பார்த்தாலும் உண்மையை அறியாதவன் மூடன்

 

அனைத்தையும் தெய்வீகமான உணர்வுடன் பாருங்கள். அப்போதுதான் நீங்கள் எல்லோரிலும் தெய்வீகத்தை காண முடியும். ஆனால் நீங்கள் அனைத்தையும் உலகியலான பார்வையில்தான் காண்கிறீர்கள். ஒரு கயிறை பார்த்து அதை பாம்பு என்று தவறாக நினைக்கிறீர்கள். அதனால் உங்களுள் பயம் உருவாகிறது.

அது கயிறா அல்லது பாம்பா என்பதை அறிய உங்கள் விவேகத்தை (பகுத்தறிவு) பயன்படுத்துவது அவசியம். உங்கள் மாயை காரணமாக நீங்கள் கயிறை பாம்பு என்று தவறாக எண்ணுகிறீர்கள். மாயை தோன்றும் அந்த நொடியில் பயமும் தோன்றுகிறது. பயத்தின் காரணமாக நீங்கள் அங்கிருந்து ஓடிவிடுகிறீர்கள்.

ஆனால், விவேகத்தின் விளக்கால் பார்த்தால் அது பாம்பு அல்ல, கயிறு என்பதை உணர்வீர்கள். அது கயிறு என்பதை அறிந்தவுடன் பயம் மறைந்து விடுகிறது. பின்னர் நீங்கள் அந்த கயிறிற்கு அருகில் செல்லத் தொடங்குகிறீர்கள்.

பயம் எப்போது மறைந்தது? அது கயிறு என்பதை உணர்ந்த அந்த நொடியில் பயம் இல்லை. மாயை நீங்கும் போது தைரியம் உண்டாகிறது. தைரியம் என்பது பயமின்மை. அப்போது நீங்கள் ஆனந்தத்தை அனுபவிக்கிறீர்கள்.

இதுபோலவே, இந்த உலகின் உண்மையை நீங்கள் ஆராய்ந்து அறிய வேண்டும். இது உலகியலானதா அல்லது தெய்வீகமானதா? இந்த ஆராய்ச்சியே “மீமாம்சா” (ஆழ்ந்த பகுத்தறிவு விசாரணை) எனப்படுகிறது.

No comments: