நல்லொழுக்கமும் கடமையும் – மனித வாழ்வின் அடித்தளம்

 ஒரு கூர்மையான கத்தியைத் தீட்டுவதற்கு அரைக்கல் பயன்படுத்தப்படுகிறது; கல்லை மென்மையாக்குவதற்காக அல்ல. அதுபோல, மனிதனின் இயல்பை மேம்படுத்த நல்ல குணங்கள் வளர்க்கப்பட வேண்டும். உடலின் ஒவ்வொரு உறுப்பும் அதன் முழுமையான நலனுக்குத் தேவையானதுபோல, நல்ல குணங்களும் வாழ்க்கையின் முழுமையான நலனுக்குத் தேவையானவை.

மனிதப் பிறவி உயர்ந்த வாழ்க்கையை நடத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும். நல்ல குணங்களே நல்ல வாழ்க்கையை நடத்த உதவுகின்றன. ஆனால் நல்ல வாழ்க்கைக்குக் கூட ஒரு விலை செலுத்த வேண்டியுள்ளது. அந்த விலை நல்ல நடத்தை ஆகும். அதாவது, நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்தால்தான் நல்ல வாழ்க்கையால் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.

இன்பங்கள் இரண்டு வகைப்படும்: தற்காலிகமானவை மற்றும் நிலையானவை. நிலையான சந்தோஷம் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே கிடைக்கும். முதலில் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; பின்னர் அதன் பலனை அனுபவிக்குங்கள். இன்று, மக்கள் தங்கள் கடமைகளைச் செய்யாமல், அதன் பலனை அனுபவிக்க விரும்புகின்றனர். இது அவர்களுக்கு உண்மையான சந்தோஷத்தை அளிக்காது.

ஒவ்வொருவரும் தமக்கு பல கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே பிறப்பு கிடைத்துள்ளது என்பதை உணர வேண்டும்; செய்திடாத சேவைகளுக்கான பலனை அனுபவிப்பதற்காக அல்ல. மனிதன் தமக்குரிய உரிமைகள் உள்ளன என்று நினைக்காமல், தன் கடமைகளைச் செய்வதே தனது பங்கு என்பதை உணர வேண்டும். அவன் தனது கடமைகளைச் செய்தால், அதற்கான பலனை அவன் சரியான நேரத்தில் நிச்சயமாகப் பெறுவான்.

No comments: