறினார்.

அதற்கு மகாபக்தரான சூர்தாஸ் பதிலளித்தார்:

“கண்கள் இருந்தும், உமது மங்களகரமான அழகிய திருவுருவத்தைப் பார்க்காதவர்கள் உண்மையில் குருடர்களே. காதுகள் இருந்தும், உமது இனிமையான தெய்வீக கீதத்தைச் செவிமடுக்காதவர்கள் செவிடர்களே. தெய்வத்தை அடையும் ஆற்றல் கைகளில் இருந்தும், அவர்கள் சம்சாரமாகிய உலக வாழ்க்கையின் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

நீர் அவர்களது இதயங்களில் வாசம் செய்தாலும், உலகின் பொய்யான, கவர்ச்சிகரமான, நிலையற்ற ஈர்ப்புகளால் அவர்கள் மயக்கமடைகிறார்கள். பெரிய கண்கள் இருந்தும், அவர்கள் உம்மைக் காண முடியவில்லை. ஆகையால், அத்தகைய இதயங்களும், கண்களும், காதுகளும் எனக்குத் தேவையில்லை.

ஆண்டவரே! உமது கீதத்தைச் செவிமடுக்கக் கூடிய காதுகளையும், உமது அழகிய திருவுருவத்தைத் தரிசிக்கக் கூடிய கண்களையும், நீர் உறைவதற்கான இதயத்தையும் எனக்குத் தாரும்” என்று சூர்தாஸ் பணிவுடன் வேண்டிக்கொண்டார்.

No comments: